அழகு குணசீலனின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’-செங்கதிரோன் பார்வையில்
(அழகு குணசீலன் அவர்களின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
நூல் 01.03.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா. செல்வராசா முன்னிலையிலும், கிழக்குப் பல்கலைக்கழகக் கலாசார பீடத் தமிழ் கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரம் தலைமையிலும் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றபோது பன்முகப்படைப்பாளியும் திறனாய்வாளருமான செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை.)
வரி -வலி: பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்…..!(வெளிச்சம்: 049)
“கூட்டாளிகள் பொதுவாக ஒரே பண்பை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அப்போதுதான் ஒத்தோடமுடியும். அந்த கூட்டாளி அரசியலையே அநுரகுமார அரசாங்கமும் செய்கிறது. இது மாற்றத்திற்கான வழியல்ல. அமெரிக்க வரிவிதிப்பில் மட்டும் அல்ல ஒட்டு மொத்த இலங்கை பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கவும் இது அவசியம். இல்லையேல் நாடு மற்றொரு பொருளாதார மந்தத்தை சந்திப்பதது தவிர்க்க முடியாதது மட்டும் அன்றி , 2028 இல் கடன்களை மீளச்செலுத்தல் என்பதும் வெறும் கனவாகவே இருக்கும்.”
மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்
“கடந்த பதினாறு வருடகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தமிழர்கள் நெடுகவும் கானல் நீரை விரட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான் விதியோ என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.”
மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?
NPP அலை இன்னும் ஓயவில்லை. அதற்குள்தான் நாம் வெற்றியைப் பெற வேண்டியுள்ளது. அறுதிப் பெரும்பான்மையை யாரும் பெறப்போவதில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் தம்மை – தமிழரசுக் கட்சியை ஆதரிப்பார்கள் என்று தான் நம்புவதாக – எதிர்பார்ப்பதாக.
ஆனால், தமிழரசுக் கட்சி என்பது எப்போதோ காலாவதியாகிப்போன ஒன்று. அதற்கு உயிரூட்ட முயற்சிப்பது இறந்த உடலுக்கு saline ஏற்றுவதைப்போன்றதாகும். அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.
பிரித்தானிய தடை: துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….!(வெளிச்சம்:048.)
சர்வதேச மேலாதிக்க அரசியல் இதுவரை நாடுகள், அவற்றின் தலைவர்களுக்கு எல்லாம் ஐ.நா.வின், பெயரிலும், அமெரிக்க அணியின் பெயரிலும் விதித்த தடைகள் 20 வீதம் இலக்கை கூட எட்டவில்லை என்பது சர்வதேச நிபுணர்களின் கருத்து. போயும்… போயும்.. இலங்கையைச் சேர்ந்த நான்கு தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் அநுர அரசுக்கு மூக்கணாங்கயிறு குத்தவும், தென்னிலங்கை பேரினவாத சக்திகளை மேலும் வளர்த்து விடவுமே உதவும்.
வரவு செலவுத் திட்டம்: அபிவிருத்தியும், அரசியல் தீர்வும்…..! (வெளிச்சம்:047 (பகுதி 3))
“வரவு – செலவுத்திட்டத்தில் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு 100மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முழு இலங்கையிலும் பிற பிராந்திய நூல் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய்களில் 50 வீதம். அல்லது பிராந்திய நூல்நிலையங்களுக்கான மொத்த ஒதுக்கீட்டில் 33.3 வீதம்.(1/3). இதற்கு அநுரகுமாரவை தோளில் தடவ நமது தமிழ்த்தேசிய அரசியல் வாதிகளும் தவறவில்லை. இதன் மூலம் அவர் வடக்கில் உள்ளூராட்சி அரசியலுக்கு முதலிட்டாலும், ஒரு வகையில் தோழருக்கு தோளில் காட்டவேண்டிய விடயம் தான்.
ஆனால் மட்டக்களப்பில் ஒரு நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்னும் நிறைவு பெறாத நிலையில் கிடக்கிறது. அது இந்த ஆசான்களுக்கு தெரியவில்லை. இந்த நூல் நிலையம் மட்டக்களப்பு தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளின் எம்.பி.க்கள்- மாநகர முதல்வர், உதவி முதல்வர் போன்றவர்களின் கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியினால்தான் இந்தளவுக்கு இழுபடுகிறது. இன்னும் இவர்களுக்கு மட்டக்களப்பு அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி பற்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் தகுதி இருக்கிறதா? மட்டக்களப்பு மக்கள் மீதான உங்கள் சமூக அக்கறை என்ன?”
‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உண்மை என்ன?
கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்காக இந்தத்தடவை பயன்படுத்தப்படும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் ஆரம்பம் என்ன? அது யாருக்குச் சொந்தம். கலாநிதி சு.சிவரெத்தினம் அவர்களின் ஆய்வு.
வரவுசெலவுத்திட்டம்: பொருளாதார அபிவிருத்தியும், அரசியல் தீர்வும்…!(பகுதி 2) -வெளிச்சம்:047
“அமெரிக்க, சீன, இந்திய உறவில் அரசு கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம் என்ற நெருக்கடியில் தண்ணீருக்கால் நெருப்பை கொண்டுபோகவேண்டியதாக அநுர ஆட்சியின் நிலை உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் 159 பேரைக்கொண்டிருந்தாலும் இந்த சவால்களை சமாளிக்க கூடிய பலமான ஒரு அரசாங்கமாக அது இல்லை.”
அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்?
‘ஜனாதாபதி திசாநாயக்கவிடம் ‘மெய்யான மாற்றம் ‘ ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய ‘புதிய தொடக்கம்’ ஒன்றையே மக்கள் எதிர்பார்த்தார்கள். நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில் வழமைக்கு மாறான தீவிர மாற்றத்தைச் செய்ததன் மூலமாக அந்த புதிய தொடக்கத்தை நோக்கிய திசையில் முதலாவது அடியை இலங்கை மக்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.
ஆனால், முறைமை மாற்றம் என்பதையும் புதிய கலாசாரம் என்பதையும் மக்கள் மாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் கூட எவ்வாறானதாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் சந்தேகம் எழக்கூடியதாக கடந்த ஆறு மாதகால அரசியல் மற்றும் ஆட்சிமுறை நிகழ்வுப் போக்குகள் அமைந்திருக்கின்றன. ‘
வரவு செலவுத் திட்டம்: பொருளாதார அபிவிருத்தியும், அரசியல் தீர்வும்…!(வெளிச்சம்: 047)
“ஊழல்கள் நிறைந்த நிர்வாகம், தோல்வியுற்ற பொருளாதாரத் திட்டங்கள், பொறுப்பற்ற தலைமைத்துவம் என்பனவற்றிற்கு இந்த நாட்டில் ஜே.வி.பி. 1970 களில் இருந்து ஏதோ ஒரு வகையில் பொறுப்பாக இருந்துள்ளது. இதை ஜே.வி.பி. ஏற்றுக்கொள்ளாதவரை தங்களை தவிர்த்து கடந்த கால ஆட்சியாளர்களை தனியாக குற்றம் சாட்டுவது யுத்தத்திற்கு பின்னரான காலத்திற்கு பொருத்தமானதாக இருந்தாலும் அதற்கு முந்திய அரை நூற்றாண்டு காலத்திற்கு ஜே.வி.பி. க்கும் இந்த இனவாதத்திலும், போரிலும், பொருளாதாரதிட்டங்களின் தோல்வியிலும், பொறுப்பற்ற தலைமைத்துவத்திலும் பங்குண்டு.”