ஐக்கியத்தை வலியுறுத்துவோரும் சரி, ஐக்கியத்தை உருவாக்க வேண்டிய சக்திகளும் சரி, ஐக்கியப்பட வேண்டிய தரப்பினரும் சரி, ஐக்கியத்துக்கு எதிரானதாகவே செயற்படுவதைக் காண்கிறோம். இவற்றின் அக – புற நிலைகள் ஐக்கியத்துக்கு ஒருபோதுமே சாத்தியமாக இல்லை. செய்தியாளர் கருணாகரன் எழுதும் தொடர்.
Category: அரசியல்
ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் வரவு செலவுத் திட்டம் 2024
அடுத்த ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவு திட்டம், அதில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற உதவாது என்று கூறும் வரதராஜ பெருமாள், தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் பின்னர் சமாளித்துக்கொள்ளலாம் என்பது ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் போலும் என்கிறார்.
இலங்கை விஜயத்தை கலைஞர் கருணாநிதி கைவிட நிர்ப்பந்தித்த எதிர்ப்பு
‘ நாம் 200 ‘ நிகழ்வில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் காணொளிச்செய்தி ஔிபரப்பப்படாததை அடுத்து மூண்ட சர்ச்சையின் பின்புலத்தில் ஒரு பார்வை.
பரதநாட்டியம் : பெண்பால்…..! (மௌன உடைவுகள் – 55)
பரதநாட்டியம் குறித்த ஒரு மதகுருவின் சர்ச்சைக்கருத்தால் எழுந்த விவகாரத்தை இரு இன தலைவர்களும் கண்டிப்போடு இணைந்து கையாள தயங்கிய நிலைமையை வன்மையாக கண்டிக்கும் இந்த கட்டுரை, இருந்த போதிலும் சில தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் இந்த விடயத்தில் ஓரளவு பொறுப்போடு கருத்து பரிமாறப்புறப்பட்டமை சாதகமான ஒரு அறிகுறி என்கிறது. இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளில் பெண்கள் இலக்கு வைக்கப்படுவது ஒரு சாபக்கேடு என்றும் கட்டுரை பேசுகின்றது.
மாகாணசபைகள் வரலாற்றின் மீள்பார்வை
மாகாணசபைகள் உருவாகுவதில் முக்கிய பங்காற்றிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபாவின் பிறந்த தினம் இம்மாதம் 19 ஆம் திகதி ஆகும். இன்று அந்த மாகாண சபைகளின் தாற்பரியம் உணரப்பட்ட சூழ்நிலையில் இலங்கையின் இன்றைய நிலைமையை ஆராய்கிறார் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 08)
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 08.
தலைமை மாறும் அரசியலையல்ல தமிழர் தலைவிதியை மாற்றும் அரசியலையே இன்று தமிழர்கள் அவாவி நிற்கிறார்கள்
“ஆளை மாற்றுகிற அரசியலையல்ல இன்று தமிழ் மக்கள் அவாவி நிற்பது ; அரசியலை மாற்றுகிற ஆள்தான் இன்றைய அவசரத் தேவை. சம்பந்தனின் பதவி விலகல் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை.”என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
புலம்பெயர் மண்ணில் துப்பரவு பணி செய்து தாயகத்தில் பசுமை வளர்ப்பவர்
இலங்கையில் பசுமையாக்கல் முயற்சியில் ஈடுபடும் தரன் ஶ்ரீ ஒரு முன்னாள் விடுதலைப்போராளி. புலம்பெயர் வாசி. இங்கு தமது முயற்சிக்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு போதாது என்கிறார். செவ்வி காண்பவர் செய்தியாளர் கருணாகரன்.
யாழ் நூலின் தோற்றம்
சிலப்பதிகாரத்திலும் மட்டக்களப்பு வாவியின் நீரரமகளிரின் பாடுமீன் இசையிலேயும் (பாடும்மீன்) மனதைப் பறிகொடுத்த சுவாமி விபுலானந்தர் பண்டைத் தமிழர்களுடைய இசைப் பாரம்பரியத்தில் பாவனையிலிருந்து அழிந்துபோன ‘யாழ்’ எனும் இசைக் கருவியை ‘யாழ்நூல்’ மூலம் மீளுருவாக்கம் செய்தார்.
வே. பிரபாகரன் : தம்பியில் இருந்து தலைவர் வரை……!
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பற்றி வந்துள்ள புத்தகம் ஒன்று அந்த அமைப்பின் ஆதரவாளர்களால் எதிர்க்கப்படுகின்றது. அந்த புத்தகம் குறித்த அழகு குணசீலனின் விமர்சனம் இது.
