தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) -பகுதி 1

“சம்பந்தனுடைய அணுமுறை புத்திபூர்வமானது. யதார்த்தத்தை உணர்ந்தது. அதைச்சேதமாக்கியது, அவருடைய தனிப்பட்ட குறைபாடுகளும் பலவீனங்களும் என்றால், அதே அளவுக்கு அவருடைய அணுமுறையையும் நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழ்த் தரப்பின் எதிரணியினர் ஆகும். குறிப்பாக தீவிரத் தமிழ்த்தேசியவாதிகள். அவர்கள் யதார்த்தத்தையும் உண்மையையும் ஏற்க மறுத்து, உணர விரும்பாமல் சம்பந்தனைத் துரோகியாக்கினர். அறிவார்ந்து சிந்திப்போரையும் யதார்த்தவாதிகளையும் துரோகிகளாகச் சித்திரித்து மகிழ்வது தீவிரத் தமிழ்த்தேசியவாதத்தினரிடம் உள்ள பொதுப்பண்பாகும். சுய இன்ப அரசியல்வாதிகளுக்கு இதற்கு மேல் சிந்திக்க முடியாதல்லவா! அவர்கள் சம்பந்தனை தமிழ் மக்களின் எதிரியாக்க முற்பட்டனர். சம்பந்தன் இறந்தபோது காத்திருந்து அவரை எப்படிப் பழிவாங்கினர் என்பது, அவருடைய மரணத்தின்போது அவர்கள் நடந்து கொண்ட முறைமை சிறப்பாக வெளிப்படுத்தியது.”

மேலும்

சங்கீதனின் விவகாரம்: தேசிய மக்கள் சக்தி அரசிற்கான முதல் பெரிய சோதனையும் தமிழ் அரசியலுக்கான விழிப்பூட்டலும்

“இளம் தலைமுறை குறிப்பாக தலைவர்களை அவர்களின் சொற்களால் அல்ல, சாதனைகளால் மதிப்பிடத் தொடங்கியுள்ளது. சமூகத்தின் அடிப்படை நலன்கள் பாதிக்கப்படும் தருணங்களில் ஒற்றுமையை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சங்கீதன் விவகாரத்தின் முக்கியத்துவம் அதன் சட்ட முடிவில் மட்டும் இல்லை. அது ஆட்சி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தலைமைத்துவம் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் நாளடைவில் பொதுமக்களின் கவனத்திலிருந்து மறைந்துவிடலாம். ஆனால் அது வெளிப்படுத்திய பிரச்சினைகள் இலங்கையின் எதிர்காலத்தில் தொடர்ந்தும் முக்கிய இடம் பெறும்.”

மேலும்

எது கவிதை? பகிர்வுகள் (பகிர்வு – 13)

‘கவிதையை ‘மரபு’ என்றும் ‘புது’ என்றும் வகைப்படுத்த வேண்டியதில்லை. கவிதைக்கு ஒசை (சந்தம்) முக்கியம். யாப்பைக் கட்டியழத் தேவையில்லை. யாப்பை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொண்டால் போதும். யாப்பு இயல்பாக மீறப்படலாம். புதுக்கவிதை வடிவம் ஓசையற்றது. புதுக்கவிதை உரைநடையின் உன்னதமான வளர்ச்சியேதவிர அது ‘பா’ (கவிதை) இலக்கியமல்ல. கவிதை ஓர் இறுக்கமான ஊடகம் என்பதால் இறுக்கமான உரைநடையெல்லாம் (புதுக்கவிதை) கவிதையாகிவிடாது.’

மேலும்

முள்ளிவாய்க்காலுக்கு உரிமை கோருகிறது ஷூரா..? (மூன்றாவது கண்:XX.)

வடக்கு, கிழக்கில் தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மெல்ல மெல்ல மீண்டும் புரிந்துணர்வு பெறுகின்ற நிலையில், தமிழரசுக்கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையே ஒரு இணக்க அரசியல் உருவாகி வருகின்ற நிலையில், என்.பி.பி . இன உறவு மற்றும் சமத்துவம் பற்றி பேசுகின்ற நிலையில் கொழும்பு மைய ஷூரா அமைப்பின் இந்த அறிக்கை உண்மையிலேயே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும், பிராந்திய, சர்வதேச இராஜதந்திர அரசியல் நடுநிலைமைக்கும் விழுந்த பலத்த அடியாகும்.”

மேலும்

புலம்பெயர் சமூகத்தின் ஆபத்தான நினைவேக்கம்

ஒரு ஆபத்தான கேள்வியைக் கேட்போம்.
இலங்கைத் தமிழரின் அடையாளம் என்ன?
அது வெறும் தமிழ் மொழி மட்டுமா? அப்படியானால் தமிழகத்தவர்களிடமிருந்து நாம் எப்படி வேறுபடுகிறோம்? நம்முடைய உச்சரிப்பா? உணவா? வறண்ட நகைச்சுவையா? யாழ்ப்பாணத்தின் திமிரா? வன்னியின் மீள் எழுச்சியா? மட்டக்களப்பின் பாடல்களா? கல்வியின் மீதான மோகமா?
நம் பிள்ளைகளுக்குப் பால் புட்டு, ஒடியல் கூழ், பனை, குமுளமுனை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை பற்றித் தெரியுமா? அல்லது அவர்களுக்குக் கொடியைப் பற்றி மட்டும்தான் தெரியுமா?
கொடியை ஏந்துவது எளிது. கலாச்சாரம் என்பது கடினமானது.
ஒரு கையால் கொடியை ஏந்திக்கொண்டு, மறு கையால் உங்கள் பாட்டியின் மொழியை மறந்துவிட முடியும்.
அதுதான் பாசாங்குத்தனம்.

மேலும்

உண்மையைக் காணமறுக்காத ஒரு பத்திரிகையாளர் (டி.பி.எஸ். ஜெயராஜுக்கு  (1954–2026) ஒரு அஞ்சலி)

‘அவர் ‘துரோகியாக முத்திரை குத்துதல்’ (traitorisation) என்று தான் அழைத்த அந்தப் போக்கின் பின்னணியைக் கண்டறிந்து எழுதினார். அதனை ஒரு ‘கொடிய கொயபெல்சியப் பிரச்சாரச் செயல்முறை’ (terrible Goebbelsian process) என்றும் அவர் வர்ணித்தார். அதாவது, எவ்வித ஆதாரங்களுமின்றி, வெறும் அரசியல் எதிரிகளைப் பிரச்சார பலத்தின் மூலமாகவே துரோகிகளாகப் பொய் முத்திரை குத்தும் ஒரு செயல்முறையே அதுவாகும்.

ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் காலம் தொட்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின்  எழுச்சி ஊடாகவும், பின்னர் மாற்று அரசியல் பாதையை முன்வைத்த எவரையும் திட்டமிட்டு அழித்தொழித்த விடுதலைப் புலிகளின் காலம் வரையிலும் இச்செயல்முறை எவ்வாறு பரிணமித்தது என்பதை அவர் துல்லியமாகத் தேடிக் கண்டறிந்தார்.’

மேலும்

இம்முறை நடைபெற்ற  கோவில் சடங்குகள்:  சில அவதானங்களும் ஆலோசனைகளும்

மட்டக்களப்பிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இவ்வருடம் நடந்த சடங்குகளில் பல மாற்றங்கள் தென்பட்டதாக விமர்சிக்கும் பேராசிரியர் சி. மௌனகுரு, இவை குறித்த தனது அவதானங்களை இங்கு பகிர்கிறார்.
அத்தோடு, இவைகுறித்த மேலதிக ஆய்வுகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கோருகிறார்.

மேலும்

பூநகரியில் வள அபகரிப்பும் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களும்

“விவசாயம், மீன்பிடி போன்ற பாரம்பரிய தொழில்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் திட்டங்கள் (கடலரிப்பு, நச்சுக்கழிவு கலப்பு) நிச்சயமாக ஏற்கப்படக்கூடியவை அல்ல. மக்கள் திட்டங்களை எதிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று, திட்டங்களின் நோக்கம் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கம், அவற்றின் சாதக பாதக விளைவுகளைக் குறித்து பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படாமை மற்றும் சமூக பங்கேற்பு இன்மை ஆகும். கூடவே இயற்கை வளங்களை அழித்தல், சதுப்பு நிலங்களை நிரப்புதல் மற்றும் இயற்கை வளங்களைச் சட்டவிரோதமாக அகழ்தல் போன்றனவும் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்கின்றன.”

மேலும்

அட்டமஸ்தானாதிபதி விவகாரமும் சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாட்டின் கதியும்

“இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அட்டமஸ்தானாதிபதி போன்ற உயர் நிலை மதகுருமார் சம்பந்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சாதிக்கும் மௌனம் உணர்ச்சிபூர்வமான விவாதத்துக்குரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், சிறுவர் துஷ்பிரயோகத்துக்கும் சுரண்டல்களுக்கும் எதிராக மகாநாயக்கர்கள் உறுதியாகக் குரல் கொடுத்திருக்க வேண்டும். சமூகத்தில்  ஆன்மீக மற்றும் ஒழுக்க நெறிப் போதனைகளைச் செய்கின்ற தலைவர்கள என்ற வகையில் அது அவர்களின் தலையாய கடமையாகும். இந்த மௌனம் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களைப் பாதூகாப்பதில் நிறுவன மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தோல்வியாகவே நோக்கப்படுகிறது.”

மேலும்

‘பாராளுமன்ற அரசியல் பாதை மூலமாகத் தனிநாட்டை அடையமுடியாது’. (சொல்லித்தான் ஆக வேண்டும்! -சொல் – 55)

“தந்தை செல்வா தனது அந்திமக்காலத்தில் மூப்பினால் ஏற்பட்ட உடல்தளர்வு – அவரைப் பீடித்திருந்த ‘பார்கின்சன்’ நோயின் தாக்கம் – பலவீனமுற்றிருந்த செவிப்புலன் ஆகிய காரணங்களால் தனது தமிழரசுத் தனயன்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ‘இயலாமை’யில் இருந்தாரா?

ஏனெனில், ‘தமிழர் விடுதலைக்கூட்டணி’ யின் உருவாக்கமும் தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானமும் தேர்தல் அரசியலை மையமாகக்கொண்டே நிகழ்ந்தன என்பதையே வரலாறு எண்பித்திருக்கிறது. மேலும், தனிநாட்டுத் தீர்மானத்தின் இறுதி விளைவு தமிழ் மக்களுக்கு உயிரழிவு – சொத்தழிவு – உளவியல் சிக்கல்கள் – கலாசாரச் சீரழிவு எனப் பலவகைப் பேரழிவுகளை ஏற்படுத்தி முடிவில் இருந்ததையும் இல்லாமற்செய்து தமிழ் மக்களை இன்று அரசியல் கையறு நிலையிலேயே – கடவுளும் காப்பாற்ற முடியாத நிலையிலேயே விட்டுச் சென்றுள்ளது.”

மேலும்

1 2 3 183