“ஆடவர் தோளிலும் கா, அரிவையர் நாவிலும் கா” (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்)
ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் என மண்வாசனைச் சொற்கள் பிரத்தியேகமாக இருப்பதுண்டு. அது அந்த மொழி வழக்கின் சிறப்பாக அமையும். அந்த வகையில் மட்டக்களப்பு மண்வாசனை சொற்கள் சிலவற்றை பேசுகிறார் ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன்.
‘தை பிறக்கட்டும்’
மட்டக்களப்பின் படுவான்கரை வாழ்க்கை பல சங்கடங்களைத் தாண்டியது. ஊருக்கு உணவு படைக்கும் அந்த மக்களுக்கு தமது சொந்த வாழ்க்கை எல்லா நாட்களிலும் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. சமூக, பொருளாதார பாதிப்புகளே அவற்றுக்கு காரணம். ஆனால், நாளை விடியும் என்ற அவர்களது நம்பிக்கையும், உழைப்பும் குறைவதில்லை. இது ஒரு பெண்ணின் கதை. படுவான் பாலகன் எழுதியது.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்- 05)
ரெலோவின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதும் நடவடிக்கை முடிவுக்கு வந்திருந்தாலும் அது இந்தியாவை இலங்கைக்கு எதிராக தமிழர் விவகாரத்தில் அழுத்தம் கொடுக்கச் செய்வதற்கு பதிலாக இந்தியா கொடுக்கக்கூடிய அழுத்தத்தை குறைக்கச் செய்துள்ளது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
திறன்நோக்கு (நூல் மதிப்பீடு) – ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’
கிழக்கின் 100 சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதைகள் பற்றி தனது விமர்சங்களை முன்வைத்து வரும் செங்கதிரோன், இந்த வாரம் எடுத்துக்கொண்டது வ.அ. அவர்களின் ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’. இது சிறுகதைக்குள் அடங்காது என்பது அவர் முன்வைக்கும் வாதம்.
13வது திருத்த நடைமுறையின்போது மலையகத் தமிழருக்கு ஏற்பட்ட அநீதியை இந்தியாவுக்கு விளக்க வேண்டும்
இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதும் விவகாரத்தில் மலையக தமிழர் விடயங்கள் உள்வாங்கப்படாதது குறித்து விமர்சித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா, 13 திருத்த விவகாரத்தில் மலையக தமிழர் புறக்கணிக்கப்பட்டமை குறித்து இந்தியாவுக்கு கூற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
முதற்கோணல் முற்றும் கோணல்! (காலக்கண்ணாடி 72)
இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதும் விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் நடந்துகொண்ட விதம் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்கிறார் அழகு குணசீலன். தமிழ்த்தேசிய அகராதியில் கூட்டு என்பது குழிபறித்தல் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.
என் செய்வோம்! என் செய்வோமே!
‘கனக்ஸ்’ என்று நண்பர் வட்டாரங்களில் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த சமூகச் செயற்பாட்டாளர், நண்பர் எஸ்.பி.கனகசபாபதி அவர்கள் கனடாவில் காலமானார். கனக்ஸ் ஒரு மிகச் சிறந்த சமூக சேவையாளராவர். கனடா தமிழ் கலாச்சாரச் சங்கம், உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் – கியூபெக், சுவாமி விபுலாநந்த கலை மன்றம், பாடும் மீன்கள் சமூகம், சிடாஸ், எமது சமூகம் என்று பல பொது அமைப்புகளில் இணைந்து பணியாற்றியவர். மட்டக்களப்பு தமிழகத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
அவருக்கு செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்கள் சமர்ப்பிக்கும் அஞ்சலி இது. அரங்கம் இந்த அஞ்சலியில் தானும் இணைகின்றது.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! (பாகம் 23)
புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து எழுதிவருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், அந்த இயக்கத்தில் பல கொலைகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து தளத்தில் நடந்த மாநாடு ஒன்று குறித்து இங்கு விபரிக்கிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம் – 04)
இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதும் விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் மேலும் குளறுபடிகளை தொடர்வதாக குற்றஞ்சாட்டுகிறார் கோபாலகிருஸ்ணன். தமிழ் தேசியத்தலைவர்களின் செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
சிரியா சிறையில் சித்ரவதை…! ஜேர்மனி நீதிமன்ற தீர்ப்பு அரசுகளுக்கு அதிர்ச்சி வைத்தியமா….? (காலக்கண்ணாடி 71)
சிரியாவின் வதை முகாம் ஒன்றில் கைதிகளை சித்ரவதை செய்த ஒருவருக்கு ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று புதிதாக சேர்க்கப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கியுள்ளது. இது பலவிதமான சமிக்ஞைகளை சர்வதேச உலகுக்கு காண்பித்துள்ளது. ஆராய்கிறார் அழகு குணசீலன்.
