சொல்லித்தான் ஆக வேண்டும் (சொல் – 54)

“அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் தொடங்கி 2002 உள்ளக சுயநிர்ணயம் குறித்த ஒஸ்லோ பேச்சுவார்த்தை வரையிலான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே சீரழித்தது.

இந்தியா – இலங்கை சமாதான ஒப்பந்தம் வருவதற்கும் அதனை அமுல் செய்வதற்கும் பங்களித்த முன்னாள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர்நாயகம் அ.அமிர்தலிங்கம் – முன்னாள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபி.ஆர்.எல்.எம்) யின் செயலாளர் நாயகம் பத்மநாபா – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி ஆகியோரைத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே கொலை செய்தது என்பது பகிரங்கவெளியில் எல்லோருக்கும் தெரிந்ததொன்றாகும்.”

மேலும்

பீரிஸ் சொன்ன கதைகளும் பிற கதைகளும்

“பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த அன்ரன் பாலசிங்கத்துடன் பேச்சுவார்த்தை மேசைக்கு வெளியே தனிப்பட்ட ரீதியில் பீரிஸ் நடத்திய உரையாடல்கள் பற்றித் தமிழ் ஊடக வெளியோ அல்லது அரசியல் தரப்புகளோ அதிமாகப் பேசவில்லை. அல்லது அவை பேச விரும்பவில்லை. காரணம், புலிகளைப் பற்றிய இந்த மாதிரியான  விடயங்களைப் பற்றிப் பேசினால், அது எதிர்மறையாகத் தமக்குப் பாதிப்பை உண்டாக்கலாம் என்ற அச்சம் பலருக்கும் உள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு மாற்றான அரசியல் பார்வையையும் செயற்பாட்டு முறையையும் கொண்டிருந்த தரப்புகளும் கூட இப்பொழுது இதைத் தவிர்க்கவே முயற்சிக்கின்றன. என்பதால் பலதையும் பலரும் கடந்து செல்கிறார்கள். சிலர் மட்டும் (தீவிரத் தமிழ்த் தேசியவாத அடையாளத்தைப் பேண முற்படும் சிறிதரன், கஜேந்திரன்கள் மற்றும் இவர்களுடைய அரசியலை ஆதரிக்கும் ஊடகங்களும் அரசியற் பத்தியாளர்களும் ஆதரவாளர்களும்)  புலிகளின் விடயங்களில் தமக்குச் சாதகமானவற்றைத் தெரிவு செய்து எடுத்துக் கொள்கிறார்கள். மாவீரர்நாள், திலீபன் நினைவுநாட்கள், புலிகளுடைய தியாகம் போன்றவற்றை. மற்றும்படி புலிகளின் செயற்பாடுகள் எதையும் அல்ல.
இதற்கப்பால் 30 ஆண்டுக்கு மேலாக ஈழத் தமிழ் அரசியல் வெளியில் பேராதிக்கம் செலுத்திய ஓரமைப்பைப் பற்றி, அதனுடைய எழுச்சி, வீழ்ச்சி, அதற்கான காரணங்கள், அதன் வரலாற்றுப் பங்களிப்பு, அந்த அமைப்பைப்பற்றிய விமர்சனங்கள், அதற்கான காரணங்கள், அவற்றிலிருந்து படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் என எதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆனால், அந்த அமைப்பு இன்று இல்லாத போதும் அதனுடைய செல்வாக்குச் சமூக வெளியிலும் அரசியல் வெளியிலும் வலிமையாக இருக்கிறது. என்பதால்தான் அதைப்பற்றிப் பேசுவதற்கே அச்சமடைகின்றனர். இந்த அச்சம் மிக மோசமானது, தன்னையே அழிக்கக் கூடியது. அதை இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”

மேலும்

விஜய்யின் வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் கொண்டுவந்த மாற்றம் என்ன?

“எம்.ஜி. ஆர். ஆட்சிக்கு வந்து அரை நூற்றாண்டு கடந்தும் கூட ஆட்சி மாற்றத்துக்கு சினிமா மூலமாக கட்டமைக்கப்பட்ட பிம்பம்  தேவைப்படுகிறதே …!

விஜய்யின் வெற்றி  பெரும்பாலான அரசியல் அவதானிகளினாலும்  ஊடகங்களினாலும்  புவியியல் ரீதியாக, நிலநடுக்கத்தின்போது பூமியின் அடுக்குகளில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றத்துடன் (Seismic Shift) ஒப்பிடப்பட்டது. இனிமேல் எதுவும் இருக்காது என்கிற அளவுக்கு அடிப்படை மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கூறுவதற்கே அவர்கள் முற்படுகிறார்கள். 

ஆனால், எம். ஜி.ஆரின் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து சுமார் அரை நூற்றாண்டுக்கு பின்னரும் கூட ஆட்சி மாற்றத்துக்கு சினிமா மாயையின் மூலமாக உருவாக்கப்பட்ட பிம்பமே தேவைப்படும்போது இதில்  அரசியல் நிலநடுக்கம் நிகழ்ந்திருப்பதாக எவ்வாறு கூறமுடியும்?”

மேலும்

‘மண்ணில் புதையும் மத்தளம்’  (பகிர்வுகள்- பகிர்வு – 11)

“கதைகள் யாவும் ஒரு ஒழுக்கமுள்ள – சீரிய – பண்பாட்டு விழுமியங்களைப் பேணுகின்ற சமூகக்கட்டமைப்பை அவாவி நிற்கின்றன. இது கதாசிரியரின் சமூகப் பொறுப்பையும், அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய நூலினைத் தெரிவு செய்து வெளியிட்ட கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சேவை சிறப்பானதாகும்.”

மேலும்

வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஒரு புதிய தலைமுறைத் தலைமையின் தேவை.(மாற்றத்திற்கான நேரம் இது!)

“இது வெறும் அரசியல் மாற்றத்திற்கான கோரிக்கை அல்ல. இது ஒரு தலைமுறை மாற்றத்திற்கான அழைப்பு.

ஏன் இந்த மாற்றத் தேவை உருவாகியுள்ளது?
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள் இன்று எதிர்கொள்ளும் சவால்கள் முற்றிலும் மாறிவிட்டன.

ஒரு காலத்தில் அரசியல் உரிமைகள் மட்டுமே மையப் பிரச்சினையாக இருந்தாலும், இன்று மக்களின் கவலைகள் மிகவும் பரந்தவை:
* வேலைவாய்ப்பு
* கல்வி
* தொழில்நுட்ப முன்னேற்றம்
* முதலீடு
* பொருளாதார வளர்ச்சி
* விவசாயம் மற்றும் மீன்வளம்
* இளைஞர் திறன் மேம்பாடு
* உலக இணைப்பு
* சமூக நிலைத்தன்மை

ஆனால் அரசியல் உரையாடல்கள் இன்னும் பழைய கோஷங்களையும் பழைய அணுகுமுறைகளையும் சுற்றியே நகர்கின்றன என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.”

மேலும்

ஜி.எல்.பீரிஸ் உரை: எதிரியில்லாமல் அரசியல் செய்ய நினைக்கும் தமிழர் தரப்பு

“எதிர்த்தரப்பைப் புரிந்து கொள்வதும் அதைக் கையாள்வதும் ஒரு கலையாகும். உலகில் எதிர்த்தரப்பு இல்லாத அரசியல் வெளி என்பது உண்டா? அது சாத்தியமா? எப்போதும் எங்கும் நமக்கு வாய்ப்பான – உவப்பான தரப்புகளும் சூழலும்தான் இருக்குமா? நிச்சயமாக இல்லை. அரசியலே எதிர்த்தரப்புகளோடுதான் அரசியலைச் செய்ய வேண்டும்; உரையாடல்களை நிகழ்த்த வேண்டும். எதிர்த்தரப்புகளோடு மோதும் உடன்பாடு காணும் அறிவார்ந்த விளையாட்டுத்தான். எப்படிக் காய்களை நகர்த்துகிறோம்? எப்படி எதிர்த்தரப்புகளைக் கையாள்கிறோம்? என்பதே நம்முடைய அரசியற் திறனையும் முதிர்ச்சியையும் காட்டும். அதில்தான் நம்முடைய ஜனநாயக மாண்பும் புரிதலும் வெளிப்படும்.
ஈழத் தமிழர்களுடைய அரசியல் அரங்கில் தீண்டாமை என்ற ஒரு பிரிகோடு பெருஞ்சுவராக நிறுத்தப்பட்டுள்ளது. இது அறியாமை,  புரியாமை, தெளியாமை, மடமை போன்றவற்றின் வெளிப்பாடாகும். இந்தக் குறைபாட்டையும் தவறையும் வைத்துக் கொண்டு அரசியல் அரங்கில் ஒரு மில்லி மீற்றர்கூட முன்னகர முடியாது. இந்தக் குறைபாட்டை வைத்துக் கொண்டு எத்தனை பெரிய தியாகங்கள், திரள்முயற்சிகள், வீரசாகஸங்கள், அர்ப்பணிப்புகளையெல்லாம் செய்தாலும் பயன் கிடையாது. இது நமது சமகால அனுபவமும் கூட. இந்தக் குறைபாட்டைத் தமிழ் அரசியற் தரப்புகள் மட்டுமல்ல, இலக்கியவாதிகள், புத்திஜீவிகள், சமூக அமைப்புகள் ஏன் தமிழ்ச் சமூக வெளியே நீக்கவில்லை. பதிலாக அதற்குள் கட்டுண்டு கிடக்கிறது.”

மேலும்

அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் இலங்கை நூல்கள்!

“நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில், ஒவ்வொன்றிலும் கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களில் அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் பரிசளிப்புத் திட்டத்திற்குக் கிடைக்கப்பெற்ற நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம் இலங்கை  ரூபாவைப் பரிசாகப் பெறும் நூல்களையும், அவற்றை எழுதியவர்களையும் பற்றிய விபரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.”

மேலும்

தொழிலாளர்தினம்: சிவப்பு சட்டைக்கும்,தொப்பிக்கும் அப்பால்…! (மூன்றாவது கண்: XX)

“இலங்கைத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கில் அடிப்படை வசதிகள், சட்டப்பாதுகாப்புகள், மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்தான் அந்நியச் செலாவணியை இலங்கைக்கு அனுப்புகிறார்கள். இதில் வீட்டு பணிப்பெண்களின் நிலைமை மிகவும் மோசமானது. மத்திய கிழக்கு முதலாளித்துவ பொருளாதார மாதிரியின் நவீன அடிமைகளாக ஆசிய நாடுகளின் தொழிலாளர்கள் அங்கு உழைக்கிறார்கள். அவர்களின் கணக்கை மாதாமாதம் தவறாமல் வெளியிடும் மத்திய வங்கியும், அதற்கு பொறுப்பான நிதியமைச்சும் அதன் பின்னால் உள்ள துயரத்தை பற்றி பேசுவதில்லை. இந்த தொழிலாளர்கள் இந்த அரசாங்கத்தின் தொழிலாளர் தின மேடையில் எங்காவது பேசப்பட்டார்களா?  ஒரு இடதுசாரி அரசாங்கம் முதலாளித்துவ சுரண்டலுக்கு ஒத்துழைத்து தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதையும், அதற்கு ஊக்கம் அளிப்பதையும் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?”

மேலும்

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும் தந்தை செல்வா நினைவுப் பேருரையும் 

“பேராசிரியர் நிகழ்த்தப் போகும் தந்தை செல்வா நினைவுப் பேருரை அந்த மண்டபத்திற்குள் மாத்திரமல்ல, வெளியிலும் நீண்ட காலத்துக்கு எதிரொலிக்கும் என்று சுமந்திரன் வரவேற்புரையில் கூறினார். பீரிஸின் உரை வெளியில் எதிரொலிக்கிறதோ இல்லையோ மாகாண சபைகள்  தொடர்பிலான அவரின் மௌனம் மாத்திரம் தெளிவாகக் கேட்கிறது.”

மேலும்

சட்டத்தரணிகளின் அறிவின் அறம் தமது சமூகத்தின் வாழ்வை வலுவாக்குவதே

“தமிழர்களில் ஒரு பகுதியினர் தூக்கிப் பிடிக்கும் சமஸ்டி கோசத்தை ஆதரிக்க இங்கே முஸ்லிம்கள் இல்லை, மலையகத் தமிழர்கள் இல்லை, எந்த சிங்களவரும் இல்லை, இந்தியா இல்லை, சீனா இல்லை, அமெரிக்கா இல்லை, ஐரோப்பா இல்லை, ஜெனீவாவும் இல்லை, அதற்கு இன்று உலகில் எவருமே நண்பர்கள் இல்லை. சமஸ்டி என்பது இப்போது ஒரு தேர்தல் அரசியற் சுத்துமாத்து என்பது இலங்கை வாழ் தமிழர்களில் பெரும்பாலானவரகளுக்கு புரிகிறது. இப்படியான ஒரு நிலைமையில் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தவர்களாகிய நீங்களும் ‘கடைசித் தமிழனும் கனடா போய்ச் சேரும் வரை’ சமஸ்டி எனும் சுலோகத்தை தூக்கி நிறுத்துவதில் காலத்தைக் கடத்துவீர்களாயின் அது உங்களது துறைசார் அறிவையும் அனுபவங்களையும் கேலிக்குரியவைகளாக ஆக்கிவிடும்.”

மேலும்

1 2 3 181