ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின்  வரலாற்றுப் பொறுப்பு

“தமிழ்ப் பெருந்திரள் சமூகத்தின் விடுதலைக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி பங்களிக்க வேண்டிய பொறுப்பு பல வகையிலும் உண்டு. குறிப்பாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பினர் என்ற வகையில், தமிழ்ச் சமூகம் கூடுதலான பாதிப்பை சந்திப்பதற்கு இந்தக் கூட்டணியினரும் காரணமாகியுள்ளனர். ஆகவே இதையெல்லாம் கவனத்திற் கொண்டு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி செயற்பட வேண்டும். வரலாற்றைக் கட்டமைக்க – மாற்றியமைக்க வேண்டும்.”

மேலும்

விட்டுக்கொடுப்பு அரசியல்  செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்

“உள்ளூராட்சி சபைகளில் தலைவர், துணைத் தலைவர் தெரிவுகளை ஏதோ எதிரியின் முகாம்களை சண்டையிட்டுக் கைப்பற்றுவது போன்று அரசியல்வாதிகள் அறிவிப்புகளைச் செய்கிறார்கள். அது மாத்திமல்ல, தமிழ்க் கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் ஏட்டிக்குப் போட்டியாக செய்யும் பதிவுகள் தமிழ்த் தேசியவாதம் இணைய வெளியில் எந்தளவுக்கு கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதை பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.”

மேலும்

புண்ணியவான் டக்ளஸ் தேவானந்தா: பத்து புண்ணியங்கள்…!(வெளிச்சம்: 064)

“ஈழப்போராட்டம் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப்பார்த்தால் புலிகள் உட்பட இன்று தமிழ்த்தேசிய அரசியல் செய்யும் எவருக்கும், எந்த அணிக்கும், கட்சிக்கும்  டக்ளஸ் தோழரை நோக்கி சுட்டு விரலை நீட்ட எந்த அருகதையும் இல்லை. இவர்கள் முதலில் கண்ணாடிக்கு முன் தங்களை நிறுத்துவது நல்லது. தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்திற்கும், ஜனநாயக அரசியலுக்கும் மிகப்பெரிய “துரோகம்” இழைத்து இந்த போராட்டத்தை சிதைத்தவர்கள் புலிகளும்,  அதற்கு போட்டி போட்டு முட்டுக்கொடுத்த தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளுமே. வெவ்வேறு அரசியல் வியாபார பெயர்களிலும், இலச்சினைகளிலும் இவர்கள் மறைந்து கொண்டாலும் இது வெளிப்படையானது. இவர்கள் புலிகளின் ஆயுத அராஜகத்தை மௌனமாக அங்கீகரித்தவர்கள். இதை இன்றுவரை விமர்சனம் செய்கின்ற ஒரே வடக்கு தலைமையாக டக்ளஸ் இருப்பது புலிகளை விற்றுப்பிழைக்கும் இவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.”

மேலும்

தமிழர் அரசியல்வெளியில் அற்றுச் செல்லும் அரசியல் அறம்?-அரசியல் நாகரீகம்??- அரசியல் விழுமியங்கள்??? (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-40)

“ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மைத்தானே குறிசுட்டுக் கொண்டுள்ள கட்சிகளிடமிருந்த இரட்டை வேடம் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலில் இருக்கவில்லை.
 
 டக்ளஸ் தேவானந்தா பத்மநாபா தலைமையிலான ஈ பி ஆர் எல் எஃப் இயக்கத்திலிருந்த காலத்திலும்  பின் ஈ பி ஆர் எல் எப் ஐ விட்டுப் பிரிந்து ஈ பி டி பி கட்சியை ஆரம்பித்து ஜனநாயக வழிக்கு மீண்டு அரசியல் செய்த இன்று வரையிலான காலம்வரை புலிகளின் – பிரபாகரனின் பாசிசப் போக்குக்கு எதிராகவே இயங்கி வந்துள்ளார். அதனால் புலிகளின் கொலைத் தாக்குதல்களிலிருந்து பல தடவைகள் உயிர் பிழைத்துள்ளார். தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு தமது சுயலாப அரசியலுக்காகவும் தேர்தல் மைய அரசியல் தேவைகளுக்காகவும் உள்ளுக்குள்ளே புலிகளுக்கு எதிரான உணர்வுகளை வைத்துக் கொண்டு வெளியிலே புலிகளின் முகவர்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டு புலிகளின் வாலைப் பிடித்துத் தொங்கிய போலித் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் போன்று ஒருபோதும் அவர் இரட்டை வேடம் போட்டதில்லை. சரி பிழைகளுக்கு அப்பால் அவரது அரசியல் வெளிப்படைத்தன்மையானது.”

மேலும்

வளர்கலை: வயலின்(Violin) – பிடில்(Fiddle)

வயலின் இசைக்கருவியின் வரலாறு, உருவாக்கம், வகைகள், இசைக்கும் முறை, சிறந்த வயலின் கலைஞர்கள் பற்றிய ஒரு இசை ஆசிரியையின் சிறு குறிப்புகள் இவை.

மேலும்

கன்னடம் குறித்த கமல்ஹாசனின் கருத்தால் மூண்டிருக்கும் சர்ச்சையை புரிந்து கொள்தல் 

“அந்த நிலைப்பாட்டுக்கு பின்னால் எத்தகைய வர்த்தகக் கணிப்பீடுகள் இருந்தாலும், அத்தகைய அறிவிப்பு ஒன்றைச் செய்வதற்கு அவருக்கு இருந்த துணிச்சலை மெச்சவேண்டும். நீதிமன்றம் கூறியதைப் போன்று இது ஒரு அகங்காரப் பிரச்சினை அல்ல.  சுயமரியாதைப் பிரச்சினை.  கருத்தொன்றைக் கூறுவதற்கு ஒருவருக்கு சகல உரிமையும் இருக்கிறது. தான் கூறியது சரியானது என்று அவர் நம்பினால் அதில் உறுதியாக நிற்பதற்கான உரிமையும் அவருக்கு இருக்க வேண்டும்.”

மேலும்

துரோகிகள் Vs தியாகிகள்!

“உலகில் இந்தளவுக்குத் துரோகி என்ற சொல்லோடு மிக நீண்ட காலம் – ஏறக்குறைய 75 ஆண்டுகள் – சீரழிந்த இனமோ சமூகமோ வேறு இருந்திருக்க முடியாது. அரசியலில் மட்டுமல்ல, கலை இலக்கியத்திலும் ஊடகத்துறையிலும் இந்தத் ‘துரோகி‘ முத்திரை குத்தும் போக்கு நீடித்தது.
 
ஆக இந்த முட்டாள்தனம் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும் செழித்துப் பரந்து வளர்ந்துள்ளது.“

மேலும்

ஜேர்மனியில் அநுர:  குவியும் போர்க்குற்ற, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்…! (வெளிச்சம்: 063)

“ஐ.நா.கடந்த காலங்களில் பல தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தும் எதுவும் இலங்கை அரசாங்கங்களால் நடைமுறைப்-படுத்தப்படவில்லை. கடந்த கால இலங்கைத்தலைவர்களிடம் இருந்து அநுரகுமாரவின் தலைமைத்துவத்தையும் இதுவரை வேறுபடுத்த முடியவில்லை. போர்க்குற்றங்களோடு தொடர்பான முன்னாள் படைத்துறை முக்கியஸ்தர்களை ஐ.நா. பிரேரணைக்கு முரணாக பாதுகாப்பதுடன், பிரேரணையையும் அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நிராகரித்துள்ளது.”

“இதன் விளைவுகள் போகப்போக புரியும்…!. 2026 இல்  கடன் மீளளிப்பு ஆரம்பமாகும் போது தெரியும்….!”

மேலும்

இருளில் தேடும் தமிழ்ப்பூனை

“இதொன்றும் தமிழ் வரலாற்றுக்குப் புதியதல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோய் தொடங்கி விட்டது. அப்பொழுது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மாறி மாறி துரோகிப் பட்டம் சூட்டி மகிழ்ந்தன.
அதற்குப் பிறகு இயக்கங்கள் துப்பாக்கியினால் விளையாடின. துரோக- – தியாகி அடையாளப்படுத்தல் தொடர்ந்தது. இந்த விளையாட்டுக்குத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் தம்மையே பலிகொடுக்க வேண்டியிருந்தது.”

மேலும்

உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதில் தமிழ்க் கட்சிகளின் அணுகுமுறைகள்

“வடக்கில் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளையும்  அமைக்கப்படும் கூட்டணிகளையும் நோக்கும்போது ‘துரோகிகள்’ என்று ஒருதரப்பு  அரசியல்வாதிகளை அழைக்கும் கலாசாரத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்று தெரிகிறது. “

மேலும்

1 14 15 16 17 18 176