‘சுனாமி நினைவில் 21 ஆண்டுகள், அனாமிகா நினைவுப் பேருரையும் ஆனந்தன் நினைவுரையும் – 2025’ நிகழ்வு 26.12.2025 அன்று மட்டக்களப்பு சீலாமுனை சின்னராஜா மண்டபத்தில் நடைபெற்றது
அவை குறித்த ஒரு பார்வை.
Category: கவிதைகள்
கவிஞர் திருமகள் குளோரியா ரூபா அன்ரனின் “பாரதியும் நானும்” கவிதைத் தொகுப்பு— ஒரு பார்வை
“ஆக்க இலக்கியத்தில் அதன் கனதி பிரதானமான ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. கனதி என்பது ஒரு கவிதையின் சொல்லமைப்பிலும், அது வெளிப்படுத்தும் பொருளிலும் உணர்விலும் ஆழத்திலும் உள்ள அடர்த்தியைக் குறிக்கும். இது கவிதையின் எடையை (Weight)அல்ல, மாறாக அதன் உணர்வுடனான கருத்தாழத்தின் செறிவைக் குறிப்பதாகும். ஒரு சிறந்த கவிதை என்பது “சொற்பமான சொற்களில் சொர்க்கத்தைக் காட்டுவது” என்பார்கள். அந்தச் செறிவே கனதி எனப்படுகிறது. இதன் முக்கிய கூறகளாக சொற்செறிவு(Verbal Density), பொருளாழம்(Semantic Depth), படிமம், குறியீடு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய பண்புகளைக் கவிஞர் ரூபாவின் ஒரு சில கவிதைகளைத் தவிர ஏனையவற்றில் மிகத் தெளிவாக அவதானிக்கலாம். வீரம், நறுமுகை, புரட்சி விதை, விழித்தெழு, அந்தாதிக் கவிதைகளிலும், கடும் புனல், உச்சிமீது வானிறங்கினும், சுவாசக் காற்றே, அச்சமில்லை ஆகிய கவிதைகளில் அதன் கனதியை மிகத் தெளிவாகக் காணலாம்.”
’51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை’ நூல் அறிமுகம்-பகிர்வுகள்(பகிர்வு – 08)
“பாலமுனை பாறூக்கின் ’51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை’ நூலின் வெளியீடு 23.11.2025 அன்று அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய உரை.”
ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியம் -பகிர்வுகள்(பகிர்வு – 07)
ஈழத்தமிழ்க் கலைஞர்களை நாடளவிய ரீதியிலே ஒன்றிணைக்கும் வலையமைப்பைக் கொண்டு செயற்பட்டு வருவது இவ்வமைப்பின் குறிப்பிடத்தக்க பரிமாணமாகும்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மலையகம் பிராந்திய செயற்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழு பிராந்திய ரீதியாகத் தனித்தனியே மேடைக்கு அழைக்கப்பெற்று ஒவ்வொரு பிராந்தியக் குழுவுக்கும் பணிகளைப் பாராட்டும் சின்னங்கள் பிரதமர் விருந்தினர் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகம் அவர்களால் வழங்கி வைக்கப்பெற்றன.
நீலாவணனின் காவியங்கள்: (பகிர்வுகள்- பகிர்வு6)
தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையும் தமிழ்ச்சங்கமும் இணைந்து
23.10.2025 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட
கேட்போர் கூடத்தில் மொழித்துறைத் தலைவர் (தெ.கி.ப) கலாநிதி அமரசிறி
விக்கிரமரத்ன அவர்களின் தலைமையிலும் கலை கலாசார பீடாதிபதி (தெ.கி.ப) பேராசிரியர் எம்.எம்.எம். பாஸில் அவர்களின் முன்னிலையிலும்
நடாத்திய ‘இலக்கியவெளி’ கலை இலக்கிய அரசியல் பண்பாட்டு இதழின்
நீலாவணன் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வில் ‘நீலாவணனின் காவியங்கள்’
எனும் தலைப்பில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய உரை.
‘பூப்பூக்கும் ஓசை’ (சிறுவர் பாடல்கள்)-(பகிர்வுகள்-(பகிர்வு – 05))
“மகுடம் பதிப்பகத்தின் 101 ஆவது வெளியீடான சோ. அருளானந்தம் (மன்னனூர் மதுரா) யாத்த சிறுவர்பாடல்களின் தொகுப்பு நூலான ‘பூப்பூக்கும் ஒசை’யின் வெளியீடு 19.10.2025 அன்று மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தில் அதன் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
‘பூப்பூக்கும் ஒசை’ பற்றிய செங்கதிரோனின் ஒரு பார்வை”
‘ஈழத்துச்சிறை’ கவிதை நூல் (பகிர்வுகள்- பகிர்வு – 04)
‘இருந்தும் நான் எனது எல்லையை
கடந்தாக வேண்டும்.
நான் விரைகின்றேன்.
எல்லைக் காப்பரண் நெருங்குகிறது.
துப்பாக்கி முனை மிரட்டுகிறது
எனது கைகளை, இடுப்பைத் தட்டுகிறது.
நான் தடுக்கப்படுகிறேன்
‘நீ யார்?’
‘நான் மனிதன்’
‘எங்கே போகிறாய்?’
‘எனது தாய் நிலத்திற்கு’
‘உன் தொழில்?’
‘அடிமை தனத்திற்கு எதிராய் கவிதை எழுதுவது’
‘உன் பெயர்?’
‘தமிழன்’
பின்பு அவன் கேள்வி கேட்கவில்லை
காலையில் பத்திரிகையில் செய்தி வந்தது
ஒரு புரட்சிக் கவிஞன்
பாரிய அடிகாயங்களுடன்
பற்றைக்குள் இருந்து மீட்பு!!’
அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்: பகிர்வுகள்
‘கடலாக இருக்கிறேன்’ எனுமிக் கவிதைத் தொகுப்பு மேற்கூறப்பெற்ற புரியாத புனைவுமொழி போன்ற பலவீனங்களிலிருந்து விடுபட்டு ஒரு தனித்துவம் மிக்கதாய் திகழ்வதே இதன் சிறப்பு ஆகும். காரணம் இந்நூலிலுள்ள ஆக்கங்கள் யாவும் அவை புதுக்கவிதைப் பாணியிலே அமைந்திருந்தாலும்கூடத் தெளிவாகவும் – இறுக்கமாகவும் – எளிமையாகவும் – நுகர்வோருக்கு அதாவது வாசகருக்குப் புரியும் மொழியிலும் புனையப்பட்டிருப்பதே.”
வெளிகள் ஆயிரம் கோணங்கள் பல்லாயிரம்
தேவனின் வார்த்தைகளை விட சாத்தானின் வார்த்தைகளே இங்கே அதிகம் ஈர்ப்புடையவை. இல்லையெனில், தம்மைச் சூழ்ந்திருக்கும் நற்கனிகளை விளைப்போரையெல்லாம் புறமொதுக்கித் தள்ளிவிட்டு, காயடிப்போரைத் தோளில் தூக்கிச் சுமக்குமா ஈழத் தமிழ்ச் சமூகம்? ஈழ விடுதலைப் போராட்டத்திலும் சமூக விடுதலைப் போராட்டத்திலும் ஏன் இலக்கியத்திலும் கூட அத்தகைய நல்ல வித்துகளும் நல்விளைவுக்கான முயற்சிகளும் இருந்தன; இருக்கின்றன. அவற்றை ஏற்று முன்கொண்டு செல்வதை விட, அவற்றுக்கு ஆதரவளித்துப் பலமாக்குவதை விட, எதிர்ச்சக்திகளின் மீது மோகம் கொண்டதே விதியானது. என்பதால்தான் எத்திசையின் பயனுறு வார்த்தைகளும் வெறும் சருகாகிப் புறமொதுங்கின. நடேசன் இங்கே முன்வைத்துப் பேசும் பிரதிகளிற் பலவும் தேவ வாக்கைத் தம்முள் கொண்டமைந்தவை. ஆயினும் தமிழ்ப் பெருந்திரளோ அவற்றைத் ‘தொட்டாற் சுடும்’என்று கருதி முகச்சுழிப்போடு விலக்கம் செய்து வருகிறது. சிறிய வட்டங்களே அவற்றைப் பேசியும் வாதிட்டும் முன்னெடுத்துச் செல்கின்றன.
உயிரின் கண்ணீர்த்துளி உலகின் இரத்தத் துளி
“1980 களின் முற்பகுதியில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் மொழிபெயர்த்த ‘பலஸ்தீனக் கவிதைகள்‘ தமிழ்ப்பரப்பில் உண்டாக்கியதையும் விடக் கூடிய கனத்தை, வலியை, வலிமையை இந்த மரித்தோர் பாடல்களில் காணலாம். இங்கே உள்ளவை ஒவ்வொன்றும் நம்முடைய உயிரில் அதிர்வை உண்டாக்குவன. அத்தனையும் சாட்சியமானவை.ஒவ்வொருவருடைய இறுதிக்கணச் சாட்சியங்கள். நிகழ் உண்மைகள். பலஸ்தீனக் கவிதைகள் அன்றைய நிலையில், போராட்டத்துக்கான பெரும் பங்களிப்பென்றால், இது இன்றைய சூழலில், மக்களின் மீதான அழிவுத் தாக்குதலில் பெரும் சான்றுத்துணையாகும்.”
