செம்மணி அகழ்வுகள்: நீதிக்கான தேடலா அல்லது அரசியல் சடங்கா?
“உண்மையில், செம்மணி விவகாரத்தின் மிக உறைப்பான பக்கம் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பில் தேங்கிக்கிடக்கும் ஆறாத துயரமும் ஏமாற்றமுமாகும். செம்மணி என்பது வெறும் ஒரு புவியியல் பகுதியோ அல்லது ஒரு குற்றவியல் நிருபணக் களமோ அல்ல; அது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடரும் பாதிக்கப்பட்ட மக்களுடைய கூட்டு மனவடுக்களின் (Collective Trauma) வாழும் சாட்சியமாகும்.”
சொல்லித்தான் ஆக வேண்டும்!(சொல் – 56)
“1987 இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அரசியல் தீர்க்க தரிசனத்துடன் அறிவுபூர்வமாகப் பயன்படுத்தாமல் விட்டது ஈழத்தமிழர் அரசியல் தரப்பு (தமிழீழவிடுதலைபுலிகள் இயக்கம்) இழைத்த மாபெரும் அரசியல் தவறு (முட்டாள்தனம்) ஆகும்.
இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப்போன முன்னாள் தமிழர் விடுதலைக்கூட்டணிச் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தைக் கொழும்பில் வைத்தும் – இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதில் பங்களித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட பதின்மூன்று தோழர்களைத் தமிழ்நாட்டில் வைத்தும் – இந்திய – இலங்கை சமதான ஒப்பந்தத்தின் பிதாமகரான இந்திய முன்னாள் பிரதமர் ராஜீங்காந்தி அவர்களை இந்தியாவின் தமிழ்நாடு மாநில மண்ணில் வைத்தும் புலிகள் படுகொலை செய்ததொரு பின் புலத்தில் இப்போது புலிகளின் ‘பதிலி’யாகத் தன்னைப் படம் காட்டிக்கொண்டு திரியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கோரிக்கைகளை தமிழ்நாடு மாநில அரசாங்கமோ அல்லது இந்திய மத்திய அரசாங்கமோ கண்டுகொள்ளப்போதில்லை.”
தமிழ்பேசும் சமூகங்களின் அரசியல் கட்சிகள் பொது மேடையூடாக வெளிப்படுத்த முயற்சிக்கும் கவலைகள்
“அறியப்பட்ட பதற்றங்கள் மற்றும் வெளிப்படையான முரண்பாடுகளுக்கு மத்தியிலும், இந்தத் தளத்தின் பின்னணியில் உள்ள தலைவர்கள் தற்போது மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தும் ஒரு குறிப்பிட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட திட்டத்தை தெளிவாக முன்வைத்துள்ளனர் ;
ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல், நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் மற்றும் மக்களின் நிலங்கள் தொடர்பான மோதல்களுக்கு தீர்வு காணுதல். அத்துடன், மற்றைய சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்த உரையாடல்களுக்கான வாய்ப்புகளை இந்த தளம் படிப்படியாக உருவாக்கும் என்றும் அவர்கள் சேர்த்துக் கூறினர்.”
இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர்காலம். (பகுதி 3)
“தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வெறுமனே 13வது திருத்தத்தை மட்டும் நம்பிச் செயற்படுவது விவேகமான அணுகுமுறையா?
இத் திருத்தத்தைச் சுற்றியே தமிழ் அரசியல் செல்வது, மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப அரசியல் வியூகங்களை மாற்றுவதற்குத் தடையாக இருக்கிறது. மாற்று அரசியல் தீர்வை நோக்கிய கற்பனைகளை உறைய வைக்கிறது. மாற்று வகையில் தீர்வுகளைக் காணும் வாய்ப்பை மட்டுப்படுத்துகிறது. 13வது திருத்தம் மக்களின் உண்மையான தேவைகள் குறித்து எதையும் தரவில்லை. அதாவது, பொருளாதாரத் தேவைகள், வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வித் தேவைகள், பிராந்திய அபிவிருத்தி, உள்ளுராட்சி தேவைகள் போன்றன கைவிடப்பட்டுள்ளன.”
தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) இறுதிப்பகுதி
“ஈழத் தமிழரின் அரசியலில் செல்வாக்குச் செலுத்திய விடுதலைப்புலிகளின் யுகம் முடிந்து விட்டது. அதற்கான பெறுமதிகள் அன்றைய வரலாற்றுக்குரியவையே தவிர, இப்போதுள்ள யதார்த்தத்துக்கும் எதிர்கால வழிமுறைகளுக்கும் அவை பொருந்தக் கூடியன அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொண்டு செயற்படும் நிலை – துணிச்சல் இவற்றிடம் இல்லை.”
நீர்கொழும்பு: வெளிச்சமும் இருட்டும்…..!(மூன்றாவது கண்:XXV)
“10 அதிகாரிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து அரசாங்கமும், சமூக ஊடகங்களும் பேசிய அளவுக்கு 21 கைதிகளுக்கு ஏற்பட்ட, நிகழ்ந்த அநியாயம் பற்றி பேசப்பட்டது குறைவு. கொல்லப்பட்ட சிறைக் காவலர்களின் வீடு வாசல்கள் பற்றி பேசிய சமூக ஊடகங்கள் கைதிகள் எவரினதும் வாழ்வாதாரம் பற்றியோ, வாழ்க்கை கஷ்டங்கள், அவர்களின் குடும்ப நிலைமைகள் பற்றியோ பேசவில்லை. ஒட்டுமொத்தமாக கைதிகள் குற்றவாளிகள், வன்முறையாளர்கள் என்ற வகையில் முத்திரை குத்தப்பட்டனர். பொறுப்பை ஏற்பதாக கூறிய அரசதரப்பும் இந்த பிரச்சார யுக்தியையே பயன்படுத்தியது.”
இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர் காலம். (பகுதி. 2)
“இங்கு கோரிக்கைகள் அல்ல பிரச்சனை. அவற்றை அடைவதற்காக முன் வைக்கும் செயல்முறைகளே தீர்வை நோக்கிய பாதைகளை அடைத்து நிற்கின்றன. இதில் முக்கியமானது அதிகாரத்திலுள்ள அரசியல் கட்சிகளின் போக்குப் பற்றிய தெளிவான புரிதல் அன்றி கோரிக்கைகளை முன் வைப்பது ஆட்சியாளரைக் கடின நிலைக்குத் தள்ளுவதாக உள்ளது. ஜனநாயகம் என்பது கோரிக்கை என்பதில் மட்டும் தங்கியிருப்பதில்லை. எதிரியின் அல்லது ஆட்சியாளரின் இருப்பிற்கு அது எவ்வளவு உதவுகிறது? என்பதிலிருந்தே மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். உதாரணமாக, சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த வேளையில் அவருக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. ஆனால் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் தமிழ் அரசியல் அதிகபட்ச தீர்வை அழுத்துவதில் கொண்டிருந்த அக்கறை சந்திரிகா எதிர் நோக்கிய நெருக்கடிகளை தளர்த்துவதற்கான அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை. இதுவே அப் பேச்சுவார்த்தைகள் தொடர முடியாமல் போயின.”
தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 4
‘“ஆற்றுப்படுத்தும்’ பண்பு தலைமைக்கு இருக்க வேண்டும். வெறும் அரசியல் உரிமைகளைப் பேசுவதோடு நின்றுவிடாமல், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வாதாரம், கல்வி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும்.கடந்த காலத்தில் ஒரு தனிநபரைச் சுற்றி நகர்ந்த அரசியல் நிலையை மாற்றி, பல்துறை வல்லுநர்கள், அறிவுஜீவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளடங்கிய ஒரு கூட்டுத் தலைமைத்துவக் கட்டமைப்பை (Collective Leadership Structure) உருவாக்க வேண்டும். மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளித்து, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்வாங்கிச் செல்லும் சகிப்புத்தன்மை அவசியம்.”
இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர்காலம் (பகுதி1)
“2024ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் முடிவுகள் இலங்கையின் வரலாற்றினைப் புரட்டிப் போட்ட மாற்றங்களாகும். அரசியல் பண்டிதர்கள், அரசியல் தலமைகள், அரசியல் கட்சிகள் எவையும் எதிர்பாராத வகையில் இலங்கை அரசியலில் மூன்றாவது கட்சியின் அரசியல் பிரவேசம் என்பது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த புதிய அரசியல் விழிப்புணர்வை அடையாளம் காட்டியது.
இந்த வரலாற்று நீரோட்டத்தின் மாற்றத்தின் பின்னணியில் நாம் அரசியல் நிலமைகளை ஆராய வேண்டிய நிலையில் உள்ளோம். குறிப்பாக, தற்போது பூகோள அரசியல் போக்கிலும் மிகவும் காத்திரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் நாம் அரசியல் போக்கினை புதிய நிலமைகளின் பின்னணியில் நோக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். “
வீரகேசரியில் நிகழ்ந்த ‘கவிதைச் சமர்’- பகிர்வுகள் (பகிர்வு – 14)
“பூக்கடையாம் தமிழ்க்கவிமேல்
புழுதியினை இறைத்து அரை
வேக்காட்டுக் கவிஞரெலாம்
விளையாட வந்ததனால்
சாக்கடையாம் புதுக்கவிதைச்
சகதிக்குள் அகப்பட்டு
நோக்காடடைந்து தமிழ்
நோகிறதே! நோகிறதே!!”
