அருணுக்கு ஆப்பு:  பேரினவாத முகவர் விரிவாக்கம்…..! (வெளிச்சம்: 060)

வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகளையும், மற்றைய கட்சிகளையும், முஸ்லீம் காங்கிரஸையும் இணைத்த பெருமை உண்மையில் ஜே.வி.பி.க்கே உரியது. வடக்கு கிழக்கில்  கடந்த ஏழு மாத காலத்தில்  ஜே.வி.பியின்  “இலங்கையர்கள் ” முலாம் பூசப்பட்ட  இன, மதவாத அரசியலை  சிறுபான்மைத் தேசிய இனங்கள் இனம் கண்டுகொண்டதன் விளைவு இது. இதனால் ஜே.வி.பி. தென்னிலங்கையில் பழைய அரசியல் எதிரியோடு, வடக்கு கிழக்கில் ஒரு புதிய அரசியல் எதிரியை தானாகவே ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இதைப் புரிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

மேலும்

மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் 

“தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஒரு சிலரிடமிருந்தாவது   கோரிக்கைகளும் கருத்துக்களும்  வருகின்ற அதேவேளை தமிழர் தரப்பில் அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசியல் ஆய்வாளர்களிடமிருந்தோ மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் மாகாணசபைகளின் நிருவாகங்களை மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அக்கறை வெளிப்படுவதில்லை என்பது ஒரு விசித்திரமான அம்சமாகும்.”

மேலும்

NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும்

“NPP செய்ய  வேண்டியது அறுவைச் சிகிச்சையே தவிர, புண்ணைத் தடவிக் கொடுத்தல் அல்ல. அதாவது தற்காலிக சுகமளித்தல் அல்ல. JVP யின் உருவாக்கம், அதனுடைய 60ஆண்டுகால அரசியல் முன்னெடுப்பு, NPP யின் 10ஆண்டுகால அரசியல் எல்லாம் System Change ஐ அடிப்படையாகக் கொண்ட அரசியல் மாற்றம் – ஆட்சி மாற்றமே. மக்களின் ஆணையும் அதற்கானதே. அதைச் செய்யவில்லை என்றால் எதற்காக NPP? ரணில், மைத்திரி, சஜித் போன்றவர்கள் போதுமே. அவர்களுடைய போதாமை – தவறுகளுக்கு – மாற்றுத்தானே அநுரவும் NPP யும்.”

மேலும்

பூகோள அரசியல்: மற்றொரு விடுதலைப் போராட்டம் மௌனித்தது….!(வெளிச்சம்: 059)

“தமிழ்த்தேசிய ஆயுத அரசியல் – அரசியல் தற்கொலைக்கு வழங்கிய வகிபாகம் என்ன….?

இதை இன்னும் கூட கேள்விக்கு உட்படுத்தாமல்  கனடாவில், இங்கிலாந்தில் நடக்கின்ற அரசியல் கண் காட்சிகள் குறித்து ஏட்டிக்கு போட்டியாக தற்பெருமை கொள்கிறோம். இவர்கள் முள்ளிவாய்க்காலின் போது என்ன செய்தார்கள் என்று கேட்கின்ற திராணி கூட இல்லை. 

தோல்வியை வெற்றியாகக் காட்சிப்படுத்துவது வெறும்  கட்சி அரசியல். இதற்கு நிலம், புலம் என்று வேறுபாடில்லை. இந்த அரசியலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க போர்வீரர்களை வெற்றி வீரர்களாக நினைவுகூருகிறார். தமிழ்த்தேசியம் புலிப்போர்வீரர்களை தோற்றுப்போனவர்களாக நினைவுகூருகிறது.  மொத்தத்தில் யுத்தம் மீண்டும் … மீண்டும்…எதிர்கால அரசியலுக்கு மூலதனமாகிறது.”

மேலும்

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின்  மனச்சாட்சியும் 

“இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலைகாட்டுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று ஓயாமல் கூறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க மீண்டும் நாட்டின் இனப்பிளவின் இருமருங்கிலும்  தேசியவாத அரசியல் உணர்வுகள் கூர்மையடையக்கூடிய  சூழ்நிலை தோன்றியிருப்பதை கவனத்தில் எடுத்து மீண்டும் இனமோதல்களுக்கு வழிவகுக்கக்கூடிய நிகழ்வுப்போக்குகளை தடுப்பதற்கான தலையாய  பொறுப்பைக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜே.வி.பி.யை வெற்றிக்கு வழிநடத்திய மனச்சாட்சி,  துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை பயன்படுத்த வேண்டும். கிடைக்கின்ற  வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தவறவிட்ட  தலைவர்களின் வரிசையில் அவரும் இணைந்துவிடக் கூடாது.”

மேலும்

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் முடிவுகள் குறித்த ஒரு நுண்ணாய்வு – வடக்கு கிழக்கு மாகாணங்களை முன்வைத்து (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-38)

“வடக்கு கிழக்கில் உள்ளூர்மட்ட அதிகாரங்களை (இது மாகாண சபைக்கும் பொருந்தும்) எக்காரணம் கொண்டும் அது எத்தகைய முற்போக்கு முகத்தைக் கொண்டிருந்தாலும்கூட ஒரு தென்னிலங்கைச் சிங்களப் பெரும்பான்மைக் கட்சியிடம் (தேசிய மக்கள் சக்தியிடம்) ஒப்படைப்பதற்கு வடக்கு கிழக்குத் தமிழர்கள் முழுமையாக விரும்பவில்லை அல்லது அதற்குத் தயாரில்லையென்பதை உணர்வு பூர்வமாக எடுத்துச் சொல்வதற்கு வேறு மாற்றுவழியில்லாமல்தான் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அவை கடந்த காலங்களில் எத்தனை அரசியல் தெப்பிராட்டியங்களைப் பண்ணியிருந்தாலும்கூட அவற்றைப் பொருட்படுத்தாமல் பெரும்பான்மையாக வாக்களித்திருக்கிறார்கள்.”

மேலும்

அம்ஷிகா (தற்)கொலை :  பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியும்…..!(வெளிச்சம்: 058)

“பாராளுமன்றத்தில் மகளிர் விவகார அமைச்சர் , அம்ஷிகா மரணம் தொடர்பாக அளித்த பதில்கள் திருப்தியாக இல்லை. இதே குறைபாட்டை பிரதமர் ஹருணி, பிரதம கொறடா அமைச்சர் பிமல் அளித்த பதில்களும் கொண்டுள்ளன. அவர்கள் அளித்த வரையறுக்கப்பட்ட பதில்கள் காரணமாக, அரசாங்க தரப்பை விடவும் சம்பவத்தை விபரமாக அறிந்திருந்த எதிர்க்கட்சியினர்  மேலும் விபரங்களை அறிய முற்பட்டனர். ஆனால் அகப்பை அரசாங்க தரப்பின் கைகளில் இருந்தபோதும் பானையில் இருக்கவில்லை. இது சமூகத்தின் தோல்வியானால் இவர்களை தெரிவு செய்ததால் சமூகம் தோல்வியடைந்துள்ளது என்று சொல்லலாமா?”

மேலும்

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் கதையும் நிலையும்

‘நீண்ட கால நோக்கோடு (அரசியல் அழுத்தங்களின்றி) சரியான வழிகாட்டலில் திட்டங்களுக்கான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். ஒருங்கிணைப்புக்குழுவில் இது  தொடர்பாகச் சரியான தீர்மானம் எடுக்கப்படுவது அவசியமாகும். இனியாவது கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு நல்லதொரு விடிவு கிட்டட்டும்.‘

மேலும்

உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் கூறும் செய்தி

“தங்களுக்கு தற்போது கிடைத்த வெற்றியை (தாங்கள் பங்கேற்காத கடந்தகாலப் போராட்டங்களை வெறுமனே நினைவு கூர்ந்துகொண்டு உணர்ச்சிமயமான கற்பிதங்களுடன் கூடிய கற்பனாவாத சுலோகங்களை எழுப்பும் (தோல்விகண்ட) அரசியல்பாதைக்கு தமிழ் மக்களிடமிருந்து கிடைத்த அங்கீகாரமாக தமிழ்க்கட்சிகள் நம்பினால் மீண்டும் தவறிழைப்பதாகவே அமையும்.”

மேலும்

வெளிகள் ஆயிரம் கோணங்கள் பல்லாயிரம்

தேவனின் வார்த்தைகளை விட சாத்தானின் வார்த்தைகளே  இங்கே அதிகம் ஈர்ப்புடையவை. இல்லையெனில், தம்மைச் சூழ்ந்திருக்கும் நற்கனிகளை விளைப்போரையெல்லாம் புறமொதுக்கித் தள்ளிவிட்டு, காயடிப்போரைத் தோளில் தூக்கிச் சுமக்குமா ஈழத் தமிழ்ச் சமூகம்? ஈழ விடுதலைப் போராட்டத்திலும் சமூக விடுதலைப் போராட்டத்திலும் ஏன் இலக்கியத்திலும் கூட அத்தகைய நல்ல வித்துகளும் நல்விளைவுக்கான முயற்சிகளும் இருந்தன; இருக்கின்றன. அவற்றை ஏற்று முன்கொண்டு செல்வதை விட, அவற்றுக்கு ஆதரவளித்துப் பலமாக்குவதை விட, எதிர்ச்சக்திகளின் மீது மோகம் கொண்டதே விதியானது. என்பதால்தான் எத்திசையின் பயனுறு வார்த்தைகளும் வெறும் சருகாகிப் புறமொதுங்கின. நடேசன் இங்கே முன்வைத்துப் பேசும் பிரதிகளிற் பலவும் தேவ வாக்கைத் தம்முள் கொண்டமைந்தவை. ஆயினும் தமிழ்ப் பெருந்திரளோ அவற்றைத் ‘தொட்டாற் சுடும்’என்று கருதி முகச்சுழிப்போடு விலக்கம் செய்து வருகிறது. சிறிய வட்டங்களே அவற்றைப் பேசியும் வாதிட்டும் முன்னெடுத்துச் செல்கின்றன.

மேலும்

1 2 3 37