தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற ஒருவரே தேவை என்பதால் சிறிதரனை கட்சியின் தலைவராக தமிழர்கள் தெரிவு செய்தார்கள் என்பதையும் தன்னால் அவ்வாறான அரசியலைச் செய்யமுடியாது என்பதையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கும் சுமந்திரனை பாராட்டும் பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் அவர்கள், மறுபுறம் ஆயுதப்போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல் கோட்பாடுகளையும் சுலோகங்களையும் பாராளுமன்ற அரசியலுக்கு பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சாத்தியமற்ற தன்மையை புதிய தலைமை உணரவேண்டும் என்கிறார்.
- Home
- அறிவித்தல்கள்
- Page 34
Category: அறிவித்தல்கள்
மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்
அரசியல் ரீதியாக உயர் பதவிகளை தன்வசம் வைத்துக்கொள்வதற்காக மாவை சேனாதிராஜா சுயநலத்துடன் தொடர்ந்து செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டும் மூத்த பத்திரிகையாளரான டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள், கட்சி மாநாட்டை ஒத்தி வைத்ததும் அதே நோக்கிலானது என்றும் குற்றம் சாட்டுகிறார். இதற்கு தமிழரசுக்கட்சியினர் இடம் கொடுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
கிழக்கு அரசியல்:2 கிழக்கின் சமூக, அரசியல் ஐக்கியம்……! (மௌன உடைவுகள்-72)
கிழக்கு அரசியலின் மையமாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமே இருக்க வேண்டும் என்று கூறும் அழகு குணசீலன், வாக்கு மைய அரசியல் போட்டிகள் அதற்கு பாதகமாக தொடர்வதாக குறிப்பிடுகிறார்.
புலிகளின் தியாகத்தை விற்றுப் பிழைப்பு நடத்துவோர்!!
இன்றைய அரசியல் விடுதலைப் புலிகளின் போராற்றல் என்கிற வீரம், அதற்கான தியாகம் (உயிரிழப்பு) அதைக் கொண்டாடும் மாவீரம் – ‘மாவீரர்’ என்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தப் போராளிகள் குமுறுகிறார்கள். தங்களையும் தங்களைச் சேர்ந்தவர்களையும் வைத்துப் பிழைக்கும் தமிழரசியலை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திட்டமிட்டுத் தமிழரசியல் புலிகளின் பிரதிநிதிகளாக இருப்போரின் நீக்கத்தை ஒரு பக்கம் செய்து கொண்டு, மறுபக்கம் புலிகள் இயக்கத்தின் போராற்றலையும் அதில் உயிரழந்தோரின் தியாகத்தைப் பயன்படுத்துவதையும் இவர்களால் ஏற்கமுடியாதிருக்கிறது. அதாவது இந்த இரண்டகத் தன்மையை…’
என். சண்முகதாசன்- சமரசம் செய்யாத ஒரு கம்யூனிசவாதியின் அரசியல் வாழ்வு
இலங்கையின் மூத்த கம்யூனிஸவாதியான என். சண்முகதாசனின் 31 வது நினைவு தினம் (வியாழக்கிழமை) இன்றாகும். அதை முன்னிட்டு இந்த கட்டுரை பிரசுரமாகிறது.
இலங்கையின் மிகவும் காத்திரமான ஒரு கம்யூனிஸ்ட்டாக பலராலும் மட்டிடப்பட்ட இவர், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இடதுசாரிகளாலும் மதிக்கப்படுபவர். இலங்கை இனவிவகாரம் உட்பட பல அம்சங்களில் தனக்கென தனித்துவமான கொள்கையை கொண்டு செயற்பட்டவர். அவருக்கு அரங்கமும் தனது அஞ்சலியை செலுத்துகிறது.
சனத் நிசாந்தவின் அகால மரணமும் பிரதிபலிப்புகளும்
என்னதான் மனிதாபிமானப் பண்புகளைப் பற்றி நாம் பேசினாலும், பழிபாவத்துக்கு அஞ்சாத போக்குகள் நிறைந்த இன்றைய அரசியல் வாழ்வில் மரணங்களும் கூட குரூர திருப்தியுடன் நோக்கப்படும் ஒரு கலாசாரம் வளர்ந்திருப்பதை நாம் மறுக்கமுடியாது.
கிழக்கில் தலைமைத்துவமும் தனிக்கட்சியும்…! (மௌன உடைவுகள்-70)
“இப்போது வடக்கு கட்சிகளின் பின்னால் தமிழர் பெயரால் போகின்ற அரசியல் வாதிகள் மற்றொரு பாடத்தை படித்திருக்கிறார்கள். சுமந்திரனும், சிறிதரனும் இவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறார்கள். இனிமேலாவது எமது அரசியல் வாதிகள் கிழக்கின் அரசியல் தனித்துவம் பற்றி சிந்திப்பதற்கும், தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கும் காலம் கடந்துவிடவில்லை.” என்கிறார் குணசீலன்.
பந்து இப்போது தமிழ் மக்களின் பக்கத்தில் மட்டுமே உள்ளது (வாக்கு மூலம் – 100)
இந்த “வாக்குமூலம்” தொடரில் தமிழ் மக்களுக்கு தேவை என தான் கருதும் ஒரு மாற்று அரசியல் பொறிமுறையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த 100 ஆவது இறுதி பகுதியில் தான் இதுவரை சொல்லியவற்றை தொகுத்து கூறமுயல்கிறார்.
சுயம் இழந்து, புலிகளின் ஒளியில் குளிர்காயும் தமிழ்க்கட்சிகள்!
‘தம்மால் சுயமாக எதையும் செய்ய முடியாத நிலையில் புலிகளின் – அவர்களுடைய மாவீர்களின் ஒளியில் தங்களுடைய அரசியலை இவர்கள் மேற்கொள்ள விளைகின்றனர். இது அந்தப் போராளிகளுக்கும் அவர்களைப் பெற்று வளர்த்த பெற்றோருக்கும் அவர்களை மதிக்கின்ற மக்களுக்கும் இழைக்கின்ற அநீதியாகும்.
தமது அரசியல் ஆதாயங்களுக்காக போராளிகளையும் போராட்டத்தில் தம்முடைய இன்னுயிரை ஈய்ந்தோரையும் பயன்படுத்திக் கொள்ளுதல் மிகத் தவறானதாகும். இந்த வியாபாரத்துக்கு மக்களும் இடமளிக்கக் கூடாது.’
மிலிந்த மொரகொடவும். 13 வது திருத்தமும்
‘13 வது திருத்தம் ஒன்றே இலங்கை அரசியலமைப்பில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் இருக்கும் சட்டரீதியான ஏற்பாடாகும். இந்தியாவின் படைபலத்துடன் கூடிய நேரடித்தலையீடு தான் அதைச் சாத்தியமாக்கியது என்பதை விளங்கிக் கொள்வதற்கு எவரும் அரசியல் விஞ்ஞானம் படிக்கவேண்டியதில்லை.
உள்நாட்டுச் செயன்முறைகள் மூலமாக அதிகாரப் பகிர்வைச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட கடந்த கால முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெற முடியவில்லை என்ற வரலாற்று அனுபவம் எம் முன்னால் விரிந்து கிடக்கிறது.
என்றாவது ஒரு நாள் இலங்கை அரசாங்கம் ஒன்று 13வது திருத்தத்தை இல்லாமல் செய்தால் உள்நாட்டுச் செயன்முறையின் மூலமாக அத்தகைய ஒரு ஏற்பாட்டை மீண்டும் கொண்டுவரமுடியுமா?
அந்த திருத்தத்தின் பல்வேறு போதாமைகளுக்கு அப்பால் இந்த கேள்வி குறித்து தமிழ் அரசியல்வாதிகள் சிந்திப்பார்களா? அவர்கள் சிந்திக்காவிட்டாலும் தமிழ் மக்கள் சிந்திக்காமல் இருக்கமுடியாது.’