“ஒவ்வொரு கட்சியினதும் கடந்தகால அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் நெடுகவும் பகுப்பாய்வு செய்து கொண்டேயிருந்தால், நடைமுறைச் சாத்தியமான முறையில் எந்த காரியத்தையும் ஒருபோதுமே சாதிக்க முடியாமல்போகும்.
இந்த கட்சிகள் மாறிவிட்ட அரசியல் சூழ்நிலைகளில் தற்போது எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதையும் பயன்தராத முன்னைய அணுகுமுறைகளைக் கைவிட்டு நிலைவரம் வேண்டிநிற்பதற்கு இசைவான முறையில் செயற்படுவதற்கு தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் தயாராயிருக்கின்றனவா என்பதையும் சற்று பொறுத்திருந்து பார்ப்பதே விவேகமானது.”
