இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு
“இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அது ஆங்கிலேயரிடமிருந்து பார்ப்பனியர்களிடம் அதிகாரம் கைமாறும் நிகழ்வு மட்டுமே, இதனால் சமூக விடுதலை கிடைத்துவிடாது என்று அறிவித்து அந்நாளை துக்கதினமாக பிரகடனம் செய்தார்.”
கிழக்கில் தமிழ்த்தேசிய முன்னணி: பின்னணி என்ன…..?(மூன்றாவது கண்: XXVIII)
“ஆயிரம் மலர்கள் மலரட்டுமே….” என்று பாடி விட்டு போவதற்கு கிழக்கு மாகாணத்தின் அரசியல் ஒன்றும் தமிழ்சினிமா அல்ல. வடக்கு தலைமைகளால் உணர்ச்சி அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு, கறிவேப்பிலையாக தூக்கி வீசப்பட்ட ஒரு சமூகத்தின் தனித்துவத்தை சமூக, பொருளாதார, அரசியல் கட்டுமானங்களுக்கு ஊடாக எப்படி தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற எதிர்கால வாழ்வியல் ஜதார்த்தத்தை கொண்டது. இந்த ஜதார்த்தத்தை, நம்பிக்கையை இது வரையான கிழக்கு அரசியலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் மட்டுமே அவர்களுக்கு எதிரான மிகப் பலமானதும், பல பக்க விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஓரளவுக்காவது தக்கவைத்து காட்டியிருக்கிறார்கள்.
கடந்த பதினைந்து ஆண்டுகள் ரி.எம்.வி.பி.யின் மக்கள் அரசியல் இதனை இன்றும் உறுதிப்படுத்தி நிற்கிறது. கருணா அம்மானும், அவரது “தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும்”, அத்துடன் கூட்டு வைத்துக்கொண்டு தேர்தல்களை எதிர்கொண்ட கட்சிகளும், அமைப்புக்களும் தோல்வியடைந்தது வரலாறு. இந்த நிலையில் கிழக்கை முதன்மைப்படுத்தியும், தமிழ்த் தேசியத்தை பெயரில் கொண்டும் ஒரு புதிய கட்சியின் பிறப்பு சுகப்பிரசவமாக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் உண்மை.
சொல்லித்தான் ஆக வேண்டும் (சொல் – 57)
“இந்தியாவைத் தமிழ்மக்களின் நேசசக்தியாக ஏற்று சரியானதும் அறிவுபூர்வமானதுமான அரசியல் நிலைப்பாட்டை மக்கள் நலன் சார்ந்து இவ்வளவு ஓர்மத்துடன் எடுத்த துணிச்சலான மிதவாத அரசியல் தலைவரொருவரை அமிர்தலிங்கத்தின் மரணத்தின் பின் தமிழ் மக்களின் அரசியல் பொதுவெளியில் அடையாளம் காணமுடியவில்லை.
அதேபோல்தான் ஆயுதப்போராட்ட இயக்க தலைவர்களுள் தன்னலமறுப்பும் தத்துவார்த்தத் தெளிவும் முழுக்க முழுக்க மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்பட்ட தலைவனாகத் தோழர் பத்மநாபாவைத் தவிர வேறொருவரையும் அடையாளம் காணமுடியவில்லை.
ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின்-பிரபாகரனின் ஆயுத முனையை மேவி இரு தலைவர்களும் விசுவாசித்த அரசியல் பாதையில் அவர்கள் நேசித்த மக்களைக் கொண்டு செல்ல முடியவில்லை. ஈற்றில் இருவருமே புலிகளின் துப்பாக்கிக்கிரையானார்கள் என்பது ஒரு துன்பியல் வரலாறு.”
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக உருமாறுதல்
“அபிஜித் தீப்கே வீட்டின் முன்னால் போராட்டம் நடத்திய மாணவர்கள் எழுப்பிய குரல் இளைஞர்களின் போராட்டக்களம் தேர்தல் இலாபங்களுக்காக பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையின் விளைவானது என்றே தெரிகிறது.
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை விடவும் அதிகாரத்தில் இருப்பவர்களை தொடர்ந்து பொறுப்புக் கூற வைக்கும் கூர்மையான சாட்டையாகச் செயற்படுவதே ஒரு சிவில் சமூக இயக்கத்தின் உண்மையான வலிமையாகும்.”
ReeCha: ஒரு கனவில் விழுந்த கல்
“ReeCha என்பது உணவுத்திருவிழாவில் ஏற்பட்ட சறுக்கல், அல்லது பிரச்சினை என்ற ஒரு சம்பவத்தினால் மட்டும் வைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அப்படி மதிப்படுவதும் சரியானதல்ல. அதற்கும் அப்பால், அது கொண்டுள்ள முக்கியத்துவம், அதனால் சமூகத்துக்கும் பிரதேசத்துக்கும் நாட்டுக்கும் கிடைக்கின்ற பயன்கள் என்ன என்பதையும் சேர்த்தே மதிப்பிடப்பட வேண்டும். அப்படி மதிப்பிடும்போது ReeCha Park & Resort (றீச்சா பூங்கா) என்பது வெறும் ஒரு பொழுதுபோக்குத் தளம் மட்டுமல்லாமல், வடமாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் விவசாய மறுமலர்ச்சியின் மிக முக்கிய அடையாளமாகவும் இருப்பதைக் காணலாம். இதுதான் ReeCha வின் பெறுமதி என எண்ணுகிறேன்.”
கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு வாழ்த்துப்பா (பகிர்வுகள்-பகிர்வு – 15)
“இராமனுக்கு பக்த ஹனுமான்.
யாப்பை அறிந்து மீறி – தமிழ்க் கவிதை
யாத்த பெருங்கவிஞன்.
தமிழ்க்கவிதைப்,
போக்கறிந்து புதுக்கவிதை
படைத்துப் புகழ் படைத்தோன்.
மறரபறிந்த மா கவிஞனானாலும் – ‘யாப்பு’ச்
சிறையுடைத்துத்’ தமிழ்க்கவிதை’ச்
சீதையினை மீட்டு வந்தோன்.
அறிந்தவனே அதை உடைத்து
ஆக்கம் படைத்தால்தான்
அரங்கேறும்! அதுதான்
ஆரோக்கியம் ஆகும்.”
கிளிநொச்சி விபத்துகள்
“விபத்துகளைத் தடுப்பது என்பது, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைகளில் ஒன்று. போரினாலும் இன ஒடுக்குமுறையினாலும் பல லட்சம் உயிர்களை இழந்த சின்னஞ்சிறிய நாடு, விபத்தினாலும் உயிர்களை இழப்பதென்பது ஏற்கவே முடியாதது.”
இலங்கையர்கள் இந்திய கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தை எவ்வாறு பார்க்கிறார்கள்?
“இலங்கையிலும் இளம் கரப்பான்கள் ஒரு குறிப்பிடத்தக்க மக்கள் தொகையாகவே உள்ளனர். அபிஜித் திப்கே பிராந்தியத்திலுள்ள இளைஞர்களிடம் “அனைத்து கரப்பான்களும் ஒன்றிணைந்தால் என்ன நடக்கும்?” என்ற அதே கேள்வியைக் கேட்டால், அவரும் ஓர் உற்சாகமான பதிலைப் பெறக்கூடும். கரப்பான்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். ஓரங்கட்டப்பட்ட மற்றும் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு குழுவினர் தங்களின் கூட்டுக்குரலைக் கண்டடைவதில் ஒரு புதிய வீரியம் இருக்கிறது. மாணவர்களின் போராட்டத்திலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியிலும் மிகவும் சிலிர்ப்பான விடயமாக இருப்பது அதுவேதான்.”
“நாங்கள் இன விடுதலையையும் பெறவில்லை சமூக விடுதலையையும் அடையவில்லை”— எஸ்.கிருஸ்ணமூர்த்தி நேர்காணல்
(இலங்கையின் வடக்கில் பாதுகாப்பு வலயமாகவும் படைத்தளமாகவும் மாற்றப்பட்டிருக்கும் பலாலி விமான நிலையத்துக்கு நடந்து செல்லக் கூடிய (03 KM) தொலைவில் உள்ள ஊரான இடைக்காட்டில் பிறந்து வளர்ந்தவர் எஸ். கிருஸ்ணமூர்த்தி. ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்று அனுபவத்தைக் கொண்ட கிருஸ்ணமூர்த்தி, 1986 இல் நடந்த இயக்க வன்முறைகளின் காரணமாக ஈழத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தச் சூழலைச் சந்தித்த ஆயிரக்கணக்கானோரில் ஒருவராகினார். பல ஈழத்தமிழ் புலம்பெயரிகளைப்போலவே தாய்லாந்து, சுவிற்சர்லாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டவர். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வசிக்கிறார். இளமையிலிருந்தே வாசிப்பு, நடுப்பிராயத்திலிருந்து எழுத்து, இலக்கியச் செயற்பாடுகள் என்று பல தளங்களில் இயங்கி வரும் கிருஸ்ணமூர்த்தி, சிறுகதை, அரசியல் பத்தி, சினிமா விமர்சனம் என எழுதிவருகிறார். இதுவரையில் ‘மறுபக்கம்’, ‘நோபோல்’, ‘திரைக்கண்’ ஆகிய மூன்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ‘தைலம்’ என ஆஸ்திரேலியாவிருந்து தமிழில் எழுதுவோரின் தேர்ந்த கதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
இந்த நேர்காணலுக்கான எண்ணம், 2006 ஜூனில் கிருஸ்ணமூர்த்தியும் நானும் யாழ்ப்பாண நகரில் ‘அசோகா ஹோட்டலு’க்கு முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தபோது உருவானது. அந்தக் ஹோட்டலைக் கடக்கும்போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) இயக்கத்தைப் பற்றிய பேச்சு இயல்பாக இருவருக்கும் இடையில் எழுந்தது. அதன் விளைவாக உருவாகி, கலை, இலக்கியம் என விரிந்ததே இந்த உரையாடல்.
திசைமாற்றப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட வரலாற்றின் கதைகளை இதன் வழியே பேசியிருக்கிறார் எஸ். கிருஸ்ணமூர்த்தி.)
தமிழ் தேசிய பேரவை தமிழ் அரசியலை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகிறதா?
*தமிழ் அரசியலுக்குள் வெளிநாட்டுத் தலையீடுகள் உள்ளதா?
*இந்திய வெளியுறவுச் செயலருக்கு வழங்கிய பகிரங்க கடிதம் தரும் செய்தி என்ன?
