நீர்கொழும்பு: வெளிச்சமும் இருட்டும்…..!(மூன்றாவது கண்:XXV)

“10 அதிகாரிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து அரசாங்கமும், சமூக ஊடகங்களும் பேசிய அளவுக்கு  21 கைதிகளுக்கு ஏற்பட்ட, நிகழ்ந்த அநியாயம் பற்றி பேசப்பட்டது குறைவு. கொல்லப்பட்ட  சிறைக் காவலர்களின் வீடு வாசல்கள் பற்றி பேசிய சமூக ஊடகங்கள் கைதிகள் எவரினதும் வாழ்வாதாரம் பற்றியோ, வாழ்க்கை கஷ்டங்கள், அவர்களின் குடும்ப நிலைமைகள் பற்றியோ பேசவில்லை. ஒட்டுமொத்தமாக கைதிகள் குற்றவாளிகள், வன்முறையாளர்கள் என்ற வகையில் முத்திரை குத்தப்பட்டனர். பொறுப்பை ஏற்பதாக கூறிய அரசதரப்பும் இந்த பிரச்சார யுக்தியையே பயன்படுத்தியது.”

மேலும்

இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர் காலம். (பகுதி. 2)

“இங்கு கோரிக்கைகள் அல்ல பிரச்சனை. அவற்றை அடைவதற்காக முன் வைக்கும் செயல்முறைகளே தீர்வை நோக்கிய பாதைகளை அடைத்து நிற்கின்றன. இதில் முக்கியமானது அதிகாரத்திலுள்ள அரசியல் கட்சிகளின் போக்குப் பற்றிய தெளிவான புரிதல் அன்றி கோரிக்கைகளை முன் வைப்பது ஆட்சியாளரைக் கடின நிலைக்குத் தள்ளுவதாக உள்ளது. ஜனநாயகம் என்பது கோரிக்கை என்பதில் மட்டும் தங்கியிருப்பதில்லை. எதிரியின் அல்லது ஆட்சியாளரின் இருப்பிற்கு அது எவ்வளவு உதவுகிறது? என்பதிலிருந்தே மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். உதாரணமாக, சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த வேளையில் அவருக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. ஆனால் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் தமிழ் அரசியல் அதிகபட்ச தீர்வை அழுத்துவதில் கொண்டிருந்த அக்கறை சந்திரிகா எதிர் நோக்கிய நெருக்கடிகளை தளர்த்துவதற்கான அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை. இதுவே அப் பேச்சுவார்த்தைகள் தொடர முடியாமல் போயின.”

மேலும்

தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 4

‘“ஆற்றுப்படுத்தும்’ பண்பு தலைமைக்கு இருக்க வேண்டும். வெறும் அரசியல் உரிமைகளைப் பேசுவதோடு நின்றுவிடாமல், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வாதாரம், கல்வி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும்.கடந்த காலத்தில் ஒரு தனிநபரைச் சுற்றி நகர்ந்த அரசியல் நிலையை மாற்றி, பல்துறை வல்லுநர்கள், அறிவுஜீவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளடங்கிய ஒரு கூட்டுத் தலைமைத்துவக் கட்டமைப்பை (Collective Leadership Structure) உருவாக்க வேண்டும். மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளித்து, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்வாங்கிச் செல்லும் சகிப்புத்தன்மை அவசியம்.”

மேலும்

இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர்காலம் (பகுதி1)

“2024ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் முடிவுகள் இலங்கையின் வரலாற்றினைப் புரட்டிப் போட்ட மாற்றங்களாகும். அரசியல் பண்டிதர்கள், அரசியல் தலமைகள், அரசியல் கட்சிகள் எவையும் எதிர்பாராத வகையில் இலங்கை அரசியலில் மூன்றாவது கட்சியின் அரசியல் பிரவேசம் என்பது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த புதிய அரசியல் விழிப்புணர்வை அடையாளம் காட்டியது.
இந்த வரலாற்று நீரோட்டத்தின் மாற்றத்தின் பின்னணியில் நாம் அரசியல் நிலமைகளை ஆராய வேண்டிய நிலையில் உள்ளோம். குறிப்பாக, தற்போது பூகோள அரசியல் போக்கிலும் மிகவும் காத்திரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் நாம் அரசியல் போக்கினை புதிய நிலமைகளின் பின்னணியில் நோக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். “

மேலும்

வீரகேசரியில் நிகழ்ந்த ‘கவிதைச் சமர்’- பகிர்வுகள் (பகிர்வு – 14)

“பூக்கடையாம் தமிழ்க்கவிமேல்
புழுதியினை இறைத்து அரை
வேக்காட்டுக் கவிஞரெலாம்
விளையாட வந்ததனால்
சாக்கடையாம் புதுக்கவிதைச்
சகதிக்குள் அகப்பட்டு
நோக்காடடைந்து தமிழ்
நோகிறதே! நோகிறதே!!”

மேலும்

தமிழ் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடமும் புதிய தலைமைத்துவமும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்)-பகுதி 3

“உலக அரங்கில் தமிழ் மக்களின் வரலாற்று அரசியல் கோரிக்கைகளை பொருத்தமான முறையில் தொடர்ந்து முன்வைக்கும் தேசியத் தலைமை அவசியம். அது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நம்பகமான அரசியல் குரலாக இருக்க வேண்டும். மட்டுமல்ல அறிவார்ந்த தளத்தில் சிந்திக்கும் பண்பாற்றலையும் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக உலக அரசியல் போக்கு என்ன? பிராந்திய நிலவரம் என்ன என்பதைக் கணித்து, அதற்கேற்ப காய்களை நகர்த்தக் கூடிய வல்லமையைக் கொண்ட தலைமை தேவை.”

மேலும்

ஒரு நாய் சாமியாக…..!(மூன்றாவது கண்: XXIV)

‘சுப்பிரமணி விவகாரம் சமூக ஊடகங்கள் பேசுகின்றது போல் மிகவும் இலகுவான, பொறுப்பற்ற, சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று அல்ல. இந்த யாத்திரை சுப்பிரமணியின் வழமையான – இயற்கையோடிணைந்த – இசைவாக்கம் அடையப்பட்ட வாழ்க்கைக்கு மாறானது.  அதை சமாளிப்பது அந்த நாய்க்கு அவ்வளவு இலகுவானது அல்ல. இதை அது யாரிடம் சொல்லி அழமுடியும்….?

அதனால்தான் சில சமூக ஊடகங்கள் “வாயில்லா” பிராணி என்கிறார்களோ? 

உங்கட சாப்பாட்டை திணித்து சீனியை ஏற்றுவதற்கு மட்டும் அதற்கு வாய் இருக்கா? 

இன்னோரு கொடுமை. ஒரு ஊடகம் நாயை உயர்திணையில் பேசுகிறது.

சுப்பிரமணிய பொறுத்தமட்டில் நடப்பது நன்றாகவே நடக்கும் என்று நம்புவோம்.’

மேலும்

ஜனநாயக ஆட்சி அதிகாரத்தில் சமநிலை…!(மூன்றாவது கண்: XXIII)

“இந்த நேரத்தில் இந்த நீதிமன்றங்களின் பதவியில் இருக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது, நீதித்துறையில் தலையிடுவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியாக பொதுமக்களால் பார்க்கப்பட வாய்ப்புள்ளது என்ற, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வாதத்தை “லோஏசியா ” அங்கீகரிக்கிறது. நீதிபதிகளின் ஓய்வு வயது அரசியலமைப்பின் 107 (5) வது பிரிவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அவசியமற்ற மேலும் தற்காலிக அரசியல் அமைப்பு திருத்தம் குறித்ததாக  துறைசார்ந்த நிபுணத்துவ அமைப்புக்களின் கேள்வி அமைகிறது. இதில் இன்னொரு விடயம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக கூறும் அரசாங்கம்,ஏன்? ஒரு தற்காலிக திருத்தத்திற்கு அவசரப்படுகிறது.

மேலும்

இலக்கிய சந்திப்பு -53 திருகோணமலை 

“திருகோணமலையில் சனி ஞாயிறு இரு தினங்களிலும் முழு நாள் அமர்வாக  இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பின் விசேட தொனிப்பொருளாக ‘பழங்குடி வேடர்களின்’ வாழ்வும் வளமும் பற்றிய பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு நூல் அறிமுகங்கள், சூபிகள், LGBTQ , ஆபிரிக்க வம்சாவளியினர், அருந்ததியர் போன்ற இலங்கையில் வாழும் விளிம்புநிலை  மக்கள் பற்றிய பல்வேறு உரைகளும் அவற்றைத்தொடர்ந்த விவாதங்களும் இடம்பெறவுள்ளன.”

மேலும்

பத்திநாதனின் ‘உத்தியாக்கள்’  மீது ஒரு உசாவல் 

“இறந்துபோன முன்னோர்களையும் அவர்களது ஆவிகள் என்று நம்பப்படுகின்ற அமானுஷங்களையும்  வழிபடுதலே மனித குல வரலாற்றின் முதல் வழிபாட்டு முறையாக இருத்தல்கூடும். தமிழர் மெய்யியலில் புறநானுற்றுக் காலத்து நடுகல் வழிபாட்டு முறைகளும் சூபி முஸ்லிம்களிடையே காணப்படும் கபுறு வணக்க முறைகளும் கூட அதன்பாற் பட்டனவேயாகும். அந்த வகையில் குறித்த கடலோர வேடர்களிடையே காணப்படும் ‘உத்தியாக்கள்’ வழிபாட்டின் புராதன தொடர்ச்சியை இந்நூலின் தலைப்பு பிரதிபலிக்கின்றது.”

மேலும்

1 2 3 185