தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 2
“பலமான தலைமைத்துவம் இல்லாதபோது, எதிர்த்தரப்புக்கு ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ (Divide and Rule) யைச் செய்வது மிகவும் எளிதாகிவிடுகிறது. ஈழத்தமிழர் அரசியற் சூழலில் அரசியல் கட்சிகள் உடைக்கப்படுவதும் உடைவதும் மிகச் சாதாரணமாகி விட்டது. இது மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோடு, நம்பிக்கையீனத்தையும் தருகிறது. தேர்தல் காலங்களில் சுயேச்சைக் குழுக்களும் குட்டிப் பிரிவுகளும் பெருகுவதும் தற்செயலானவை அல்ல. இதற்குப் பின்னணியாக தமிழ் அரசியல் தரப்பினரின் அறிவீனத்திற் தொடங்கி, ஒடுக்கும் அரசியற் தரப்புகளின் சூழ்ச்சி வரையில் உண்டு. இது தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த அரசியல் நிலைப்பாட்டையும் உறுதிப்பாட்டையும் சிதைக்கிறது. கூடவே தமிழ் மக்களுடைய ஜனநாயக அரசியற் பலத்துக்கான அடையாளமாக இருக்கும் வாக்கு வங்கியையும் சிதறடித்து விடுகிறது. அரசியல் ரீதியாக இதைச் சிதைப்பு உத்தி (Fragmentary Strategy) என்பர். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அரசியற் பேரம் பேசும் சக்தியை (Bargaining Power) அரசாங்கம் குறைத்து விடுகிறது. இது ஒடுக்குமுறைக்கு வாய்ப்பான இன்னொரு வலுவான உத்தியாகும். இதற்குத் தமிழ் அரசியற் கட்சிகளும் தமிழ் மக்களும் பலியாகிக் கொண்டிருக்கும் துயர நிலை நீடிக்கிறது.”
ஈஸ்டர் தாக்குதல்: சட்டம் தன் கடமையைச் செய்கிறதா…? (மூன்றாவது கண்: XXI)
“சந்தேக நபர்கள், குற்றவாளிகள் அரசாங்கத்தின் அல்லது அதன் நீதி, நிர்வாக கட்டமைப்பின் அடிமைகள் அல்ல. அவர்களும் மனிதர்கள். மனித நேயத்துடன் நடாத்தப்பட வேண்டியவர்கள். சந்தேகநபர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றத் தீர்ப்பினால் உறுதிசெய்யப்பட்டாலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படமுடியாதவை. உலகில் சட்டத்தின் ஜனநாயக ஆட்சியை அளவிடும் குறிகாட்டிகளுள் இதுவும் ஒன்று. இலங்கையில் கைதிகள், குற்றவாளிகள் மீது அரச அதிகாரிகளின் அத்து மீறல்கள், கடமை துஷ்பிரயோகங்கள் குறித்து அண்மைக்காலங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இலங்கை ஊடகங்கள் இவற்றை வழமையான சம்பவங்களாக மௌனித்து கடந்து செல்லவே முயற்சிக்கின்றன. இதே மௌனத்தையே இந்த ஊடகங்கள் யுத்த காலத்திலும் செய்து சுரேஷ் சாலேக்கு வெடிக்கொளுத்தினர்.”
சுரேஷ் சாலே விவகாரத்தை சுற்றி ஒரு அரசியல்
“முறையான ஆதாரங்களின் அடிப்படையில் செயற்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட அரசியல் தளங்களை அல்லது சர்வதேச நெருக்குதல்களை திருப்திப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச புலனாய்வுப் பிரிவினரை இலக்கு வைப்பதாக எதிரணி அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
எது எவ்வாறிருந்தாலும், அரசியல்வாதிகள் ஒரு சூத்திரதாரியைப் பாதுகாப்பதற்காகவே அரசியல் நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள் என்று மக்கள் பரவலாக நமபுகிறார்கள். இதுகாலவரையில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளும் இதற்கு காரணம்.”
தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) -பகுதி 1
“சம்பந்தனுடைய அணுமுறை புத்திபூர்வமானது. யதார்த்தத்தை உணர்ந்தது. அதைச்சேதமாக்கியது, அவருடைய தனிப்பட்ட குறைபாடுகளும் பலவீனங்களும் என்றால், அதே அளவுக்கு அவருடைய அணுமுறையையும் நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழ்த் தரப்பின் எதிரணியினர் ஆகும். குறிப்பாக தீவிரத் தமிழ்த்தேசியவாதிகள். அவர்கள் யதார்த்தத்தையும் உண்மையையும் ஏற்க மறுத்து, உணர விரும்பாமல் சம்பந்தனைத் துரோகியாக்கினர். அறிவார்ந்து சிந்திப்போரையும் யதார்த்தவாதிகளையும் துரோகிகளாகச் சித்திரித்து மகிழ்வது தீவிரத் தமிழ்த்தேசியவாதத்தினரிடம் உள்ள பொதுப்பண்பாகும். சுய இன்ப அரசியல்வாதிகளுக்கு இதற்கு மேல் சிந்திக்க முடியாதல்லவா! அவர்கள் சம்பந்தனை தமிழ் மக்களின் எதிரியாக்க முற்பட்டனர். சம்பந்தன் இறந்தபோது காத்திருந்து அவரை எப்படிப் பழிவாங்கினர் என்பது, அவருடைய மரணத்தின்போது அவர்கள் நடந்து கொண்ட முறைமை சிறப்பாக வெளிப்படுத்தியது.”
சங்கீதனின் விவகாரம்: தேசிய மக்கள் சக்தி அரசிற்கான முதல் பெரிய சோதனையும் தமிழ் அரசியலுக்கான விழிப்பூட்டலும்
“இளம் தலைமுறை குறிப்பாக தலைவர்களை அவர்களின் சொற்களால் அல்ல, சாதனைகளால் மதிப்பிடத் தொடங்கியுள்ளது. சமூகத்தின் அடிப்படை நலன்கள் பாதிக்கப்படும் தருணங்களில் ஒற்றுமையை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சங்கீதன் விவகாரத்தின் முக்கியத்துவம் அதன் சட்ட முடிவில் மட்டும் இல்லை. அது ஆட்சி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தலைமைத்துவம் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் நாளடைவில் பொதுமக்களின் கவனத்திலிருந்து மறைந்துவிடலாம். ஆனால் அது வெளிப்படுத்திய பிரச்சினைகள் இலங்கையின் எதிர்காலத்தில் தொடர்ந்தும் முக்கிய இடம் பெறும்.”
எது கவிதை? பகிர்வுகள் (பகிர்வு – 13)
‘கவிதையை ‘மரபு’ என்றும் ‘புது’ என்றும் வகைப்படுத்த வேண்டியதில்லை. கவிதைக்கு ஒசை (சந்தம்) முக்கியம். யாப்பைக் கட்டியழத் தேவையில்லை. யாப்பை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொண்டால் போதும். யாப்பு இயல்பாக மீறப்படலாம். புதுக்கவிதை வடிவம் ஓசையற்றது. புதுக்கவிதை உரைநடையின் உன்னதமான வளர்ச்சியேதவிர அது ‘பா’ (கவிதை) இலக்கியமல்ல. கவிதை ஓர் இறுக்கமான ஊடகம் என்பதால் இறுக்கமான உரைநடையெல்லாம் (புதுக்கவிதை) கவிதையாகிவிடாது.’
முள்ளிவாய்க்காலுக்கு உரிமை கோருகிறது ஷூரா..? (மூன்றாவது கண்:XX.)
வடக்கு, கிழக்கில் தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மெல்ல மெல்ல மீண்டும் புரிந்துணர்வு பெறுகின்ற நிலையில், தமிழரசுக்கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையே ஒரு இணக்க அரசியல் உருவாகி வருகின்ற நிலையில், என்.பி.பி . இன உறவு மற்றும் சமத்துவம் பற்றி பேசுகின்ற நிலையில் கொழும்பு மைய ஷூரா அமைப்பின் இந்த அறிக்கை உண்மையிலேயே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும், பிராந்திய, சர்வதேச இராஜதந்திர அரசியல் நடுநிலைமைக்கும் விழுந்த பலத்த அடியாகும்.”
புலம்பெயர் சமூகத்தின் ஆபத்தான நினைவேக்கம்
ஒரு ஆபத்தான கேள்வியைக் கேட்போம்.
இலங்கைத் தமிழரின் அடையாளம் என்ன?
அது வெறும் தமிழ் மொழி மட்டுமா? அப்படியானால் தமிழகத்தவர்களிடமிருந்து நாம் எப்படி வேறுபடுகிறோம்? நம்முடைய உச்சரிப்பா? உணவா? வறண்ட நகைச்சுவையா? யாழ்ப்பாணத்தின் திமிரா? வன்னியின் மீள் எழுச்சியா? மட்டக்களப்பின் பாடல்களா? கல்வியின் மீதான மோகமா?
நம் பிள்ளைகளுக்குப் பால் புட்டு, ஒடியல் கூழ், பனை, குமுளமுனை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை பற்றித் தெரியுமா? அல்லது அவர்களுக்குக் கொடியைப் பற்றி மட்டும்தான் தெரியுமா?
கொடியை ஏந்துவது எளிது. கலாச்சாரம் என்பது கடினமானது.
ஒரு கையால் கொடியை ஏந்திக்கொண்டு, மறு கையால் உங்கள் பாட்டியின் மொழியை மறந்துவிட முடியும்.
அதுதான் பாசாங்குத்தனம்.
உண்மையைக் காணமறுக்காத ஒரு பத்திரிகையாளர் (டி.பி.எஸ். ஜெயராஜுக்கு (1954–2026) ஒரு அஞ்சலி)
‘அவர் ‘துரோகியாக முத்திரை குத்துதல்’ (traitorisation) என்று தான் அழைத்த அந்தப் போக்கின் பின்னணியைக் கண்டறிந்து எழுதினார். அதனை ஒரு ‘கொடிய கொயபெல்சியப் பிரச்சாரச் செயல்முறை’ (terrible Goebbelsian process) என்றும் அவர் வர்ணித்தார். அதாவது, எவ்வித ஆதாரங்களுமின்றி, வெறும் அரசியல் எதிரிகளைப் பிரச்சார பலத்தின் மூலமாகவே துரோகிகளாகப் பொய் முத்திரை குத்தும் ஒரு செயல்முறையே அதுவாகும்.
ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் காலம் தொட்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் எழுச்சி ஊடாகவும், பின்னர் மாற்று அரசியல் பாதையை முன்வைத்த எவரையும் திட்டமிட்டு அழித்தொழித்த விடுதலைப் புலிகளின் காலம் வரையிலும் இச்செயல்முறை எவ்வாறு பரிணமித்தது என்பதை அவர் துல்லியமாகத் தேடிக் கண்டறிந்தார்.’
இம்முறை நடைபெற்ற கோவில் சடங்குகள்: சில அவதானங்களும் ஆலோசனைகளும்
மட்டக்களப்பிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இவ்வருடம் நடந்த சடங்குகளில் பல மாற்றங்கள் தென்பட்டதாக விமர்சிக்கும் பேராசிரியர் சி. மௌனகுரு, இவை குறித்த தனது அவதானங்களை இங்கு பகிர்கிறார்.
அத்தோடு, இவைகுறித்த மேலதிக ஆய்வுகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கோருகிறார்.
