பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும் தந்தை செல்வா நினைவுப் பேருரையும் 

“பேராசிரியர் நிகழ்த்தப் போகும் தந்தை செல்வா நினைவுப் பேருரை அந்த மண்டபத்திற்குள் மாத்திரமல்ல, வெளியிலும் நீண்ட காலத்துக்கு எதிரொலிக்கும் என்று சுமந்திரன் வரவேற்புரையில் கூறினார். பீரிஸின் உரை வெளியில் எதிரொலிக்கிறதோ இல்லையோ மாகாண சபைகள்  தொடர்பிலான அவரின் மௌனம் மாத்திரம் தெளிவாகக் கேட்கிறது.”

மேலும்

சட்டத்தரணிகளின் அறிவின் அறம் தமது சமூகத்தின் வாழ்வை வலுவாக்குவதே

“தமிழர்களில் ஒரு பகுதியினர் தூக்கிப் பிடிக்கும் சமஸ்டி கோசத்தை ஆதரிக்க இங்கே முஸ்லிம்கள் இல்லை, மலையகத் தமிழர்கள் இல்லை, எந்த சிங்களவரும் இல்லை, இந்தியா இல்லை, சீனா இல்லை, அமெரிக்கா இல்லை, ஐரோப்பா இல்லை, ஜெனீவாவும் இல்லை, அதற்கு இன்று உலகில் எவருமே நண்பர்கள் இல்லை. சமஸ்டி என்பது இப்போது ஒரு தேர்தல் அரசியற் சுத்துமாத்து என்பது இலங்கை வாழ் தமிழர்களில் பெரும்பாலானவரகளுக்கு புரிகிறது. இப்படியான ஒரு நிலைமையில் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தவர்களாகிய நீங்களும் ‘கடைசித் தமிழனும் கனடா போய்ச் சேரும் வரை’ சமஸ்டி எனும் சுலோகத்தை தூக்கி நிறுத்துவதில் காலத்தைக் கடத்துவீர்களாயின் அது உங்களது துறைசார் அறிவையும் அனுபவங்களையும் கேலிக்குரியவைகளாக ஆக்கிவிடும்.”

மேலும்

இலங்கையில் புத்தகத் தடுப்பும் உடைப்பு முயற்சிகளும்

“தீபச்செல்வனுடைய தொடக்கம் வரவேற்கப்பட வேண்டியது.
ஆனால், அவர் இந்தப் போராட்டத்தை பரந்த அளவிலானதாக முன்னெடுப்பதற்கும், பொதுப் பிரச்சினைக்குரியது என்று விளக்குவதற்கும் உண்மையை வெளிப்படுத்துவதற்கும் பின்னிற்கிறார். இது தொடர்பாக அவர் வழங்குகின்ற நேர்காணல்களிலும் பொது வெளியில் நடத்தப்படுகின்ற உரையாடல்களிலும் எழுதுகின்ற பதிவுகளிலும் தன்னுடைய புத்தகங்கள், தன்னுடைய பிரச்சினை என்ற அளவில்தான் எதையும் பார்க்கின்றார்; பேசுகிறாரே தவிர, இதற்கு முன்பும் பலருடைய புத்தகங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள், பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்  என்ற வரலாற்று உண்மைகளையெல்லாம் அவர் சொல்வதில்லை. தமிழ்ப் புத்தகங்களுக்கு அரச தடை என்ற கூட்டுப் போராட்டங்களில் பங்கேற்காமல், அவற்றைத் தவிர்த்துவிட்டு, அந்தப் போராட்டங்களைத் தன்வயப்படுத்தும் முறையில் தன்னடையாளப் போராட்டமாக மாற்றுவதே அவருடைய தேர்வாக உள்ளது.”

மேலும்

ஈழத்துத் தமிழ் அரங்கியல் ஆய்வுப் பனுவல்வழி நோக்கு… – – சி.மௌனகுருவின் ‘மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்’

“மட்டக்களப்பைப் பற்றிப் பேசுகின்ற மட்டக்களப்புத் தமிழகம், மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு பூர்வசரித்திரம், மட்டக்களப்பு மாவட்ட கையேடு போன்ற நூல்களோடு மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் எனும் நூலும் தவிர்க்கமுடியாத வகையில் இடம்பிடித்தே தீரும் என்பதில் எமக்கு எதுவித சந்தேகங்களும் இல்லை. மேற்குறிப்பிட்ட நூல்கள் எல்லாம் அரசர்களின் அல்லது அதிகார வர்க்கங்களின் வரலாற்றைப் பேசியதாக இருக்க, மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் உழைக்கும் மக்களின் வரலாற்றை அவர்களின் சமூக அமைப்பை, அவர்களின் வாழ்வியலைப் பேசியிருக்கின்றது.”

மேலும்

இலங்கைக்கான  உள்ளக சுயநிர்ணயம்: பேச்சுக்களைத் தாண்டிய நடைமுறை வழி

“பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அவர்கள், சமீபத்தில் தந்தை செல்வா நினைவு பேருரையில் உள்ளக சுயநிர்ணயம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது கருத்தின் சாரம், விடுதலைப் புலிகள் உள்ளக சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டதாக தோன்றினாலும், அதன் பின்னணியில் வெளியக சுயநிர்ணயத்தின் மறைமுக அச்சுறுத்தல் இருந்தது என்பதாகும். இவ்வாறான விளக்கம் அரசியல் ரீதியாக வசதியானதாக இருக்கலாம். ஆனால் அது சட்டரீதியாகவும், வரலாற்றரீதியாகவும், சர்வதேச அரசியல் நடைமுறையாலும் பலவீனமான விளக்கம்.
விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை நிலைப்பாடு தெளிவாக இருந்தது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தமிழர் தாயகத்தில் கணிசமான பிராந்திய சுயாட்சி மற்றும் சுயநிர்வாகத்தை வழங்கும் அரசியல் கட்டமைப்பை சாதகமாக பரிசீலிக்க தயாராக உள்ளோம் என்பதே அவர்கள் கூறிய சாரம். ஆனால், இத்தகைய உள்ளக உரிமைகள் நிராகரிக்கப்பட்டால், வெளியக சுயநிர்ணயம் குறித்து சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதும் அதே அரசியல் தர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது.”

மேலும்

குறூப் போட்டோ சொல்லும் செய்தி…..!(மூன்றாவது கண்:XIX)

“”கிழக்கில் நீங்கள் மட்டும் தானா ஒரு எம்.பி”? . என்று கேட்க  இல்லை இல்லை என்று சாணக்கியன் மறுத்து தொகையைச்(5) சொன்னதால் சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு இரண்டு செய்திகள் கிடைத்தன. 

 தமிழ்த்தேசிய அரசியல் வடக்கு கிழக்கை அதற்குரிய  பிரதிநிதித்துவ பங்கை, சமத்துவத்தை அங்கீகரிக்காமல் புறக்கணித்து தேர்தல் அரசியலுக்கும், தங்கள் தேவைக்கும் பயன்படுத்தி கொள்கிறது என்பது ஒன்று.

இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கையால் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக  பிரிக்கப்பட்டதற்கு காரணம் உண்டு என்பதும்,
வடக்கில் ஜே.வி.பி./ என்.பி.பி.  தமிழரசையும் தாண்டி தன்னை வளர்த்துக்கொண்டுள்ள நிலையில் தமிழரசுக்கட்சி கிழக்கு வாக்குகளால் தான்  இன்னும் வாழ்கிறது என்பதும் மற்றொன்று.
ஆனால் அந்தளவு முக்கியத்துவம் கிழக்கிற்கு வழங்கப்படுவதில்லை.”

மேலும்

அரசாங்கத்தின் ‘தூய்மை’ முத்திரையை சேதப்படுத்தும் முயற்சிகளில்  எதிரணி மும்முரம்

“மாகாணசபை தேர்தல்கள் எட்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருப்பதால் மாகாணங்களின் நிருவாகங்கள் மக்கள்   பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படாமல் அவர்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறது என்ற கவலையில் அந்த தேர்தல் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூறமுடியாது. அரசாங்கம் மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது என்று காண்பிக்க வேண்டும் என்பதே இந்த கட்சிகளின் நோக்கம். 

மறுபுறத்தில், மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு மக்கள் போராட்ட இயக்கத்தை முன்னெடுக்கப் போவதாக  இடைக்கிடை அறிவிக்கும் சில தமிழ் கட்சிகள் சில நாட்களில் அதை மறந்து விடுகின்றன. உண்மையில், இது விடயத்தில் வடக்கு, கிழக்கில் இருந்தோ அல்லது தென்னிலங்கையில் இருந்தோ அரசாங்கத்துக்கு எந்தவிதமான நெருக்குதலும் கிடையாது.”

மேலும்

பூவா? தலையா ?:  பந்தயம் மொட்டை அடிப்பதற்கும் மேலாக..! (மூன்றாவது கண்: XVIII)

“அமெரிக்கா ,வெனிசுவேலா ஜனாதிபதி மடோரோவை கடத்துகின்ற இரகசிய இராணுவ நடவடிக்கையில் பங்குகொண்ட அமெரிக்க படைவீரர் ஒருவர் , அந்த தகவலை  “எதிர்வு கூறல்” அடிப்படையில்  பந்தயம் கட்டி 40,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக பணத்தை பந்தய வெற்றி நிதியாக பெற்றிருக்கிறார் என்பது வெளிவந்துள்ளது.”

மேலும்

‘நுணலும் தன் வாயால் கெடும்’: ஆட்டம்காணும் அமெரிக்காவின் “உலக பொலிஸ்காரன்” அந்தஸ்து.

“உலக அரங்கில் ட்ரம்பின் இத்தகைய போக்கு பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதோடு, அமெரிக்கா ஈரானுக்கு இடையேயான சமாதானப் பேச்சுவார்தையையும் கேள்விக் குறியாக்கி இருக்கிறது. அமெரிக்காவும் ஈரானும் சமாதானப் பேச்சுவார்தையில் ஈடுபடுவதை விரும்பாதவர்போல் பெஞ்சமின் நெத்தன்னியாகு சதி முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதற்கிணங்க ட்ரம்ப் மறதியும் மந்தபுத்தியுமுள்ள மனநோயாளி போல் தனது சமூகவலைத்தளத்திலும் ஊடக சந்திப்புக்களிலும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பது வெள்ளைமாளிகைக்குள்ளும் அமெரிக்க மக்கள் மத்தியிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. உலகமக்களை அச்சத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஈரான் போரில் தோல்வி அடையாமல் இருக்கையில் அச்சமூட்டிப் பயமுறுத்திப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதென்பது புத்திசாதுரியமல்ல.“

மேலும்

சொந்த வாலை கடித்தபடி விடாமல் சுழலும் இலங்கையின் பொருளாதாரம்

“மிகப் பெரும்பான்மையான மக்கள் இன்னமும் மதிப்பிற்குரிய தோழர் அநுரா அவர்கள் நாட்டு மக்களின் பொருளாதார வாழ்வை முன்னேறிச் செல்லும் பாதையில் கொண்டு சென்று நிறுத்தி உயர்ந்தெழுந்து ஓடச் செய்வார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். மதிப்பிற்குரிய ஜனாதிபதி அநுரா அவர்கள் மத்திய வங்கிக்குள்ளும் திறைசேரிக்குள்ளும் தனது அதிக அளவான நேரத்தை செலவளித்தால் மெய்யான பொருளாதார முன்னேற்றங்களுக்கான வியூகங்களைக் கண்டறிய மாட்டார். சுற்றிச்சுற்றி மேலும் தொடரும் நெருக்கடிகளை சமாளிப்பதற்கான பொறி முறைகளை பரிசோதிக்கும் கூடத்திலேயே அவரது காலம் கடந்து போகும். அரசியற் களத்தில் அவர் திறமைசாலி என்பதை தனது நாவன்மைகளாலும் உடல் மொழியாலும் தொடர்ந்து நிரூபிக்கிறார் ஆனால் நாட்டின் பொருளாதார களத்தில் அவர் தனது கால்களை இன்னமும் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் வகையாக நிலத்துக்கு இறக்கவில்லை.”

மேலும்

1 2 3 180