ஜனாதிபதி ‘கோதா’ இன் ஐ நா உரை நிஜமா? போலியா? புலம்பெயர் சமூகத்தின் பணி என்ன?

அண்மையில் இலங்கை ஜனாதிபதி ஐநா உரையில் புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுத்த கோரிக்கையின் நம்பகத்தன்மை குறித்து மிகுந்த சந்தேகம் வெளியிடும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், ஆனாலும் இந்த விடயத்தை புலம்பெயர்ந்த சமூகம் புறக்கணிக்காது, மிகவும் கவனமாக கையாள முன்வரவேண்டும் என்கிறார்.

மேலும்

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 11

யாழ் மேலாதிக்கவாதிகள் என்று தான் குறிப்பிடும் தலைமைகள் மற்றும் கட்சிகளால் ஏனைய மாவட்ட தமிழ் மாணவர்களின் கல்வியும் புறக்கணிக்கப்பட்டதாக இங்கு விவாதிக்கிறார் எழுவான் வேலன்.

மேலும்

போர்க்குற்ற விசாரணை! விடுதலைப்புலிகளும் …. கோசவோ விடுதலை இராணுவமும்.! (காலக்கண்ணாடி 57)

போர்க்குற்றங்கள் மற்றும் வன்செயல்கள் குறித்து தமிழர் தரப்புகள் ஒருவர் மற்றவர் மீது குற்றச்சாட்டுகளை வாரி வீசுவது தமிழர் தரப்புக்கு பாதகமாக அமையும் என்கிறார் அழகு குணசீலன். கோசவோ விடுதலை இராணுவத்தை போல விடுதலைப்புலிகள் அமைப்பும் விசாரணை என்று வந்தால் அதில் அகப்பட நேரிடலாம் என்பது அவர் கருத்து.

மேலும்

“தளராதவன்” (விழிப்புணர்வுப் படம்)

அண்மைக்காலத்தில் அரங்கத்தின் பார்வைக்கு வந்த மட்டக்களப்பு இளைஞர்களின் இரண்டாவது விழிப்புணர்வுப் படம் இது. இலங்கையின் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைக்கு வித்தியாசமான தீர்வை இது பரிந்துரைக்க முனைகிறது. படத்தயாரிப்பு குழுவுக்கு ஒரு பாராட்டுடன், வாசகர் பார்வைக்கு படத்தை சமர்ப்பிக்கிறோம்.

மேலும்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 10

வறுமை வாட்டும்போது தெரியாத தொழில்களும் கைவசப்படும் என்பது ஒரு அனுபவம். இது வடக்கு நோக்கி வன்செயலால் ஓடி வந்த அகதிகள் சிலருக்கும் உண்மையாயிற்று. அவ்வாறாக வந்த ஒரு மூத்த உறவு தான் சலூன் வைத்த அனுபவத்தை இங்கு பகிர்கிறார். செய்தியாளர் கருணாகரன் தரும் தொடர்.

மேலும்

கொக்கட்டிச்சோலை களப்பு பகுதியில் அழிக்கப்படும் காடுகள் (படுவான் திசையில்…)

மட்டக்களப்பின் அழகே அங்குள்ள ஆறுகள் என்று உள்ளூரவரால் அழைக்கப்படும் கடலேரிகள்தான். ஆனால், அவற்றை ஒட்டிய சதுப்பு நிலப்பகுதியில் உள்ள கண்டல் தாவர இனங்கள் பலராலும் அண்மைக்காலமாக அழிக்கப்படுவதாக புகார்கள் வந்திருக்கின்றன. அவை குறித்து படுவான் பாலகன் தரும் குறிப்பு.

மேலும்

மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 9

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவருகின்ற பொது நூலகத்தைப் பற்றி தனது பரிந்துரைகளை எழுதி வருகின்ற மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்கள், இந்த நூலகத்தை ஒரு பிராந்திய தேசிய நூலகமாக உருவாக்க வேண்டும் என்கிறார். அதற்கான காரணங்களையும் வழியையும் அவர் பரிந்துரைக்கிறார்.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 10)

இலங்கை பொருளாதாரத்தின் நிலைமை குறித்து ஆராய்ந்துவருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், இலங்கை கல்விச்சேவை மற்றும் அரச சேவையின் நிலைமை குறித்து இங்கு பேசுகின்றார். ஒப்பீட்டளவில் அளவுக்கு அதிகமான பணியாளர்களை கொண்டு விளங்கும் இந்தச் சேவைகள் தகமையானவர்களை கொண்டிருக்கவில்லை என்றும், பணியாளர் எண்ணிக்கை அதிகமாதலால் அவர்களுக்கு உரிய ஊதியம் கொடுபடவில்லை என்றும் அவர் கவலை தெரிவிக்கிறார்.

மேலும்

இலங்கை தமிழர் வரலாறு குறித்த 5 நூல்கள்

இலங்கையின் தமிழர் வரலாறு குறித்து அறிய, ஆராய விரும்புபவர்கள், மாணவர்கள் படிக்க வேண்டிய ஐந்து நூல்கள் பற்றிய அறிமுகம் ஒன்றை பேராசிரியர் சி. மௌனகுரு பரிந்துரைக்கிறார். அவை குறித்த அறிமுகங்களையும் அவர் இங்கு தொடராக தருகிறார். அதில் அவர் பேசும் முதல் நூல் – பேராசிரியர் சி. பத்மநாதனின் ‘இலங்கைத் தமிழர் வரலாறு –கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும்

(கி.மு.250– கி.பி 300)’.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 8: மிதவாத அரசியலும் ஆயுத அரசியலும் உறவும் – முரணும்)

தனது போராட்ட கால அனுபவங்களைப் பகிர்ந்துவரும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் ஆரம்பகால இயக்கங்கள் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்தும், அவற்றுக்கான காரணங்கள் அதன் விளைவுகள் குறித்தும் இங்கு பேசுகின்றார்.

மேலும்

1 90 91 92 93 94 152