போரில் தோல்வியை இராஜதந்திர வெற்றியாகக் காட்டும் டொனால்ட் ட்ரம்ப்

“ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேலையும் ஈடுபடுத்தினால் தன்னால் இந்த போரில் இருந்து வெளியேற முடியாது என்பதை உணர்ந்த ட்றம்ப், ஈரானை  நிபந்தனையற்ற முறையில் சரணடைய வைப்பதைத் தவிர வேறு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவர வேண்டியேற்பட்டது. தனது நகர்வுகளுக்கு (எதிரியான ஈரானிடமிருந்து அல்ல)  தனது நண்பனான  இஸ்ரேலிய பிரதமரிடமிருந்து வரக்கூடிய  இடையூறுகளை எவ்வாறு சமாளிப்பது என்பதே ட்ரம்புக்கு இப்போது  பிரச்சினையாக இருக்கிறது.”

மேலும்

வேலுப்பிள்ளை: உலக உதைபந்தாட்டத்தில் ஒரு தமிழ் வேர்…! (மூன்றாவது கண்: XXII)

“இன்றைய புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் தமிழீழ விளையாட்டு கழகம், தமிழீழ வெற்றி கிண்ணப் போட்டிகள், ஈழப்போராட்ட அரசியல் ஞாபகார்த்த போட்டிகளுக்குள்ளேயே சுழல்கின்றனர். இது வாழும் தேசங்களின் பன்மைத்துவ விளையாட்டு வாழ்வியலில் இருந்து விலகி – தாமாக ஒதுங்கியிருக்கின்ற தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மாதிரியாக அமைந்துள்ளது. இது ஈழ தேசியத்திற்கும் , வாழும் நாட்டு தேசியத்திற்கும் இடையே ஒரு குறுந்தேசியத்தை நிலைநிறுத்துகிறது. இந்த பாணியிலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் சர்வதேச விடுதலைப்போராட்டங்களில் இருந்து விலகி தமிழ்த்தேசிய அரசியல் தனித்து ஓடி, ஓட்டம்  முடிவடைந்து இருக்கிறது. ஆனால் அதுவல்ல முடிவடைய வேண்டிய இடம்.”

மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதிலேயே தேசிய மக்கள் சக்தி அரசின் எதிர்காலம் தங்கியுள்ளது.

“சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளுக்கு ‘வயிற்றில் புளியைக் கரைப்பது போல்’ அவர்கள் விசாரணைகளில் விலத்திச் செல்லாதவாறு அவர்களுக்குப் பயத்தைக் காட்ட வேண்டும். ஏனெனில் நடந்திருக்கும் தாக்குதலானது மனித குலத்துக்கு எதிரான கர்ண கொடூரமானது. சட்டம் எவருக்கும் சமமானது, பொதுவானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் குற்றவாளிகள் எத்தரத்தில் இருந்தாலும் சட்டத்தின்முன நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். இதில் அரசுக்கு எதிராக எத்தகைய சவால்கள், எதிர்ப்புக்கள், அச்சுறுத்தல்கள் நேர்ந்தாலும் அதற்கு இடம் கொடுக்காது, ‘பனங்காட்டு நரி சலசலப்பு அஞ்சாது’ என்ற உறுதியோடு, அஞ்சாமல் செயற்பட வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கட்டி எழுப்புவதற்கான வழியாக அமையும்.”

மேலும்

தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 2

“பலமான தலைமைத்துவம் இல்லாதபோது, எதிர்த்தரப்புக்கு ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ (Divide and Rule) யைச் செய்வது மிகவும் எளிதாகிவிடுகிறது. ஈழத்தமிழர் அரசியற் சூழலில் அரசியல் கட்சிகள் உடைக்கப்படுவதும் உடைவதும் மிகச் சாதாரணமாகி விட்டது. இது மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோடு, நம்பிக்கையீனத்தையும் தருகிறது. தேர்தல் காலங்களில் சுயேச்சைக் குழுக்களும் குட்டிப் பிரிவுகளும் பெருகுவதும் தற்செயலானவை அல்ல. இதற்குப் பின்னணியாக தமிழ் அரசியல் தரப்பினரின் அறிவீனத்திற் தொடங்கி, ஒடுக்கும் அரசியற் தரப்புகளின் சூழ்ச்சி வரையில் உண்டு. இது தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த அரசியல் நிலைப்பாட்டையும் உறுதிப்பாட்டையும் சிதைக்கிறது. கூடவே தமிழ் மக்களுடைய ஜனநாயக அரசியற் பலத்துக்கான அடையாளமாக இருக்கும் வாக்கு வங்கியையும் சிதறடித்து விடுகிறது. அரசியல் ரீதியாக இதைச் சிதைப்பு உத்தி (Fragmentary Strategy) என்பர். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அரசியற் பேரம் பேசும் சக்தியை (Bargaining Power) அரசாங்கம் குறைத்து விடுகிறது. இது ஒடுக்குமுறைக்கு வாய்ப்பான இன்னொரு வலுவான உத்தியாகும். இதற்குத் தமிழ் அரசியற் கட்சிகளும் தமிழ் மக்களும் பலியாகிக் கொண்டிருக்கும் துயர நிலை நீடிக்கிறது.”

மேலும்

ஈஸ்டர் தாக்குதல்: சட்டம் தன் கடமையைச் செய்கிறதா…? (மூன்றாவது கண்: XXI)

“சந்தேக நபர்கள், குற்றவாளிகள் அரசாங்கத்தின் அல்லது அதன் நீதி, நிர்வாக கட்டமைப்பின்  அடிமைகள் அல்ல. அவர்களும் மனிதர்கள். மனித நேயத்துடன் நடாத்தப்பட வேண்டியவர்கள். சந்தேகநபர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றத் தீர்ப்பினால் உறுதிசெய்யப்பட்டாலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படமுடியாதவை. உலகில் சட்டத்தின் ஜனநாயக ஆட்சியை அளவிடும் குறிகாட்டிகளுள் இதுவும் ஒன்று. இலங்கையில் கைதிகள், குற்றவாளிகள் மீது அரச அதிகாரிகளின் அத்து மீறல்கள், கடமை துஷ்பிரயோகங்கள் குறித்து அண்மைக்காலங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால்  இலங்கை ஊடகங்கள் இவற்றை வழமையான சம்பவங்களாக மௌனித்து கடந்து செல்லவே முயற்சிக்கின்றன. இதே மௌனத்தையே இந்த ஊடகங்கள் யுத்த காலத்திலும் செய்து சுரேஷ் சாலேக்கு வெடிக்கொளுத்தினர்.”

மேலும்

சுரேஷ் சாலே விவகாரத்தை சுற்றி ஒரு அரசியல் 

“முறையான ஆதாரங்களின் அடிப்படையில் செயற்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட அரசியல் தளங்களை அல்லது சர்வதேச நெருக்குதல்களை திருப்திப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச புலனாய்வுப் பிரிவினரை இலக்கு வைப்பதாக எதிரணி அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

எது எவ்வாறிருந்தாலும், அரசியல்வாதிகள் ஒரு சூத்திரதாரியைப் பாதுகாப்பதற்காகவே அரசியல் நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள் என்று மக்கள் பரவலாக நமபுகிறார்கள். இதுகாலவரையில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளும் இதற்கு காரணம்.”

மேலும்

தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) -பகுதி 1

“சம்பந்தனுடைய அணுமுறை புத்திபூர்வமானது. யதார்த்தத்தை உணர்ந்தது. அதைச்சேதமாக்கியது, அவருடைய தனிப்பட்ட குறைபாடுகளும் பலவீனங்களும் என்றால், அதே அளவுக்கு அவருடைய அணுமுறையையும் நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழ்த் தரப்பின் எதிரணியினர் ஆகும். குறிப்பாக தீவிரத் தமிழ்த்தேசியவாதிகள். அவர்கள் யதார்த்தத்தையும் உண்மையையும் ஏற்க மறுத்து, உணர விரும்பாமல் சம்பந்தனைத் துரோகியாக்கினர். அறிவார்ந்து சிந்திப்போரையும் யதார்த்தவாதிகளையும் துரோகிகளாகச் சித்திரித்து மகிழ்வது தீவிரத் தமிழ்த்தேசியவாதத்தினரிடம் உள்ள பொதுப்பண்பாகும். சுய இன்ப அரசியல்வாதிகளுக்கு இதற்கு மேல் சிந்திக்க முடியாதல்லவா! அவர்கள் சம்பந்தனை தமிழ் மக்களின் எதிரியாக்க முற்பட்டனர். சம்பந்தன் இறந்தபோது காத்திருந்து அவரை எப்படிப் பழிவாங்கினர் என்பது, அவருடைய மரணத்தின்போது அவர்கள் நடந்து கொண்ட முறைமை சிறப்பாக வெளிப்படுத்தியது.”

மேலும்

சங்கீதனின் விவகாரம்: தேசிய மக்கள் சக்தி அரசிற்கான முதல் பெரிய சோதனையும் தமிழ் அரசியலுக்கான விழிப்பூட்டலும்

“இளம் தலைமுறை குறிப்பாக தலைவர்களை அவர்களின் சொற்களால் அல்ல, சாதனைகளால் மதிப்பிடத் தொடங்கியுள்ளது. சமூகத்தின் அடிப்படை நலன்கள் பாதிக்கப்படும் தருணங்களில் ஒற்றுமையை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சங்கீதன் விவகாரத்தின் முக்கியத்துவம் அதன் சட்ட முடிவில் மட்டும் இல்லை. அது ஆட்சி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தலைமைத்துவம் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் நாளடைவில் பொதுமக்களின் கவனத்திலிருந்து மறைந்துவிடலாம். ஆனால் அது வெளிப்படுத்திய பிரச்சினைகள் இலங்கையின் எதிர்காலத்தில் தொடர்ந்தும் முக்கிய இடம் பெறும்.”

மேலும்

எது கவிதை? பகிர்வுகள் (பகிர்வு – 13)

‘கவிதையை ‘மரபு’ என்றும் ‘புது’ என்றும் வகைப்படுத்த வேண்டியதில்லை. கவிதைக்கு ஒசை (சந்தம்) முக்கியம். யாப்பைக் கட்டியழத் தேவையில்லை. யாப்பை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொண்டால் போதும். யாப்பு இயல்பாக மீறப்படலாம். புதுக்கவிதை வடிவம் ஓசையற்றது. புதுக்கவிதை உரைநடையின் உன்னதமான வளர்ச்சியேதவிர அது ‘பா’ (கவிதை) இலக்கியமல்ல. கவிதை ஓர் இறுக்கமான ஊடகம் என்பதால் இறுக்கமான உரைநடையெல்லாம் (புதுக்கவிதை) கவிதையாகிவிடாது.’

மேலும்

முள்ளிவாய்க்காலுக்கு உரிமை கோருகிறது ஷூரா..? (மூன்றாவது கண்:XX.)

வடக்கு, கிழக்கில் தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மெல்ல மெல்ல மீண்டும் புரிந்துணர்வு பெறுகின்ற நிலையில், தமிழரசுக்கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையே ஒரு இணக்க அரசியல் உருவாகி வருகின்ற நிலையில், என்.பி.பி . இன உறவு மற்றும் சமத்துவம் பற்றி பேசுகின்ற நிலையில் கொழும்பு மைய ஷூரா அமைப்பின் இந்த அறிக்கை உண்மையிலேயே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும், பிராந்திய, சர்வதேச இராஜதந்திர அரசியல் நடுநிலைமைக்கும் விழுந்த பலத்த அடியாகும்.”

மேலும்

1 2 3 184