இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? –(இறுதிப்பகுதி)
தொடர்ச்சியாக பல தசாப்தங்கள் வலதுசாரிகளின் அதிகாரத்தின் கீழ் அழிந்துகொண்டிருக்கும் இலங்கையை மீட்க வேண்டுமானால், நாட்டின் மீது பற்றுக்கொண்ட மாற்றுக்கருத்தாளர்கள் முன்வந்து, இணைந்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் இந்தப் பத்தியின் ஆசிரியர்.
துயரத்தின் படிக்கட்டில் விளைந்த பகடி அரசியல்
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி, அரசியலமைப்பு மாற்ற முயற்சி மற்றும் தேர்தல் சட்ட மாற்ற முயற்சி என்ற அடிப்படையில் இலங்கையில் சுதந்திரத்துக்கு பின்பான காலப்பகுதியில் தொடர்ந்து நடந்துவரும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் இவை குறித்த ஒரு ஏளன உணர்வை ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டும் செய்தியாளர் கருணாகரன் அவர்கள், அவற்றால் நாட்டில் ஏற்பட்ட அழிவுகள் குறித்தும் கவலை கொள்கிறார்.
மாத்தளைக் கார்த்திகேசு நினைவுகள்! நாடக நண்பன் நமை விட்டுப் பிரிந்தான்
இலங்கை இலக்கிய உலகின் முக்கியமான ஒருவராக கணிக்கப்படும் மாத்தளை கார்த்திகேசு அவர்கள் மறைந்ததை முன்னிட்டு பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் எழுதும் நினைவுக்குறிப்பு. கார்த்திகேசு அவர்களின் நாடகப்பணி பற்றி பேராசிரியர் இங்கு பேசுகிறார்.
மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 6
மட்டக்களப்பில் உருவாகிவரும் பொது நூலகத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூலகம் உருவாகுதல் குறித்த இந்தத்தொடரை எழுதிவரும் நூலகர் என். செல்வராஜா அவர்கள், இங்கு நூலக இரவல் வழங்கும் பிரிவின் அமைப்பு குறித்து விளக்குகிறார்.
சொல்லத் துணிந்தேன் – 85
தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை முயற்சிகளின் பலம் பலவீனம் ஆகியவை குறித்து விமர்சிக்கிறார் பத்தியின் எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன். இந்த ஒற்றுமை முயற்சி ஆண்டிகள் கூடி கட்டிய மடமாக ஆகிவிடக்கூடாது என்பது அவரது கருத்து.
அகரன் வைத்த ‘புள்ளிகளால்’ நான் வரைந்த கோலம்
அண்மையில் அதிசயமாக எமக்கு அறிமுகமாகிய இளம் படைப்பாளி “அகரன்”. இலங்கையின் அகதியான அகரனின் ஐரோப்பிய தரிசனம் பல அழகிய படைப்புக்களை தமிழ் இலக்கிய உலகுக்கு தந்துகொண்டிருக்கிறது. அவரது உணர்வுகளை, அவை ஓடும் நரம்புகளை கணக்காகவே தட்டிப்பாக்கிறார் இன்னுமொரு இலக்கியரான “அசுரா”. இது அசுராவின் பார்வையின் அகரன். அரங்கத்துக்கு இருவர் குறித்தும் பெருமையே.
கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்! (காலக்கண்ணாடி – 50)
‘இன ஐக்கியத்தை பேணுகின்ற, கல்வியை மக்களின் காலடிக்கு கொண்டு செல்கின்ற, கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துகின்ற, அனைத்திற்கும் மேலாக மானிட நேயத்தைப் பேணுகின்ற, சமூக நீதியின் பாற்பட்ட விபுலாநந்த சிந்தனைகளின் அடிப்படையிலான ஒரு தலைமைத்துவமே கிழக்கின் தனித்துவ தலைமைத்துவமாக அமைய முடியும்.’ என்கிறார் அழகு குணசீலன்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் — பகுதி 3
இலங்கைப் பொருளாதாரத்தின் தேக்க நிலைக்கான காரணங்களை ஆராயும் அ. வரதராஜா பெருமாள் அவர்கள், மனைப்பொருளாதாரம் அல்லது குடும்பப் பொருளாதாரம் அதில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்கிறார்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 04
தென்னிலங்கை வன்செயல்களால் வடக்கு நோக்கி வந்த மலையக சகோதரங்களின் சோகக்கதை இது. எழுதுபவர் செய்தியாளர் கருணாகரன். “பிறத்தி என விலக்கி வைத்தல் நீதியின் எந்த முறையிலானது நண்பரே! சேர்ந்திருப்போம் என்பது உங்களின் கீழே அடங்கியிருத்தல்தானா?” — இது அவர்களின் கேள்வி.
கிளிநொச்சி – ஒரு மீள நினைவூட்டல்
கிளிநொச்சி நகரத்திலும் அதனை அண்மிய பகுதிகளிலும் காணப்படும் சில நிலவரங்கள் குறித்த தனது கவனத்தை இங்கு பகிர்கிறார் செய்தியாளர் கருணாகரன். அபிவிருத்தி திட்டங்களில் நிறைய மாற்றங்கள் தேவை என்கிறார் அவர்.
