ஆண்டவனுக்கு ஐந்தொழில் இல்லையா? (கவிதை)
கொரொனா என்றொரு தொற்றுநோய் நம்மை நமக்கே அன்னியப் படுத்தியதை எண்ணி மனம் கனக்கிறார் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா. படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் என்று ஐந்தொழில் செய்யும் ஆண்டவன், தன்பணியை ஒரு தொழிலாய் சுருக்கியது ஏன் என்பது அவர் ஆதங்கம்.
தில்லையாற்றங்கரை The Banks of the River Thillai
இங்கிலாந்தில் வாழும் மூத்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுரமணியம் அவர்களின் ‘தில்லையாற்றங்கரை’ எனும் நாவல் ஆங்கில மொழியில் வெளிவரவுள்ளது. அது குறித்து நண்பர் சிராஜ் மசூர் தனது முகநூலில் எழுதிய அறிமுகத்தை இங்கு தருகின்றோம்.
விம்பம் (சிறுகதை)
சந்தர்ப்பம் சூழ்நிலை மனித குண இயல்புகளுக்கு காரணமாவதும் உண்டுதான். ஆனால், அதனையும் கடந்து கஸ்ட சூழ்நிலையிலும் குணம் மாறாத மனித மனங்களும் உண்டு. அப்படியான இனிமையான மனங்களின் இயல்புகள் சிறுவயதிலேயே வெளித்தெரியத் தொடங்கிவிடுவதும் உண்டு. சிலவேளைகளில் அவை ஆசிரியருக்கே பாடம் சொல்லித்தருவதும் உண்டு. பியாஸா தாஹிரின் சிறுகதை.
1978 ஹட்டன் மாநாடு: மலையகத்தின் வட்டுக்கோட்டை மாநாடு
மலையக மக்களின் தாயகம் எது, அவர்கள் எங்கு செல்வது என்பவை போன்ற முடிவுகளை எடுக்கும் வகையிலான ஒரு மாநாடு 1978 இல் மலையகத்தில் நடந்திருக்கிறது. மலையக மக்கள் இந்தியா செல்வதா, வடக்கு செல்வதா அல்லது தமது தாயகமாக மலையகத்தை மீட்க அங்கேயே வாழ்வதா என்பது அங்கு வாதிடப்பட்டது.
மகாகவி பாரதியின் பாடல்கள் பேசும்! தமிழ்த்தேசிய பாராளுமன்ற – ஜெனிவா அரசியல்!! (காலக்கண்ணாடி 56)
ஐநா மனித உரிமைகள் விடயங்களை ஒன்றாக இணைந்து மேற்கொள்ள வேண்டிய தமிழ் தேசியத்தரப்பு தம்முள் பிளவுண்டு முரண்படுவதை கண்டிக்கும் அழகு குணசீலன், “ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி உள்ள அறிக்கைகள் தொடர்பாக ஒரு “ஆவணச்சண்டை” தமிழ்த்தேசிய அரசியலில் தொடர்கிறது.” என்கிறார்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 9)
இலங்கையில் அரசாங்க நிதி முகாமைத்துவத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து கடந்த வாரம் முதல் பேசிவரும் பொருளாதார நிபுணர் வரதராஜா பெருமாள் அவர்கள், செலவினங்களை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கையின் கடந்த கால அரசாங்கங்கள் தவறிழைத்தமை குறித்தும், அளவுக்கு அதிகமான ஆளணியை(படைகள் உட்பட) அரசாங்கம் கொண்டிருப்பதன் பாதகம் குறித்தும் அலசுகிறார்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 09
வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்த மலையகத் தமிழ் மக்கள் அங்கு பல தசாப்தங்களாக படும் பாடுகள் குறித்து எழுதி வருகின்ற கருணாகரன், தன்னிடம் பேசிய அப்படியான மூத்த பிரஜை ஒருவரின் கருத்தை இங்கே பகிர்கிறார்.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 10
யாழ். மேலாதிக்க கட்சிகள் என்று தாம் அழைப்பவர்களால் கிழக்கில் தமிழர் வாக்குகள் பொறுப்பற்ற விதத்தில் எவ்வாறு சிதறடிக்கப்பட்ட, அதனால் கிழக்கு தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதகங்கள் என்ன என்பதை இங்கு விளக்க முற்படுகிறார் எழுவான் வேலன். யாழ். மேலாதிக்கவாதிகளும் சிங்கள பேரினவாதிகளும் தமக்கு ஒன்றுதான் என்கிறார் அவர்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 7)
தனது போராட்டகால நிகழ்வுகளை பகிர்ந்துவரும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், ஆரம்பகால தனது அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தான் முதன் முதலில் பொலிஸாரால் கைது செய்யப்ப்பட்டமை ஆகியவை குறித்து பேசுகிறார்.
வங்குறோத்து நிலையை நோக்கி இலங்கை அரசு?
நாட்டில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கை அரசாங்கம் வங்குறோத்து நிலையை அறிவிக்குமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம். இப்படியான சூழ்நிலையில் மக்களுடன் ஒரு வெளிப்படைத்தன்மையுடனான உரையாடலை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஒரு மக்கள் ஒப்பந்தத்தை அரசாங்கம் கோர வேண்டும் என்றும் அவர் வயியுறுத்துகிறார்.