உயிரின் கண்ணீர்த்துளி உலகின் இரத்தத் துளி

“1980 களின் முற்பகுதியில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் மொழிபெயர்த்த ‘பலஸ்தீனக் கவிதைகள்‘ தமிழ்ப்பரப்பில் உண்டாக்கியதையும் விடக் கூடிய கனத்தை, வலியை, வலிமையை இந்த மரித்தோர் பாடல்களில் காணலாம். இங்கே உள்ளவை ஒவ்வொன்றும் நம்முடைய உயிரில் அதிர்வை உண்டாக்குவன. அத்தனையும் சாட்சியமானவை.ஒவ்வொருவருடைய இறுதிக்கணச் சாட்சியங்கள். நிகழ் உண்மைகள். பலஸ்தீனக் கவிதைகள் அன்றைய நிலையில், போராட்டத்துக்கான பெரும் பங்களிப்பென்றால், இது இன்றைய சூழலில், மக்களின் மீதான அழிவுத் தாக்குதலில் பெரும் சான்றுத்துணையாகும்.”

மேலும்

ஜனாதிபதியின் உரைகளும், சுமந்திரனின் சாவால்களும்!(வெளிச்சம்:053)

“பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமக்குள்ள சிறப்புரிமையை பயன்படுத்தி இல்லாத, பொல்லாத பொய்களை பேசி வருகின்றனர். அந்த பாணியில் தான் ஜனாதிபதியும் தனது வழக்கு விடுபாட்டு சிறப்புரிமையை பயன்படுத்தி வாய்க்கு வந்தவாறு பேசி வருகிறார். இந்த போக்குகளை எதிர்க்கட்சியாக இருக்கும் போது கிழித்து தொங்கவிட்ட அநுரகுமார திசாநாயக்கவும், தோழர்களும் அதிகாரத்திற்கு  வந்த பின்னர் அதையே செய்கிறார்கள். இதற்கு  பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தல், புதிய அரசியல் கலாச்சாரம் என்ற வெள்ளையடிப்புக்கள் வேறு.”

மேலும்

அழகு குணசீலனின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’-செங்கதிரோன் பார்வையில்

(அழகு குணசீலன் அவர்களின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
நூல் 01.03.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா. செல்வராசா முன்னிலையிலும், கிழக்குப் பல்கலைக்கழகக் கலாசார பீடத் தமிழ் கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரம் தலைமையிலும் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றபோது பன்முகப்படைப்பாளியும் திறனாய்வாளருமான செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை.)

மேலும்

மகளிர் தினம்…. (கறுப்பு நட்சத்திரங்களில் இருந்து  ஒரு நட்சத்திரம்..!)

அரபு மொழியில் ‘மகளிர் தினம் ‘ எனத் தலைப்பிட்டு எழுதப்பட்ட இக்கதை பிரபல அரபுலகப் படைப்பாளி சல்பா பக்கிரால் எழுதப்பட்டது. ‘மௌனத்தின் உண்மையான முக்ககாடு’ என்ற தொகுப்பில் வெளிவந்துள்ள இச் சிறு கதையை ஜேர்மன் மொழிக்கு மாற்றம் செய்தவர் சுலேமான் தௌபிக்.  அண்மையில் மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட அழகு.குணசீலனின் ” கறுப்பு நட்சத்திரங்கள்” மொழிபெயர்ப்பு சிறுகதைத்தொகுப்பில் உள்ள பதினான்கு கதைகளில் இதுவும் ஒன்று.

மேலும்

“பேய்க்கு கால் இல்லை”

பேய்க்கும் சாமிக்கும் என்ன வித்தியாசம்? சாமி நல்லதா அல்லது பேய் நல்லதா? அல்லது இரண்டும் ஒன்றா? இரண்டும் நல்லவையா?, இல்லை இரண்டும் கெட்டவையா? குழம்புபவர்களுக்கு ஒரு கதை.

மேலும்

ஏ.பீர் முகம்மது எழுதிய ‘தைலாப்பொட்டி’ 

“புதியகோலத்துடன் வித்தியாசமான உருவம் – உள்ளடக்கங்களுடனும் உத்தியுடனும் நண்பர் பீர்முகம்மதுவின் ‘தைலாப்பொட்டி’ வெளிவந்துள்ளது. ‘மண்ணின் மொழியில் மக்களின் கதைகள்’ என மகுடமிட்டு வந்துள்ள ‘தைலாப்பொட்டி’க் கதைகள்யாவும் பருவமழை வயற்காட்டு மண்ணில் முதன்முதலாக விழும்போது எழும் புழுதிவாசம்போல மண்வாசனை கமழுமாறு பின்னப்பட்டுள்ளன.”

மேலும்

அழகு குணசீலனின் “கறுப்பு நட்சத்திரங்கள்”

அழகு குணசீலன் மொழி பெயர்ப்புக்கு எடுத்துக் கொண்ட கதைகளின் மாந்தர்கள், சூழல், கதைக்களம் என்பவை வேறுபட்டவைகளாக இருந்த போதிலும் குணசீலனுக்குள்; இருந்த மானுட நேசிப்பின் காரணமாக ஒவ்வொரு கதையின் பாத்திரத்தினுள்ளும், கதைக்களத்தினுள்ளும் தன்னை அடையாளம் கண்டிருக்கின்றார். இந்த அடையாளம் காணல் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. சமூக யதார்த்தத்தின் மீதும் அந்த யதார்த்தம் ஏற்படுத்திய தாக்கத்தின் அனுபவத்தின் மீதும் அவருக்கிருந்த உறவாடுகையின் விளைவாகும்.

மேலும்

வாழும் இலக்கியங்கள்!

ஒரு சினிமாவில் நாம் காட்சியை பார்த்து, ரசித்து விட்டுவந்தால் அது சினிமாவுக்கு வெற்றியல்ல.  அது வெறும்பொழுது போக்கு விடயமாகிறது . நாம் சினிமாவையோ, நாடகத்தையோ பார்த்துவிட்டோ அல்லது புத்தகத்தை படித்துவிட்டோ அதையிட்டு நமது மனம் சிந்தித்து கிளரும்போது அதுவே அந்தச் சினிமாவை, நாடகத்தை, புத்தகத்தை படைத்தவனது வெற்றிக்கு அடையாளமாகிறது.

மேலும்

“கனகர் கிராமம்”. அரசியல் – சமூக – வரலாற்று நாவல் (அங்கம் – 62)

உண்மை நிலவரங்களை உள்ளடக்கிய, ஆனால் நாவலாகத் தொடர்ந்த “கனகர் கிராமம்” அம்பாறை தமிழ் மக்களின் ஏக்கங்களை பிரதிபலிக்கும் மீள்குடியேற்றக் கனவுடன் இன்று நிறைவுபெறுகின்றது. ஆனால், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் துயர் இன்னமும் தொடர்கிறது.

மேலும்

 ‘கலைத் தேனீ’ அந்தனிஜீவா மலையக கலை இலக்கிய உலகின் ‘முதுசொம்’

“தனது முதுமையான வயதிலும்கூட தேனீபோல் பறந்துபறந்து பணியாற்றி எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, இலக்கிய ஆர்வலர்களைச் சந்திப்பதிலும் அவர்களுடன் எளிமையாகவும் அன்னியோன்னியமாகவும் அன்பாகவும் பழகுவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் அந்தனி ஜீவா காட்டும் ஆர்வம் பிரமிக்கவைப்பன.

  அதே வேளை அநீதி கண்டு கொதிக்கும்- மானுடத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் குணாம்சம் கொண்ட ஓர் இலக்கியப் போராளி அந்தனி ஜீவா.”

மேலும்

1 2 3 15