புலம்பெயர் மண்ணில் துப்பரவு பணி செய்து தாயகத்தில் பசுமை வளர்ப்பவர்
இலங்கையில் பசுமையாக்கல் முயற்சியில் ஈடுபடும் தரன் ஶ்ரீ ஒரு முன்னாள் விடுதலைப்போராளி. புலம்பெயர் வாசி. இங்கு தமது முயற்சிக்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு போதாது என்கிறார். செவ்வி காண்பவர் செய்தியாளர் கருணாகரன்.
யாழ் நூலின் தோற்றம்
சிலப்பதிகாரத்திலும் மட்டக்களப்பு வாவியின் நீரரமகளிரின் பாடுமீன் இசையிலேயும் (பாடும்மீன்) மனதைப் பறிகொடுத்த சுவாமி விபுலானந்தர் பண்டைத் தமிழர்களுடைய இசைப் பாரம்பரியத்தில் பாவனையிலிருந்து அழிந்துபோன ‘யாழ்’ எனும் இசைக் கருவியை ‘யாழ்நூல்’ மூலம் மீளுருவாக்கம் செய்தார்.
வே. பிரபாகரன் : தம்பியில் இருந்து தலைவர் வரை……!
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பற்றி வந்துள்ள புத்தகம் ஒன்று அந்த அமைப்பின் ஆதரவாளர்களால் எதிர்க்கப்படுகின்றது. அந்த புத்தகம் குறித்த அழகு குணசீலனின் விமர்சனம் இது.
ஜனாதிபதி ரணிலும் தேர்தல்களும்
அடுத்து வரக்கூடிய தேர்தலில் தன்னை வெற்றிகரமான ஒரு வேட்பாளராக நிலைநிறுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் முயற்சிகள் பல குழப்பங்களை ஏற்படுத்துவதாக கூறும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் , நாட்டு மக்களுக்கும் இது நல்லதல்ல என்று விமர்சிக்கிறார்.
மகாவம்ச மனோபாவம்: இலங்கையின் இன நல்லிணக்கம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்!
மகாவம்ச மனோபாவம் என்றால் என்ன என்பதை இங்கு விளக்க முயலும் எம்.எல். எம். மன்சூர் அவர்கள், இதன் மூலமான இன்றைய பாதிப்புகளுக்கு “சிறுபான்மை மக்களும் இலங்கையின் சமமான பிரஜைகளே” என்பதை ஏற்க மறுக்கும் சிங்கள தேசியவாதிகளே காரணம் என்கிறார்.
“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல்அங்கம் – 07)
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 07.
விவேகமற்ற தமிழ்த் தலைமைகளின் வெட்டிப் பேச்சால் வில்லங்கத்தில் தமிழ் மக்கள் (வாக்குமூலம்-86)
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற தமிழ்க்கட்சிகளின் முயற்சி விவேகமற்றது
என்று கூறும் கோபாலகிருஸ்ணன், அது தமிழ் மக்களுக்கு ஆபத்தாக முடியலாம் என்று எச்சரிக்கிறார்.
காலாவதியானது ஹர்த்தாலா….? தமிழ்த்தேசிய அரசியலா.?(மௌன உடைவுகள் – 53)
தமிழ் தேசியக்கட்சிகளின் அண்மைய ஹர்த்தால் படுதோல்வியில் முடிந்த ஒன்று என்று கூறும் அழகு குணசீலன், இது போராட்ட வடிவத்தின் தோல்வி அல்ல கட்சி அரசியலின் தோல்வி என்கிறார்.
‘குழப்ப சூழ்நிலையில் மாகாணசபை நிர்வாகம்‘ -மாகாணசபை முன்னாள் செயலர் தெய்வேந்திரம்
‘மாகாண சபைக்கான அதிகாரங்கள் இன்னும் தேவை என்பது உண்மையே. 13 திருத்தத்தில் சொல்லப்படும் அதிகாரங்களை முழுமைப்படுத்தினால் பெரும்பாலான அதிகாரங்களை நாம் பெறமுடியும். ஆனால், தற்போதிருக்கின்ற அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தினாலே எமது மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களைச் சீராக நிறைவேற்ற முடியும். இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தாமல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சாட்டுப்போக்குகளைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.’
இனவெறிக் கூச்சலும் மன்னிப்புக் கோரலும்
இன உறவுகளைப் பொறுத்தவரை, சிங்களவர்கள் மத்தியில் நிலவும் சிந்தனைக் குழப்பம், செயல் குழப்பம் ஆகியவற்றுக்கு சிங்கள பௌத்த சிந்தனையில் ஒழுக்க நியாயப்பாரம்பரியம் ஒன்று இல்லாதமை ஒரு முக்கிய காரணமாகும் என்று முற்போக்கு சிந்தனையுடைய வரலாற்றாசிரியர்கள் கூறியிரு்கிறார்கள்.