ஊடகம்:  பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும் காண்…! (வெளிச்சம் 061)

“மட்டக்களப்பில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கை குறித்த தகவல் பரிமாற்றத்தில்/ செய்தியில் சமூக ஊடகங்களின் தேடுதல், கண்டறிதல், பகிர்தல் என்ற சமூக ஊடக அடிப்படை கருத்தியல் பொய்யான, பழைய தகவல்களை திரிபு படுத்தி பதிவிட்டு, படம் போட்டு கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. இவை தவறானவை என்று வெளிப்படையாக தெரியவந்த பின்னரும்/ பிடிபட்ட பின்னரும் எந்த ஒரு மரபு ஊடகமும், சமூக ஊடகமும் அதற்கான பொறுப்பை ஏற்று  தவறை திருத்திக்கொள்ள தயாராக இல்லை.  இது மிகவும் துரதிஷ்டவசமானது. அப்படியானால் மற்றவர்களை பொறுப்புக்கூறச் சொல்ல இவர்களுக்கு இருக்கின்ற தார்மீக உரிமை என்ன?”

மேலும்

NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா?

“NPP தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளவும் கவனத்திற் கொள்ளவும் வேண்டிய விடயங்கள் பல உள்ளன. 
தனக்குக் கிடைத்திருக்கும் வரலாற்று வாய்ப்பை NPP சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் யார்? எதிரிகள் யார் என்று அதனால் கண்டறிய முடியாதிருக்கிறது. முதிர்ச்சியும் பக்குவமும் நிதானமும் இல்லாத பலருடைய கைகளில் பொறுப்புகள் பகிரப்படுகின்றன. ஆற்றலுள்ளவர்களையும் NPP யின் மெய்யான ஆதரவாளர்களையும் அது கண்டறிய முடியாமல் தடுமாறுகிறது. அல்லது அவ்வாறானவர்களை அதனால் உள்வாங்க முடியவில்லை. அதற்குள் நிலவுகின்ற உளக் குழப்பங்களே இதற்குப் பெரிய காரணங்களாகும். இதெல்லாம் NPP ஐப் பலவீனப்படுத்துகின்றன.”

மேலும்

போர்வீரர்கள் நினைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவும்

“போர்வெற்றியில் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை என்பதை உணர்த்திய அவரின் உரையை சிங்கள தேசியவாத சக்திகள் கடுமையாக கண்டனம் செய்திருக்கின்றன.  ஆனால், தமிழ் அரசியல் சக்திகள் அவரது உரையை வரவேற்காதது துரதிர்ஷ்டவசமானது. கடந்த காலத்தில் தேசிய போர்வீரர்கள் நினைவு நிகழ்வுகளை இனப்பிளவை மேலும் ஆழமாக்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதிகளை  விடவும் வேறுபட்ட முறையில் கையாளுவதற்கு முன்வந்ததன் மூலமாக ஜனாதிபதி கூறிய செய்தி சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். மே 19 போரைப் புகழ்பாடிப் போற்றுவதற்கான தினம் அல்ல.”

மேலும்

அருணுக்கு ஆப்பு:  பேரினவாத முகவர் விரிவாக்கம்…..! (வெளிச்சம்: 060)

வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகளையும், மற்றைய கட்சிகளையும், முஸ்லீம் காங்கிரஸையும் இணைத்த பெருமை உண்மையில் ஜே.வி.பி.க்கே உரியது. வடக்கு கிழக்கில்  கடந்த ஏழு மாத காலத்தில்  ஜே.வி.பியின்  “இலங்கையர்கள் ” முலாம் பூசப்பட்ட  இன, மதவாத அரசியலை  சிறுபான்மைத் தேசிய இனங்கள் இனம் கண்டுகொண்டதன் விளைவு இது. இதனால் ஜே.வி.பி. தென்னிலங்கையில் பழைய அரசியல் எதிரியோடு, வடக்கு கிழக்கில் ஒரு புதிய அரசியல் எதிரியை தானாகவே ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இதைப் புரிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

மேலும்

“இன்னும் கன்னியாக..”

கதைகளைப் பின்னியிருக்கும் புனைவு மொழி சிற்றாறு ஒன்று வளைந்தும் நெளிந்தும் ஆரவாரமில்லாமல் அமைதியாக ஓடுகின்ற ஒயிலாட்டம் இயல்பாகவும் – எளிமையாகவும் – சிக்கல்களில்லாமலும் மொழியின் ஓட்டம் அமைந்துள்ளது. வாசகனை வசீகரிக்கின்ற மொழிநடை நூலாசிரியருக்கு ‘வாலாயம்’ ஆகியுள்ளது.

மேலும்

மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் 

“தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஒரு சிலரிடமிருந்தாவது   கோரிக்கைகளும் கருத்துக்களும்  வருகின்ற அதேவேளை தமிழர் தரப்பில் அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசியல் ஆய்வாளர்களிடமிருந்தோ மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் மாகாணசபைகளின் நிருவாகங்களை மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அக்கறை வெளிப்படுவதில்லை என்பது ஒரு விசித்திரமான அம்சமாகும்.”

மேலும்

NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும்

“NPP செய்ய  வேண்டியது அறுவைச் சிகிச்சையே தவிர, புண்ணைத் தடவிக் கொடுத்தல் அல்ல. அதாவது தற்காலிக சுகமளித்தல் அல்ல. JVP யின் உருவாக்கம், அதனுடைய 60ஆண்டுகால அரசியல் முன்னெடுப்பு, NPP யின் 10ஆண்டுகால அரசியல் எல்லாம் System Change ஐ அடிப்படையாகக் கொண்ட அரசியல் மாற்றம் – ஆட்சி மாற்றமே. மக்களின் ஆணையும் அதற்கானதே. அதைச் செய்யவில்லை என்றால் எதற்காக NPP? ரணில், மைத்திரி, சஜித் போன்றவர்கள் போதுமே. அவர்களுடைய போதாமை – தவறுகளுக்கு – மாற்றுத்தானே அநுரவும் NPP யும்.”

மேலும்

பூகோள அரசியல்: மற்றொரு விடுதலைப் போராட்டம் மௌனித்தது….!(வெளிச்சம்: 059)

“தமிழ்த்தேசிய ஆயுத அரசியல் – அரசியல் தற்கொலைக்கு வழங்கிய வகிபாகம் என்ன….?

இதை இன்னும் கூட கேள்விக்கு உட்படுத்தாமல்  கனடாவில், இங்கிலாந்தில் நடக்கின்ற அரசியல் கண் காட்சிகள் குறித்து ஏட்டிக்கு போட்டியாக தற்பெருமை கொள்கிறோம். இவர்கள் முள்ளிவாய்க்காலின் போது என்ன செய்தார்கள் என்று கேட்கின்ற திராணி கூட இல்லை. 

தோல்வியை வெற்றியாகக் காட்சிப்படுத்துவது வெறும்  கட்சி அரசியல். இதற்கு நிலம், புலம் என்று வேறுபாடில்லை. இந்த அரசியலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க போர்வீரர்களை வெற்றி வீரர்களாக நினைவுகூருகிறார். தமிழ்த்தேசியம் புலிப்போர்வீரர்களை தோற்றுப்போனவர்களாக நினைவுகூருகிறது.  மொத்தத்தில் யுத்தம் மீண்டும் … மீண்டும்…எதிர்கால அரசியலுக்கு மூலதனமாகிறது.”

மேலும்

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின்  மனச்சாட்சியும் 

“இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலைகாட்டுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று ஓயாமல் கூறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க மீண்டும் நாட்டின் இனப்பிளவின் இருமருங்கிலும்  தேசியவாத அரசியல் உணர்வுகள் கூர்மையடையக்கூடிய  சூழ்நிலை தோன்றியிருப்பதை கவனத்தில் எடுத்து மீண்டும் இனமோதல்களுக்கு வழிவகுக்கக்கூடிய நிகழ்வுப்போக்குகளை தடுப்பதற்கான தலையாய  பொறுப்பைக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜே.வி.பி.யை வெற்றிக்கு வழிநடத்திய மனச்சாட்சி,  துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை பயன்படுத்த வேண்டும். கிடைக்கின்ற  வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தவறவிட்ட  தலைவர்களின் வரிசையில் அவரும் இணைந்துவிடக் கூடாது.”

மேலும்

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் முடிவுகள் குறித்த ஒரு நுண்ணாய்வு – வடக்கு கிழக்கு மாகாணங்களை முன்வைத்து (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-38)

“வடக்கு கிழக்கில் உள்ளூர்மட்ட அதிகாரங்களை (இது மாகாண சபைக்கும் பொருந்தும்) எக்காரணம் கொண்டும் அது எத்தகைய முற்போக்கு முகத்தைக் கொண்டிருந்தாலும்கூட ஒரு தென்னிலங்கைச் சிங்களப் பெரும்பான்மைக் கட்சியிடம் (தேசிய மக்கள் சக்தியிடம்) ஒப்படைப்பதற்கு வடக்கு கிழக்குத் தமிழர்கள் முழுமையாக விரும்பவில்லை அல்லது அதற்குத் தயாரில்லையென்பதை உணர்வு பூர்வமாக எடுத்துச் சொல்வதற்கு வேறு மாற்றுவழியில்லாமல்தான் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அவை கடந்த காலங்களில் எத்தனை அரசியல் தெப்பிராட்டியங்களைப் பண்ணியிருந்தாலும்கூட அவற்றைப் பொருட்படுத்தாமல் பெரும்பான்மையாக வாக்களித்திருக்கிறார்கள்.”

மேலும்

1 15 16 17 18 19 130