மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 9

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவருகின்ற பொது நூலகத்தைப் பற்றி தனது பரிந்துரைகளை எழுதி வருகின்ற மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்கள், இந்த நூலகத்தை ஒரு பிராந்திய தேசிய நூலகமாக உருவாக்க வேண்டும் என்கிறார். அதற்கான காரணங்களையும் வழியையும் அவர் பரிந்துரைக்கிறார்.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 10)

இலங்கை பொருளாதாரத்தின் நிலைமை குறித்து ஆராய்ந்துவருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், இலங்கை கல்விச்சேவை மற்றும் அரச சேவையின் நிலைமை குறித்து இங்கு பேசுகின்றார். ஒப்பீட்டளவில் அளவுக்கு அதிகமான பணியாளர்களை கொண்டு விளங்கும் இந்தச் சேவைகள் தகமையானவர்களை கொண்டிருக்கவில்லை என்றும், பணியாளர் எண்ணிக்கை அதிகமாதலால் அவர்களுக்கு உரிய ஊதியம் கொடுபடவில்லை என்றும் அவர் கவலை தெரிவிக்கிறார்.

மேலும்

இலங்கை தமிழர் வரலாறு குறித்த 5 நூல்கள்

இலங்கையின் தமிழர் வரலாறு குறித்து அறிய, ஆராய விரும்புபவர்கள், மாணவர்கள் படிக்க வேண்டிய ஐந்து நூல்கள் பற்றிய அறிமுகம் ஒன்றை பேராசிரியர் சி. மௌனகுரு பரிந்துரைக்கிறார். அவை குறித்த அறிமுகங்களையும் அவர் இங்கு தொடராக தருகிறார். அதில் அவர் பேசும் முதல் நூல் – பேராசிரியர் சி. பத்மநாதனின் ‘இலங்கைத் தமிழர் வரலாறு –கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும்

(கி.மு.250– கி.பி 300)’.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 8: மிதவாத அரசியலும் ஆயுத அரசியலும் உறவும் – முரணும்)

தனது போராட்ட கால அனுபவங்களைப் பகிர்ந்துவரும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் ஆரம்பகால இயக்கங்கள் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்தும், அவற்றுக்கான காரணங்கள் அதன் விளைவுகள் குறித்தும் இங்கு பேசுகின்றார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் -91

தமிழ்த் தேசியக் கட்சிகளாக தம்மை விபரித்துக்கொள்ளும் கட்சித்தலைவர்களின் அண்மைய மெய்நிகர் செயலி சந்திப்பு ஒன்று குறித்து தனது விமர்சனத்தை இங்கு முன்வைக்கிறார் ஆய்வாளர் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

ஆண்டவனுக்கு ஐந்தொழில் இல்லையா? (கவிதை)

கொரொனா என்றொரு தொற்றுநோய் நம்மை நமக்கே அன்னியப் படுத்தியதை எண்ணி மனம் கனக்கிறார் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா. படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் என்று ஐந்தொழில் செய்யும் ஆண்டவன், தன்பணியை ஒரு தொழிலாய் சுருக்கியது ஏன் என்பது அவர் ஆதங்கம்.

மேலும்

தில்லையாற்றங்கரை The Banks of the River Thillai

இங்கிலாந்தில் வாழும் மூத்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுரமணியம் அவர்களின் ‘தில்லையாற்றங்கரை’ எனும் நாவல் ஆங்கில மொழியில் வெளிவரவுள்ளது. அது குறித்து நண்பர் சிராஜ் மசூர் தனது முகநூலில் எழுதிய அறிமுகத்தை இங்கு தருகின்றோம்.

மேலும்

விம்பம் (சிறுகதை)

சந்தர்ப்பம் சூழ்நிலை மனித குண இயல்புகளுக்கு காரணமாவதும் உண்டுதான். ஆனால், அதனையும் கடந்து கஸ்ட சூழ்நிலையிலும் குணம் மாறாத மனித மனங்களும் உண்டு. அப்படியான இனிமையான மனங்களின் இயல்புகள் சிறுவயதிலேயே வெளித்தெரியத் தொடங்கிவிடுவதும் உண்டு. சிலவேளைகளில் அவை ஆசிரியருக்கே பாடம் சொல்லித்தருவதும் உண்டு. பியாஸா தாஹிரின் சிறுகதை.

மேலும்

1978 ஹட்டன் மாநாடு: மலையகத்தின் வட்டுக்கோட்டை மாநாடு

மலையக மக்களின் தாயகம் எது, அவர்கள் எங்கு செல்வது என்பவை போன்ற முடிவுகளை எடுக்கும் வகையிலான ஒரு மாநாடு 1978 இல் மலையகத்தில் நடந்திருக்கிறது. மலையக மக்கள் இந்தியா செல்வதா, வடக்கு செல்வதா அல்லது தமது தாயகமாக மலையகத்தை மீட்க அங்கேயே வாழ்வதா என்பது அங்கு வாதிடப்பட்டது.

மேலும்

மகாகவி பாரதியின் பாடல்கள் பேசும்! தமிழ்த்தேசிய பாராளுமன்ற – ஜெனிவா அரசியல்!! (காலக்கண்ணாடி 56)

ஐநா மனித உரிமைகள் விடயங்களை ஒன்றாக இணைந்து மேற்கொள்ள வேண்டிய தமிழ் தேசியத்தரப்பு தம்முள் பிளவுண்டு முரண்படுவதை கண்டிக்கும் அழகு குணசீலன், “ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி உள்ள அறிக்கைகள் தொடர்பாக ஒரு “ஆவணச்சண்டை” தமிழ்த்தேசிய அரசியலில் தொடர்கிறது.” என்கிறார்.

மேலும்