சொந்த வாலை கடித்தபடி விடாமல் சுழலும் இலங்கையின் பொருளாதாரம்

“மிகப் பெரும்பான்மையான மக்கள் இன்னமும் மதிப்பிற்குரிய தோழர் அநுரா அவர்கள் நாட்டு மக்களின் பொருளாதார வாழ்வை முன்னேறிச் செல்லும் பாதையில் கொண்டு சென்று நிறுத்தி உயர்ந்தெழுந்து ஓடச் செய்வார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். மதிப்பிற்குரிய ஜனாதிபதி அநுரா அவர்கள் மத்திய வங்கிக்குள்ளும் திறைசேரிக்குள்ளும் தனது அதிக அளவான நேரத்தை செலவளித்தால் மெய்யான பொருளாதார முன்னேற்றங்களுக்கான வியூகங்களைக் கண்டறிய மாட்டார். சுற்றிச்சுற்றி மேலும் தொடரும் நெருக்கடிகளை சமாளிப்பதற்கான பொறி முறைகளை பரிசோதிக்கும் கூடத்திலேயே அவரது காலம் கடந்து போகும். அரசியற் களத்தில் அவர் திறமைசாலி என்பதை தனது நாவன்மைகளாலும் உடல் மொழியாலும் தொடர்ந்து நிரூபிக்கிறார் ஆனால் நாட்டின் பொருளாதார களத்தில் அவர் தனது கால்களை இன்னமும் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் வகையாக நிலத்துக்கு இறக்கவில்லை.”

மேலும்

பலகட்சி ஜனநாயக முறையைக் கொண்ட நாடுகளில் தனிக்கட்சி ஆட்சியை நிறுவுவது சாத்தியமா?

“முன்னைய எந்தவொரு அரசாங்கத்துக்கும் கிடைத்திராத பாராளுமன்றப் பெரும்பான்மை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இருக்கிறது. 2024 பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி. தலைவர்கள் தங்களுக்கு சுமுகமாக  அரசாங்கத்தை நடத்தக் கூடிய பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தால் போதுமானது என்று வெளிப்படையாகக் கூறியபோதிலும், மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கினார்கள். 

அத்தகைய பிரமாண்டமான பெரும்பான்மைப் பலத்தை அரசாங்கம் கொண்டிருக்கின்ற அதேவேளை, எதிர்க்கட்சிகள் முன்னென்றுமில்லாத அளவுக்கு பலவீனப்பட்டிருப்பது ஒரு கட்சி ஆட்சியில் அரசாங்கம் நாட்டம் காட்டக்கூடும் என்ற பீதிக்கு முக்கியமான ஒரு காரணம். ஆனால், அத்தகைய எந்த முயற்சியிலும் அரசாங்கம் இறங்கக் கூடிய சாத்தியம் இல்லை. என்றாலும், அவ்வாறான முயற்சி எதுவும் முன்னெடுக்கப்படுமானால் இலங்கைக்கு பல ‘அறகலய’ க்கள் தேவைப்படலாம்.”

மேலும்

மாகாண ஆட்சிக் கூடாரத்தில்  குடியேறும் கிராமராஜ்யம்

“’உரிமைகள் மீது படுத்திருப்பவனுக்கல்ல, விழிப்பாய் இருப்பவனுக்கே சட்டம் துணை செய்யும்’ என நீதித்துறைக்கான கோட்பாடடில் ஒரு வாக்கியம் இருக்கிறது. இலங்கைத் தமிழர் சமூகம் இந்த மாகாண ஆட்சி முறையை தவற விட்டால் பரிணாமமாகும் கிராம ஆட்சி முறையை அங்கீகரித்து, ஏற்று தமது அரசியல் சமூக பொருளாதார நலன்களை அதனூடாக காப்பாற்றிக் கொள்வதற்கு இப்போதே இலங்கைத் தமிழர் சமூகம் மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டும்..”

மேலும்

முகத்தில் கரி: மீனுக்கு தலைதான் முதலில் அழுகுமாம்..! (மூன்றாவது கண்: XVII)

“இந்த விவகாரம் அமைச்சர், அமைச்சு அதிகாரிகளோடு மட்டும் சார்ந்த விடயம் அல்ல. இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சர், அமைச்சின் செயலாளர், மற்றும் அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதி, ஜனாதிபதியின் கீழான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட ஒரு பாராளுமன்றத்தின் செயற்பாடுகள்…. போன்ற பல விடயங்களால் சூழப்பட்ட ஒன்று. இது விடயத்தில் ஜனாதிபதியும், அமைச்சரவையும், பெரும்பான்மை பாராளுமன்றமும் செயற்பட்ட முறைகள்  கட்சி அரசியல் அற்ற, அரசியல் நேர்மை தவறாத, சட்டத்தை மதிக்கும், தனிப்பட்ட உறவுகளை கடந்த ஒரு அரசியல் அணுகுமுறையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கு இல்லை என்பது தெளிவான பதிலாக இருக்க முடியும். இந்த வகையில் அமைச்சர் குமார ஜெயக்கொடியினதும், அவரது அமைச்சு செயலாளரதும் இராஜினாமா காலம் கடந்த, ஒன்று மட்டும் அல்ல அநுர அரசாங்கம் கண்கெட்ட பின்னர் செய்யும் சூரிய நமஸ்காரமுமாகும்.”

மேலும்

நீளிரா: காலத்தை ஊடுருவும் சினிமா

“நீளிரா ஒரு காலத்தைப் பிரதிபலிக்கும் சினிமா (Cinema that reflects the times). சுருக்கமாகச் சொன்னால் ஒரு காலச் சினிமா (Period cinema). என்பதால் அதற்குரிய அரசியலும் அதில் பேசப்படுகிறது. அந்த அரசியல் ஈழப்போரின்போதான மனித நிலவரத்தையும், போரின் மடமையையும் மையமாக வைத்து, எந்த ஒரு தரப்பினருக்கும் எதிராகப் பரப்புரை செய்யாத ஓர் எதிர்ப்போர் (anti – war) அரசியலாகும். தனியே ஒரு தரப்பைக் குற்றம் சாட்டாமல், நிகழ்வுகளை அப்படியே முன்வைப்பதன் மூலமாக பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரத்தையும் உரிமையையும் சோமீதரன் அளிக்கிறார். முக்கியமாக எந்த ஒரு தரப்பையும் புறக்கணிக்காமல், போர், அதனுடைய வெற்றி – தோல்வி, தியாகம், தேசியவாதம், இரத்த வெறி போன்றவற்றைப் போற்றிக் கொள்ள முயலாத ஒரு முக்கியமான படைப்பாக உள்ளது.
இந்திய இராணுவ அணிக்குத் தலைமை ஏற்று வரும் கப்டன், இராணுவ அதிகாரியாகவும் (போரிடும் நிலையில் உள்ளவராகவும்) மறுமுனையில் மனிதநேயமுள்ளவராகவும் காட்டப்படுகிறார். இது இயல்பானதா? விதிவிலக்கானதா என்பது விவாதத்துக்குரியது. இத்தகைய விவாதத்தை உருவாக்குவதே கலையின் பணியாகும். அப்படித்தான் இந்திய இராணுவத்தை(இலக்கை) நெருங்கிய பிறகு அதைத் தாக்காமல் விட்டுச் செல்லும் போராளிகள்(இயக்கம்). இப்படி நடந்திருக்கிறதா? இப்படி நடக்குமா? என்பதும் விவாதத்திற்குரியதே. ஏன் நடக்க முடியாது? என்பதே கலையின் கேள்வியாகும். அப்படி அந்தப் போராளிகள் விலகிச் செல்வதால் அமைதியாகப் புலரும் காலையும் அந்தக் காலையில் கேட்கும் தேவாரமும் வெளியொலிகளும்(சூழலின் இசையும்) பெறுமதியாகின்றன.  தன்னுடைய முதற்படத்திலேயே பலரையும் ஊன்றிக் கவனிக்கவும் விரிவாகப் பேசவும் வைத்திருக்கிறார் சோமீதரன்.”

மேலும்

மட்டக்களப்பு:  புத்தாண்டுக் காட்சிகள் பேசும் மொழி..!(மூன்றாவது கண்: XVI)

“இன்று இந்த காட்சிகளை காண்பது அரிதிலும் அரிது. இந்த வேளாண் பாரம்பரியங்களை தொலைத்து, இயற்கை வனப்பை அழித்து , இறந்திரமயமாக்கப்பட்டது மட்டும் அன்றி வாழ்க்கையையும் இயந்திரமாக்கிக்கொண்டுள்ளோம். மட்டக்களப்பு புத்தாண்டு கொண்டாட்டம், அதன் பாரம்பரியங்கள் குறித்து இரைமீட்பதற்கும், தொலைத்தவற்றை தேடுவதற்கும், மீட்டெடுப்பதற்குமான. ஒரு காலக்கடிகாரம்  மறுதிசையில்  இனி ஓடப்போவதில்லை. குறைந்த பட்சம் நாங்களே எங்கள் வளங்களையும், வசதி வாய்ப்புக்களையும் அழித்தை – இழந்ததை எண்ணி நவீன மயமாக்கல் மூலமான வர்த்தக மயமாக்கத்திற்கு “அபிவிருத்தி/ வளர்ச்சி/ நாகரிகம்” என்று பெயரிட்டு மாற்றுச் சமநிலை ஒன்றை பேணத் தவறிய குற்ற உணர்வை மறைக்க இந்த புத்தாண்டில் ஆவது யானைகள் மீது பழியைப்போடுவதை தவிர்ப்போம் என்றால் , அது ஒரு மாற்று  சிந்தனை துளியாக அமையும்.”

மேலும்

நிக்சனின் ‘பைத்தியக்காரன் கோட்பாட்டை’ நினைவுக்குக் கொண்டுவரும் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் 

“ட்ரம்ப் முன்னுக்குப்பின் முரண்பாடாகச் செயற்படுகின்றார். இராணுவ வல்லமை அழிக்கப்பட்டுவிட்ட ஒரு நாட்டுடன் போர்நிறுத்தம் செய்வதற்கு இணங்குவது என்பது அவரின் அந்த முரண்பாடுகளின் ஒரு உச்சம் எனலாம். கோடிக்கணக்கான உயிர்களும் உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் தனது சுயநல உள்ளுணர்வுகளினாலும் தன்னைச் சுற்றியுள்ள துதிபாடிகளினாலும் வழிநடத்தப்படும் ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புக்களைச் சார்ந்திருந்திருக்கும் ஒரு உலகில் இன்று நாம் வாழ்கிறோம். போர்க் குற்றங்களைச் செய்யும் தங்கள் நோக்கத்தைப் பற்றி ட்ரம்ப் கும்பல் பகிரங்கமாக பெருமை பேசிக்கொள்கிறது.”

மேலும்

வளரும் நெருப்பாய் உயரும் வட்டிக் கடனால் குட்டிச் சுவராகும் இலங்கைப் பொருளாதாரம்

“மேற்காசிய யுத்தத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரம் ஏதோ மூச்சு முட்டாமல் ஓடிக் கொண்டிருப்பது போல தெரிகிறது. ஆனால் அரசாங்கத்தின் வருமான ஊற்றுகளில் வரட்சிகள் காணப்படுகின்றன, மேலும் அந்நிய செலாவணி வரவு வாய்க்கால்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை எப்போது சீராகும் என்று தெரியவில்லை. நாட்டு மக்களைப் பொறுத்தவரையில், ‘தங்களுக்கு தர வேண்டியவைகள் குறையாது தரப்பட வேண்டும், தங்களுக்கு கிடைக்க வேண்டியவைகள் நேரத்துக்கு கிடைக்க வேண்டும், இவற்றை சரியாக செய்வதில் வல்லவர்களாக உள்ளவர்கள் மட்டுமே நல்லவர்கள்’ என சிந்திப்பதற்கே பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.”

மேலும்

கனகர் கிராமம்: ஓர் அந்நாள் விதும்பல்

“வெறுமனே வட இலங்கை எதிர்ப்பு, சோனக எதிர்ப்பு, சிங்கள எதிர்ப்பு என்ற கோணங்களில் மட்டும் வாசிப்பதற்கு மேல்,  ஒரு இலட்சியவாதப் பார்வை  இந்நாவலின் அடிநாதமாக இருக்கிறது என்பதை மாத்திரம் கருத்தியல் சார்ந்து நான் பதிவுசெய்ய விழைகிறேன்.  
 
இந்த வேற்றுமை உணரப்பட்டு தமிழ் – சோனக சமூகங்கள் ஒற்றுமையாக வாழ்ந்த இனிய அந்தக்காலம் இந்நூலில் விரிவாகவே பதிவாகியுள்ளது. அவுலியாக்களின் சியாரங்களை அல்லது இசுலாமியத் துறவியரின் அடக்கத்தலங்களை இங்கிருந்த சைவத் தமிழர் வழிபட்டமை, அம்மன் கோவில்களுக்கு சோனகர் வந்து வழிபட்டமை, சோனகர் வழிபட்ட விசக்கல் முதலியன, சுன்னத்துக் கலியாணத்தில் தமிழர்கள் கலந்துகொள்வது, ஆடல் பாடல் நிகழ்த்துவது என்று இன்ன பல. அதை அனுபவித்த  சிலருக்கு மீண்டும் அக்காலம் வராதா என்ற ஏக்கம் பெருமூச்சு எழும்.“

மேலும்

எழுதத்தெரியாத பிள்ளையானும், படிக்கத்தெரியாத  சாணக்கியனும்……!(மூன்றாவது கண்: XV)

“இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு எம்.பி.இ.சாணக்கியன் “எழுதத்தெரியாத பிள்ளையான்” எப்படி புத்தகம் எழுத முடியும் என்று பாராளுமன்றத்தில் கேட்டிருக்கிறார். எழுதத் தெரியாதவர்கள் எழுதியிருந்தால் கேட்கவேண்டிய கேள்விதான். ஆனால் சாணக்கியன் போன்ற “வாசிக்கத் தெரியாதவர்கள்” இந்த கேள்வியை எழுப்புவதுதான்  வேடிக்கை.”

மேலும்

1 2 3 179