உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பு ஆடம்பர வாழ்க்கையை அன்றி மகிழ்ச்சியை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். இலாபத்தை உச்சப்படுத்தல் மூலம் இதை அடையமுடியாது. பொருளாதாரவளர்ச்சியும், மக்களின் திருப்தியும் நீண்ட காலமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கவில்லை. காலனித்துவ கால சுரண்டலும், வள அபகரிப்பும், மலிவான உழைப்பும் நேரடியாக இன்றைய காலநிலைப் பிரச்சினைக்கு காரணமானவை. நீர், மின்சாரம், போக்குவரத்துமுறை, வீட்டுத்தேவை, வர்தகமயப்படுத்தல் போன்ற என்னவெல்லாவற்றையும் நவகாலனித்துவத்தில் முதலாளித்துவம் முதன்மைப் படுத்துகின்றதோ அவை அனைத்தும் பெரும்பாலான மக்களை நிராகரிக்கின்றன.
- Home
- அறிவித்தல்கள்
- Page 2
Category: அறிவித்தல்கள்
சுமுகமான உறவுகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்ட மோடியும் திசாநாயக்கவும்
“இந்தியாவுக்கு விரோதமான கொள்கையுடன் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் தலைமையின் கீழான ஆட்சியில் இந்தியாவுடனான உறவுகள் மற்றைய கட்சிகளின் அண்மைய ஆட்சிக் காலங்களில் இருந்ததையும் விட மிகவும் சுமுகமானதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்ற ஒரு சுவாரஸ்யமான அரசியல் நிலைவரத்தைக் காண்கிறோம்.”
அநுர – மோடி பற்றிக் கொண்ட கரங்களுக்குப் பின்னால்…
“1980 களின் இறுதியில் இலங்கைத்தீவில் ஆயுதம் தாங்கிய இரண்டு அமைப்புகள் இந்தியாவைக் கடுமையாக எதிர்த்தன. ஒன்று ஜே.வி.பி. மற்றது விடுதலைப்புலிகள். ஜே.வி.பி தன்னை நெகிழ்த்தி, மாற்றியமைத்தது. அதனால் ஆட்சியைக் கைப்பற்றியது. இப்பொழுது அந்த ஆட்சியைத் திறம்பட நிகழ்த்திக் காட்ட முற்படுகிறது.
விடுதலைப்புலிகள் மாற்றத்தைப்பற்றிக் கவனத்திற் கொள்ளவில்லை. சூழலின் – காலத்தின் மாற்றத்தைப் பொருட்படுத்துவதில் தவறிழைத்தது. அதனால் அது களத்தில் இருந்து அகற்றப்பட்டது.”
பிள்ளையான் கைது: ஒன்றும் ஒன்றும் இரண்டா….? (வெளிச்சம் :050)
“இனப்படுகொலை அழிவுகளையும், இறுதியுத்த அழிவுகளையும் செய்த அரசபயங்கரவாத இராணுவ இயந்திரத்தை பாதுகாத்துக்கொண்டு என்.பி.பி.யினால் எவ்வாறு நீதியை நிலைநாட்ட முடியும். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.வி.பி.னால் கொல்லப்பட்ட 1300 பேரின் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதற்கு ஜே.வி.பி.யின் நீதி என்ன?”
வரி -வலி: பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்…..!(வெளிச்சம்: 049)
“கூட்டாளிகள் பொதுவாக ஒரே பண்பை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அப்போதுதான் ஒத்தோடமுடியும். அந்த கூட்டாளி அரசியலையே அநுரகுமார அரசாங்கமும் செய்கிறது. இது மாற்றத்திற்கான வழியல்ல. அமெரிக்க வரிவிதிப்பில் மட்டும் அல்ல ஒட்டு மொத்த இலங்கை பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கவும் இது அவசியம். இல்லையேல் நாடு மற்றொரு பொருளாதார மந்தத்தை சந்திப்பதது தவிர்க்க முடியாதது மட்டும் அன்றி , 2028 இல் கடன்களை மீளச்செலுத்தல் என்பதும் வெறும் கனவாகவே இருக்கும்.”
மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?
NPP அலை இன்னும் ஓயவில்லை. அதற்குள்தான் நாம் வெற்றியைப் பெற வேண்டியுள்ளது. அறுதிப் பெரும்பான்மையை யாரும் பெறப்போவதில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் தம்மை – தமிழரசுக் கட்சியை ஆதரிப்பார்கள் என்று தான் நம்புவதாக – எதிர்பார்ப்பதாக.
ஆனால், தமிழரசுக் கட்சி என்பது எப்போதோ காலாவதியாகிப்போன ஒன்று. அதற்கு உயிரூட்ட முயற்சிப்பது இறந்த உடலுக்கு saline ஏற்றுவதைப்போன்றதாகும். அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.
பிரித்தானிய தடை: துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….!(வெளிச்சம்:048.)
சர்வதேச மேலாதிக்க அரசியல் இதுவரை நாடுகள், அவற்றின் தலைவர்களுக்கு எல்லாம் ஐ.நா.வின், பெயரிலும், அமெரிக்க அணியின் பெயரிலும் விதித்த தடைகள் 20 வீதம் இலக்கை கூட எட்டவில்லை என்பது சர்வதேச நிபுணர்களின் கருத்து. போயும்… போயும்.. இலங்கையைச் சேர்ந்த நான்கு தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் அநுர அரசுக்கு மூக்கணாங்கயிறு குத்தவும், தென்னிலங்கை பேரினவாத சக்திகளை மேலும் வளர்த்து விடவுமே உதவும்.
‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உண்மை என்ன?
கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்காக இந்தத்தடவை பயன்படுத்தப்படும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் ஆரம்பம் என்ன? அது யாருக்குச் சொந்தம். கலாநிதி சு.சிவரெத்தினம் அவர்களின் ஆய்வு.
வரவுசெலவுத்திட்டம்: பொருளாதார அபிவிருத்தியும், அரசியல் தீர்வும்…!(பகுதி 2) -வெளிச்சம்:047
“அமெரிக்க, சீன, இந்திய உறவில் அரசு கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம் என்ற நெருக்கடியில் தண்ணீருக்கால் நெருப்பை கொண்டுபோகவேண்டியதாக அநுர ஆட்சியின் நிலை உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் 159 பேரைக்கொண்டிருந்தாலும் இந்த சவால்களை சமாளிக்க கூடிய பலமான ஒரு அரசாங்கமாக அது இல்லை.”
அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்?
‘ஜனாதாபதி திசாநாயக்கவிடம் ‘மெய்யான மாற்றம் ‘ ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய ‘புதிய தொடக்கம்’ ஒன்றையே மக்கள் எதிர்பார்த்தார்கள். நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில் வழமைக்கு மாறான தீவிர மாற்றத்தைச் செய்ததன் மூலமாக அந்த புதிய தொடக்கத்தை நோக்கிய திசையில் முதலாவது அடியை இலங்கை மக்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.
ஆனால், முறைமை மாற்றம் என்பதையும் புதிய கலாசாரம் என்பதையும் மக்கள் மாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் கூட எவ்வாறானதாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் சந்தேகம் எழக்கூடியதாக கடந்த ஆறு மாதகால அரசியல் மற்றும் ஆட்சிமுறை நிகழ்வுப் போக்குகள் அமைந்திருக்கின்றன. ‘