பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? – (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள் முரண்பாடுகள்)
தமிழ் அரசியலின் உள் முரண்பாடுகள் குறித்து கடந்த வாரம் முதல் பேசிவரும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், இந்தப் பகுதியில் கிழக்கு தமிழர்கள் நிலை குறித்துப் பேசுகின்றார். குறிப்பாக கிழக்கில் அரசியல் போக்கு குறித்து பேசும் அவர், அங்கு பிரச்சினை பிரதேசவாதமா அல்லது ஜனநாயகப் பற்றாக்குறையா என்று கேள்வி எழுப்புகிறார்.
இலங்கையை அழிவுப்பாதயில் கொண்டு செல்லும் சக்தி?
இலங்கையில் சமாதானச் சிந்தனை மற்றும் அதனை நோக்கி நகர்வதற்கான எத்தனம் என்பவை எந்தத் தரப்பிடமும் கிடையாது என்று விசனம் தெரிவிக்கிறார் செய்தியாளர் கருணாகரன். அனைத்து இன மக்களும் அழிவுப்பாதையில் இருந்து விலகுவதற்கான முனைப்பைக் காண்பிக்கவில்லை என்பது அவர் கவலை.
கொவிட் சிகிச்சை எப்படி? – ஒருவரின் அனுபவம்
கொவிட் 19 தொற்று அபாய எச்சரிக்கையும் பயமும் ஒரு பக்கம் என்றால் அதற்கான சிகிச்சை இலங்கையில் எப்படி? அதுவும் வடக்கில் கிளிநொச்சியில் எப்படி என்ற கலக்கம் பலருக்குண்டு. இங்கே அதைப்பற்றிய உண்மை விவரங்களை எழுதுகிறார், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி, கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் கொரோனா விசேட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எழுத்தாளரும் ஆசிரியருமான ப. தயாளன்.
வன்முறைகள், ஊடுருவல்கள், ஆலய அழிப்புகள் மூலம் ஒடுக்கப்பட்ட கல்முனைத் தமிழர்: (சொல்லத் துணிந்தேன்-74)
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து எழுதிவருகின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், கல்முனையில் வன்முறைகள், ஊடுருவல், நிலப்பறிப்புகள், ஆலய அழிப்புகள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்ட சம்பவங்களை ஆதாரம் காட்டி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான நியாயத்தை முன்வைக்கிறார்.
புலம் பெயர்ந்த சாதியம் 8
தமிழர் அரசியல் கட்சிகள் சிலவேளைகளில் தேவை கருதி தம்மை சாதிமறுப்பு இயக்கங்களாக காட்டிக்கொள்ள முனைந்தாலும் அவை வெள்ளாளக் கருத்தியலில் அடிப்படையிலேயே செயற்பட்டன என்று வாதிடுகிறார் கட்டுரையாளர் தேவதாசன். விடுதலைப்புலிகள் அமைப்பும் இந்த சிந்தனைக்கு உட்பட்டதாகவே செயற்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
கொவிட் : இழக்கப்போவது யார்?
இலங்கையில் கொவிட் 19 இன் அடுத்தடுத்த அலைகள் மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை போதாது என்ற கவலை அதிகரித்து வருகின்றது. அவை குறித்து ஆராய்கிறார் இந்த பத்தியின் ஆசிரியர்.
மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 3
கடந்த பகுதிகளில நூலகத்திற்கான நூற்சேர்க்கை பற்றி ஆராய்ந்த நூலகவியலாளர் செல்வராசா அவர்கள, இந்தப் பகுதியில் நூலக கட்டடத்தில் என்னென்ன விடயங்கள் அமையவேண்டும் என்பதை விளக்க முயல்கிறார்
சீன, இந்திய, அமெரிக்க தலையீடுகள்: நம் தலையில் நாம் போட்ட மண்
சீனாவின் வருகை பற்றி பேசும் கருணாகரன், இதற்கு முன்னதாக இலங்கைக்கு உதவ வந்த நாடுகள் பற்றி விபரிக்கிறார். இவற்றின் விளைவுகளையும் அதனை இலங்கை கையாண்டதையும் விளக்கும் அவர், நமக்குள் நாம் வளங்களை பகிர மறுத்ததன் விளைவுகளே இவை என்கிறார்.
‘வீட்டுக்குள் புகுந்த ஆமையும், நாட்டுக்குள் புகுந்த சீனாவும்’ — அது அந்தக்காலம்… (காலக்கண்ணாடி – 39)
சீனாவின் போர்ட் சிட்டி திட்டத்தை, இவை போன்ற உலக அனுபவங்கள் மற்றும் இலங்கையின் கடந்தகால அனுபவங்களுடன் மட்டிடுகிறார் அழகு குணசீலன். வீட்டுக்குள் புகுந்த ஆமையும் சீனாவும் ஒன்றா என்ற கேள்விக்கு பதில்காண முனைகிறார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான நியாயம் (சொல்லத் துணிந்தேன் – 73)
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான நியாயங்களை முன்வைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்தப் பகுதியில், அம்பாறை மாவட்டத்துக்குள்ளே ஏற்கனவே உருவாக்கப்பட்ட பிரதேச செயலகங்களின் மக்கள் வீதாசாரத்தை முன்வைத்து தனது வாதத்தை நியாயப்படுத்துகிறார்.
