அட்டமஸ்தானாதிபதி விவகாரமும் சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாட்டின் கதியும்
“இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அட்டமஸ்தானாதிபதி போன்ற உயர் நிலை மதகுருமார் சம்பந்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சாதிக்கும் மௌனம் உணர்ச்சிபூர்வமான விவாதத்துக்குரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், சிறுவர் துஷ்பிரயோகத்துக்கும் சுரண்டல்களுக்கும் எதிராக மகாநாயக்கர்கள் உறுதியாகக் குரல் கொடுத்திருக்க வேண்டும். சமூகத்தில் ஆன்மீக மற்றும் ஒழுக்க நெறிப் போதனைகளைச் செய்கின்ற தலைவர்கள என்ற வகையில் அது அவர்களின் தலையாய கடமையாகும். இந்த மௌனம் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களைப் பாதூகாப்பதில் நிறுவன மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தோல்வியாகவே நோக்கப்படுகிறது.”
‘பாராளுமன்ற அரசியல் பாதை மூலமாகத் தனிநாட்டை அடையமுடியாது’. (சொல்லித்தான் ஆக வேண்டும்! -சொல் – 55)
“தந்தை செல்வா தனது அந்திமக்காலத்தில் மூப்பினால் ஏற்பட்ட உடல்தளர்வு – அவரைப் பீடித்திருந்த ‘பார்கின்சன்’ நோயின் தாக்கம் – பலவீனமுற்றிருந்த செவிப்புலன் ஆகிய காரணங்களால் தனது தமிழரசுத் தனயன்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ‘இயலாமை’யில் இருந்தாரா?
ஏனெனில், ‘தமிழர் விடுதலைக்கூட்டணி’ யின் உருவாக்கமும் தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானமும் தேர்தல் அரசியலை மையமாகக்கொண்டே நிகழ்ந்தன என்பதையே வரலாறு எண்பித்திருக்கிறது. மேலும், தனிநாட்டுத் தீர்மானத்தின் இறுதி விளைவு தமிழ் மக்களுக்கு உயிரழிவு – சொத்தழிவு – உளவியல் சிக்கல்கள் – கலாசாரச் சீரழிவு எனப் பலவகைப் பேரழிவுகளை ஏற்படுத்தி முடிவில் இருந்ததையும் இல்லாமற்செய்து தமிழ் மக்களை இன்று அரசியல் கையறு நிலையிலேயே – கடவுளும் காப்பாற்ற முடியாத நிலையிலேயே விட்டுச் சென்றுள்ளது.”
தர்மசக்கரம் தர்மசங்கடம்..!(மூன்றாவது கண்: XIX)
“கௌதம புத்தர் இல்லற வாழ்வையும், அனைத்தையும் அனுபவித்தபின்னர் ஞானம் பெற்று நிர்வாணம் அடைந்தார். அதுதான் சரியென்றால் தற்போதைய பிக்குகளின் நிலைக்கு பௌத்த பீடமே பொறுப்பு ஏற்கவேண்டும். புத்தர் அனுபவித்த பின்னர் பின்நோக்கி நடந்தார் இவர்கள் அனுபவியாமல் முன்னோக்கி நடக்கின்றனர். இதுதான் அடிப்படையில் மனித உணர்வுகளை கேள்விக்கு உட்படுத்துகிறதா?
அப்படியானால் அந்த இடத்தில் சீர்திருத்தம் தேவை..”
‘கனகர் கிராமம்’ – ஒரு விமர்சனம்(பகுதி 1)
மட்டக்களப்பு நாவற்குடா இந்துக் கலாசார மண்டபத்தில் 26.04.2026 அன்று நடைபெற்ற செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்கள் எழுதிய ‘கனகர் கிராமம்’ அரசியல் – சமூக – வரலாற்று நாவல் அறிமுக விழாவில் விமர்சகர் ஜெகன் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட நயவுரை.
தேசத்தின் குரல்: கருணாவா….? பாலசிங்கமா….? (மூன்றாவது கண்: XXIII)
“பண்டாரநாயக்காவின் சமஷ்டியை ஒரு காலத்தில் நிராகரித்து பண்டாரநாயக்காவையே இனவாதி என்றார்கள், இந்திய -இலங்கை உடன்படிக்கையை நிராகரித்து இந்தியாவின் துரோகம் என்றார்கள். சந்திரிகாவின் தீர்வுப்பொதியை நிராகரித்து நீலன் திருச்செல்வம் துரோகி என்றார்கள். இலங்கை அரசு -நோர்வே சமஷ்டி யோசனையையும் நிராகரித்து கருணாவை துரோகி என்றார்கள் . 2009 வரை தீர்வுகளை நிராகரித்து புலிகளுக்கு பின்னால் அரசியல் செய்த தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் இப்போது சமஷ்டி கேட்டு ஜே.வி.பி.யிடம் மண்டியிடுகிறது“
பால. சுகுமாரின் நூல்கள் அறிமுகமும், இலக்கிய கலாநிதி வ.அ.நூற்றாண்டு விழா மலர் அறிமுகமும் (பகிர்வுகள் – பகிர்வு -12)
“’என்னுடைய கதைகள் வரலாற்று நினைவுகளையும் என் பக்கத்தில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களை பற்றியும் பேசுகிறது’ எனும் கூற்றை இத்தொகுப்பிலுள்ள கதைகள் எண்பிக்கின்றன. ஆம்! அவரை உருவாக்கிய மண்ணும் மக்களுமே கதை முழுவதிலும் கலந்திருக்கிறார்கள்.”
பீரிஸ் பேசத் தவறியதும் பேசத்தயங்குவதும் பேசவிரும்பாததும்
“தமிழீழ விடுதலைப் புலிகளின் (பிரபாகரனின்) பிடிவாதத்தை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு, சிங்கள அரசு மற்றும் சிங்கள சமூகத்தின் இனவாத / ஆதிக்க உளநிலை குறித்து பேசத் தவறுவது சமாதானப் பேச்சுகளில் இருந்த இரட்டைத் தன்மையை வெளிப்படுத்துவதோடு, தமக்கு வாய்ப்பான உண்மைகளோடு பயணிப்பதற்கான ஆதிக்க முயற்சியாகும். இந்த ஆதிக்க முயற்சியின் விளைவாக இலங்கைச் சமூகங்கள் அடைந்த துயரமும் இலங்கை என்ற நாடு சந்தித்திருக்கும் பின்னடைவுகளும் சாதாரணமானதல்ல. இலங்கையின் சமாதானச் செயல்முறையின் தோல்விகளை ஆராயும்போது, ஒரு தரப்பின் குறைகளை மட்டும் கூறிவிட்டு மறுதரப்பின் குறைகளை மறைப்பது மேலும் இடைவெளிகளையும் பிரச்சினைகளையுமே அதிகரிக்கும்.”
மட்/நூலக வரலாறு மறைக்கப்படும் உண்மைகள்
“அந்த வீதியால் செல்லுகின்ற ஒரு சாமானியனை தடுத்து நிறுத்தி இது என்ன என்று கேளுங்கள். அவன் நிச்சயம் சொல்லுவான் இது ‘பிள்ளையானின் நூலகம்’ என்று. ஆம் வரலாற்றின் உண்மையான பக்கங்களை மக்களின் மனதிலிருந்து யாராலும் நீக்கி விட முடியாது. இந்த நூலகத்தின் ஒவ்வொரு கல்லிலும் உங்கள் காதுகளை வைத்து கேளுங்கள் அவை ஒவ்வொன்றும் பிள்ளையான், பிள்ளையான் என்றே ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த ஒலிகள் காலமெல்லாம் மட்டக்களப்புத் தமிழகத்தின் காற்றிலும் மண்ணிலும் கடலிலும் நீக்கமற நிறைந்திருக்கும்.”
வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பிறகு கடந்துபோன அரை நூற்றாண்டு
“பாராளுமன்ற அரசியல் பாதை மூலமாக தனிநாட்டை அடைய முடியாது என்பது கூட்டணியின் படித்த அரசியல் தலைவர்களுக்கு தெரியாததல்ல. அவர்கள் எந்தவொரு அரசியல் போராட்டத் திட்டமும் தந்திரோபாயமும் இல்லாமல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து மக்களை குறிப்பாக, தமிழ் இளைஞர்களை உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாக்கிய தவறுக்காக நாளடைவில் பெரிய விலையைச் செலுத்த வேண்டியேற்பட்டது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் தலைமைத்துவம் ஆயுதமேந்திய தமிழ்ப் போராளிக் குழுக்களின் கைகளுக்குச் சென்ற பின்னர் மூண்ட சுமார் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரில் இலங்கை ஆயுதப் படைகளுக்கு எதிராக அவர்களால் தொடர்ச்சியாக கணிசமான காலத்துக்கு வியக்கத்தக்க வெற்றிகளை பெறக்கூடியதாக இருந்த போதிலும், தனிநாட்டுக்கான போராட்டத்தின் பிரதான தளப்பிரதேசமாக விளங்கிய வன்னி 2009 மே மாதம் இலங்கைப் படைகளிடம் வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து மாற்றம் கண்ட அரசியல் – இராணுவ நிலக்காட்சி வட்டுக்கோட்டை தீர்மானத்தை கிரகணம் செய்தது.”
மூன்றெழுத்தில் உன் நினைவுகள் நிலைத்திருக்கும்….!(மூன்றாவது கண்: XXII)
பிரபல செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ், கனடாவில் காலமானார். இலங்கை மற்றும் அண்டை நாடுகளின் பத்திரிகைகளின் செய்தியாளராக நீண்டகாலம் பணியாற்றிய அவரது பங்களிப்பு போர் கடந்த இலங்கையின் செய்திப்பரப்பில் கணிசமானது.
அவர் பற்றிய அழகு குணசீலனின் பார்வை இது..
