புன்சிரிப்பு மாறா பாரதி..
இலங்கையின் பத்திரிகை உலகில் கணிசமாக அறியப்பட்ட பத்திரிகையாளர் பாரதி அண்மையில் காலமானார். இனிய சகாவாக, மனம்விட்டுப் பேசக்கூடிய நண்பனாக எனக்கிருந்த பாரதியின் மறைவு என்னையும் தனிப்பட்ட வகையில் பாதித்த ஒன்று. அவருக்கு அரங்கத்தின் சார்பிலும் மனமார்ந்த அஞ்சலி. இது பாரதியின் மறைவு குறித்த செய்தியாளர் கருணாகரனின் அஞ்சலிக் குறிப்பு
அன்புடன்
சீவகன்
புதிய அரசியலமைப்பு : இப்போதைக்கு இல்லையா? எப்போதுமே இல்லையா….? (வெளிச்சம்:043)
“போகிற போக்கில் மக்கள் வாக்கெடுப்புடன் கூடிய புதிய அரசியல் அமைப்பு என்பது இப்போது மட்டும் அல்ல எப்போதும் சாத்தியமில்லை என்ற சந்தேகமே சிறுபான்மை தேசிய இனங்கள் மத்தியில் வலுக்கிறது.”
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான படிப்பினைகள்
“வழமையாக அரசியல் தலைவர்களின் இறுதிச் சடங்குகள் பிளவுபட்டு நிற்கும் அவர்களின் கட்சிகளின் அணிகள் வேறுபாடுகளை மறந்து ஐக்கியப்பட்டுச் செயற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதே இயல்பாகும். ஆனால், ஒரு அரசியல் தலைவரின் இறுதிச்சடங்கு எவ்வாறு நடத்தப்படக்கூடாது என்பதற்கு கடந்த வாரம் மாவிட்டபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் உதாரணமாக அமைந்து விட்டது கவலைக் குரியதாகும்.”
தலைவர்களை இழந்த தமிழ்த்தேசிய அரசியல்!
“எப்போதும் மக்கள் அரசியலில் செயற்பட்டால் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இயங்கக் கூடிய ஒரு வெளியும் அரங்கும் அழியாது இருக்கும். அதுவே அரசியற் பலமாகும். தமிழ்த்தேசியத் தலைமையை உருவாக்க வேண்டுமெனில் இந்த உண்மையிலிருந்து படித்தால் நல்லது. அதாவது தேர்தலுக்கு அப்பாலும் அரசியல் உண்டு. அரசியற் பணிகள் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.”
அகிம்சாவின் குரல் அநுரவின் காதில் விழுகிறதா…..? (வெளிச்சம்: 042)
“வழக்கின் மூன்று முக்கிய கொலை சந்தேகநபர்களை விடுதலைசெய்ய சட்டமா அதிபர் திணைக்களம் சிபார்சு செய்திருப்பது அநுர ஆட்சியிலும் நீதியின் அர்த்தம் அதற்கு முன் “அ” கரத்தை போடுவதுதானா? என்ற கேள்வியை எழுப்புகிறது.”
யாழ்ப்பாணம்: பிழையான கேள்வியும் சரியான பதிலும்….! (வெளிச்சம்: 041)
“ஒன்றுக்கு ஒன்று முன்னுக்கு பின் முரணான கேள்விகளையும், பதில்களையும் வழங்கி “பராக்கு காட்டும்” அரசியலை செய்கிறது என்.பி.பி. இதில் இருந்து வடக்கு கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் சில விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை கவனத்தில் எடுத்து வடக்கு, கிழக்கு மற்றைய மாவட்டங்களில் மக்களும், சிவில் அமைப்புக்களும், அதிகாரிகளும் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புக்களில் அவரின் அரசியல் தேவைக்கு பதிலளிப்பதை தவிர்த்து அந்தந்ந மாவட்டங்களின் மக்களின், சமூக பொருளாதார அரசியல் தேவைகளை முதன்மை படுத்தி கேள்வி எழுப்ப வேண்டும். ஜனாதிபதியை பதிலளிக்க தூண்ட வேண்டும்.”
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின் இடம்
“மகிந்தவின் விசுவாசிகள் போர் வெற்றிக்காக அவர் வரலாற்றில் நினைவு கூரப்படவேண்டியவர் என்று கொண்டாடலாம். மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் தேசியவாத சக்திகளின் நம்பிக்கைக்குரியவராக அவர் விளங்கக்கூடும். ஆனால் அவர் தவறான ஆட்சிமுறையின் ஒரு சின்னமாகவே நினைவு கூரப்படுவார் என்பதே உண்மை.”
தமிழர் அரசியலிலும் ஒரு ‘முறைமை மாற்றம்’ தேவை.(சொல்லித்தான் ஆகவேண்டும்! -சொல்-34)
‘அரசியல் வியாபாரக்கூடையில் காலாவதியாகிப்போன பட்சணங்கள். புதிய ‘மொறு மொறு பலகாரங்களை’ச் சுட்டிறக்கப்போவதாகச் ‘சோக்’ க்காட்டும் ‘போலி’த் தமிழ்த் தேசியக் கட்சிகள்.’
அதிகாரிகளும் தமிழ் தலைவர்களும் மடங்கினர்!
‘தமிழ் அரசியற் தரப்பினர் உங்களை (மக்களை) ஏமாற்றுகின்றனர். உங்களுக்குரிய தேவைகளைப் பற்றியோ, உங்களுடைய பிரச்சினைகளைப் பற்றியோ இவர்கள் சரியாக – சீரியஸாகச் சிந்திப்பதேயில்லை. சும்மா படங்காட்டுவதற்காக வாயடிப்பதுதான் இவர்களுடைய வேலை. இல்லையென்றால், அரசாங்கம் ஒதுக்கும் நிதியைக் கூட ஒழுங்காகச் செலவழிக்க முடியாமலிருப்பதைப் பற்றி இவர்கள் அக்கறையில்லாமல் இருந்திருப்பார்களா? பாருங்கள், அதைக் கூட அங்கிருந்து (தெற்கிலேயிருந்து) நாம் வந்துதான் பேசவேண்டியுள்ளது,’
மாவையும் மட்டக்களப்பும்…..(வெளிச்சம்: 040)
தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் மாவை எப்போதும் பதிவு செய்யப்படவேண்டிய ஒருவர். ஆகக்குறைந்தது இந்த கொடூரமான தமிழ்த்தேசிய அரசியல் சூழலிலும் ஒப்பீட்டளவில் மாவையை ஒரு மானிட நேயம் கொண்டவராக அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால் மட்டக்களப்பு அடையாளம் காணமுடியும்.