கிழக்கில் முஸ்லிம் – தமிழ் உறவு என்பது அந்தப் பிராந்தியத்தின் ஒரு பாரம்பரியம். அதனைப் புரிந்துகொள்ளாது தவறான முன்னெடுப்புக்கள் மூலம் கெடுக்கும் நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளும், மதத்தலைவர்களும் அவ்வப்போது ஈடுபடுகின்றனர். ஆனால், அந்த உறவை மீட்டெடுக்கும் சக்தி சாதாரண மக்களின் கைகளிலேயே இருக்கிறது என்று பல கடந்தகால ஆதாரங்களுடன் வாதிடுகிறார் அழகு குணசீலன்.
Category: தொடர்கள்
மலையக மக்களுக்கு துரோகம் செய்த யாழ் மேலாதிக்கம்-(சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 04)
கிழக்கு மக்களுக்கு எதிராக மாத்திரமல்லாமல் மலையக தமிழ் மக்களுக்கு எதிராகவுமே யாழ் மேலாதிக்கத்தின் செயற்பாடு இருந்தது என்று கூறுகிறார் எழுவான் வேலன். தனது கூற்றுக்கான ஆதாரங்களை அவர் சுதந்திரம் கிடைத்த கால நிகழ்வுகளில் இருந்து முன்வைக்கிறார். தேசியக் கொடி விவகாரத்திலும் யாழ் மேலாதிக்க தலைவர்களின் செயற்பாடு குழறுபடியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
சொல்லத் துணிந்தேன்-78
தோழர் பத்மநாபா பற்றிய தனது உரை ஒன்றை ஒட்டி இந்த வாரப் பத்தியை எழுதும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அதிகாரப்பரவல் ஒன்றே தமிழர் பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்றும், ஆனால், அந்த விடயத்தில் அக்கறையற்ற போக்கை தமிழ் கட்சிகள் காண்பிப்பதாகவும் குற்றஞ்சாட்டுகிறார். ஆகவே அனைத்து தரப்பும் தேர்தல் அரசியலுக்கு அப்பால் இணைந்து, ‘அதிகாரப் பகிர்வு இயக்கம்’ ஒன்றினைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
சாதி என்பது தமிழர் மத்தியில் பழங்கதை அல்ல! (சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 03 )
சாதி என்பது பழங்கதை, வர்க்க ரீதியிலேயே தமிழர் பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும் என்று இடதுசாரிகளால் பார்க்கப்படுவது குறித்த தனது கருத்தை இங்கு முன்வைக்கிறார் எழுவான் வேலன். சாதியும் சேர்ந்தே இன்றுவரை தமிழர் விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் வாதிடுகிறார்.
கிழக்கு அரசியல்: பிரதேசவாதமா? (காலக்கண்ணாடி 44)
தமிழர் தாயகத்தில் சமூக பொருளாதார அரசியலில் மட்டுமன்றி கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களிலும் வேறுபட்டு நிற்கின்ற கிழக்கு மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற போக்கானது அப்பட்டமான ஒடுக்குமுறையும், ஜனநாயகப் பற்றாக்குறையுமாகும் என்று வாதிடும் அழகு குணசீலன் அவற்றின் விளைவே கிழக்கின் தனித்துவ அரசியல் உணர்வு என்று கூறுகிறார்.
புலம் பெயர்ந்த சாதியம் 10
இலங்கையில் ஆரம்பத்தில் தமிழர் மத்தியில் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஓரளவு நடந்த போதிலும் 80களில் சிங்கள அரசாங்கத்தின் இனவாத அடக்குமுறைகள் அனைத்தையும் பேரினவாதத்துக்கு எதிரான திசையில் மாத்திரம் திருப்பி விட்டதாக கூறுகிறார் தேவதாசன்.
தலைமை மாடு முன்னால்……. பட்டி பின்னால்…….! (காலக்கண்ணாடி – 43)
இலங்கை விடயத்தில் அண்டை நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் தமது நலன்களை முன்வைத்தே தீர்மானங்களை எடுக்கின்றன. ஆனால், சர்வதேச சமூகத்தை உரிய வகையில் அணுகத்தெரியாமல் தமிழர் தரப்பு எல்லாவற்றையும் கடந்த காலம் போல குழப்பிக்கொள்வதாக விமர்சிக்கிறார் அழக் குணசீலன்.
மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 4
மட்டக்களப்பில் ஒரு நூலகம் அமைக்கப்படும் சூழ்நிலையில், ஒரு நூலகம் அமைய வேண்டிய விதம் குறித்த தனது அவதானங்களை தொடர்ச்சியாக எழுதிவரும், நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள், இந்தப்பகுதியில் கட்டட அமைப்பு பிரத்தியேகமான பிரிவுகளுக்கு எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 02
“பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா?” என்ற தலைப்பில் சிவலிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரைக்கான தனது பதில் கருத்தை தொடர்ச்சியாக பதிந்துவரும் எழுவான் வேலன், தனது இரண்டாவது பகுதியாக இதனை பதிகிறார். இரு பிரதேசங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளை சுட்டிக்காட்டும் அவர், காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் யாழ். மேலாதிக்கவாதிகளால் கிழக்கு பாதிக்கப்பட்டதாக வாதாடுகிறார்.
தோழர் நாபா நினைவுகள்: நெஞ்சில் ஒரு நெருஞ்சி முள் (சொல்லத் துணிந்தேன்-77)
தோழர் பத்மநாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 31 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது ஆளுமையை நினைவுகூருகிறார் பத்தி ஆசிரியர் கோபாலகிருஸ்ணன்.
வீரமும்- விவேகமும்- தன்னல மறுப்பும்- தத்துவார்த்தத் தெளிவும்- தியாகமும்- மானுட நேயமும் நிறைந்த உண்மையான மக்கள் தலைவனாகவே தோழர் பத்மநாபாவை வரலாறு அடையாளப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.
