இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரிகள், இந்தியாவும் சீனாவும் எதிரிகள், இஸ்ரேலும் ஈரானும் எதிரிகள், உக்ரைனும் ரஷ்யாவும் எதிரிகள், அமெரிக்காவும் ரஷ்யாவும், சீனாவும் எதிரிகள் இவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து சிறிலங்கா அரசுக்கு புலிகளை அழிக்க அனைத்து ஆதரவையும் வழங்கக்கூடியதாக இருந்தது? புலிகளுக்கு பயிற்சியும், ஆயுதமும் வழங்கிய இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்தே இதை செய்தார்கள் என்றால் அதற்கான காரணங்கள் யாருக்கு தெரியாவிட்டாலும் புலிகளுக்கு தெரியாமல் இருக்க முடியாது.
முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடாத்தி ஈரான் உள்ளிட்ட முஸ்லீம் உலகை பகைத்துக்கொண்டோம்.
பௌத்த கோயில்களில் தாக்குதல் நடாத்தி ஆசியாவின் பௌத்த நாடுகளை இலங்கை அரசின் பக்கம் நகர்த்தினோம்..
எதிரியுடன் இணைந்து இந்தியாவை எதிர்த்து, ராஜீவ்காந்தியை கொன்று இந்தியாவிலும், தமிழகத்திலும் ஆதரவை இழந்தோம்.
ஈழத்திற்கு எதிரிகளையும், சிறிலங்காவுக்கு நேச சக்திகளையும் புலிகளே உருவாக்கினர்.
உலகமயமாக்கல் வியாபார அரசியல் அன்றைய அனைத்து இராணுவ, வல்லரசு நிலைப்பாடுகளையும் தளர்த்தி பல பத்து ஆண்டுகளாகிறது. பூகோள அரசியல் என்பது இன்று முழுக்க முழுக்க சந்தை பொருளாதார அரசியல். இதை புரிந்து கொள்ளாமல் கலாவதியாகிப்போன குளிர்யுத்த கால வல்லரசு பூகோள அரசியலை “கலாநிதிகளும்” விளங்கிக்கொள்ளாததால், விளங்கியும் விடுதலையின் பேரில் கூலிக்கு மாரடித்ததால் வந்த வினை.”
மேலும்