வடக்கில் ஈ.பி.டி.பி. யோடு பேசிய, பேச திகதி குறித்த தமிழ்த்தேசியம் கிழக்கில் ரி.எம்.வி.பி.யுடன் பேசத்தயாரில்லை. “துரோகி” என்றாலும் “நாங்கள் வடக்கார்” என்ற பிரதேசவாத மேலாண்மை அரசியல் அதிகார திமிர் நியாயம். வடக்கில் “தமிழ்க்கட்சிகளோடு” / “தமிழ்பேசும் கட்சிகளோடு ” பேச முடிவெடுக்கப்பட்டதாம். ஆக, கிழக்கில் தமிழ்க் கட்சிகளும் இல்லை. தமிழ்பேசுபவர்களும் இல்லை. இதற்கு பெயர் “புரட்டு அப்புக்காத்துதனம்”.
- Home
- அறிவித்தல்கள்
Category: அறிவித்தல்கள்
டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்!
இங்கே மிகப் பெரிய சிக்கலாக இருப்பது, தற்போதைய சூழலில் ஈ.பி.டி.பி ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதேயாகும். தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் இரண்டுக்கும் இப்போது ஈ.பி.டி.பி யின் ஆதரவு வேண்டும். ஆனால், அதைப் பகிரங்கமாகப் பெற முடியாது. இதுதான் பிரச்சினை. கள்ள உறவுக்குத் தயார். அதில் கிடைக்கின்ற இன்பத்தையும் சுகத்தையும் இலாபமாக அனுபவிக்கத் தயார். ஆனால், அதைப் பகிரங்கப்படுத்தத் தயாரில்லை. இந்தக் கேவலமான சிந்தனையை என்னவென்று சொல்வது?
மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியுள்ளது (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-39)
“எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கிழக்கு மாகாணத் தமிழர்களே.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சி உட்பட வடக்கைத் தளமாகக் கொண்ட அத்தனை தமிழ் அரசியல் கட்சிகளையும் முற்றாக நிராகரித்து கிழக்கைத் தளமாகக் கொண்ட மாற்று அரசியல் அணியொன்றை அடையாளம் காணவேண்டிய தேவை முன்னெப்பொழுதும் இல்லாத முன்னுரிமையோடு இப்போது கிழக்குத் தமிழர்களை எதிர்நோக்கியுள்ளது. கிழக்குத் தமிழர்கள் இப்போதிருந்தே தம்மைத் தனித்துவமான அரசியல் கட்டமைப்பாகத் தகவமைத்துக்கொள்ளல் அவசியம். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ணுவதால் பலனில்லை.”
ஊடகம்: பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும் காண்…! (வெளிச்சம் 061)
“மட்டக்களப்பில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கை குறித்த தகவல் பரிமாற்றத்தில்/ செய்தியில் சமூக ஊடகங்களின் தேடுதல், கண்டறிதல், பகிர்தல் என்ற சமூக ஊடக அடிப்படை கருத்தியல் பொய்யான, பழைய தகவல்களை திரிபு படுத்தி பதிவிட்டு, படம் போட்டு கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. இவை தவறானவை என்று வெளிப்படையாக தெரியவந்த பின்னரும்/ பிடிபட்ட பின்னரும் எந்த ஒரு மரபு ஊடகமும், சமூக ஊடகமும் அதற்கான பொறுப்பை ஏற்று தவறை திருத்திக்கொள்ள தயாராக இல்லை. இது மிகவும் துரதிஷ்டவசமானது. அப்படியானால் மற்றவர்களை பொறுப்புக்கூறச் சொல்ல இவர்களுக்கு இருக்கின்ற தார்மீக உரிமை என்ன?”
NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா?
“NPP தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளவும் கவனத்திற் கொள்ளவும் வேண்டிய விடயங்கள் பல உள்ளன.
தனக்குக் கிடைத்திருக்கும் வரலாற்று வாய்ப்பை NPP சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் யார்? எதிரிகள் யார் என்று அதனால் கண்டறிய முடியாதிருக்கிறது. முதிர்ச்சியும் பக்குவமும் நிதானமும் இல்லாத பலருடைய கைகளில் பொறுப்புகள் பகிரப்படுகின்றன. ஆற்றலுள்ளவர்களையும் NPP யின் மெய்யான ஆதரவாளர்களையும் அது கண்டறிய முடியாமல் தடுமாறுகிறது. அல்லது அவ்வாறானவர்களை அதனால் உள்வாங்க முடியவில்லை. அதற்குள் நிலவுகின்ற உளக் குழப்பங்களே இதற்குப் பெரிய காரணங்களாகும். இதெல்லாம் NPP ஐப் பலவீனப்படுத்துகின்றன.”
போர்வீரர்கள் நினைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவும்
“போர்வெற்றியில் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை என்பதை உணர்த்திய அவரின் உரையை சிங்கள தேசியவாத சக்திகள் கடுமையாக கண்டனம் செய்திருக்கின்றன. ஆனால், தமிழ் அரசியல் சக்திகள் அவரது உரையை வரவேற்காதது துரதிர்ஷ்டவசமானது. கடந்த காலத்தில் தேசிய போர்வீரர்கள் நினைவு நிகழ்வுகளை இனப்பிளவை மேலும் ஆழமாக்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதிகளை விடவும் வேறுபட்ட முறையில் கையாளுவதற்கு முன்வந்ததன் மூலமாக ஜனாதிபதி கூறிய செய்தி சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். மே 19 போரைப் புகழ்பாடிப் போற்றுவதற்கான தினம் அல்ல.”
அருணுக்கு ஆப்பு: பேரினவாத முகவர் விரிவாக்கம்…..! (வெளிச்சம்: 060)
வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகளையும், மற்றைய கட்சிகளையும், முஸ்லீம் காங்கிரஸையும் இணைத்த பெருமை உண்மையில் ஜே.வி.பி.க்கே உரியது. வடக்கு கிழக்கில் கடந்த ஏழு மாத காலத்தில் ஜே.வி.பியின் “இலங்கையர்கள் ” முலாம் பூசப்பட்ட இன, மதவாத அரசியலை சிறுபான்மைத் தேசிய இனங்கள் இனம் கண்டுகொண்டதன் விளைவு இது. இதனால் ஜே.வி.பி. தென்னிலங்கையில் பழைய அரசியல் எதிரியோடு, வடக்கு கிழக்கில் ஒரு புதிய அரசியல் எதிரியை தானாகவே ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இதைப் புரிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
“இன்னும் கன்னியாக..”
கதைகளைப் பின்னியிருக்கும் புனைவு மொழி சிற்றாறு ஒன்று வளைந்தும் நெளிந்தும் ஆரவாரமில்லாமல் அமைதியாக ஓடுகின்ற ஒயிலாட்டம் இயல்பாகவும் – எளிமையாகவும் – சிக்கல்களில்லாமலும் மொழியின் ஓட்டம் அமைந்துள்ளது. வாசகனை வசீகரிக்கின்ற மொழிநடை நூலாசிரியருக்கு ‘வாலாயம்’ ஆகியுள்ளது.
மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும்
“தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஒரு சிலரிடமிருந்தாவது கோரிக்கைகளும் கருத்துக்களும் வருகின்ற அதேவேளை தமிழர் தரப்பில் அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசியல் ஆய்வாளர்களிடமிருந்தோ மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் மாகாணசபைகளின் நிருவாகங்களை மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அக்கறை வெளிப்படுவதில்லை என்பது ஒரு விசித்திரமான அம்சமாகும்.”
NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும்
“NPP செய்ய வேண்டியது அறுவைச் சிகிச்சையே தவிர, புண்ணைத் தடவிக் கொடுத்தல் அல்ல. அதாவது தற்காலிக சுகமளித்தல் அல்ல. JVP யின் உருவாக்கம், அதனுடைய 60ஆண்டுகால அரசியல் முன்னெடுப்பு, NPP யின் 10ஆண்டுகால அரசியல் எல்லாம் System Change ஐ அடிப்படையாகக் கொண்ட அரசியல் மாற்றம் – ஆட்சி மாற்றமே. மக்களின் ஆணையும் அதற்கானதே. அதைச் செய்யவில்லை என்றால் எதற்காக NPP? ரணில், மைத்திரி, சஜித் போன்றவர்கள் போதுமே. அவர்களுடைய போதாமை – தவறுகளுக்கு – மாற்றுத்தானே அநுரவும் NPP யும்.”