ஒரு போர்க்குரல்: தமிழ்ச்செல்வனின் எழுத்துகள்

சமரசம் செய்துகொள்ளாது ஊடகவியல் துறையில் இயங்கும் ஒருசிலரில் தமிழ்ச்செல்வனும் ஒருவராக பார்க்கப்படுகிறார். அவர் சார்ந்த சூழலும் அதன் தேவையும் அவரை ஒரு போராட்டக்காரராக முன்னிறுத்தியுள்ளன. அவரது “நஞ்சாகும் நிலம்” என்ற சூழலியல் நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை இது.

மேலும்

சீனக்கப்பல்கள் விவகாரம்;  நெருக்குதல்களை தற்போதைக்கு தவிர்க்க இலங்கை சாதுரியமான தீர்மானம்

“சீன ஆய்வுக்கப்பல்களின் வருகையை தற்போதைக்கு தவிர்க்க இலங்கை சாதுரியமான முன்னெடுப்பை செய்துள்ளது. அதேவேளை பரந்த இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமக்கும் உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்ட சீனாவும் பெரும் பிரயத்தனங்களை செய்கிறது.”

மேலும்

“கனகர்கிராமம்” (அங்கம் – 13) ‘அரங்கம்’ தொடர் நாவல்  

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 13.

மேலும்

பாலன் பிறக்காத பாலஸ்தீனம்…! இது நத்தாரா பெரிய வெள்ளியா? (மௌன உடைவுகள் -62)

“பாலஸ்தீன சிறார்கள் கொல்லப்படும் நாளை பாலன் பிறந்தநாளாக கொண்டாடுவது எப்படி” என்று கேள்வி எழுப்புகிறார் ஒரு பாலஸ்தீன கிறிஸ்தவ தாய். நத்தார் பாலஸ்தீனர்களுக்கு சமாதானத்திற்கான கிறிஸ்துமஸ் அல்ல .உலகம் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பாலஸ்தீன மக்கள் சிலுவையில் அறையப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இதனால் இன்றைய நத்தார் பாலஸ்தீனர்களுக்கு”பெரிய வெள்ளி “.

மேலும்

புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும்

இலங்கையில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசு பரீட்சையை முன்வைத்து மாணவர்களுக்கு முதலாம் வகுப்பிலேயே லஞ்சம் கொடுப்பது அறிமுகப்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டும் பத்தியாளர், மாணவர்களின் மனித உரிமையும் மீறப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

தமிழரசின் தலைமைத் தேடல்..!  காற்றுவளம் யாருக்கு..?  (மௌன உடைவுகள் -61)

‘தலைமைக்கான வேட்பாளர்கள் அனைவரும்  தமிழரசின் அரசியல் அடைவை கதிரைக்கணக்கால் மதிப்பிடுகின்றனர்.  இது  செயற்பாட்டு  அரசியல் அற்ற, மக்களை வெறும் தேர்தல் வெற்றிக்கான  வாக்காளர்களாக வழிநடத்தும் அரசியலாக தொடரப்போகிறது.’

மேலும்

இமாலயப் பிரகடனம்-எடுப்பார் கைப்பிள்ளையாக இலங்கைத் தமிழர் பிரச்சினை படும்பாடு (வாக்குமூலம்-93)

உலகத்தமிழர் பேரவை என்னும் அமைப்பின் அண்மைய நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுப்பும் கோபாலகிருஸ்ணன், புதிதாக அரசியலமைப்பை பிரேரித்து இழுத்தடிக்காமல் ஏற்கனவே இருக்கும் 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை தேவை என்கிறார்.

மேலும்

உதவி விரிவுரையாளர் நியமனங்கள் உண்மையான மாற்றமா?

அண்மையில் மலையக பட்டதாரிகளுக்கு உதவி விரிவுரையாளர் நியமனங்கள் வழங்கப்பட்டதாக வந்த தகவல்களின் பின்னணி என்ன? ஆராய்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

ஜேவிபியின் தேசிய விடுதலை இயக்கமும் இனப்பிரச்சினையும்

இலங்கையில் ஒரு தேசிய விடுதலைக்காக போராடப்போவதாக கூறும் ஜேவிபியிடம் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்வுக்கு பாதகமான கருத்தே இருப்பதாகக் கூறும் கட்டுரையாளர், ஏனைய விடயங்களில் தம்மை மாற்றிக்கொண்ட அந்த அமைப்பு தமிழர் பிரச்சினையில் சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதிக்கத்தயாராக இல்லை என்கிறார்.

மேலும்

செ. யோ : எல்லாக் கரைகளையும் தழுவியோடும் நதி

அண்மையில் காலமான பேராசிரியர் செ. யோகராசா பன்முகத்திறன் கொண்ட ஒரு ஆளுமை. பழக்கத்தில் மென்மையானவர் கொள்கையில் ஆழமானவர். சில திட்டங்களில் அரங்கத்தோடு இணைந்து பணியாற்றியவர். அன்பு நெஞ்சினர். வடக்கு, கிழக்கு, மலையகம் வாழ் அனைத்து தமிழ் பேசும் உறவுகளால் இன, மத பேதம் கடந்து விரும்பப்பட்டவர். அவர் பற்றி அரங்கத்துக்காக செய்தியாளர் கருணாகரன் எழுதிய அஞ்சலிக்குறிப்பு இது.

மேலும்

1 33 34 35 36 37 152