‘வீணையடி நீ எனக்கு’ : கிழக்குப் பல்கலைக்கழகம் சார்ந்தெழுந்த முதல் நாவல்
கிழக்கின் முக்கிய எழுத்தாளுமைகளில் ஒருவரான மைக்கல் கொலின் அவர்கள் எழுதிய “வீணையடி நீ எனக்கு” என்னும் நாவல் விரைவில் வெளிவரவிருக்கிறது. கிழக்குப் பல்கலைக்கழகம் சார்ந்து எழுதப்பட்ட முதல் நாவல் இதுவென்று கருதப்படுகின்றது. அதுகுறித்த, பேராசிரியர். செ. யோகராசா அவர்களின் சிறு அறிமுகம் இது.
தான் போக வழியில்லையாம், தவில் போலவாம் மாராப்பு!! (காலக்கண்ணாடி-29)
இலங்கை குறித்த அண்மைக்கால சர்வதேச, உள்நாட்டு நடப்புகளை தனக்கேயுரிய நகைச்சுவையுணர்வுடன் விமர்சிக்கிறார் அழகு குணசீலன். தான் போக வழியில்லையாம், தவில் போலவாம் மாராப்பு என்று சொல்லும் அவர், ‘சர்வதேசத்திற்கு சிறிலங்கா தேவையா? சிலங்காவிற்கு சர்வதேசம் தேவையா?’ என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.
பணிப்பெண்களுக்கு எதிரான வன்முறையும் அதன் வரலாற்றுப் பின்னணியும்
பெண்ணை, அடிமையாக, பணிப்பெண்ணாக பயன்படுத்துவது என்பது மனித வரலாற்றோடே வளர்ந்துவந்த ஒன்று என்கிறார் ஆய்வாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். பல நூற்றாண்டுகளாக பணிப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வளர்ந்து, இன்று உச்சம் தொட்டிருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பெரியார்-அறிதலும் புரிதலும் (பாகம்- 8)
பெரியார் குறித்த தமது இந்தத் தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் அவரால் உருவாக்கப்பட்ட திராவிட கழகத்தின் தோற்றம் பற்றி பேசுகிறார்கள்.
சட்டரீதியாகச் செத்தவன் (சிறுகதை)
இதுவும் புலம்பெயர்ந்து தஞ்சக் கோரிக்கை ஏற்கப்படுவதற்காக காத்திருக்கும் ஒரு அகதியின் கதைதான். ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமானது. விதி சில சந்தர்ப்பங்களில் ஆட்களைப் பார்த்து இப்படியும் சிரிப்பது உண்டு. அகரன் இதனை எழுதியுள்ளார்.
பொட்டு மான்மியம்
பொட்டு என்பது பொதுவாக பெண்கள் நெற்றியில் அணியும் ஒரு அடையாளம். இதன் பின்னணியில் பல கதைகள் இருக்கின்றன. பொட்டோடு சேர்ந்த பல மரபுகளும் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறார் வேதநாயகம் தபேந்திரன்.
சந்திப்பு (சிறுகதை)
மனதின் குழப்பங்கள் எம்மை என்னென்னவோ செய்யும். புலம்பெயர் வாழ்வில் இவை பெரும்பாலானோரை கனவுக்கும் நினைவுக்கும் இடையில் வைத்து வாட்டி எடுத்துவிடும். அப்படியான ஒரு அனுபவம் இது. அகரன் எழுதும் சிறுகதை.
13வது திருத்தம் என்பது தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வின் ஆரம்பமா? அல்லது அதன் முடிவின் ஆரம்பமா?
இலங்கை அரசியல் நிலவரம் மிகவும் குழப்பகரமான திசையில் சென்றுகொண்டிருப்பதாக அனைவராலும் கருதப்படும் சூழ்நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமலாக்குவதை கருதலாமா என்பதை இங்கு ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (20)
தனது ஊர் நினைவுகளை மீட்கும் ஶ்ரீகந்தராசா அவர்களின் சூறாவளி பற்றிய நினைவுகள் இன்று ஆரம்பமாகின்றன. சூறாவளி ஒருபுறம் கொடுமை. அவை குறித்தும் அதனைத் தொடர்ந்து நிவாரணத்தில் நடந்த பிரச்சினைகளை தாம் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பது குறித்தும் அவர் இங்கு பேசுகிறார்.
“விடாய்” பேசும் மொழி : படுவான் வாழ்வியல் ஒரு மறுவாசிப்பு! (காலக்கண்ணாடி – 28)
மட்டக்களப்பின் நெற்களஞ்சியம் படுவான்கரை. அதன் வாழ்வும், மொழியும், மரபும் ஏனைய இடங்களில் இருந்து நிறைய மாறுபட்டவை. பழந்தமிழரின் வேர் அது. கவிஞை தில்லையால் எழுதப்பட்ட “விடாய்” என்ற கவிதை நூல், அதன் தலைப்பு முதல், வார்த்தைக்கு வார்த்தை படுவான்கரையின் பண்பு பேசுகின்றது. அழகு குணசீலனின் பார்வையில் அவை பற்றி…
