தேசத்தின் குரல்: கருணாவா….? பாலசிங்கமா….? (மூன்றாவது கண்: XXIII)
“பண்டாரநாயக்காவின் சமஷ்டியை ஒரு காலத்தில் நிராகரித்து பண்டாரநாயக்காவையே இனவாதி என்றார்கள், இந்திய -இலங்கை உடன்படிக்கையை நிராகரித்து இந்தியாவின் துரோகம் என்றார்கள். சந்திரிகாவின் தீர்வுப்பொதியை நிராகரித்து நீலன் திருச்செல்வம் துரோகி என்றார்கள். இலங்கை அரசு -நோர்வே சமஷ்டி யோசனையையும் நிராகரித்து கருணாவை துரோகி என்றார்கள் . 2009 வரை தீர்வுகளை நிராகரித்து புலிகளுக்கு பின்னால் அரசியல் செய்த தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் இப்போது சமஷ்டி கேட்டு ஜே.வி.பி.யிடம் மண்டியிடுகிறது“
பால. சுகுமாரின் நூல்கள் அறிமுகமும், இலக்கிய கலாநிதி வ.அ.நூற்றாண்டு விழா மலர் அறிமுகமும் (பகிர்வுகள் – பகிர்வு -12)
“’என்னுடைய கதைகள் வரலாற்று நினைவுகளையும் என் பக்கத்தில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களை பற்றியும் பேசுகிறது’ எனும் கூற்றை இத்தொகுப்பிலுள்ள கதைகள் எண்பிக்கின்றன. ஆம்! அவரை உருவாக்கிய மண்ணும் மக்களுமே கதை முழுவதிலும் கலந்திருக்கிறார்கள்.”
பீரிஸ் பேசத் தவறியதும் பேசத்தயங்குவதும் பேசவிரும்பாததும்
“தமிழீழ விடுதலைப் புலிகளின் (பிரபாகரனின்) பிடிவாதத்தை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு, சிங்கள அரசு மற்றும் சிங்கள சமூகத்தின் இனவாத / ஆதிக்க உளநிலை குறித்து பேசத் தவறுவது சமாதானப் பேச்சுகளில் இருந்த இரட்டைத் தன்மையை வெளிப்படுத்துவதோடு, தமக்கு வாய்ப்பான உண்மைகளோடு பயணிப்பதற்கான ஆதிக்க முயற்சியாகும். இந்த ஆதிக்க முயற்சியின் விளைவாக இலங்கைச் சமூகங்கள் அடைந்த துயரமும் இலங்கை என்ற நாடு சந்தித்திருக்கும் பின்னடைவுகளும் சாதாரணமானதல்ல. இலங்கையின் சமாதானச் செயல்முறையின் தோல்விகளை ஆராயும்போது, ஒரு தரப்பின் குறைகளை மட்டும் கூறிவிட்டு மறுதரப்பின் குறைகளை மறைப்பது மேலும் இடைவெளிகளையும் பிரச்சினைகளையுமே அதிகரிக்கும்.”
மட்/நூலக வரலாறு மறைக்கப்படும் உண்மைகள்
“அந்த வீதியால் செல்லுகின்ற ஒரு சாமானியனை தடுத்து நிறுத்தி இது என்ன என்று கேளுங்கள். அவன் நிச்சயம் சொல்லுவான் இது ‘பிள்ளையானின் நூலகம்’ என்று. ஆம் வரலாற்றின் உண்மையான பக்கங்களை மக்களின் மனதிலிருந்து யாராலும் நீக்கி விட முடியாது. இந்த நூலகத்தின் ஒவ்வொரு கல்லிலும் உங்கள் காதுகளை வைத்து கேளுங்கள் அவை ஒவ்வொன்றும் பிள்ளையான், பிள்ளையான் என்றே ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த ஒலிகள் காலமெல்லாம் மட்டக்களப்புத் தமிழகத்தின் காற்றிலும் மண்ணிலும் கடலிலும் நீக்கமற நிறைந்திருக்கும்.”
வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பிறகு கடந்துபோன அரை நூற்றாண்டு
“பாராளுமன்ற அரசியல் பாதை மூலமாக தனிநாட்டை அடைய முடியாது என்பது கூட்டணியின் படித்த அரசியல் தலைவர்களுக்கு தெரியாததல்ல. அவர்கள் எந்தவொரு அரசியல் போராட்டத் திட்டமும் தந்திரோபாயமும் இல்லாமல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து மக்களை குறிப்பாக, தமிழ் இளைஞர்களை உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாக்கிய தவறுக்காக நாளடைவில் பெரிய விலையைச் செலுத்த வேண்டியேற்பட்டது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் தலைமைத்துவம் ஆயுதமேந்திய தமிழ்ப் போராளிக் குழுக்களின் கைகளுக்குச் சென்ற பின்னர் மூண்ட சுமார் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரில் இலங்கை ஆயுதப் படைகளுக்கு எதிராக அவர்களால் தொடர்ச்சியாக கணிசமான காலத்துக்கு வியக்கத்தக்க வெற்றிகளை பெறக்கூடியதாக இருந்த போதிலும், தனிநாட்டுக்கான போராட்டத்தின் பிரதான தளப்பிரதேசமாக விளங்கிய வன்னி 2009 மே மாதம் இலங்கைப் படைகளிடம் வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து மாற்றம் கண்ட அரசியல் – இராணுவ நிலக்காட்சி வட்டுக்கோட்டை தீர்மானத்தை கிரகணம் செய்தது.”
மூன்றெழுத்தில் உன் நினைவுகள் நிலைத்திருக்கும்….!(மூன்றாவது கண்: XXII)
பிரபல செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ், கனடாவில் காலமானார். இலங்கை மற்றும் அண்டை நாடுகளின் பத்திரிகைகளின் செய்தியாளராக நீண்டகாலம் பணியாற்றிய அவரது பங்களிப்பு போர் கடந்த இலங்கையின் செய்திப்பரப்பில் கணிசமானது.
அவர் பற்றிய அழகு குணசீலனின் பார்வை இது..
ஈழத்து தமிழ் இதழியல் மரபில் தனபாலசிங்கம்
“மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களின் ‘பத்திரிகைத்துறையில் என்கதை’ எனும் நூல் நாளை ஞாயிற்றுக்கிழமை (17-05-2026) மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்படுகின்றது.
தமிழ் இதழியல் மரபில் தனபாலசிங்கம் உள்ளிட்ட ஆளுமைகளின் தன்வரலாற்றுக்கு தனியான முக்கியத்துவமும் சிறப்பும் உண்டு. இது தமிழ் இதழியல் மரபின் தொடர்ச்சிக்கும் நீட்சிக்கும் உரிய சமூக ஆவணமாகிறது. இந்த நூல் வெளியீடு தமிழில் இதழியலைக் கற்கும் மாணவர்களுக்கு இதழியல்சார் அறப் பண்புகளை, செய்திக்குப் பின்னாலுள்ள கருத்துநிலை அர்த்தப்படுத்தல்களை, அரசியல் கட்டுரையாக்கத்தை உய்த்துணர்வதற்கான அறிவையும் புலமையையும் கடத்துவதாக அமைகிறது.
இவை குறித்து பல்துறை ஆய்வாளர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் எழுதிய குறிப்பு இது.”
பிள்ளையானின் நூலகத்தை திறந்து வைக்கிறார் ஜனாதிபதி!(மூன்றாவது கண்: XXI)
“”பிள்ளையானின் நூலகம்” என்ற பெயர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானாலோ, அவரது கட்சியினராலோ சூட்டப்ப்பட்ட ஒன்றல்ல. தமிழ்த்தேசிய அரசியல் ஒரு நூலகத்தின் தரத்தை, தங்கள் தரத்திற்கு குறைத்து மதிப்பிட்டு, சிரிப்புக்கிடமாக்கி, ஏளனப்படுத்த பயன்படுத்திய சொல்லாடல்.
ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கும் நினைப்பிற்கும் மாறாக அந்த பெயர் மட்டக்களப்பு மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இப்போது அதை மட்டக்களப்பு மக்களின் மனதில் இருந்து அழித்து விடமுடியாத நிலையில், அவர்கள் சூட்டிய பட்டப்பெயரைக் கொண்ட பிள்ளையானின் நூலகத்தில் தாங்களும் பங்காளிகளாக மாறுவதற்கு என்ன வழி என்பதை தேடவைத்துள்ளது. அதற்காக மட்டக்களப்பு மாநகரசபை நிர்வாகத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்த முனைந்து வருகின்றனர். இதனால் மட்டக்களப்பு அரசியலில் ஜே.வி.பி/ என்.பி.பி. கட்சியினருக்கும், தமிழரசுக்கட்சியினருக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துவருவதை நேற்றைய எனது மட்டக்களப்பு தொலைபேசி உலாத்தலில் சுவாசிக்க முடிந்தது.”
சொல்லித்தான் ஆக வேண்டும் (சொல் – 54)
“அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் தொடங்கி 2002 உள்ளக சுயநிர்ணயம் குறித்த ஒஸ்லோ பேச்சுவார்த்தை வரையிலான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே சீரழித்தது.
இந்தியா – இலங்கை சமாதான ஒப்பந்தம் வருவதற்கும் அதனை அமுல் செய்வதற்கும் பங்களித்த முன்னாள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர்நாயகம் அ.அமிர்தலிங்கம் – முன்னாள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபி.ஆர்.எல்.எம்) யின் செயலாளர் நாயகம் பத்மநாபா – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி ஆகியோரைத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே கொலை செய்தது என்பது பகிரங்கவெளியில் எல்லோருக்கும் தெரிந்ததொன்றாகும்.”
பீரிஸ் சொன்ன கதைகளும் பிற கதைகளும்
“பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த அன்ரன் பாலசிங்கத்துடன் பேச்சுவார்த்தை மேசைக்கு வெளியே தனிப்பட்ட ரீதியில் பீரிஸ் நடத்திய உரையாடல்கள் பற்றித் தமிழ் ஊடக வெளியோ அல்லது அரசியல் தரப்புகளோ அதிமாகப் பேசவில்லை. அல்லது அவை பேச விரும்பவில்லை. காரணம், புலிகளைப் பற்றிய இந்த மாதிரியான விடயங்களைப் பற்றிப் பேசினால், அது எதிர்மறையாகத் தமக்குப் பாதிப்பை உண்டாக்கலாம் என்ற அச்சம் பலருக்கும் உள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு மாற்றான அரசியல் பார்வையையும் செயற்பாட்டு முறையையும் கொண்டிருந்த தரப்புகளும் கூட இப்பொழுது இதைத் தவிர்க்கவே முயற்சிக்கின்றன. என்பதால் பலதையும் பலரும் கடந்து செல்கிறார்கள். சிலர் மட்டும் (தீவிரத் தமிழ்த் தேசியவாத அடையாளத்தைப் பேண முற்படும் சிறிதரன், கஜேந்திரன்கள் மற்றும் இவர்களுடைய அரசியலை ஆதரிக்கும் ஊடகங்களும் அரசியற் பத்தியாளர்களும் ஆதரவாளர்களும்) புலிகளின் விடயங்களில் தமக்குச் சாதகமானவற்றைத் தெரிவு செய்து எடுத்துக் கொள்கிறார்கள். மாவீரர்நாள், திலீபன் நினைவுநாட்கள், புலிகளுடைய தியாகம் போன்றவற்றை. மற்றும்படி புலிகளின் செயற்பாடுகள் எதையும் அல்ல.
இதற்கப்பால் 30 ஆண்டுக்கு மேலாக ஈழத் தமிழ் அரசியல் வெளியில் பேராதிக்கம் செலுத்திய ஓரமைப்பைப் பற்றி, அதனுடைய எழுச்சி, வீழ்ச்சி, அதற்கான காரணங்கள், அதன் வரலாற்றுப் பங்களிப்பு, அந்த அமைப்பைப்பற்றிய விமர்சனங்கள், அதற்கான காரணங்கள், அவற்றிலிருந்து படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் என எதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆனால், அந்த அமைப்பு இன்று இல்லாத போதும் அதனுடைய செல்வாக்குச் சமூக வெளியிலும் அரசியல் வெளியிலும் வலிமையாக இருக்கிறது. என்பதால்தான் அதைப்பற்றிப் பேசுவதற்கே அச்சமடைகின்றனர். இந்த அச்சம் மிக மோசமானது, தன்னையே அழிக்கக் கூடியது. அதை இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”
