கொழும்பில் அமையவுள்ள போர்ட்சிட்டியின் பொருளாதார அனுகூலங்கள் நேரடியாக மாத்திரமன்றி மறைமுகமாகவும் இலங்கைப் பொருளாதாரத்துக்கு உதவும் வாய்ப்பு உள்ளது என்று வாதிடுகிறார் அழகு குணசீலன். தனது வாத்துக்கான சில ஆதாரங்களையும் அவர் கடந்த கால நிலைமைகளில் இருந்து காண்பிக்க முனைகிறார்.
Category: அரசியல்
இலங்கை: மத நம்பிக்கையாளரும் விடுதலைச் சிந்தனையாளரும்
இலங்கையை பொறுத்தவரை மத நம்பிக்கை கொண்டவர்களும், மதத் தலைவர்களும், விடுதலை விரும்பியாக தம்மை காண்பித்துக்கொள்வோரும் ஜனநாயகத்தை நிராகரிப்பவர்களாகவே செயற்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார் செய்தியாளர் கருணாகரன். இதுவே பெரும்பாலும் ஏனைய தெற்காசிய சமூகங்களைப் போல் இலங்கையை படு பாதாளத்தில் தள்ளுவதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார்.
தமிழரின் இந்தியா குறித்த அணுகுமுறை – தொடரும் தவறுகள் (சொல்லத் துணிந்தேன்-75)
கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர் தரப்பு இந்தியாவை அணுகிய முறைகளை கடுமையாக விமர்சிக்கிறார் இந்த பத்தியின் ஆசிரியர் கோபாலகிருஸ்ணன். இன்றும் கூட தமிழர் தரப்பு சில “மாயமான்களை” நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறதே ஒழிய இந்த விடயத்தில் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பது அவரது கவலை.
இலங்கையின் தேவை போரைவிட இலகுவானது, பாதுகாப்பானது
பன்முகத்தன்மை நிராகரிக்கப்படுவதும் சமாதான முனைப்பு இல்லாமல் இருப்பதுமே இலங்கையின் முக்கிய பிரச்சினைகள் என்று வாதிடும் செய்தியாளர் கருணாகரன், அவற்றின் மீது ஒட்டுமொத்த சமூகத்துக்கே அக்கறை இல்லை என்கிறார். ஆனால், அவற்றுக்கான பாதை போரைவிடப் பாதுகாப்பானது, இலகுவானது என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
வாழைச்சேனை ..! மற்றொரு கல்முனையா…..? (வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி…) – காலக்கண்ணாடி -40
வாழைச்சேனை பிரதேச சபையில் அண்மையில் நடந்த சில நிகழ்வுகள் அங்கு தமிழ் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வாதிடுகிறார் அழகு குணசீலன். மக்களுக்கான இரு வளர்ச்சித்திட்டங்கள் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் தடுக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? – (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள் முரண்பாடுகள்)
தமிழ் அரசியலின் உள் முரண்பாடுகள் குறித்து கடந்த வாரம் முதல் பேசிவரும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், இந்தப் பகுதியில் கிழக்கு தமிழர்கள் நிலை குறித்துப் பேசுகின்றார். குறிப்பாக கிழக்கில் அரசியல் போக்கு குறித்து பேசும் அவர், அங்கு பிரச்சினை பிரதேசவாதமா அல்லது ஜனநாயகப் பற்றாக்குறையா என்று கேள்வி எழுப்புகிறார்.
இலங்கையை அழிவுப்பாதயில் கொண்டு செல்லும் சக்தி?
இலங்கையில் சமாதானச் சிந்தனை மற்றும் அதனை நோக்கி நகர்வதற்கான எத்தனம் என்பவை எந்தத் தரப்பிடமும் கிடையாது என்று விசனம் தெரிவிக்கிறார் செய்தியாளர் கருணாகரன். அனைத்து இன மக்களும் அழிவுப்பாதையில் இருந்து விலகுவதற்கான முனைப்பைக் காண்பிக்கவில்லை என்பது அவர் கவலை.
வன்முறைகள், ஊடுருவல்கள், ஆலய அழிப்புகள் மூலம் ஒடுக்கப்பட்ட கல்முனைத் தமிழர்: (சொல்லத் துணிந்தேன்-74)
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து எழுதிவருகின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், கல்முனையில் வன்முறைகள், ஊடுருவல், நிலப்பறிப்புகள், ஆலய அழிப்புகள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்ட சம்பவங்களை ஆதாரம் காட்டி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான நியாயத்தை முன்வைக்கிறார்.
கொவிட் : இழக்கப்போவது யார்?
இலங்கையில் கொவிட் 19 இன் அடுத்தடுத்த அலைகள் மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை போதாது என்ற கவலை அதிகரித்து வருகின்றது. அவை குறித்து ஆராய்கிறார் இந்த பத்தியின் ஆசிரியர்.
சீன, இந்திய, அமெரிக்க தலையீடுகள்: நம் தலையில் நாம் போட்ட மண்
சீனாவின் வருகை பற்றி பேசும் கருணாகரன், இதற்கு முன்னதாக இலங்கைக்கு உதவ வந்த நாடுகள் பற்றி விபரிக்கிறார். இவற்றின் விளைவுகளையும் அதனை இலங்கை கையாண்டதையும் விளக்கும் அவர், நமக்குள் நாம் வளங்களை பகிர மறுத்ததன் விளைவுகளே இவை என்கிறார்.
