“வீரசைவ வழிபாட்டு முறைகளும், சிறு தெய்வ வழிபாடு என்று ஒதுக்கப்பட்ட சனங்களின், சாமிகளின் இன்றைக்குமான இருப்புகளும் மட்டக்களப்பின் யதார்த்தம். மகுடி கூத்து, நாட்டுக் கூத்து, பள்ளு, வசந்தன் ஆட்டம், கொம்பு விளையாட்டு…. போன்ற பண்டைய அடையாளங்களோடும், பறை மேளம், உடுக்கை…. போன்ற எண்ணற்ற இசைவடிவங்களோடும் வாழ்ந்து வருகின்றனர் அவர்கள்.
தாய்வழி சமூகத்தின் எச்சங்களை இன்றுவரை கொண்டுள்ள மட்டக்களப்பில் பெண் தெய்வ பண்புகளும், பெண் நாட்டார் வழக்காறுகளும் நிறைந்து காணப்படுகின்றன.
இச்சனங்களின் வாழ்வியல் விழுமியங்களை தக்கவைக்கும் எத்தனிப்பு அவசியமானது. அந்த மீள் உயிர்ப்பே பிராமணிய கருத்தியலுக்கு எதிரான நமது சமூகத்தின் பன்முக அடையாளங்களை தேடுவதற்கான முயற்சியாகும். நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட இச் சனங்களின் பண்பாட்டில் இருந்துதான் நமது விடுதலைக்கான கூறுகளை முன்னெடுக்க முடியும்….”
மேலும்