புலிகளின் தியாகத்தை விற்றுப் பிழைப்பு நடத்துவோர்!!

இன்றைய அரசியல்  விடுதலைப் புலிகளின் போராற்றல் என்கிற வீரம், அதற்கான தியாகம் (உயிரிழப்பு) அதைக் கொண்டாடும் மாவீரம் – ‘மாவீரர்’ என்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தப் போராளிகள் குமுறுகிறார்கள். தங்களையும் தங்களைச் சேர்ந்தவர்களையும் வைத்துப் பிழைக்கும் தமிழரசியலை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திட்டமிட்டுத் தமிழரசியல் புலிகளின் பிரதிநிதிகளாக இருப்போரின் நீக்கத்தை ஒரு பக்கம் செய்து கொண்டு, மறுபக்கம் புலிகள் இயக்கத்தின் போராற்றலையும் அதில் உயிரழந்தோரின் தியாகத்தைப் பயன்படுத்துவதையும் இவர்களால் ஏற்கமுடியாதிருக்கிறது. அதாவது இந்த இரண்டகத் தன்மையை…’

மேலும்

என். சண்முகதாசன்- சமரசம் செய்யாத ஒரு கம்யூனிசவாதியின் அரசியல் வாழ்வு 

இலங்கையின் மூத்த கம்யூனிஸவாதியான என். சண்முகதாசனின் 31 வது நினைவு தினம் (வியாழக்கிழமை) இன்றாகும். அதை முன்னிட்டு இந்த கட்டுரை பிரசுரமாகிறது.

இலங்கையின் மிகவும் காத்திரமான ஒரு கம்யூனிஸ்ட்டாக பலராலும் மட்டிடப்பட்ட இவர், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இடதுசாரிகளாலும் மதிக்கப்படுபவர். இலங்கை இனவிவகாரம் உட்பட பல அம்சங்களில் தனக்கென தனித்துவமான கொள்கையை கொண்டு செயற்பட்டவர். அவருக்கு அரங்கமும் தனது அஞ்சலியை செலுத்துகிறது.

மேலும்

கிழக்கு அரசியல்:1. தமிழரசின் வீழ்ச்சியும்- மாற்று அரசியல் எழுச்சியும்….! (மௌன உடைவுகள்-71)

போருக்குப்பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் கடுமையான சரிவை சந்தித்து வரும் தமிழரசுக்கட்சி, கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் அழகு குணசீலன். ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் கிழக்கு நிலை பொருந்தும் என்கிறார் அவர். கடந்த தேர்தல்களின் முடிவுகள் மூலம் இதனை அவர் நிறுவ முயல்கிறார்.

மேலும்

சுயம் இழந்து, புலிகளின் ஒளியில் குளிர்காயும் தமிழ்க்கட்சிகள்!

‘தம்மால் சுயமாக எதையும் செய்ய முடியாத நிலையில் புலிகளின் – அவர்களுடைய மாவீர்களின் ஒளியில் தங்களுடைய அரசியலை இவர்கள் மேற்கொள்ள விளைகின்றனர். இது அந்தப் போராளிகளுக்கும் அவர்களைப் பெற்று வளர்த்த பெற்றோருக்கும் அவர்களை மதிக்கின்ற மக்களுக்கும் இழைக்கின்ற அநீதியாகும்.

தமது அரசியல் ஆதாயங்களுக்காக போராளிகளையும் போராட்டத்தில் தம்முடைய இன்னுயிரை ஈய்ந்தோரையும் பயன்படுத்திக் கொள்ளுதல் மிகத் தவறானதாகும். இந்த வியாபாரத்துக்கு மக்களும் இடமளிக்கக் கூடாது.’

மேலும்

மிலிந்த மொரகொடவும். 13 வது திருத்தமும்

‘13 வது திருத்தம் ஒன்றே இலங்கை அரசியலமைப்பில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் இருக்கும் சட்டரீதியான ஏற்பாடாகும். இந்தியாவின் படைபலத்துடன் கூடிய நேரடித்தலையீடு தான் அதைச் சாத்தியமாக்கியது என்பதை விளங்கிக் கொள்வதற்கு எவரும் அரசியல் விஞ்ஞானம் படிக்கவேண்டியதில்லை.

  உள்நாட்டுச் செயன்முறைகள் மூலமாக அதிகாரப் பகிர்வைச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட கடந்த கால முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெற முடியவில்லை என்ற வரலாற்று அனுபவம் எம் முன்னால் விரிந்து கிடக்கிறது.

என்றாவது ஒரு நாள் இலங்கை அரசாங்கம் ஒன்று 13வது திருத்தத்தை இல்லாமல் செய்தால் உள்நாட்டுச் செயன்முறையின் மூலமாக அத்தகைய ஒரு ஏற்பாட்டை மீண்டும் கொண்டுவரமுடியுமா? 

  அந்த திருத்தத்தின் பல்வேறு போதாமைகளுக்கு அப்பால் இந்த கேள்வி குறித்து தமிழ் அரசியல்வாதிகள் சிந்திப்பார்களா? அவர்கள் சிந்திக்காவிட்டாலும் தமிழ் மக்கள் சிந்திக்காமல் இருக்கமுடியாது.’

மேலும்

கனகர் கிராமம் (அங்கம்-18)  ‘அரங்கம் ‘ தொடர் நாவல்

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 18.

மேலும்

தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! (மௌன உடைவுகள்:68)

‘பழம்பெருமை பேசுகின்ற தமிழரசுக்கட்சி இருபத்தியோராம் ஆண்டின் சமகால அரசியலுக்கு பொருத்தமற்றது. அதனை முற்று முழுதாக இளைய தலைமுறை பொறுப்பு ஏற்று முழுமையான புனரமைப்பைச் செய்யவேண்டும். அது தனது இயலாமையை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பது மட்டுமன்றி கடந்த 50 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியதற்கும், யாழ்மையவாதத்தை முதன்மைப்படுத்தி கிழக்கு, மலையக, வன்னி மக்களுக்கான சம உரிமையை மறுத்து ஏமாற்றி போலி அரசியல் செய்ததற்காகவும் பொதுவாக ஒட்டுமொத்த தமிழ்மக்களிடமும் சிறப்பாக கிழக்குமாகாண மக்களிடமும் மன்னிப்புக் கோரவேண்டும்.‘

மேலும்

விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?

‘உண்மையில் இப்பொழுது தன்னுடைய மனச்சாட்சியின்படி தமிழரசுக் கட்சி அரசியல் அரங்கிலிருந்தே விலகுவதே தமிழ் மக்களுக்கும் இந்தக் காலத்துக்கும் செய்கின்ற பெரும்பணியாக இருக்கும்.
 
நல்லதைச் செய்ய முடியாது விட்டால் பரவாயில்லை. நல்லன நிகழ்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்காது விட்டாலே அது ஒரு பெரிய பணியும் பங்களிப்பும்தான். ஏனென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் புலிகள் உருவாக்கியளித்த கூட்டமைப்பு என்பதைக் கூட தமிழரசுக் கட்சியினால் தக்க வைக்க முடியவில்லை.’

மேலும்

தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 முதல் மாற்று அரசியல் அணி மேற்கிளம்ப வேண்டும்-பகுதி-4. (வாக்கு மூலம்-99)

‘இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி இலங்கை அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய சக்தி இந்தியாவே ஆகும். இந்தியாவை ஓரம் கட்டி விட்டு வேறு எந்தச் சர்வதேச நாடுகளோ அல்லது சக்திகளோ இதில் ஈடுபடப் போவதுமில்லை. மறுதலையாக இந்தியாவை ஓரம் கட்டும் எந்தச் செயற்பாடுகளும் வெற்றியளிக்கப்போவதுமில்லை. 
மேலும், இன்றைய இலங்கையின் தென்னிலங்கை – இந்து சமுத்திரப் பிராந்திய – பூகோள அரசியல் களநிலையில் உடனடியாக 13ஆவது திருத்தத்திற்கு மேல் இந்தியா நகரப் போவதுமில்லை.’ 

மேலும்

தோற்றதுத்தான் போவோமா ? தோற்றது சுமந்திரனா….? இல்லை…சாணக்கியனா….? (மௌன உடைவுகள்:67)

பலத்த போட்டிக்கும், சலசலப்புக்கும் மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி, இந்த முடிவின் எதிர்காலம் என்ன? அலசுகிறார் அழகு குணசீலன்.

மேலும்