“வடக்குச் சட்டியும்- கிழக்குச் சட்டியும்.!” யாழில் மீன் கரைந்தால் சட்டிக்குள் தானாம், மட்டக்களப்பில்.?  (மௌன உடைவுகள்-88)

‘கிழக்கில் முஸ்லீம்கள், சிங்களவர்கள் அதிக பிரதிநிதித்துவத்தை பெற்று விடுவார்கள் என்று காட்டுகின்ற வங்குரோத்து அரசியல் ஒரு பக்கம். யாழ்ப்பாணத்தில் வீணை,கை, தொலைபேசி, யானை எல்லாவற்றையும் கூட  ஒரே சட்டிக்குள் பார்க்கின்ற உங்களால்  கிழக்கில் -மட்டக்களப்பில் படகு, கப்பல், மரம், மொட்டு, யானை இவற்றை ஏன் ஒரே சட்டிக்குள் பார்க்க முடியவில்லை. வடக்கில் வெவ்வேறு தமிழ்த்தேசிய கட்சிகள், தமிழ்த்தேசிய எதிரணி இணக்க அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளின் எம்.பி.க்கள் ஒரு சட்டிக்குள் கரையலாம் ஆனால் கிழக்கில் அது  நடக்கக்கூடாது. ‘ 

மேலும்

இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் ஒற்றுமை என்பது யாது? (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-06)

‘தமிழ் மக்கள் ‘வாக்குப்பெட்டி’ யை மையமாக வைத்து ஒற்றுமைப்படுவது என்பது உண்மையான ஒற்றுமையாகமாட்டாது. பண்பு மாற்ற அரசியலை மையமாக வைத்து நேரடியாகக் கூறப்போனால் ‘புலி நீக்க’ அரசியலை மையமாக வைத்து ஒற்றுமைப்படுதலே இன்றைய தென்னிலங்கை- இந்து சமுத்திரப் பிராந்திய மற்றும் பூகோள அரசியலுக்குப் பொருத்தமானது.’

மேலும்

எதிர்ப்பரசியலின் காலம் முடிந்தது (02)

‘எஸ்.ஜே.வி. செல்வநாயத்தைச் சொல்லியே தமிழரசுக் கட்சி இன்னும் உயிர் வாழ்கிறது. அப்படித்தான் பத்மநாபாவைச் சொல்லி ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் சிறி சபாரத்தினத்தைச் சொல்லி ரெலோவும் உமா மகேஸ்வரனை வைத்து புளொட்டும் செயற்படுகின்றன. இப்படித்தான் பிரபாகரனை (புலிகளை) வைத்துப் பல தரப்புகளும் பிழைத்துக் கொள்கின்றன. எவையும் தமது தொடக்க நிலைத் தலைவர்களைக் கடந்து, புத்தடையாளமாக எழுச்சியடையவில்லை.’

மேலும்

தமிழ்ப் பாசிசத்துக்கு பலியான சாம் மற்றும் கலா தம்பிமுத்து தம்பதி!

அமரர்கள் சாம் தம்பிமுத்து – கலா மாணிக்கம் ஆகியோரின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு 16.05.2024 அன்று புளியந்தீவு, மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றபோது செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஆற்றிய நினைவேந்தல் உரை  இது.

மேலும்

எஸ்.பொ. வின் காமசூத்திரம்

சிறுகதை, நாவல், நாடகம், நனவிடை தோய்தல், அரசியல், திறன்நோக்கு, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் தனது எழுத்தூழியத்தினால் சிகரம் தொட்டவர். தமிழ் இலக்கிய விஞ்ஞானியாக கருதப்பட வேண்டியவர் எஸ்.பொ. என அறியப்பட்ட எஸ். பொன்னுத்துரை. அவரது 92 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தக்குறிப்பு பதியப்படுகிறது.

மேலும்

நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்

‘தமிழ் மக்கள் சமாதானத்திலும் அமைதித் தீர்விலும் பற்றுக் கொண்டவர்கள். அதையே அவர்கள் நாடுகிறார்கள் என்ற நம்பிக்கை பிற சமூகங்களிடம் வலுப்பெறவில்லை. தாம் சமாதானத்தின் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம் என்று சத்தியம் செய்தாலும் அதை நம்பக்கூடிய சூழல் இன்னும் பிற சமூகங்களிடம் உருவாகவில்லை. இதைப்பற்றிய மீளாய்வும் கள ஆய்வும் மிக அவசியமானது. சமாதானத்திலும் தீர்விலும் மெய்யாகவே எமக்குப் பற்றிருக்குமானால் இந்த ஆய்வைச் செய்து, அதற்கான பரிகாரமும் காணப்பட வேண்டும். இல்லையெனால் இந்த மாதிரி அணிகள், குழுக்கள், பிரிவுகள் என்றே நிலைமை நீடிக்கும்.’

மேலும்

காற்றாடிகளை வரைதல்

சிறார் துஸ்பிரயோகம், பெண்கள் மீதான துன்புறுத்தல்களை எதிர்கொள்வதில் உள்ள தலைமுறை இடைவெளி இன்னமும் மேற்கு நாடுகளிலும் பெரிதாகவே இருக்கின்றது. தமது சமூகத்தில் இவற்றை எதிர்கொள்வதில் இரு பெண்களுக்கு இருக்கும் அவதியை பேசுகின்றது உமாவின் இந்தச் சிறுகதை.

மேலும்

சாம்.தம்பிமுத்து : கொலை செய்தவர்களே அஞ்சலி செலுத்தினர்”.! (மௌன உடைவுகள்-87)

மட்டக்களப்பில் நடந்த சாம். தம்பிமுத்து அவர்களுக்கான அஞ்சலி கூட்டத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டதை கடுமையாக விமர்சிக்கும் அழகு குணசீலன், இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்கிறார்.
அப்படியானால் புலிகளின் விசுவாசிகள் தம்மை சுயவிமர்சனம் செய்ய உண்மையிலேயே தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

மேலும்

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ; தமிழர் அரசியல் எங்கே போகிறது?

‘இதே, நிலைவரங்கள் தொடருமாக இருந்தால், உலகம் கவனிக்காத ஒரு மக்கள் கூட்டமாக இலங்கை தமிழர்களும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் முழக்கங்களைச் செய்துகொண்டு குடாநாட்டுக்குள் மாத்திரம்  கொக்கரிக்கின்ற ஒரு கூட்டமாக தமிழ் அரசியல்வாதிகளும் மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.’

மேலும்

மே 18

‘வன்முறைகளை நினைவு கூர்தல் என்பது மக்களுடைய இணக்கப்பாட்டையும், சகோதரத்துவத்தையும், சகவாழ்வையும் முன்னிறுத்துதலாக அமைதலே காலத்தின் தேவை. முள்ளிவாய்க்கால் குறியீடு என்பது அரசவன்முறையின் குறியீடு என்பதன் ஆழமான அர்த்தத்தை முன்னெடுப்பதே மக்களின் ஒன்றிணைவுக்கான முதல்படி.’

மேலும்

1 42 43 44 45 46 53