“நெருக்கடிகள் நிறைந்த யதார்த்தப் பரப்பிருக்கும்போது அதைப் பொருட்படுத்தாமல் ஒற்றுமையைப் பற்றிக் கனவு காண்கிறார்கள் சிலர். இதை விட தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டுமானால், தனியே ஆயிரம் அணிகளின் சங்கமம் என்று சொல்லிக் கொண்டிருக்காமல் எந்த அடிப்படையில், எதற்காக, எந்த இலக்கை எட்டுவதற்காக எப்படியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற தெளிவு இவற்றுக்கு ஏற்பட வேண்டும்.”
Category: அரசியல்
சபாநாயகர் இராஜினாமா: எதிர்க்கட்சிகளின் முதல் வெற்றி!(வெளிச்சம்: 030)
“சபாநாயகர் விடயத்தில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த(?) செயற்பாடு ஜனநாயக பாராளுமன்ற அரசியலுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி. ஒரு ஜனநாயக நாட்டில் அதுவும் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையை கொண்டுள்ள ஒரு பாராளுமன்றத்தில் குறைந்ததளவான உறுபினர்களுடன் எதிர்க்கட்சிகள் இதை சாதித்துள்ளன என்று வகையில் யானை பலம் கொண்ட ஒரு அரசாங்கத்தில் பூனைப்பலம் கொண்ட எதிர்க்கட்சிகளின் முதல் வெற்றி இது. அதேவேளை பெரும்பான்மை பலத்தை கொண்டு ஜனநாயகத்தின் பேரில் ஒரு வரலாற்று தவறை இழைக்காமல் பாராளுமன்ற ஜனநாயக அரசியலுக்கு ஒரு புதிய பாதைக்கான திசையை காட்டியிருக்கிறது என்.பி.பி.”
செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் – ஒர் இலக்கியத் தளம்
“எழுத்தாளரும்,கலை இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளருமான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் 13.12.2024 ஆகிய இன்று அகவை எழுபத்திநான்கைப் பூர்த்திசெய்து தனது எழுபத்தைந்தாவது அகவையுள் காலடி எடுத்துவைப்பதையொட்டி இக் கட்டுரை இடம்பெறுகிறது.”
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகாரப் பரவலாக்கத்தில் அதன் நிலைப்பாடும்
“உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பின்னர் தமிழ் மக்களை நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான பாதையில் வழிநடத்தத் தவறிய தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் 13 வது திருத்தம் மற்றும் மாகாணசபை முறைமை தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை அரசாங்கம் இனிமேலும் கருத்தில் எடுக்கத் தேவையில்லை.”
கிழக்கில் அருணின் அரசியல் முக்கியத்துவம்……!(வெளிச்சம்:029)
“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் என்.பி.பி. அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக அருண் ஹேமச்சந்திர அதிக முக்கியத்துவத்தையும், மக்களின் கவனஈர்ப்பையும் பெற்ற ஒருவராக உள்ளார். “
நம்பிக்கை வைப்பதற்கான ஒரு நேரம்; காப்பாற்றுவதற்கு ஒரு உறுதிமொழி!
“ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தான் பேசுகின்ற பண்புகளின் பிரகாரம் இதுவரையில் வாழ்ந்தும் நடந்தும் வருகின்றார் என்று தோன்றுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்று இரு மாதங்களே கடந்திருக்கும் நிலையில், நிச்சயமாக எதையும் கூறுவது தற்போதைய தருணத்தில் பொருத்தமில்லாததாக இருக்கக்கூடும். ஆனால், அவரது சொல்லிலும் செயலிலும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் காண்பிக்கின்ற அக்கறையிலும் நேர்மையின் அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன.”
அரசியல் தலைவர்களே! சிலு சிலுப்பு வேண்டாம்! பலகாரங்களைப் படையுங்கள் (சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-29)
“’13’முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டுமாயின் முதலில் தேவை அதற்கான அரசியல் விருப்பமாகும் (Political Willingness). ஆனால் இந்த அரசியல் விருப்பம் அரசாங்கம் மற்றும் தமிழர் கட்சிகள் இருதரப்பாரிடத்திலும் இல்லை; இருந்தால் இந்த விவகாரம் இவ்வாறு எடுப்பார் கைப்பிள்ளையாகி ஒத்துப்பட்டுத்திரியத் தேவையில்லை; அதற்கான அவசியமுமில்லை.”
தமிழ்த்தேசிய சாராயக்கடை : செய்கூலியும், சேதாரமும்….!-(வெளிச்சம்:028)
“புலிகளே அனைத்து மனித அறங்களையும் துறந்து தேசிய விடுதலைப்போராட்டத்தின் பெயரில் “காசுக்காக சாராயக்கடை” நடாத்தியிருந்த போது, அவர்களின் பினாமிகளான பாராளுமன்ற அரசியல்வாதிகளிடம் இதை விடவும் வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும்? இதனால் இந்த சாராய வியாபார அரசியல் ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல. தமிழ்த்தேசிய மக்கள் திரட்சியை ஏற்படுத்துவதற்கு, மக்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டாமா?”
வாழைப்பழத்தை உரித்து கொடுத்த ரில்வின் சில்வா…!(வெளிச்சம்:027)
NPP யின் மூத்த உறுப்பினரான ரில்வின் சில்வா அவர்கள் அண்மையில் வெளியிட்ட சில கருத்துகள் குறித்த அழகு குணசீலனின் கடுமையான விமர்சனம் இது. அவரது பேச்சுகள் NPP யின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முரணானது என்கிறார் குணசீலன்.
தமிழர்களிடையே ‘மாற்று அரசியல் சக்தி’ யொன்று மேற்கிளம்ப வேண்டும்.(சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-28)
“தேசிய இனங்களின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து நடப்பதுதான் உண்மையான பண்பு மாற்றமாகும். தேசிய இனங்களின் தனித்துவமான அரசியல் அபிலாசைகளை இடதுசாரித்துவம் எப்போதும் அங்கீகரித்தும் வந்துள்ளது. இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி ஏனைய தென்னிலங்கைக் கட்சிகளைப்போல் வெறுமனே கட்சி அரசியலுக்குள் மூழ்கித் தவறிழைக்குமானால் தமிழ் மக்களின் மனதை அதனால் வெல்ல முடியாது போகும். அது கூறும் முறைமை மாற்றமும் அர்த்தமில்லாமல் ஆகிவிடும்.”
