மட்டக்களப்பின் படுவான்கரை வாழ்க்கை பல சங்கடங்களைத் தாண்டியது. ஊருக்கு உணவு படைக்கும் அந்த மக்களுக்கு தமது சொந்த வாழ்க்கை எல்லா நாட்களிலும் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. சமூக, பொருளாதார பாதிப்புகளே அவற்றுக்கு காரணம். ஆனால், நாளை விடியும் என்ற அவர்களது நம்பிக்கையும், உழைப்பும் குறைவதில்லை. இது ஒரு பெண்ணின் கதை. படுவான் பாலகன் எழுதியது.
Category: சிறுகதைகள்
சகோதரத்துவம் (சிறுகதை)
இலங்கையில், குறிப்பாக கிழக்கில் சமூகங்களுக்கிடையிலான உறவுகள் கற்பனை பண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு குலைந்து போயிருக்கின்றன. ஆனால், இப்படியும் அந்தச் சமூகங்களுக்கு இடையில் நெருக்கமான ஒரு உறவு இருந்ததா என்று இன்றைய தலைமுறை கேட்கும் அளவுக்கு உன்னதமான உறவும் அங்கு மிக அண்மைவரை இருந்திருக்கிறது. அப்படியான ஒரு உன்னத உறவு சங்கடத்துக்கு உள்ளான தருணம் இது. செங்கதிரோனின் சிறுகதை.
உலக இயக்கம் (சிறுகதை)
உலக அழிவுகள், ஊரில் நடந்தவை அனைத்தையும் கடந்து உலகில் மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், இது வேறு மாதிரியான மனிதம். மனித மனம். அகரன் எழுதிய தஞ்சம் மறுக்கப்பட்ட ஒரு அகதியின் கதை இது..
இறுதி நொடி! இறுதி வெடி!
இப்படி ஒரு முடிவு எதிரிக்கும் வரக்கூடாது. ஆனால், பலருக்கு நமது மண்ணில் அது முடிந்தது. பூமியில் அமைதி மலர வேண்டும் என்பது அனைவரின் நோக்கமாக இருக்கட்டும். புத்தம் புதிய பூமி எமக்கு வேண்டும். அகரனின் மனதில் நின்றுபோன சில எஞ்சிய உணர்வுகள், ஒரு புனைவாக…
மேன்முறையீடு (சிறுகதை)
வரைபடத்தில் இலகுவில் தெரியாத ஒரு நாட்டில் இருந்துவந்து தஞ்சம் கோருவது ஒரு கொடுமைதான். அதிலும், அடுத்தவர் பற்றிய அக்கறையே இல்லாமல் இயங்கும் அதிகாரிகள் முன்பாக படும் அவஸ்தை இருக்கிறதே, அது ஒரு அவமானம். ஒரு இலங்கை அகதியின் மேன்முறையீட்டு அனுபவம் இது. நடந்தது பிரான்ஸில். அகரனின் சிறுகதை.
துரோகி(சிறுகதை)
உள்ளங்கள் பலவிதம். அவற்றில் சில இவ்விதம். இன, மதவாதம் எவ்வளவு படித்தாலும் மாறுவதில்லை. இங்கு இவர்களின் கல்வி விழலுக்கு இறைத்த நீர். இதுவும் ஒரு முற்றிலும் பொய்யல்லாத ஒரு கதை. எழுதியவர் செங்கதிரோன்.
அங்கிருந்து வந்தவர்கள் (சிறுகதை)
போர் மற்றும் அதன் அழிவுகளை மையப்படுத்தி பல இலக்கிய படைப்புக்களை பலரும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அந்த ஆக்கங்களில் பேசப்படாத இப்படியான பக்கங்களும் போரில் நடந்திருக்கின்றன. அதனால், பாதிக்கப்பட்ட அப்பாவி இதயங்களும் அமைதியாக அழுதுகொண்டிருக்கின்றன. செங்கதிரோனின் முற்றிலும் கற்பனை என்று சொல்ல முடியாத ஒரு கதை இது.
குதிரைக்காறியும்- அகதிக்கனவானும்
பல மேற்கு நாட்டவருக்கு இலங்கை ஒரு அதிசயத்தீவு. அழகு கொஞ்சும் நாடு. ஆனால், அதன் இன்றைய நிலை அவர்களுக்கு புரிவதில்லை. இன்றைய எமது இளைய தலைமுறைக்கும் அன்று அவர்கள் பார்த்த அதிசயத்தீவு புரிவதில்லை. குதிரை பழகப்போன அகதிக்கனவான் ஒருவரின் அனுபவக் கதை இது. அகரனின் புனைகதை இது. ஆனால், மெய் உணர்வு.
விம்பம் (சிறுகதை)
சந்தர்ப்பம் சூழ்நிலை மனித குண இயல்புகளுக்கு காரணமாவதும் உண்டுதான். ஆனால், அதனையும் கடந்து கஸ்ட சூழ்நிலையிலும் குணம் மாறாத மனித மனங்களும் உண்டு. அப்படியான இனிமையான மனங்களின் இயல்புகள் சிறுவயதிலேயே வெளித்தெரியத் தொடங்கிவிடுவதும் உண்டு. சிலவேளைகளில் அவை ஆசிரியருக்கே பாடம் சொல்லித்தருவதும் உண்டு. பியாஸா தாஹிரின் சிறுகதை.
ஆபத்தின் கரங்களில் ஆதி இனம்
தமிழ் இனத்தைப் போல பல ஆதி இனங்கள் இன்று ஆபத்தில் இருக்கின்றன. அங்கு துயரமான கதைகள் பல இருக்கின்றன உலகுக்குச் சொல்ல. அழிவில் தப்பிய சில எச்ச சொச்சங்கள் உலகுக்கு கதையாகலாம். ஆனால், அவை சிக்கலான கதைகள். எமக்கும் சில இடங்களில் பொருந்திப்போகும் கதை. இதுவும் சிக்கலானது. ஆனால், இது ஒரு கதை, ஆனால், இது மெய். மெய்யான கதை. அகரன் கேட்டுப் பகிர முயலுகிறார்.
