“அறியப்பட்ட பதற்றங்கள் மற்றும் வெளிப்படையான முரண்பாடுகளுக்கு மத்தியிலும், இந்தத் தளத்தின் பின்னணியில் உள்ள தலைவர்கள் தற்போது மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தும் ஒரு குறிப்பிட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட திட்டத்தை தெளிவாக முன்வைத்துள்ளனர் ;
ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல், நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் மற்றும் மக்களின் நிலங்கள் தொடர்பான மோதல்களுக்கு தீர்வு காணுதல். அத்துடன், மற்றைய சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்த உரையாடல்களுக்கான வாய்ப்புகளை இந்த தளம் படிப்படியாக உருவாக்கும் என்றும் அவர்கள் சேர்த்துக் கூறினர்.”
