இலங்கைப் பொருளாதாரத்தின் தேக்க நிலைக்கான காரணங்களை ஆராயும் அ. வரதராஜா பெருமாள் அவர்கள், மனைப்பொருளாதாரம் அல்லது குடும்பப் பொருளாதாரம் அதில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்கிறார்.
Category: கட்டுரைகள்
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 04
தென்னிலங்கை வன்செயல்களால் வடக்கு நோக்கி வந்த மலையக சகோதரங்களின் சோகக்கதை இது. எழுதுபவர் செய்தியாளர் கருணாகரன். “பிறத்தி என விலக்கி வைத்தல் நீதியின் எந்த முறையிலானது நண்பரே! சேர்ந்திருப்போம் என்பது உங்களின் கீழே அடங்கியிருத்தல்தானா?” — இது அவர்களின் கேள்வி.
கிளிநொச்சி – ஒரு மீள நினைவூட்டல்
கிளிநொச்சி நகரத்திலும் அதனை அண்மிய பகுதிகளிலும் காணப்படும் சில நிலவரங்கள் குறித்த தனது கவனத்தை இங்கு பகிர்கிறார் செய்தியாளர் கருணாகரன். அபிவிருத்தி திட்டங்களில் நிறைய மாற்றங்கள் தேவை என்கிறார் அவர்.
இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி: ஒரு துல்லியமான வாசிப்புக்கான சில குறிப்புக்கள்!
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகளுக்கான உண்மையான காரணம் என்ன, ஆட்சிகளை மாற்றுவதன் மூலம் அவற்றை மாற்றிவிட முடியுமா, முஸ்லிம் சமூகம் என்னென்ன விடயங்களில் தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்பவை குறித்து நியாயமான விமர்சனம் ஒன்றை முன்வைக்கிறார் மூத்த ஆய்வாளரான எம்.எம்.எம். மன்சூர். இது ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்கும் பொருந்தும்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்
வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான அ. வரதராஜா பெருமாள் அவர்கள் முக்கியமான அரசியல் சமூக பொருளாதார ஆய்வாளரும் கூட. இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைமை குறித்து இங்கு அவர் ஒரு தொடராக ஆராய முனைகிறார். பலங்களை புறக்கணித்ததால் ஏற்பட்ட பலவீனம், தவறான கணிப்பீட்டு முன்வைப்புகள் முதல் இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையில் தொடர்வதற்கான காரணங்களை அவர் இங்கு பகுத்தாய்கிறார்.
இலங்கையில் உல்லாசப் பயணி தாக்கப்பட்டதன் விளைவு
இலங்கையில் உல்லாசப்பிரயாணமாகச் சென்ற ஐரோப்பிய பெண் ஒருவர் அங்கு பாலியல் ரீதியாக தாக்குதலுக்கான ஒரு வழக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளது. அது பற்றிய வி. சிவலிங்கம் அவர்களின் சிறு குறிப்பு.
இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா இடதுசாரிகளா? (பகுதி 02)
இலங்கையில் உள்ள இடதுசாரிகள் மற்றும் இனவாதிகள் குறித்து தொடராக எழுதிவரும் பத்தியாளர், இங்கு இடதுசாரிகள் தூய்மைவாதம் பேசி, ஒத்த சக்திகளுள் இணக்கம் காண மறுக்கிறார்கள் என்று கவலைகொள்கிறார். இவை குறித்த அவரது பார்வை இது.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 07
தனிச்சிங்கள சட்ட மூலம், அதற்கான தமிழர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இங்கு பேசும் எழுவான் வேலன், சிங்கள சிறி எதிர்ப்பு நடவடிக்கையின் பாதக விளைவு ஆகியவை குறித்து வருந்துகிறார். பொருத்தமற்ற போராட்டங்களால் தமிழ் தலைவர்கள் போராட்டங்களை தோல்வியடையச் செய்ததாக அவர் கூறுகிறார்.
சொல்லத் துணிந்தேன் – 84
முன்னைய அரங்கம் பத்தியொன்று பற்றி விமர்சித்த அனாமதேயமான நபர் ஒருவர் தன்னைப் பற்றி முன்வைத்த தனிநபர் தாக்குதல்களுக்கு இந்த வாரம் பதிலளிக்கிறார் பத்தி ஆசிரியர் கோபாலகிருஸ்ணன்.
உணர்ச்சி— அறிவு– ஓர் துறவி— (சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களைப் புரிந்து கொள்ளல்) – பகுதி 03
சுவாமி விபுலாநந்தரின் தமிழ் மொழி மீதான பார்வை எத்தகையது, அது அவரது வாழ்வுக்காலங்களில் மாற்றம் கண்டதா என்பதை ஆராய்கிறார் பேராசிரியர் மௌனகுரு. ஆரம்பத்தில் அவரது எழுத்துக்கள் தமிழுணர்ச்சி மேலிட்டமையாக இருந்த போதிலும் காலக்கிரமத்தில் அவை அறிவுசார் ஆய்வுகளாக மாறின என்பது அவரது கருத்து. தமிழர் வரலாறு, தமிழ் உணர்வின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றுக்கான வரலாற்றுக் காரணங்கள் ஆகியவற்றை முன்வைத்து தனது கருத்தை பேராசிரியர் வலியுறுத்துகிறார்.
