— அகரன் — சிறுகதைக்கு புக்கர் பரிசும், இலக்கியத்திற்கான நோபல் பரிசும்
Category: சிறுகதைகள்
‘என்னுள் நானாக நீ’ (சிறுகதை)
நீ தேடுவது உனக்குள்ளே, உன்னோடு இருக்கும். அது உன்னைச் சமரசம் செய்யும், ஆலோசனை கூறும், வழி நடத்தும். அதுதான் கடவுள் என்றும் சொல்லலாம். தயாக, தந்தையாக, சகோதரமாக, நட்பாக, காதலாக அது உன்னில் நிறைந்திருக்கலாம். சபீனா சோமசுந்தரத்தின் கற்பனையில் ஒரு சிறுகதை.
ஜெனிவாவுக்குப்போன ஜெமீந்தாரு (சிறுகதை)
தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் மிகவும் அரிதாகவே பயிலப்படும் ‘ரிங்லோடன்’ உத்தியில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஒரு கதாபாத்திரத்தின் உரையாடல் மட்டும் கதையில் இடம் பெறுதலே இவ்வுத்தியாகும். அதன் ஊடாகக் கதை நகரும்.
தொலைபேசியின் ஒரு முனையிலிருந்து சிவகாந்தன் என்ற யாழ்ப்பாண எழுத்தாளர் ஒருவரால் பேசப்படும் உரையாடல் மட்டுமே இங்கு இடம் பெற்றுள்ளது.
இயக்க விதியும்: சண்டையும் (சிறுகதை)
பிற அகதிகளை, அவர்களது கதைகளை, அவர்கள் கடந்துவந்த போரை, அழிவுகளை தனது அனுபவங்களுடன், இலங்கை நினைவுகளுடன் பொருத்திப்பார்க்க முனையும் ஒரு அகதியின் கதை இது. அப்படியான ஒரு அகதி எழுதிய கதை இது. அகரனின் கதை…
பெற்ற(வன்) கடன்
தவறுகளில் இருந்து தப்பிக்கொள்ள வழிகளை தேடலாம். ஆனால், எல்லா நேரங்களிலும் அது பலன் தராது. சபீனா சோமசுந்தரம் எழுதிய சிறுகதை.
கள்ள வீசா – ஒரு கனவு
புலம்பெயர் தேசத்தில் அகதி அந்தஸ்து பெறுவதற்காக ஆடும் ஆட்டங்கள், போடும் வேசங்கள் கலையும் நாள் அந்த அந்தஸ்து கிடைக்கும் நாளே. ஆனால், அதற்கான காத்திருப்பும், கனவும் நீண்டவை. இது ஒரு அகதியின் கனவு. அகரனின் கதை.
அம்மாவைச் சொல்லி என்ன செய்ய?
புலம்பெயர் தமிழனின் அன்றாட வாழ்க்கையை இலங்கையின் இன்றைய நெருக்கடி எப்படி பாதித்திருக்கின்றது என்பதை பேசுகிறது இந்தக் கதை. உண்மையில் இன்று இலங்கை பற்றி அதிகம் புலம்புபவர்கள் இவர்கள்தான்.
மண்ணெண்ணை வரிசை
பொருட்களுக்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பது இலங்கையில் புது விடயம் அல்ல. எழுபதுகளிலும் பலர் இந்தச் சூழ்நிலையை அனுபவித்தனர். அப்போது பத்திரிகைகளில் அவை குறித்து பல கட்டுரைகள் கதைகள் எல்லாம் வந்தன. இப்போது மீண்டும் அந்த நிலையை நினைவுபடுத்தும் ஒரு கதை.
பாடையேறினான்
இலங்கையின் பொருளாதாரம் கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமானத்திலும் பெருமளவு தங்கியுள்ளது. ஆனால், வெளிநாட்டில் வேலைகளுக்கு செல்லும் பலரது குடும்பங்கள் தினமும் பல சோகச் சம்பவங்களை எதிர்கொண்டு நிற்கின்றன. அப்படியான ஒரு குடும்பத்தின் கதை இது.