ஞானசார தேரர் போன்ற சில இனவாத கருத்துகளை பரப்புவர்களாக கருதப்படும் நபர்களால் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் பல. அதேவேளை இவர்களை மிகக்கவனமாக கையாள வேண்டிய தேவையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு இருக்கிறது. இவை குறித்த மூத்த ஆய்வாளர் எம் எல் எம் மன்சூர் அவர்களின் கருத்துகள்.
Category: அரசியல்
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் பகுதி – 11
இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமை குறித்து பேசிவருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், இலங்கையின் ஏற்றுமதி- இறக்குமதி மற்றும் பொருளாதார உறவுகளின் பணிபுகளின் பாதகமான நிலைமை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து இங்கு ஆராய்கிறார்.
‘சுயமரியாதை தினம்’ என்பதே பெரியாரை வளர்த்தெடுக்கும்…, எமது சிந்தனைப் போக்கையும் முன்னகர்த்தும்.
இலங்கையைப் பொறுத்தவரை பெரியாரின் சிந்தனைப் போக்கை முன்னகர்த்த அவரது ‘சுயமரியாதை’ என்ற சிந்தனையையே முன்னெடுக்க வேண்டும் என்று வாதிடும் அசுரா, இலங்கை திராவிடர் கழக முன்னோடியான ஏ.இளஞ்செழியனின் கொள்கையும் வழியுமே இலங்கையில் அனைத்து இன மக்களின் விடிவுக்கும் வழிகோலும் என்கிறார்.
தற்கொலைகள்: அரசியலுக்கு அப்பாலும் அரசியலுக்குள்ளும் – சகோதரனின் இழப்பும் – சினேகிதியின் இழப்பும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 9))
தனது போராட்டகால நினைவுகள் குறித்துப் பேசும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு தனது குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு அசம்பாவிதம் குறித்து நினைவுகூருகிறார். அதன் தொடர்ச்சியாக தமிழ் சமூகத்த்கில் தற்கொலைகள் குறித்து அவரிடம் சில அனுபவங்களை அலசுகிறார் தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன்.
ஜனாதிபதி ‘கோதா’ இன் ஐ நா உரை நிஜமா? போலியா? புலம்பெயர் சமூகத்தின் பணி என்ன?
அண்மையில் இலங்கை ஜனாதிபதி ஐநா உரையில் புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுத்த கோரிக்கையின் நம்பகத்தன்மை குறித்து மிகுந்த சந்தேகம் வெளியிடும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், ஆனாலும் இந்த விடயத்தை புலம்பெயர்ந்த சமூகம் புறக்கணிக்காது, மிகவும் கவனமாக கையாள முன்வரவேண்டும் என்கிறார்.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 11
யாழ் மேலாதிக்கவாதிகள் என்று தான் குறிப்பிடும் தலைமைகள் மற்றும் கட்சிகளால் ஏனைய மாவட்ட தமிழ் மாணவர்களின் கல்வியும் புறக்கணிக்கப்பட்டதாக இங்கு விவாதிக்கிறார் எழுவான் வேலன்.
போர்க்குற்ற விசாரணை! விடுதலைப்புலிகளும் …. கோசவோ விடுதலை இராணுவமும்.! (காலக்கண்ணாடி 57)
போர்க்குற்றங்கள் மற்றும் வன்செயல்கள் குறித்து தமிழர் தரப்புகள் ஒருவர் மற்றவர் மீது குற்றச்சாட்டுகளை வாரி வீசுவது தமிழர் தரப்புக்கு பாதகமாக அமையும் என்கிறார் அழகு குணசீலன். கோசவோ விடுதலை இராணுவத்தை போல விடுதலைப்புலிகள் அமைப்பும் விசாரணை என்று வந்தால் அதில் அகப்பட நேரிடலாம் என்பது அவர் கருத்து.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 10
வறுமை வாட்டும்போது தெரியாத தொழில்களும் கைவசப்படும் என்பது ஒரு அனுபவம். இது வடக்கு நோக்கி வன்செயலால் ஓடி வந்த அகதிகள் சிலருக்கும் உண்மையாயிற்று. அவ்வாறாக வந்த ஒரு மூத்த உறவு தான் சலூன் வைத்த அனுபவத்தை இங்கு பகிர்கிறார். செய்தியாளர் கருணாகரன் தரும் தொடர்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 10)
இலங்கை பொருளாதாரத்தின் நிலைமை குறித்து ஆராய்ந்துவருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், இலங்கை கல்விச்சேவை மற்றும் அரச சேவையின் நிலைமை குறித்து இங்கு பேசுகின்றார். ஒப்பீட்டளவில் அளவுக்கு அதிகமான பணியாளர்களை கொண்டு விளங்கும் இந்தச் சேவைகள் தகமையானவர்களை கொண்டிருக்கவில்லை என்றும், பணியாளர் எண்ணிக்கை அதிகமாதலால் அவர்களுக்கு உரிய ஊதியம் கொடுபடவில்லை என்றும் அவர் கவலை தெரிவிக்கிறார்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 8: மிதவாத அரசியலும் ஆயுத அரசியலும் உறவும் – முரணும்)
தனது போராட்ட கால அனுபவங்களைப் பகிர்ந்துவரும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் ஆரம்பகால இயக்கங்கள் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்தும், அவற்றுக்கான காரணங்கள் அதன் விளைவுகள் குறித்தும் இங்கு பேசுகின்றார்.
