இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான கலுபகே ஒஸ்ரின் பெர்னாண்டோ அவர்கள், ஜனாதிபதியின் செயலர், பாதுகாப்புச் செயலர், கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் பல நாடுகளுக்கான தூதுவராக பணியாற்றியவர். இலங்கையின் அரச நிர்வாகம் குறித்த பரந்த அறிவும், அனுபவமும் உள்ள அவர் இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகள் குறித்த வரலாற்றை நன்கு அறிந்தவர். இங்கு 13வது திருத்தம் இலங்கையில் சந்தித்த சவால்களை அவர் ஆராய்கிறார். தமிழில் வி. சிவலிங்கம்.
Category: அரசியல்
இணக்க அரசியலில் இருக்கின்ற இடக்கும் முடக்கும்! (காலக்கண்ணாடி 34)
தமிழ் தேசியம் பேசும் கட்சிகளின் உறுப்பினர்களில் சிலர் இணக்க அரசியல் குறித்துப் பேசுவதை எச்சரிக்கை உணர்வுடன் வரவேற்றுள்ள அழகு குணசீலன், இணக்க அரசியலை முன்னெடுக்க ஏதுவான ஒரு சக்தியாக புதிதாகத் தோன்றியுள்ள “அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தை” சமாந்தரமாக வரவேற்கிறார். தமிழர் பிரச்சினைக்கான தீர்வின் தூரம் அதிகம்தான் என்றாலும் அது அடையப்பட இணக்க அரசியல் உதவலாம் என்கிறார் அவர்.
தமிழர் போராட்டத்தை ஏன் சீனா, ரஷ்யா, கியூபா ஆதரிப்பதில்லை? (சொல்லத் துணிந்தேன்—68)
இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழ் இனத்தின் போராட்டத்துக்கு அமெரிக்க போன்ற முதலாளித்துவ நாடுகள் ஆதரவு தந்தாலும் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற கம்யூனிஸ நாடுகள் கண்டுகொள்வதில்லை என்ற கருத்தை ஆராய்கிறார் கோபாலகிருஸ்ணன்.
என் வழி தனி வழி — (03) (சரியென்றால் ஏற்று, பிழையென்றால் எதிர்க்கும் அரசியல் அவசியம்)
அரச எதிர்ப்பு, அரச ஆதரவு அரசியல் இங்கு தமிழர் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், சரியானதை ஏற்று, பிழையானதை எதிர்க்கும் அரசியலை முன்னெடுத்து அதனூடாக ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
‘மழுப்பவேண்டாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்!’ – (காலக்கண்ணாடி – 33)
சமகால அரசியல் சந்திப்புக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தியபோது, அங்கு இளைஞர்கள் கேட்ட கேள்விகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்குக்கும், இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கும் இடையில் உள்ள இடைவெளியை வெளிப்படுத்தியதாக கூறுகிறார் அழகு குணசீலன். தமிழ் இளைஞர்களை ஏமாற்ற வேண்டாம் என்று வாதிடுகிறார் அவர்.
தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போகுமா?
நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் பல வாக்குறுதிகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மாகாண சபைத்தேர்தல் குறித்த பேச்சுக்களும் எழுந்துள்ளன. இங்கு கிடப்பில் போடப்பட்ட அந்த வாக்குறுதிகள் சில குறித்து ஞாபகமூட்டும் எழுவான் வேலன், மக்களுக்காக பேசுகின்றார்.
சொல்லத் துணிந்தேன் – 67
விடுதலைப்புலிகளின் வேட்டும், தமிழரசுக்கட்சியின் வோட்டுமே தமிழ் தேசிய அரசியலை குழப்பியதாக கூறும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்தச் சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கு, நிலைமையை மேலும் குழப்பாமல், 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த முனைவதே வழி என்கிறார்.
அதிகாரத்தின் குரூர கரங்களுடன் உணரவேண்டிய அரிதாரத்தின் அரூப கரங்கள்!
அண்மைக்காலமாக, குறிப்பாக ஜெனிவா மாநாட்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை தமிழர் விவகாரத்தை இலங்கை அரசாங்கம் கையாழும் விதம் குறித்து விசனம் வெளியிடுகிறார் தெய்வீகன். அதனைப்புரிந்தும் இலங்கை தமிழர் தரப்பு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது அவரது கவலை.
இருக்கும் அரசியல் யாப்பின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான முயற்சி
இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர் அ. வரதராஜ பெருமாள். ஸ்தம்பித நிலையை அடைந்துள்ள இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஓரளவாவது தீர்வு என்பது அதிகாரப் பகிர்வின் மூலமே சாத்தியம் என்கிறார் அவர். ‘எதிர்பார்க்கிற அளவுதூரம் போகாவிட்டாலும் பாதகமொன்றில்லை. உருப்படியான அதிகாரப் பகிர்வு நிகழ்ந்து ஆற்றல் மிக்க ஒரு மாகாண சபை ஏற்பட்டு அது காத்திரமாக செயற்படுமானால் அதுவே இலங்கையின் ஒட்டு மொத்த தேசிய அரசியல் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளமாகும்’ என்கிறார் அவர்.
வாகரைப் படுகொலை விரைவு படுத்திய புலிகளின் அரசியல் தற்கொலை! (காலக்கண்ணாடி – 32)
அநேகமான இடங்களில் விடுதலைப்போராட்ட இயக்கங்கள் ஆயினும், அவை அறம் தவறும் போது, தமக்கான புதை குழிகளையும் தாமே தோண்டிக்கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. இது விடுதலைப்புலிகளுக்குள் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவு பற்றிய அழகு குணசீலனின் கருத்துகள்.
