உயிரின் கண்ணீர்த்துளி உலகின் இரத்தத் துளி

“1980 களின் முற்பகுதியில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் மொழிபெயர்த்த ‘பலஸ்தீனக் கவிதைகள்‘ தமிழ்ப்பரப்பில் உண்டாக்கியதையும் விடக் கூடிய கனத்தை, வலியை, வலிமையை இந்த மரித்தோர் பாடல்களில் காணலாம். இங்கே உள்ளவை ஒவ்வொன்றும் நம்முடைய உயிரில் அதிர்வை உண்டாக்குவன. அத்தனையும் சாட்சியமானவை.ஒவ்வொருவருடைய இறுதிக்கணச் சாட்சியங்கள். நிகழ் உண்மைகள். பலஸ்தீனக் கவிதைகள் அன்றைய நிலையில், போராட்டத்துக்கான பெரும் பங்களிப்பென்றால், இது இன்றைய சூழலில், மக்களின் மீதான அழிவுத் தாக்குதலில் பெரும் சான்றுத்துணையாகும்.”

மேலும்

‘மூன்றாவது கண் மற்றும் கரை தொடும் அலைகள்’

மட்டக்களப்பு மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய கவிஞர். இரா. மேரியனின் ‘மூன்றாவது கண்’, ‘கரை தொடும் அலைகள்’ எனுமிரு கவிதை நூல்களின் வெளியீடு 16.02.2025 அன்று மட்டக்களப்புத்தமிழ்ச் சங்க மண்டபத்தில் அதன் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘மூன்றாவது கண்’ நூல்பற்றி செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை.

மேலும்

எங்களுக்கும் காலம் வரும்!

விட்டில்களும் ஒருநாள் உயரப்பறக்கும். அப்படி பெண்களும் வீறுகொண்டு உயர்வர். உயர்ந்ததால் வீழ்ந்தாலும் அடக்குமுறை தீயை அணைப்போம் என்று அவர்கள் உறுதி கொள்கின்றனர். உலக பெண்கள் தினத்தை முன்னிட்ட செங்கதிரோனின் கவிதை.

மேலும்

 ‘கலைத் தேனீ’ அந்தனிஜீவா மலையக கலை இலக்கிய உலகின் ‘முதுசொம்’

“தனது முதுமையான வயதிலும்கூட தேனீபோல் பறந்துபறந்து பணியாற்றி எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, இலக்கிய ஆர்வலர்களைச் சந்திப்பதிலும் அவர்களுடன் எளிமையாகவும் அன்னியோன்னியமாகவும் அன்பாகவும் பழகுவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் அந்தனி ஜீவா காட்டும் ஆர்வம் பிரமிக்கவைப்பன.

  அதே வேளை அநீதி கண்டு கொதிக்கும்- மானுடத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் குணாம்சம் கொண்ட ஓர் இலக்கியப் போராளி அந்தனி ஜீவா.”

மேலும்

செங்கதிரோனின் “யாவும் கற்பனையல்ல”  சிறுகதைத் தொகுப்பு – ஒரு புதிய பரிமாணம்!

“இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவும், வழமையான சிறுகதைக்குரிய மரபு வழிவந்த வாய்ப்பாடுகளை மீறி அல்லது கட்டுடைத்து உருவம், உள்ளடக்கம், உத்தி என்பவற்றில் ஒரு வித்தியாசமான திசையைக் காட்டுவதன் மூலம் இந்நூலின் வரவு ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் புதிய பரிமாணமொன்றினை வெளிப்படுத்தியுள்ளது. ​​“

மேலும்

மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த  “சிலப்பதிகாரம்” !

“அறக்கருத்துகளின் அடிப்படையில் எழுந்த, சிலப்பதிகாரத்தின் கதை, சோழ நாட்டிலே தொடங்குகிறது. பாண்டிய நாட்டிலே உச்சம் பெறுகிறது, சேரநாட்டிலே நிறைவு பெறுகிறது.
இவ்வாறு, முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிகளோடும், பூம்புகார், வஞ்சி, மதுரை ஆகிய மூன்று நகரங்களோடும், பேரியாறு, காவிரி ஆறு,  வைகை ஆறு ஆகிய மூன்று பெரும் நதிகளோடும் தொடர்பு பட்டதாகவும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்குகின்ற ஒப்பற்ற செந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தை நாடகமாக்கி மேடையேற்றிய இந்தப் பாரிய முயற்சியில், அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களைச்  சேர்ந்த கலைஞர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள் என்பதை அறியும்போது, இது தற்செயலா அல்லது தமிழ் அன்னையின்அருட்செயலா என்று வியந்து, நினைந்து, மகிழ்ந்து நிற்கிறோம்.”

மேலும்

செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் – ஒர் இலக்கியத் தளம்

“எழுத்தாளரும்,கலை இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளருமான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் 13.12.2024 ஆகிய இன்று அகவை எழுபத்திநான்கைப் பூர்த்திசெய்து தனது எழுபத்தைந்தாவது அகவையுள் காலடி எடுத்துவைப்பதையொட்டி இக் கட்டுரை இடம்பெறுகிறது.”

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 49)

“கனகர் கிராமம்” தொடர் நாவலில் சூறாவளி அழிவுக்கு பின்னரான திட்டமிடல் ஏற்பாடுகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து பேசும் செங்கதிரோன், அதற்கு முன்னதாக மட்டக்களப்பை தாக்கிய சூறாவளிகள் பற்றியும் அவை குறித்து எழுந்த இலக்கிய வடிவங்கள் சில பற்றியும் குறிப்பிடுகிறார்.

மேலும்

உச்சி முகர்ந்து

மன்னாரைச் சேர்ந்த ஜெ. மதிவளனின் “உள்ளச்சிதறல்கள்” என்ற கவிதை நூலுக்கு கருணாகரன் எழுதிய முன்னுரை இது. நமது சூழலில் ஒரு கவிஞரின் வளர்ச்சிப்போக்கு எப்படி அமையும் அதில் தூண்டலை ஏற்படுத்துபவை எவை என்று விபரிக்கிறார்.

மேலும்