வேரும் முகமும் – மருதுவின் கலையுலகம்

ஓவியர் மருதுவுக்கு கனடா இலக்கியத்தோட்டத்தின் இந்த ஆண்டுக்கான (2026) இயல் விருது வழங்கப்படுகிறது. தமிழ்ப் பண்பாட்டின் வேரையும் முகத்தையும் இணைத்து தன்னுடைய ஓவியங்களை உருவாக்கியவர் மருது. ஓவியத்தில் மட்டுமல்லாமல் சினிமா, இலக்கியம் போன்ற பிற துறைகளிலும் மருதுவின் பங்களிப்புகள் உண்டு. இந்தக் கட்டுரை மருதுவுடனான கருணாகரனின் அறிமுகத்தையும் அவதானத்தையும் வெளிப்படுத்துகிறது. இயல் விருது பெறும் மருதுவுக்கு வாழ்த்துகள்.

மேலும்

கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு வாழ்த்துப்பா (பகிர்வுகள்-பகிர்வு – 15)

“இராமனுக்கு பக்த ஹனுமான்.
யாப்பை அறிந்து மீறி – தமிழ்க் கவிதை
யாத்த பெருங்கவிஞன்.
தமிழ்க்கவிதைப்,
போக்கறிந்து புதுக்கவிதை
படைத்துப் புகழ் படைத்தோன்.

மறரபறிந்த மா கவிஞனானாலும் – ‘யாப்பு’ச்
சிறையுடைத்துத்’ தமிழ்க்கவிதை’ச்
சீதையினை மீட்டு வந்தோன்.

அறிந்தவனே அதை உடைத்து
ஆக்கம் படைத்தால்தான்
அரங்கேறும்! அதுதான்
ஆரோக்கியம் ஆகும்.”

மேலும்

ஞானபீட விருதும் அகவிழி திறப்பும்

“வைரமுத்து தன்னுடைய வெவ்வேறு அரசியல் தொடர்புகளாலும் சினிமாவின் மூலமாகக் கிடைத்த பிரபலத்தினாலும் விருதுகளைக் குறிவைத்து வேட்டையாடும் ஒரு தாகமுடைய விலங்கு. அதற்குரிய நுணுக்கங்களையும் கீழ்மையான தந்திரோபாயங்களையும் செய்யும் மனிதர். தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய கீழ்மைச் செயல்களின் மூலமாக அவர் நேசிப்பதாகச் சொல்லும் தமிழையும் அதனுடைய வளமான இலக்கியச் செழிப்பையும் அவமதிப்புச் செய்துள்ளார். மட்டுமல்ல, தன்னையும் தன்னுடைய எழுத்துகளையும் ஞானபீடம் வரையில் முன்னிறுத்தியதன் மூலமாக தமிழின் செழிப்பான இலக்கிய வளத்தை வெளிச்சமூத்தின் முன் மறைக்க முற்பட்டிருக்கிறார். வைரமுத்துவை ஆதரிப்போருக்கும் வைரமுத்துவை விருதுக்காகத் தெரிவு செய்தோரையும் இந்தப் பழி சேரும்.”

மேலும்

சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் அனாமிகா – 2025 நினைவுப் பேருரையும் கலை இலக்கியக் கூடலும் (பகிர்வுகள் -பகிர்வு – 09)

‘சுனாமி நினைவில் 21 ஆண்டுகள், அனாமிகா நினைவுப் பேருரையும் ஆனந்தன் நினைவுரையும் – 2025’ நிகழ்வு 26.12.2025 அன்று மட்டக்களப்பு சீலாமுனை சின்னராஜா மண்டபத்தில் நடைபெற்றது
அவை குறித்த ஒரு பார்வை.

மேலும்

கவிஞர் திருமகள் குளோரியா ரூபா அன்ரனின் “பாரதியும் நானும்” கவிதைத் தொகுப்பு— ஒரு பார்வை

“ஆக்க இலக்கியத்தில் அதன் கனதி பிரதானமான ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. கனதி என்பது ஒரு கவிதையின் சொல்லமைப்பிலும், அது வெளிப்படுத்தும் பொருளிலும் உணர்விலும் ஆழத்திலும் உள்ள அடர்த்தியைக் குறிக்கும். இது கவிதையின் எடையை (Weight)அல்ல, மாறாக அதன் உணர்வுடனான கருத்தாழத்தின் செறிவைக் குறிப்பதாகும். ஒரு சிறந்த கவிதை என்பது “சொற்பமான சொற்களில் சொர்க்கத்தைக் காட்டுவது” என்பார்கள். அந்தச் செறிவே கனதி எனப்படுகிறது. இதன் முக்கிய கூறகளாக சொற்செறிவு(Verbal Density), பொருளாழம்(Semantic Depth), படிமம், குறியீடு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய பண்புகளைக் கவிஞர் ரூபாவின் ஒரு சில கவிதைகளைத் தவிர ஏனையவற்றில் மிகத் தெளிவாக அவதானிக்கலாம். வீரம், நறுமுகை, புரட்சி விதை, விழித்தெழு, அந்தாதிக் கவிதைகளிலும், கடும் புனல், உச்சிமீது வானிறங்கினும், சுவாசக் காற்றே, அச்சமில்லை ஆகிய கவிதைகளில் அதன் கனதியை மிகத் தெளிவாகக் காணலாம்.”

மேலும்

 ’51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை’ நூல் அறிமுகம்-பகிர்வுகள்(பகிர்வு – 08)

“பாலமுனை பாறூக்கின் ’51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை’ நூலின் வெளியீடு 23.11.2025 அன்று அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய உரை.”

மேலும்

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியம் -பகிர்வுகள்(பகிர்வு – 07)

ஈழத்தமிழ்க் கலைஞர்களை நாடளவிய ரீதியிலே ஒன்றிணைக்கும் வலையமைப்பைக் கொண்டு செயற்பட்டு வருவது இவ்வமைப்பின் குறிப்பிடத்தக்க பரிமாணமாகும்.

இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மலையகம் பிராந்திய செயற்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழு பிராந்திய ரீதியாகத் தனித்தனியே மேடைக்கு அழைக்கப்பெற்று ஒவ்வொரு பிராந்தியக் குழுவுக்கும் பணிகளைப் பாராட்டும் சின்னங்கள் பிரதமர் விருந்தினர் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகம் அவர்களால் வழங்கி வைக்கப்பெற்றன.

மேலும்

நீலாவணனின் காவியங்கள்: (பகிர்வுகள்- பகிர்வு6)

தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையும் தமிழ்ச்சங்கமும் இணைந்து
23.10.2025 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட
கேட்போர் கூடத்தில் மொழித்துறைத் தலைவர் (தெ.கி.ப) கலாநிதி அமரசிறி
விக்கிரமரத்ன அவர்களின் தலைமையிலும் கலை கலாசார பீடாதிபதி (தெ.கி.ப) பேராசிரியர் எம்.எம்.எம். பாஸில் அவர்களின் முன்னிலையிலும்
நடாத்திய ‘இலக்கியவெளி’ கலை இலக்கிய அரசியல் பண்பாட்டு இதழின்
நீலாவணன் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வில் ‘நீலாவணனின் காவியங்கள்’
எனும் தலைப்பில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய உரை.

மேலும்

‘பூப்பூக்கும் ஓசை’ (சிறுவர் பாடல்கள்)-(பகிர்வுகள்-(பகிர்வு – 05))

“மகுடம் பதிப்பகத்தின் 101 ஆவது வெளியீடான சோ. அருளானந்தம் (மன்னனூர் மதுரா) யாத்த சிறுவர்பாடல்களின் தொகுப்பு நூலான ‘பூப்பூக்கும் ஒசை’யின் வெளியீடு 19.10.2025 அன்று மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தில் அதன் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

‘பூப்பூக்கும் ஒசை’ பற்றிய செங்கதிரோனின் ஒரு பார்வை”

மேலும்

‘ஈழத்துச்சிறை’ கவிதை நூல் (பகிர்வுகள்- பகிர்வு – 04)

‘இருந்தும் நான் எனது எல்லையை
கடந்தாக வேண்டும்.
நான் விரைகின்றேன்.
எல்லைக் காப்பரண் நெருங்குகிறது.
துப்பாக்கி முனை மிரட்டுகிறது
எனது கைகளை, இடுப்பைத் தட்டுகிறது.
நான் தடுக்கப்படுகிறேன்
‘நீ யார்?’
‘நான் மனிதன்’
‘எங்கே போகிறாய்?’
‘எனது தாய் நிலத்திற்கு’
‘உன் தொழில்?’
‘அடிமை தனத்திற்கு எதிராய் கவிதை எழுதுவது’
‘உன் பெயர்?’
‘தமிழன்’
பின்பு அவன் கேள்வி கேட்கவில்லை
காலையில் பத்திரிகையில் செய்தி வந்தது
ஒரு புரட்சிக் கவிஞன்
பாரிய அடிகாயங்களுடன்
பற்றைக்குள் இருந்து மீட்பு!!’

மேலும்

1 2 3 6