ReeCha: ஒரு கனவில் விழுந்த கல்
“ReeCha என்பது உணவுத்திருவிழாவில் ஏற்பட்ட சறுக்கல், அல்லது பிரச்சினை என்ற ஒரு சம்பவத்தினால் மட்டும் வைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அப்படி மதிப்படுவதும் சரியானதல்ல. அதற்கும் அப்பால், அது கொண்டுள்ள முக்கியத்துவம், அதனால் சமூகத்துக்கும் பிரதேசத்துக்கும் நாட்டுக்கும் கிடைக்கின்ற பயன்கள் என்ன என்பதையும் சேர்த்தே மதிப்பிடப்பட வேண்டும். அப்படி மதிப்பிடும்போது ReeCha Park & Resort (றீச்சா பூங்கா) என்பது வெறும் ஒரு பொழுதுபோக்குத் தளம் மட்டுமல்லாமல், வடமாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் விவசாய மறுமலர்ச்சியின் மிக முக்கிய அடையாளமாகவும் இருப்பதைக் காணலாம். இதுதான் ReeCha வின் பெறுமதி என எண்ணுகிறேன்.”
கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு வாழ்த்துப்பா (பகிர்வுகள்-பகிர்வு – 15)
“இராமனுக்கு பக்த ஹனுமான்.
யாப்பை அறிந்து மீறி – தமிழ்க் கவிதை
யாத்த பெருங்கவிஞன்.
தமிழ்க்கவிதைப்,
போக்கறிந்து புதுக்கவிதை
படைத்துப் புகழ் படைத்தோன்.
மறரபறிந்த மா கவிஞனானாலும் – ‘யாப்பு’ச்
சிறையுடைத்துத்’ தமிழ்க்கவிதை’ச்
சீதையினை மீட்டு வந்தோன்.
அறிந்தவனே அதை உடைத்து
ஆக்கம் படைத்தால்தான்
அரங்கேறும்! அதுதான்
ஆரோக்கியம் ஆகும்.”
கிளிநொச்சி விபத்துகள்
“விபத்துகளைத் தடுப்பது என்பது, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைகளில் ஒன்று. போரினாலும் இன ஒடுக்குமுறையினாலும் பல லட்சம் உயிர்களை இழந்த சின்னஞ்சிறிய நாடு, விபத்தினாலும் உயிர்களை இழப்பதென்பது ஏற்கவே முடியாதது.”
இலங்கையர்கள் இந்திய கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தை எவ்வாறு பார்க்கிறார்கள்?
“இலங்கையிலும் இளம் கரப்பான்கள் ஒரு குறிப்பிடத்தக்க மக்கள் தொகையாகவே உள்ளனர். அபிஜித் திப்கே பிராந்தியத்திலுள்ள இளைஞர்களிடம் “அனைத்து கரப்பான்களும் ஒன்றிணைந்தால் என்ன நடக்கும்?” என்ற அதே கேள்வியைக் கேட்டால், அவரும் ஓர் உற்சாகமான பதிலைப் பெறக்கூடும். கரப்பான்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். ஓரங்கட்டப்பட்ட மற்றும் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு குழுவினர் தங்களின் கூட்டுக்குரலைக் கண்டடைவதில் ஒரு புதிய வீரியம் இருக்கிறது. மாணவர்களின் போராட்டத்திலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியிலும் மிகவும் சிலிர்ப்பான விடயமாக இருப்பது அதுவேதான்.”
“நாங்கள் இன விடுதலையையும் பெறவில்லை சமூக விடுதலையையும் அடையவில்லை”— எஸ்.கிருஸ்ணமூர்த்தி நேர்காணல்
(இலங்கையின் வடக்கில் பாதுகாப்பு வலயமாகவும் படைத்தளமாகவும் மாற்றப்பட்டிருக்கும் பலாலி விமான நிலையத்துக்கு நடந்து செல்லக் கூடிய (03 KM) தொலைவில் உள்ள ஊரான இடைக்காட்டில் பிறந்து வளர்ந்தவர் எஸ். கிருஸ்ணமூர்த்தி. ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்று அனுபவத்தைக் கொண்ட கிருஸ்ணமூர்த்தி, 1986 இல் நடந்த இயக்க வன்முறைகளின் காரணமாக ஈழத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தச் சூழலைச் சந்தித்த ஆயிரக்கணக்கானோரில் ஒருவராகினார். பல ஈழத்தமிழ் புலம்பெயரிகளைப்போலவே தாய்லாந்து, சுவிற்சர்லாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டவர். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வசிக்கிறார். இளமையிலிருந்தே வாசிப்பு, நடுப்பிராயத்திலிருந்து எழுத்து, இலக்கியச் செயற்பாடுகள் என்று பல தளங்களில் இயங்கி வரும் கிருஸ்ணமூர்த்தி, சிறுகதை, அரசியல் பத்தி, சினிமா விமர்சனம் என எழுதிவருகிறார். இதுவரையில் ‘மறுபக்கம்’, ‘நோபோல்’, ‘திரைக்கண்’ ஆகிய மூன்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ‘தைலம்’ என ஆஸ்திரேலியாவிருந்து தமிழில் எழுதுவோரின் தேர்ந்த கதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
இந்த நேர்காணலுக்கான எண்ணம், 2006 ஜூனில் கிருஸ்ணமூர்த்தியும் நானும் யாழ்ப்பாண நகரில் ‘அசோகா ஹோட்டலு’க்கு முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தபோது உருவானது. அந்தக் ஹோட்டலைக் கடக்கும்போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) இயக்கத்தைப் பற்றிய பேச்சு இயல்பாக இருவருக்கும் இடையில் எழுந்தது. அதன் விளைவாக உருவாகி, கலை, இலக்கியம் என விரிந்ததே இந்த உரையாடல்.
திசைமாற்றப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட வரலாற்றின் கதைகளை இதன் வழியே பேசியிருக்கிறார் எஸ். கிருஸ்ணமூர்த்தி.)
தமிழ் தேசிய பேரவை தமிழ் அரசியலை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகிறதா?
*தமிழ் அரசியலுக்குள் வெளிநாட்டுத் தலையீடுகள் உள்ளதா?
*இந்திய வெளியுறவுச் செயலருக்கு வழங்கிய பகிரங்க கடிதம் தரும் செய்தி என்ன?
“கனகர் கிராமம்’அரசியல் – சமூக – வராற்று நாவல்— ஒரு பார்வை(பகுதி 2)
மட்டக்களப்பு நாவற்குடா இந்துக் கலாசார மண்டபத்தில் 26.04.2026 அன்று நடைபெற்ற செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்கள் எழுதிய ‘கனகர் கிராமம்’ அரசியல் – சமூக – வரலாற்று நாவல் அறிமுக விழாவில் விமர்சகர் ஜெகன் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட நயவுரை.
பெலவத்தை தயாரிப்பு: மக்களுக்கு விற்றமின் மாத்திரைகள்…! (மூன்றாவது கண்: XXVII)
“மக்கள் மட்டும் அல்ல என்.பி.பி.பாராளுமன்ற உறுப்பினர்களும் சோர்வடைந்து விட்டார்கள். வடக்கு, கிழக்கு,, மலையகம் என்.பி.பி. எம்பிக்களின் குரல்களை பாராளுமன்றத்தில் முன்னர் போன்று அதிகம் கேட்க முடியவில்லை. நீண்ட கால தேசிய இனப்பிரச்சினை, அதிகாரபரவலாக்கம், புதிய அரசியல் அமைப்பு, அமைப்பு மாற்றங்கள் தொடர்பாக மக்களின் கேள்விகளுக்கு காலக்கெடுக்களையும், காரணங்களையும் கூறி அவர்கள் களைப்படைந்து விட்டார்கள். பாராளுமன்றத்தில் இராமநாதன் அர்ச்சுனா மட்டுமே இவர்களுக்கு உற்சாகம் ஊட்டமுடியும் என்ற நிலை உள்ளது.”
நேர்காணல்: வேந்தன் (சிவநாதன் நவீந்திரா)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாகச் செயற்பட்டவர் வேந்தன் என்று அழைக்கப்படும் சிவநாதன் நவீந்திரா. தற்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவராகவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார்.
ஆயுதப்போராட்ட அரசியல், ஜனநாயக வழி அரசியல் என இரண்டு தளங்களிலும் அனுபவத்தைக் கொண்ட வேந்தன், இந்த நேர்காணலிலும் அவற்றையும் அவற்றின் குணவியல் வேறுபாடுகளையும் பேசுகிறார். சமகால அரசியல், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, தமிழ்த்தேசிய அரசியல் நிலவரம் எனப் பலவற்றையும் பேசும் வேந்தன், 2009 க்குப் பின்னர் கடந்த 12 ஆண்டுகளாக ஜனநாயக வழி அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டு, தனித்துவ அடையாளமாகியுள்ளார்.
தமிழரின் நிகழ்கால – எதிர்கால அரசியல் குறித்தும் இந்த நேர்காணலில் பேசுகிறார்.
இலங்கையில் தற்போது ஆட்சியிலிருக்கும் NPP (JVP) உட்பட தமிழ் அரசியல் கட்சிகளிலும் பலவும் ஆயுதப்போராட்ட அரசியல் பின்னணியைக் கொண்டவை என்பதால், வேந்தனுடைய குரல் (ஜனநாயகப் போராளிகள் கட்சி) முக்கியமானதாகிறது.
சிறுபான்மையினர் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது ஒரு அவசியமான முதலீடாகும்
“சட்டங்கள் சமத்துவத்தை வாக்குறுதி அளிப்பதால் மட்டும் பயம் நீங்கிவிடாது. தம்மைப் பாதுகாப்பதில் சந்தேகம் கொண்ட தரப்பினரின் பாதுகாப்பிற்காக அரசு தீர்க்கமாகச் செயல்படும் என்பதை அனுபவம் தொடர்ச்சியாக நிரூபிக்கும் போது மட்டுமே பயம் நீங்கும். சிறுபான்மையினரின் அந்நியப்பட்ட உணர்வு மற்றும் புறக்கணிப்பு காரணமாக, அவர்களுக்கு ‘மிகை ஈடுசெய்தல்’ (overcompensate) செய்ய வேண்டிய தேவை உள்ளது. இது கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் ஆகிய இரண்டு தொடர்பிலான கையாளுதல்களுக்கும் பொருந்தும்.”
