‘ஐயோ சீனா நுழைகிறதே…இது நியாயமா?’
இலங்கையில் சீனாவின் பொருளாதார முனைப்புக்கள் ஒரு ஆக்கிரமிப்பு என்ற கருத்து பலர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த விடயத்தில் உண்மையான யதார்த்தத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் வழமைபோல உணர்ச்சிக்கு அடிமையாக குழப்பத்தில் பலர் தடுமாறுவதாக கருணாகரன் கூறுகிறார். அது பிரச்சினைக்கு தீர்வாகாது என்பது அவர் கவலை.
யாழ்ப்பாணத்தில் ஒலி தந்த றீகல்
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் சில நிறுவனங்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு வழங்கிய ஒலி அமைப்பை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பொறியாளர்களே பார்த்து பிரமித்ததாக மூத்த ஒலிபரப்பாளரான மறைந்த இரா. பத்மநாதன் அவர்கள் கூறக்கேட்ட ஞாபகம் உண்டு. அந்த வகையில் அங்கு கோலோச்சிய ஒரு நிறுவனம் றீகல் சவுண்ட் சேவிஸ். அது பற்றிய ஒரு குறிப்பு..
இந்தியாவில் மதம்: சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கநாதன்?
சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று மதம் பற்றிய இந்திய மக்களின் மனோநிலை குறித்த ஆய்வு ஒன்றை அண்மையில் செய்திருக்கிறது. அதன் முடிவுகள் சுவாரசியமான பல தகவல்களை தந்திருக்கின்றன. மதத்தை மதிப்பது, தேசிய அடையாளம், மொழி, உணவு உட்பட பல தகவல்கள் இதில் அடங்கும்.
மலையக மக்களுக்கு துரோகம் செய்த யாழ் மேலாதிக்கம்-(சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 04)
கிழக்கு மக்களுக்கு எதிராக மாத்திரமல்லாமல் மலையக தமிழ் மக்களுக்கு எதிராகவுமே யாழ் மேலாதிக்கத்தின் செயற்பாடு இருந்தது என்று கூறுகிறார் எழுவான் வேலன். தனது கூற்றுக்கான ஆதாரங்களை அவர் சுதந்திரம் கிடைத்த கால நிகழ்வுகளில் இருந்து முன்வைக்கிறார். தேசியக் கொடி விவகாரத்திலும் யாழ் மேலாதிக்க தலைவர்களின் செயற்பாடு குழறுபடியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
மாகாணசபை : யாருக்கும் வெட்கமில்லை
கடந்த காலத்தில் சிலரது முயற்சியின் பலனாக கிடைத்த மாகாணசபைகளை எதிர்க்கின்ற சில தமிழ் அமைப்புக்கள், மாகாண நிர்வாகத்துக்காக போட்டி போடுவதை செய்தியாளர் கருணாகரன் கடுமையாக கண்டிக்கிறார். இன்றுள்ள அரசியற் தரப்புகளிலே மாகாணசபையை வினைத்திறனுடன் செயற்படுத்தக் கூட அனுபவமும் அக்கறையும் அரசியல் ஒழுக்கமும் வினைத்திறனும் உடைய தரப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் மட்டும்தான் என்பது அவரது கருத்து.
சொல்லத் துணிந்தேன்-78
தோழர் பத்மநாபா பற்றிய தனது உரை ஒன்றை ஒட்டி இந்த வாரப் பத்தியை எழுதும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அதிகாரப்பரவல் ஒன்றே தமிழர் பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்றும், ஆனால், அந்த விடயத்தில் அக்கறையற்ற போக்கை தமிழ் கட்சிகள் காண்பிப்பதாகவும் குற்றஞ்சாட்டுகிறார். ஆகவே அனைத்து தரப்பும் தேர்தல் அரசியலுக்கு அப்பால் இணைந்து, ‘அதிகாரப் பகிர்வு இயக்கம்’ ஒன்றினைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
சாதி என்பது தமிழர் மத்தியில் பழங்கதை அல்ல! (சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 03 )
சாதி என்பது பழங்கதை, வர்க்க ரீதியிலேயே தமிழர் பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும் என்று இடதுசாரிகளால் பார்க்கப்படுவது குறித்த தனது கருத்தை இங்கு முன்வைக்கிறார் எழுவான் வேலன். சாதியும் சேர்ந்தே இன்றுவரை தமிழர் விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் வாதிடுகிறார்.
நவ தாராளவாத அரசியல் பொருளாதார தோல்வி: அடுத்த நகர்வு என்ன?
நவதராளவாத பொருளாதார தோல்வியை அடுத்து எப்படியான நகர்வுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவலாம் என்று ஆராயும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், தனியார் துறையுடன் அரசதுறையும் வணிகத்தில் போட்டியிடும் “சீன முன்மாதிரி” மீதும் கவனம் செலுத்துகிறார்.
கூடாத சேர்க்கை (சிறுகதை)
போதை மருந்து விவகாரம் எதிர்கால இளைஞர்களைக் காவுகொண்டு வருவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இதனைக் கடத்துவதில் பல முக்கிய பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருப்பது பெரும் கொடுமை. இதனால், வரும் பிரச்சினைகளில் சிலவற்றை கோடிகாட்டும் ஒரு சிறுகதை. சபீனா சோமசுந்தரம் எழுதியது.
கிழக்கு அரசியல்: பிரதேசவாதமா? (காலக்கண்ணாடி 44)
தமிழர் தாயகத்தில் சமூக பொருளாதார அரசியலில் மட்டுமன்றி கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களிலும் வேறுபட்டு நிற்கின்ற கிழக்கு மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற போக்கானது அப்பட்டமான ஒடுக்குமுறையும், ஜனநாயகப் பற்றாக்குறையுமாகும் என்று வாதிடும் அழகு குணசீலன் அவற்றின் விளைவே கிழக்கின் தனித்துவ அரசியல் உணர்வு என்று கூறுகிறார்.