இலங்கை இசையின் ஒரு அத்தியாயம்: நந்தா மாலினி
“காதல் மற்றும் பிரிவின் கருப் பொருள்களைத் தாண்டி, அவர் சாதாரண மக்களின் துயரங்கள், அச்சங்கள், நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்குக் குரல் கொடுத்தார். இது அவரது பாடல்களை சமூகத்தின் குரலாகவே எதிரொலிக்கச் செய்தது.”
கேதீஸ் லோகநாதனும் இழக்கப்பட்ட தலைமுறையும்
“ஒரு வன்முறை நிறைந்த அரசியல் கலாசாரத்தால் தங்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதன் மூலம், தமிழ் சமூகமும் ஒட்டுமொத்த நாடும் மகத்தான ஆர்வலர்களை இழந்துவிட்டன. அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து அரசியல் மற்றும் பொருளாதார களங்களில் முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தால், சமூக மாற்றத்திற்கான அவர்களின் ஆர்வம் நாட்டின் எதிர்காலத்தையே மறுவடிவமைப்பு செய்திருக்கக்கூடும்.”
கிழக்கிலங்கை மூத்த புலமைத்துவ ஆளுமையொன்றை இழந்தது. (பகிர்வு – 16)
“வாகரைவாணன்
இட்டுச் சென்றுள்ள இடைவெளி அன்னாரது மரணத்தின் பின்பே உணரப்படுகின்றது.
அன்னாரின் மறைவு மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாகவும் கிழக்கிலங்கையில்
பொதுவாகவும் ஒரு புலமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது இன்று அவரது மரணத்தின் பின்பு வெகுவாக உணரப்படுகிறது.”
இலங்கை முப்படைகளின் மறுசீரமைப்பு
“இந்தியப் பெருங்கடலின் மாறும் மூலோபாயச் சூழலில் ஆயுதப் படைகள் தொடர்ந்து பொருத்தமானதாக இருப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில், வீங்கிய ஆயுதப் படைகளைக் குறைக்கும் பணியை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால், ஒரு இராணுவத்தின் அளவைக் குறைப்பது என்பது நுட்பமான ஒரு பணியாகும், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் போன்ற உணர்திறன் மிக்க மூலோபாய மண்டலத்தில் செயல்பட அதைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றால் அது மேலும் கடினமானது.”
கல்முனை: அரசாங்கமும் ஆறுகட்சி கூட்டும்…!(மூன்றாவது கண்:XXIX)
“கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலை விவகாரம் கொதி நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட என்.பி.பி.அரசாங்கத்தின் சுகாதார அமைச்சும், கிழக்கு மாகாசபை சுகாதாரத்திணைக்களமும்
மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வாளாவிருந்து இரு சமூகங்களையும் சமூக ஊடகங்களில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன.
இதற்கிடையில் தமிழ், முஸ்லிம் மக்களின் பொதுவான பிரச்சினைகளை, கருத்து முரண்பாடுகளை பேசி தீர்க்கவே தமிழ் பேசும் ஆறு கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம் என்று கூறியவர்கள், குறிப்பாக வடக்கு -கிழக்கு தமிழர் அரசியல் கள்ள மௌனம் காக்கிறது”
மாகாண சபைத் தேர்தலும் முதலமைச்சர் கனவுகளும்
“உண்மையில் பிரிவினையும் பிரதேச வாதமும் எங்கே இருந்து உருவாகிறது? நிச்சயமாக அது வடக்கில் இருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்தே உருவாகிறது. ஆனால், பழி மட்டும் எப்போதும் கிழக்கின் தலையில் கட்டப்படுகிறது.
இந்த இடத்தில் இந்தத் தவறைக்குறித்துப் பேச வேண்டியது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டியங்கும் தமிழ் சிவில் சமூகத்தினரும் வடக்குக்கிழக்கு தமிழர் தாயகம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டோரும் யாழ்ப்பாணத்து ஊடகங்களுமாகும். அத்துடன், பல்கலைக்கழக சமூகத்தினர் தொடக்கம் தமிழ்த்தேசியவாதத் தரப்பினர் அனைவருமாகும். இவர்கள் எல்லோரும் கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்திச் சிந்தித்து வந்திருக்கிறார்கள். ஆனால், கிழக்கை ஆழ்மனதில் – சமனிலையில் – கொண்டிருக்கத் தவறி விடுகிறார்கள். “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை“ என்று கலர் புல்லாக நிகழ்ச்சிகளை நடத்துவது முக்கியமில்லை. பொத்துவிலையும் பொலிகண்டியையும் உணர்வினாலும் நீதியான அணுகுமுறையினாலும் சமத்துவ நோக்கினாலும் இணைத்துக் கொள்வதே முக்கியமானது.”
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு
“இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அது ஆங்கிலேயரிடமிருந்து பார்ப்பனியர்களிடம் அதிகாரம் கைமாறும் நிகழ்வு மட்டுமே, இதனால் சமூக விடுதலை கிடைத்துவிடாது என்று அறிவித்து அந்நாளை துக்கதினமாக பிரகடனம் செய்தார்.”
கிழக்கில் தமிழ்த்தேசிய முன்னணி: பின்னணி என்ன…..?(மூன்றாவது கண்: XXVIII)
“ஆயிரம் மலர்கள் மலரட்டுமே….” என்று பாடி விட்டு போவதற்கு கிழக்கு மாகாணத்தின் அரசியல் ஒன்றும் தமிழ்சினிமா அல்ல. வடக்கு தலைமைகளால் உணர்ச்சி அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு, கறிவேப்பிலையாக தூக்கி வீசப்பட்ட ஒரு சமூகத்தின் தனித்துவத்தை சமூக, பொருளாதார, அரசியல் கட்டுமானங்களுக்கு ஊடாக எப்படி தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற எதிர்கால வாழ்வியல் ஜதார்த்தத்தை கொண்டது. இந்த ஜதார்த்தத்தை, நம்பிக்கையை இது வரையான கிழக்கு அரசியலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் மட்டுமே அவர்களுக்கு எதிரான மிகப் பலமானதும், பல பக்க விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஓரளவுக்காவது தக்கவைத்து காட்டியிருக்கிறார்கள்.
கடந்த பதினைந்து ஆண்டுகள் ரி.எம்.வி.பி.யின் மக்கள் அரசியல் இதனை இன்றும் உறுதிப்படுத்தி நிற்கிறது. கருணா அம்மானும், அவரது “தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும்”, அத்துடன் கூட்டு வைத்துக்கொண்டு தேர்தல்களை எதிர்கொண்ட கட்சிகளும், அமைப்புக்களும் தோல்வியடைந்தது வரலாறு. இந்த நிலையில் கிழக்கை முதன்மைப்படுத்தியும், தமிழ்த் தேசியத்தை பெயரில் கொண்டும் ஒரு புதிய கட்சியின் பிறப்பு சுகப்பிரசவமாக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் உண்மை.
சொல்லித்தான் ஆக வேண்டும் (சொல் – 57)
“இந்தியாவைத் தமிழ்மக்களின் நேசசக்தியாக ஏற்று சரியானதும் அறிவுபூர்வமானதுமான அரசியல் நிலைப்பாட்டை மக்கள் நலன் சார்ந்து இவ்வளவு ஓர்மத்துடன் எடுத்த துணிச்சலான மிதவாத அரசியல் தலைவரொருவரை அமிர்தலிங்கத்தின் மரணத்தின் பின் தமிழ் மக்களின் அரசியல் பொதுவெளியில் அடையாளம் காணமுடியவில்லை.
அதேபோல்தான் ஆயுதப்போராட்ட இயக்க தலைவர்களுள் தன்னலமறுப்பும் தத்துவார்த்தத் தெளிவும் முழுக்க முழுக்க மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்பட்ட தலைவனாகத் தோழர் பத்மநாபாவைத் தவிர வேறொருவரையும் அடையாளம் காணமுடியவில்லை.
ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின்-பிரபாகரனின் ஆயுத முனையை மேவி இரு தலைவர்களும் விசுவாசித்த அரசியல் பாதையில் அவர்கள் நேசித்த மக்களைக் கொண்டு செல்ல முடியவில்லை. ஈற்றில் இருவருமே புலிகளின் துப்பாக்கிக்கிரையானார்கள் என்பது ஒரு துன்பியல் வரலாறு.”
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக உருமாறுதல்
“அபிஜித் தீப்கே வீட்டின் முன்னால் போராட்டம் நடத்திய மாணவர்கள் எழுப்பிய குரல் இளைஞர்களின் போராட்டக்களம் தேர்தல் இலாபங்களுக்காக பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையின் விளைவானது என்றே தெரிகிறது.
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை விடவும் அதிகாரத்தில் இருப்பவர்களை தொடர்ந்து பொறுப்புக் கூற வைக்கும் கூர்மையான சாட்டையாகச் செயற்படுவதே ஒரு சிவில் சமூக இயக்கத்தின் உண்மையான வலிமையாகும்.”
