வரலாற்றின் எதிர்பார்ப்பு!

“ஆயுதப் போராட்டத்தின் மூலம் எட்ட முடியாத வாய்ப்பை, தேர்தல் மூலம் பெற்றுள்ளது ஆளுங்கட்சி. அதை அது சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்தி, வரலாற்றை உருவாக்க வேண்டும். அநுர குமார திசநாயக்க வரலாற்று நாயகர் என்றால், அவர் தடைகளைத் தாண்டவும் உடைக்கவும் வேண்டும். அரசியல் என்பது ஓயாத தடைதாண்டலும் ஓயாத முன்னேற்ற நடவடிக்கையும்தான். அதைச் செய்யாத தரப்புகள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்ளேயே செல்லும். அதைச் செய்யும் தரப்புகள் வரலாற்றின் மேற்படியில் ஏறிச் செல்லும். “

மேலும்

“கனகர் கிராமம்”. அரசியல் – சமூக – வரலாற்று நாவல். (அங்கம் – 59)

“கனகர் கிராமம்” தொடர் நாவலின் இந்தப்பகுதியில் அமைச்சர் கனகரட்ணம் அவர்களின் மரணம், இறுதி நிகழ்வுகள் ஆகியவை குறித்து செங்கதிரோன் நினைவு கூர்கிறார்.

மேலும்

எந்தப் பெறுமானமும்   இல்லாத தமிழரசு!

“கட்சியை வளர்த்துக் கொள்வதற்காக தன்னோடு இணைந்து நின்ற தரப்புகளையே உறிஞ்சித் தோற்கடிக்கத் தெரிந்த தமிழரசுக் கட்சிக்கு – கட்சியினருக்கு – எதிர்த்தரப்பாக அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கான தேவைகளையோ உரிமைகளையோ பெற முடியவில்லை. குறைந்த பட்சம் அரசாங்கத்துக்கு சிறிய அளவிலேனும் நெருக்கடியை உருவாக்க முடியவில்லை. பிராந்திய சக்தியாகிய இந்தியாவைத் தமிழருக்குச் சாதகமாக்கவில்லை. சர்வதேச சமூகத்தை வென்றெடுக்க முடியவில்லை. “

மேலும்

 ‘மாயமானின்’ பின்னே சென்று பற்றியதையும் பறிகொடுக்கத் தயாராகும் தமிழ் மக்கள்.(சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-32)

“புதிய அரசியலமைப்பின் மூலம் தற்போதுள்ள 13 ஆவது திருத்தம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுமானால் அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை தமிழர்கள் வெறுங்கையுடன்தான் நிற்கவேண்டிய நிலையேற்படும்.
 புதிய அரசியலமைப்பைத் தமிழர்கள் நம்பியிருப்பது இறுதியில் இலவு காத்த கிளியின் கதையாகவே முடியும்.
 புதிய அரசியலமைப்பு தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு ‘மாயமான்’. அதன் பின்னால் போவது ஆபத்தைத்தான் கொண்டுவரும்.”

மேலும்

தமிழ்த்தரப்பு யார்…? அருணின் கேள்விக்கு  என்ன பதில்!(வெளிச்சம்:035)

“தேசிய இனங்களை அங்கீகரிப்பதும், அவற்றின் அடையாளங்களை பேணுவதற்கான வசதி, வாய்ப்புக்களையும், உரிமைகளையும் வழங்குவது ஒரு இடதுசாரி (?) அரசாங்கத்தின் ஆகக்குறைந்த பட்ச கொள்கையாகவாவது அமையாவிட்டால் “இலங்கையர்” என்பது இல்லாத ஒன்றுக்கான கற்பிதம். அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட என்.பி.பி. எம்.பிக்கள்  சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக மனித உரிமைகளுக்காக போராடவேண்டும். இல்லையென்றால் இவர்கள் இலங்கையர்களாக இருந்து விட்டு போகட்டும் அது அவர்களின் உரிமை. ஆனால் இவர்கள் தமிழ்மக்களின்  அரசியல் பிரதிநிதிகளோ, தமிழ்த் தரப்போ இல்லை.”

மேலும்

இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்  புதுவருடத்தில் எவ்வாறு இருக்கும்?

“தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதில் அரசாங்கம் நீண்ட தாமதத்தை காட்டினால் அதை  மக்கள் அனுமதிக்கப் போவதில்லை. முன்னைய அரசாங்கங்கள் பொறுப்புக்கூறாமல் நடந்துகொண்டதன் விளைவுகளை  மக்களுக்கு இடையறாது சுட்டிக்காட்டிய வண்ணம் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி பொறுப்புக்கூறுவதில் அதற்கு இருக்கும் கடப்பாடு தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியிருக்கும்.”

மேலும்

செங்கதிரோனின் “யாவும் கற்பனையல்ல”  சிறுகதைத் தொகுப்பு – ஒரு புதிய பரிமாணம்!

“இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவும், வழமையான சிறுகதைக்குரிய மரபு வழிவந்த வாய்ப்பாடுகளை மீறி அல்லது கட்டுடைத்து உருவம், உள்ளடக்கம், உத்தி என்பவற்றில் ஒரு வித்தியாசமான திசையைக் காட்டுவதன் மூலம் இந்நூலின் வரவு ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் புதிய பரிமாணமொன்றினை வெளிப்படுத்தியுள்ளது. ​​“

மேலும்

மட்டக்களப்பில் எஸ்.பொன்னுத்துரையின் ‘முதல் முழக்கம்’                        நாடகமும் பின்னணிக் கதையாடல்களும் 

“இலங்கையின் தமிழ் நாடக வரலாறுகளை எழுதியோர் எஸ்.பொன்னுத்துரையின் நாடக அக்கறைகளையும் ‘முதல் முழக்கம்’ போன்ற நாடகத்தின் திணிவுகளையும் பேசாமல் இருட்டடிப்புச் செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் மீறி நாடகத்தின்மீதான எஸ்பொவின் ஊழியம் மேற்கிளம்பிவரும் காலம் அண்மித்துவிட்டது என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.”

மேலும்

வரலாற்றுச் சாபத்திற்கு ஆளாகாமல் இப்போதே அரசியற் செயல்பாடுகளை முன்னெடுக்கக் களமிறங்குங்கள் (சொல்லித்தான் ஆகவேண்டும்! – சொல்-31)

இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வில் இந்தியாவின் தலையீட்டை ஒரு காலகட்டத்தில் ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’ என வர்ணித்து, இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்து, இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் அதன் விளைவான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மூர்க்கமாக எதிர்த்த ஜே.வி.பி யைப் பிரதான-தலைமைக் கட்சியாகக்கொண்ட தேசிய மக்கள் சக்தி (என் பி பி) அரசாங்கத்தின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்-தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அரசியல் ரீதியாக உணர்ந்துகொண்டு இலங்கைக்கு நன்மையளிக்கும் வகையில் இராஜதந்திரரீதியாக நடந்துகொள்கிறாரென்றால், இலங்கைத் தமிழர்கள் அதனைவிடவும் அதிகமாக இந்தியாவை அனுசரித்துப் போவதே அரசியல் மதியூகம் நிறைந்தது என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை

மேலும்

தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!(வெளிச்சம்:034)

“எம்.ஏ. சுமந்திரனின் அதே அரசியல் குணாம்சங்களை கொண்ட  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தமிழரசுகட்சிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இவரின் சிறிதரன், செல்வம் ஊடான நகர்வு நிச்சயமாக சுமந்திரனுக்கு எதிரானது என்பது வெளிச்சம்.  இது தமிழரசுக்கட்சியின் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?”

மேலும்

1 31 32 33 34 35 137