விவேகமற்ற தமிழ்த் தலைமைகளின் வெட்டிப் பேச்சால் வில்லங்கத்தில் தமிழ் மக்கள் (வாக்குமூலம்-86)

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற தமிழ்க்கட்சிகளின் முயற்சி விவேகமற்றது
என்று கூறும் கோபாலகிருஸ்ணன், அது தமிழ் மக்களுக்கு ஆபத்தாக முடியலாம் என்று எச்சரிக்கிறார்.

மேலும்

காலாவதியானது ஹர்த்தாலா….? தமிழ்த்தேசிய அரசியலா.?(மௌன உடைவுகள் – 53)

தமிழ் தேசியக்கட்சிகளின் அண்மைய ஹர்த்தால் படுதோல்வியில் முடிந்த ஒன்று என்று கூறும் அழகு குணசீலன், இது போராட்ட வடிவத்தின் தோல்வி அல்ல கட்சி அரசியலின் தோல்வி என்கிறார்.

மேலும்

‘குழப்ப சூழ்நிலையில் மாகாணசபை நிர்வாகம்‘   -மாகாணசபை முன்னாள் செயலர் தெய்வேந்திரம்

 ‘மாகாண சபைக்கான அதிகாரங்கள் இன்னும் தேவை என்பது உண்மையே. 13 திருத்தத்தில் சொல்லப்படும் அதிகாரங்களை முழுமைப்படுத்தினால் பெரும்பாலான அதிகாரங்களை நாம் பெறமுடியும். ஆனால், தற்போதிருக்கின்ற அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தினாலே எமது மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களைச் சீராக நிறைவேற்ற முடியும். இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தாமல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சாட்டுப்போக்குகளைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.’

மேலும்

இனவெறிக் கூச்சலும் மன்னிப்புக் கோரலும்

இன உறவுகளைப் பொறுத்தவரை, சிங்களவர்கள் மத்தியில் நிலவும் சிந்தனைக் குழப்பம், செயல் குழப்பம் ஆகியவற்றுக்கு  சிங்கள பௌத்த சிந்தனையில் ஒழுக்க நியாயப்பாரம்பரியம் ஒன்று இல்லாதமை ஒரு முக்கிய காரணமாகும் என்று முற்போக்கு சிந்தனையுடைய வரலாற்றாசிரியர்கள் கூறியிரு்கிறார்கள்.

மேலும்

“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​ -அங்கம் – 06)

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 06

மேலும்

தாந்தாமலை….!மதங்களைக் கடந்த மறுபக்கம்…..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை பகுதியில் நாற்பது வட்டைச்சந்தியில் அண்மையில் நிறுவப்பட்ட மிக உயரமான முருகன் சிலை பல தரப்பினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்த முயற்சி முக்கியமான ஒன்று என்று கூறும் அழகு குணசீலன், அதன் பின்னணியை ஆராய்கிறார்.

மேலும்

யாருக்காக போராட்டங்கள்? (வாக்குமூலம்-85)

மக்களுக்கு பயனற்ற , அவர்களது அங்கீகாரமற்ற போராட்டங்களை சில அரசியல்வாதிகள் தமது சொந்த அரசியல் லாபங்களுக்காக நடத்துவதாக குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன், இத்தகைய போலித்தேசியவாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்கிறார்.

மேலும்

வாக்குமூலம்-84 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

13 ஆவது திருத்தத்தையே  ஒரு பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டு அதனை முறையாகவும் முழுமையாகவும் அமுல் செய்வதற்கு உளப்பூர்வமாகவும் ஈடுபாட்டுடனும் உழைக்கக்கூடிய, அதேவேளை இந்தியா நம்பிக்கை வைத்துச் செயற்படக் கூடியதுமான ஓர் இந்திய ஆதரவு அரசியல் கூட்டணியையே வடக்கு கிழக்கில் வலுவாகக் கட்டமைக்க வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்

மேலும்

கடலம்மா – புரிந்து கொள்ளப்படாத அபாயம்

எமது கடல் பல வகைகளிலும் அழிக்கப்படுவதாகக்கூறும் கருணாகரன், அபிவிருத்தி, தொழில் முயற்சி என்ற பெயரில் வரும் பலவிதமான நடவடிக்கைகளும் அப்படியே என்கிறார். கடல் வள அழிப்பு எமது இனத்தையே அழிப்பதற்கு சமானம் என்பது அவர் கருத்து.

மேலும்

செயற்படுத்தலில் தொலைக்க நேர்ந்த நன்னோக்கங்கள் 

‘தன்னெண்ணத்தில் செயற்படுவதற்கு முயற்சிப்பதற்கு பதிலாக ஜனாதிபதி நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு எதிரணி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் சேர்ந்து பல்முனை கருத்தொருமிப்பு ஒன்றைக் காண்பதற்கு செயலில் இறங்கவேண்டியது அவசியமாகும்.’

மேலும்

1 68 69 70 71 72 124