அரசாங்கத்தின் திட்டம் சரியானதா? விவசாயிகளின் போராட்டம் நியாயமானதா?

இயற்கை உரமே மனித, தாவர நலனுக்கு உகந்தது என்று தெரிந்திருந்தும், அதனை உடனடியாக முன்னெடுக்க விவசாயிகள் தயங்குவது ஏன் என்பதற்கான காரணங்களை ஆராய்கிறார் படுவான் பாலகன். பெருமளவு விவசாய நிலங்களைக் கொண்ட படுவான்கரை மக்கள் இதனால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும், அவற்றை தீர்ப்பதற்கான வழிவகை குறித்தும் அவர் விளக்க முயல்கிறார்.

மேலும்

“ஜியாங் ரோங்” இன் ‘’ஓநாய் குலச்சின்னம்’’

ஓநாய்கள் மனிதர்களைவிட நல்லவை. புற்களே மிகவும் இரக்கமானவை. வளர்ச்சிக்காக மனித இயற்கை வாழ்வை அழிக்க முடியாது. இவை உள்ளடங்கிய ஒரு புராதன சீனக் கதை பற்றிய விமர்சனம். வாழ்வை இயற்கையோடு ஒன்றி வாழப் போதிக்கும் ஒரு சீன இலக்கியம் பற்றிய அகரனின் குறிப்பு.

மேலும்

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ : இப்போது ஏன்?

பொதுமக்களின் அதிருப்திக்கு காரணமான பல நடவடிக்கைகளை கடந்த காலங்களில் முன்னெடுத்த அரசாங்கம், அதே பாணியில் மீண்டும் பேரினவாதப் போக்கில் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற திட்டத்தை அமல்படுத்த முயல்வதாக குற்றஞ்சாட்டும் ஆய்வாளர் வி.சிவலிங்கம், நாடு ராணுவ ஆட்சியை நோக்கிச் செல்கிறதா என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும்

தமிழர் தரப்பு மாற்று வழியில் சிந்திக்க வேண்டும்

காலங்காலமாக பல முயற்சிகள் செய்தாலும் தீராத பிரச்சினைக்கு மாற்று வழியிலான சிந்தனையும், மாற்றுத்தலைமையும் தமிழருக்கு அவசியம் என்கிறார் பத்தியாளர். தூரத்துத்தண்ணி ஆபத்துக்கு உதவாது என்பது அவர் கருத்து.

மேலும்

நாட்டின் நலன் மக்கள் கையில்

நாட்டை பொருளாதாரப் பிரச்சினையில் இருந்தும் தொற்றுநோய் பிரச்சினையில் இருந்தும் மீட்பது மக்களின் பொறுப்பு என்கிறார் கருணாகரன். அரசும் மக்களும் கூட்டாக இதனைச் சாதிக்க முயலவேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. மக்களின் மனோ பலத்திலேயே அனைத்தும் தங்கியிருக்கிறது என்கிறார் அவர்.

மேலும்

கவிதை கேளுங்கள்: ‘குறும்பாவில் எனது அநுபவங்கள்’

இலக்கிய வடிவங்களில் ஒன்றான குறும்பா பற்றியும் அதன் ஆரம்பம், அறிமுகம், கட்டமைப்பு பற்றியும் இணையவழி இலக்கிய சந்திப்பு ஒன்றில் ஏ.பீர் முகம்மது அவர்கள் ஆற்றிய உரையின் மூலப்பிரதி இது. இளம் கவிஞர்கள் பார்வைக்காக.

மேலும்

மலையக தோட்டங்களை தொழிலாளர்களுக்கு வழங்குங்கள் (எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 15))

இலங்கை பொருளாதாரத்தின் முக்கிய அம்சமான தேயிலை பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்கும் நிலையில், அவற்றில் மாற்றுப் பயிர்களை செய்யும் நோக்கில் அவற்றை மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும் என்று கூறுகிறார் பொருளாதார ஆய்வாளர் அ.வரதராஜா பெருமாள்.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 13)

தனது போராட்ட அனுபவங்கள் குறித்துப் பேசி வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு மட்டக்களப்புச் சிறை உடைப்பு விபரங்கள் பற்றி மேலும் பேசுகின்றார்.

மேலும்

போட்டிப் போராட்டங்களால் அன்றே சந்தி சிரிக்கச் செய்த தமிழ் தேசியக் கட்சிகள் (சொல்லத் துணிந்தேன்-95)

தமிழ் தேசியக் கட்சிகள் அன்று முதல் முன்வைத்த கோசங்களும், போராட்டங்களும் தீர்க்க தரிசனமற்றவை என்றும், தவறானவை என்றும் சில உதாரணங்களுடன் கூறுகிறார் கோபாலகிருஸ்ணன். அவர்களின் தவறான எதிரெதிர்ப்போராட்டங்கள் தமிழர்களை தலைகுனியச் செய்தன என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

மேலும்

வடக்கு மாகாணசபை! சூரன்போரா…?, மாம்பழக்கதையா…? (காலக்கண்ணாடி 60)

அதிகாரங்கள் போதாது என்று தாம் கடந்த காலங்களில் நிராகரித்த மாகாண சபையின், அறிவிக்கப்படாத தேர்தலுக்காக தமிழ் தேசியக் கட்சிகள் தமக்குள் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டதாக கூறும் அழகு குணசீலன், அவர்களின் திட்டங்கள் எப்படி இருக்கும் என்று எதிர்வுகூற முனைகிறார்.

மேலும்