அகிம்சாவின் குரல் அநுரவின் காதில் விழுகிறதா…..? (வெளிச்சம்: 042)
“வழக்கின் மூன்று முக்கிய கொலை சந்தேகநபர்களை விடுதலைசெய்ய சட்டமா அதிபர் திணைக்களம் சிபார்சு செய்திருப்பது அநுர ஆட்சியிலும் நீதியின் அர்த்தம் அதற்கு முன் “அ” கரத்தை போடுவதுதானா? என்ற கேள்வியை எழுப்புகிறது.”
யாழ்ப்பாணம்: பிழையான கேள்வியும் சரியான பதிலும்….! (வெளிச்சம்: 041)
“ஒன்றுக்கு ஒன்று முன்னுக்கு பின் முரணான கேள்விகளையும், பதில்களையும் வழங்கி “பராக்கு காட்டும்” அரசியலை செய்கிறது என்.பி.பி. இதில் இருந்து வடக்கு கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் சில விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை கவனத்தில் எடுத்து வடக்கு, கிழக்கு மற்றைய மாவட்டங்களில் மக்களும், சிவில் அமைப்புக்களும், அதிகாரிகளும் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புக்களில் அவரின் அரசியல் தேவைக்கு பதிலளிப்பதை தவிர்த்து அந்தந்ந மாவட்டங்களின் மக்களின், சமூக பொருளாதார அரசியல் தேவைகளை முதன்மை படுத்தி கேள்வி எழுப்ப வேண்டும். ஜனாதிபதியை பதிலளிக்க தூண்ட வேண்டும்.”
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின் இடம்
“மகிந்தவின் விசுவாசிகள் போர் வெற்றிக்காக அவர் வரலாற்றில் நினைவு கூரப்படவேண்டியவர் என்று கொண்டாடலாம். மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் தேசியவாத சக்திகளின் நம்பிக்கைக்குரியவராக அவர் விளங்கக்கூடும். ஆனால் அவர் தவறான ஆட்சிமுறையின் ஒரு சின்னமாகவே நினைவு கூரப்படுவார் என்பதே உண்மை.”
தமிழர் அரசியலிலும் ஒரு ‘முறைமை மாற்றம்’ தேவை.(சொல்லித்தான் ஆகவேண்டும்! -சொல்-34)
‘அரசியல் வியாபாரக்கூடையில் காலாவதியாகிப்போன பட்சணங்கள். புதிய ‘மொறு மொறு பலகாரங்களை’ச் சுட்டிறக்கப்போவதாகச் ‘சோக்’ க்காட்டும் ‘போலி’த் தமிழ்த் தேசியக் கட்சிகள்.’
அதிகாரிகளும் தமிழ் தலைவர்களும் மடங்கினர்!
‘தமிழ் அரசியற் தரப்பினர் உங்களை (மக்களை) ஏமாற்றுகின்றனர். உங்களுக்குரிய தேவைகளைப் பற்றியோ, உங்களுடைய பிரச்சினைகளைப் பற்றியோ இவர்கள் சரியாக – சீரியஸாகச் சிந்திப்பதேயில்லை. சும்மா படங்காட்டுவதற்காக வாயடிப்பதுதான் இவர்களுடைய வேலை. இல்லையென்றால், அரசாங்கம் ஒதுக்கும் நிதியைக் கூட ஒழுங்காகச் செலவழிக்க முடியாமலிருப்பதைப் பற்றி இவர்கள் அக்கறையில்லாமல் இருந்திருப்பார்களா? பாருங்கள், அதைக் கூட அங்கிருந்து (தெற்கிலேயிருந்து) நாம் வந்துதான் பேசவேண்டியுள்ளது,’
மாவையும் மட்டக்களப்பும்…..(வெளிச்சம்: 040)
தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் மாவை எப்போதும் பதிவு செய்யப்படவேண்டிய ஒருவர். ஆகக்குறைந்தது இந்த கொடூரமான தமிழ்த்தேசிய அரசியல் சூழலிலும் ஒப்பீட்டளவில் மாவையை ஒரு மானிட நேயம் கொண்டவராக அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால் மட்டக்களப்பு அடையாளம் காணமுடியும்.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 61)
“கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்தின் விரிவாக்கத்துக்கு உழைத்த கோகுலன், வவுனியாவின் பாவற்குளம் பகுதிக்கு மாற்றலாகிய கதையை விபரிக்கிறது “கனகர் கிராமம்” தொடர் நாவலின் இந்தப்பகுதி.”
தமிழ் அரசியலில் 13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்..? (பகுதி 3)
“இலங்கை அரசியலில் தோற்றம் பெறும் அடிப்படை மாற்றங்களும், சர்வதேச அரசியல் மாற்றங்களும் புதிய அணுகுமுறைகளை வேண்டி நிற்கின்றன. தமிழ் மக்கள் அடிப்படை அரசியல் உரிமைகளுக்கான வழிமுறைகளை புதிய வழிகளில் படிப்படியான மிகவும் விட்டுக் கொடுக்காத, சாத்தியமான கொள்கைகளை நோக்கிச் செயற்பட வேண்டும். அதேவேளை ஒரே நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் தேசிய பொருளாதார வளர்ச்சிக் கட்டுமானத் திட்டமிடுதலில் தமக்கான பங்கைச் செலுத்தும் புதிய அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை யாவற்றிற்கும் சமாதான சகவாழ்வே அடிநாதமாக அமைதல் அவசியம். “
தமிழ் அரசியலில் 13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்..? (பகுதி 2)
“பிரதான அரசியல் கட்சிகள் மிகவும் வெளிப்படையாகவே மாற்றத்தை நோக்கிச் செல்லும்போது தமிழ் அரசியல் ஒரு வகை இறுக்கமான போக்கை நோக்கி ஏன் செல்கிறது? தமிழ் அரசியலில் பிரிவினைவாத அரசியல் என்பது அதன் உட் பொறிமுறைகளில் ஆதிக்கம் செலுத்துவதால் இக் கட்சிகளால் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்த முடியாது. பதிலாக இப் பிரிவினரின் அரசியல் என்பது இவற்றிற்கு எதிராக செயற்படும் சிங்கள பௌத்த இனவாத சக்திகளுக்கே மறைமுகமாக உதவுவதை மிகவும் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது.”
தமிழ் அரசியலில்13வது திருத்தமும், அதற்கு அப்பாலும் …..?(பகுதி 1)
“கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள பௌத்த இனவாதம் எவ்வாறு சிங்கள மக்களின் வாக்குகளைக் கொள்ளை அடித்து அதிகாரத்தை ஜனநாயக விரோத நிலைக்குத் தள்ளி அதனால் ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்தின் பின்னணிகளைப் புரிந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்களோ, அதே போலவே தமிழ்க் குறும் தேசியவாதத்தை முன்வைத்து தமிழ் மக்களில் பெரும்பகுதி மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்த நிலையை சிங்கள மக்கள் உணர்ந்தது போலவே தமிழ் மக்களில் பெரும்பான்மை பிரிவினரும் சரியான தருணத்தில் விழித்துக் கொண்டார்கள்.”