சொல்லத் துணிந்தேன்-86
தம்மை தமிழ் தேசியக் கட்சிகளாக கூறிக்கொள்ளும் குறுந்தேசிய அமைப்புக்கள் தம்மை விடுதலைப்புலிகளின் பதிலிகளாக காட்டிக்கொள்ள முயலுவதால் அவர்களை எவரும் அங்கீகரிக்காத நிலை தொடர்வதாக வாதிடும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழ் மக்கள் ஆதரவு இந்த அமைப்புகளுக்கு கிடைத்த போதிலும் அவை பிரயோசனமற்று போவதாக கூறுகிறார். அதற்கு மாற்று என்ன என்பது குறித்து அவர் ஆராய முயல்கிறார்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 06
வடக்கு நோக்கி வந்த மலையக தமிழர்கள் எதிகொள்ளும் பிரச்சினையைப் பேசும் தொடர் இது. வழமைபோல ‘இந்தப் பிரச்சினையை இப்போது பேசவேண்டுமா?’ என்ற பேச்சுக்கள் எழத்தொடங்கிவிட்டன. ஆனால், இதனை தொடர்ந்து உரத்துப் பேசவே “அரங்கம்” விரும்புகின்றது. அதற்கான அவசியத்தை நாம் உணருகின்றோம். வாய் மூடி இருப்பது ஒரு சமூகத்தையே மேலும் புறக்கணிப்புக்குள்ளாக்கிவிடும் என்பது எமது கருத்து. கருணாகரனும் அதனையே வலியுறுத்துகிறார்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! – 01
இலங்கைத் தமிழர் போராட்ட வரலாற்றில் நிராகரிக்கப்பட முடியாத ஒரு பெயர் யோகன் கண்ணமுத்து (அசோக்). சிறுவயது முதலே பல்வேறுவகையான போராட்டங்களில் பங்கேற்ற இவர், ஆயுதப்போராட்டத்திலும் இருந்துள்ளார். ஆரம்பம் முதலே கண்ணியம் மிக்க போராளியாக அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படும் இவர், தனது சித்தாந்தங்கள் தொடர்பில் எந்தவிதமான சமரசமும் செய்ய மறுப்பவர். இவரது அரசியல் நேர்மையை அரங்கம் மதிக்கிறது. இவருடன் தேசம்நெற் ஆசிரியர் த. ஜெயபாலன் கண்ட செவ்வி இங்கு தொடராகப் பதியப்படுகின்றது.
இந்தியக் குடியுரிமை! இலங்கைத் தமிழ் அகதிகள் கள்ளத்தோணிகளா? (காலக்கண்ணாடி 51)
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் விவகாரம் அவ்வப்போது சூடு பிடித்தாலும் பின்னர் அணைந்துபோகின்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற அகதிகள், அங்கு வதிவிட அந்தஸ்தை பெறுகின்ற போதிலும் பல தசாப்தகாலமாக இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் நிலை “திரிசங்கு சொர்க்கம்” தான். அவை குறித்த அழகு குணசீலனின் ஒரு பார்வை.
தமிழறிஞர் மர்ஹும் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணிகளும்
இலங்கையின் இலக்கிய உலகுக்கு பெருமை சேர்த்த தமிழ் அறிஞர் எஸ். எம். கமால்தீனின் நினைவுதினம் இன்று. தமிழ் இலக்கியத்துறை, முஸ்லிம்களின் சமூகப் படைப்புகள், இலங்கை தமிழ் நூலகத்துறை ஆகியவற்றுக்கு இவரது பங்களிப்பு அளப்பரியது. இவரது பல மாணவர்களே இலங்கை நூலகவியல் துறையில் இன்று முன்னோடிகளாக இருக்கின்றனர். அவரைப்பற்றி மூத்த நூலகவியலாளரும் அவரது மாணவனுமான என்.செல்வராஜா அவர்களின் குறிப்பு இது.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 08
தமிழ் தேசியத்தலைமைகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்பவர்கள் கிழக்கு மாகாண தமிழர்களின் பிரதிநிதித்துவ நலன்களுக்கு எதிராக மேற்கொண்ட சில விடயங்களை இங்கு விமர்சனத்துக்கு உள்ளாக்குகின்றார் எழுவான் வேலன்.
பூமித் தாயை வேண்டுதல் (கவிதை)
சா தேடி அழும் ஒரு விரக்தி உயிரின் விசும்பல் இது. அடுத்த பிறவியில் நம்பிக்கை கொண்டு அது நல்ல பிறவி கேட்கிறது. மரமாய் வாழ விரும்புகிறது. சு.சிவரெத்தினத்தின் கவிதை.
அண்ணை, அண்ணா, அண்ணாச்சி
அண்ணன் என்பது தமையனை, தனக்கு மூத்தவனைக் குறிக்கும் சொல். தனக்கு மேலானவன் என்ற அர்த்தத்தில் அண்ணன் என்கிறார்கள். “அண்ணன்” என்ற சொல் படும்பாட்டை இங்கு கொஞ்சம் சுவாரஸியமாக விபரிக்கிறார் வேதநாயகம் தபேந்திரன்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – (பகுதி – 4)
இலங்கையில் சாதாரண மக்களின் வருமானம் அவர்களின் அத்தியாவசிய செலவுகளுக்கு கூட போதாமல் இருப்பதாக சுட்டிக்காட்டும் வரதராஜா பெருமாள் அவர்கள், அவை குறித்து அரசாங்கம் வெளியிடும் கணிப்பீடுகளும் ஏமாற்றுகள் என்று கண்டிக்கிறார்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 05
தென்னிலங்கை வன்செயல்களால் வடக்கு நோக்கி வந்தமலையக தமிழர்கள் அங்கும் புறக்கணிப்புக்கு உள்ளாகினர். புறக்கணிக்கப்பட்ட அனைத்துச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் முகம் கொடுத்தனர்.
