தலைமை மாடு முன்னால்……. பட்டி பின்னால்…….! (காலக்கண்ணாடி – 43)

இலங்கை விடயத்தில் அண்டை நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் தமது நலன்களை முன்வைத்தே தீர்மானங்களை எடுக்கின்றன. ஆனால், சர்வதேச சமூகத்தை உரிய வகையில் அணுகத்தெரியாமல் தமிழர் தரப்பு எல்லாவற்றையும் கடந்த காலம் போல குழப்பிக்கொள்வதாக விமர்சிக்கிறார் அழக் குணசீலன்.

மேலும்

கொடுத்ததை பறிக்கும் மத்தியும், பாராமுகமாக இருக்கும் தமிழ் தலைமைகளும்

அதிகார பகிர்வின் மூலம் மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பறிக்கும் நடவடிக்கைகளை மிகவும் சாதுரியமாக தொடரும் நிலையில், அவற்றை தமிழ் தலைமைகள் கண்டும் காணாததுபோல இருப்பதாக பத்தியின் ஆசிரியர் கவலை தெரிவிக்கின்றார். உரிய புத்திசாலித்தனத்துடன் பதில் நடவடிக்கை எடுக்க தமிழ் தலைமைகள் தவறுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும்

‘கங்கா மாதா பொய் சொல்வதில்லை’ – (மறைக்கப்பட்ட இந்திய கொவிட் மரணங்கள்)

கொவிட் தாக்கம் பற்றிய செய்திகளை இந்திய மத்திய அரசாங்கம் மறைப்பதாக பல தரப்பாலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அதனை அந்த நாட்டின் மோடி அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது. ஆனால், இந்தியாவின் புனித நதிகளில் முக்கியமான கங்கா நதி இந்தத்தடவை மோடியை காட்டிக்கொடுத்துவிட்டதாக கூறுகிறார் இந்தக் கட்டுரையாசிரியர்.

மேலும்

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 02

“பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா?” என்ற தலைப்பில் சிவலிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரைக்கான தனது பதில் கருத்தை தொடர்ச்சியாக பதிந்துவரும் எழுவான் வேலன், தனது இரண்டாவது பகுதியாக இதனை பதிகிறார். இரு பிரதேசங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளை சுட்டிக்காட்டும் அவர், காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் யாழ். மேலாதிக்கவாதிகளால் கிழக்கு பாதிக்கப்பட்டதாக வாதாடுகிறார்.

மேலும்

தோழர் நாபா நினைவுகள்: நெஞ்சில் ஒரு நெருஞ்சி முள் (சொல்லத் துணிந்தேன்-77)

தோழர் பத்மநாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 31 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது ஆளுமையை நினைவுகூருகிறார் பத்தி ஆசிரியர் கோபாலகிருஸ்ணன்.
வீரமும்- விவேகமும்- தன்னல மறுப்பும்- தத்துவார்த்தத் தெளிவும்- தியாகமும்- மானுட நேயமும் நிறைந்த உண்மையான மக்கள் தலைவனாகவே தோழர் பத்மநாபாவை வரலாறு அடையாளப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.

மேலும்

ஜோர்ஜ் கபிரியேல்! (காலக்கண்ணாடி – 42)

அமெரிக்காவின் நிர்வாகத்தில் முக்கிய பதவி ஒன்றுக்கு மட்டக்களப்பு வாகரையை பிறப்பிடமாகக் கொண்ட ஜோர்ஜ் கபிரியல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

50 ஆண்டுகளாக மாறாத ஆட்டம்: அமிர்தலிங்கம் முதல் அடைக்கலநாதன் வரை…

தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவை இன்றுவரை பெற்றுவரும் தமிழ் தேசியவாதிகளின் போக்கு இன்னமும் மாறவில்லை என்பது தேசம்நெட் ஆசிரியர் ஜெயபாலனின் கருத்து. அவர்கள் அன்று ஆடிய “தோற்றுப்போன ஆட்டமுறையையே” இன்றும் தொடர்வதாக தனது காட்டமான பாணியில் அவர் விமர்சிக்கிறார்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (25)

தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், இந்தப் பகுதியில் 70களின் இறுதி வருடங்களில் அரசியல் ரீதியாக நடந்த சில நிகழ்வுகள் ஏற்படுத்திய விளைவுகளை நினைவு கூர்கிறார்.

மேலும்

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 01

‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)’ என்ற தலைப்பில் வி.சிவலிங்கம் அவர்கள் அரங்கம் பத்திரிகையில் எழுதிய தொடர் கட்டுரைகள் குறித்த கருத்தாடல் இது. எழுவான்வேலனின் கருத்துகளின் முதல் பகுதி.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 76

அதிகாரப்பகிர்வு குறித்த சீரிய சிந்தனை தமிழ் அரசியல் தலைவர்களிடம் இல்லாதிருப்பதாக விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் நடவடிக்கைகள் குறித்தும் தனது கருத்துகளை முன்வைக்கிறார்.

மேலும்