“மாற்று அரசியலுக்கான களமாக உள்ளூராட்சி தேர்தல்” – கோபாலகிருஸ்ணன்

“வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் அவாவி நிற்கும் மாற்று அரசியலுக்குத் தயாராவதற்கான மார்க்கம் உள்ளூர் அதிகாரசபைகளின் நிர்வாகத்தை ஒரு தனிப்பட்ட கட்சியிடம் ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்டு வாக்களிக்காமல் கட்சி மற்றும் தனிநபர் நலன், தலைமைத்துவ விசுவாசம், பதவி மோகம் என்பவற்றுக்கப்பால், உண்மையும் நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் முழுக்க முழுக்க மக்கள் நலன்களை மட்டுமே இலக்காகக் கொண்டு உழைக்கக் கூடிய வேட்பாளர்களைத் தெரிவுசெய்ய வேண்டும்”

மேலும்

உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும் 

“எதிர்க்கட்சிகள் இத்தகையதொரு குழப்பமான நிலையில் இருப்பது ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பாக இருக்கின்ற போதிலும், ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும்,  நடைமுறைச் சாத்தியத்தைப்  பற்றி சிறிதேனும்  சிந்திக்காமல் அள்ளிவீசிய எண்ணற்ற வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருப்பதால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்  ஏமாற்றமும் விரக்தியும்  உள்ளூராட்சி தேர்தல்களில் கணிசமானளவுக்கு  பிரதிபலிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.”

மேலும்

ஸஹரான்குழு: கூலிக்குச் சாகடிக்கும் கொள்கையற்ற  கும்பலா?(வெளிச்சம்: 054)

“முஸ்லீம் பிரதேசங்களில் இடம்பெற்ற, அல்லது முஸ்லீம்கள் புலிகளின் தற்கொலை தாக்குதல்களின் போது பாதிக்கப்பட்ட போது அவற்றை பயங்கரவாத தாக்குதல்கள் என்றவர்கள், ஐ.எஸ். ஸஹரான் குழுவினரின் தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாகப் பார்க்கத்தவறுகிறார்கள். காத்தான்குடியில், ஒல்லிக்குளத்தில், சாய்ந்தமருதுவில், கிறித்தவ தேவாலயங்களில்,  ஹோட்டல்களில் நடந்தவை எல்லாம்  மனிதநேயத்தாக்குதல்களா ? இந்த தாக்குதல்களை பயங்கரவாத தாக்குதல்கள் அல்ல என்றும், அல்லது அதை ஏற்க மறுத்தும் ஸஹாரான் குழுவினர் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இது  கண்ணுக்கு முன்னால் உள்ளதை கண்டும்காணாததாக விட்டு அதற்கு பின்னால் என்ன உள்ளது என்று தேடும் அரசியல்.”

மேலும்

பிள்ளையான் கைது ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கான எச்சரிக்கையா?

“பிள்ளையானின் கைது, முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்,  அதற்கான விசாரணைகள் எல்லாம் ஏனைய தமிழ் அரசியற் சக்திகளுக்கு உள்ளுர விடுக்கப்பட்டதொரு எச்சரிக்கையாகும். குறிப்பாக வடக்கிலுள்ள முன்னாள் ஆயுதம் தாங்கிய தரப்புகளுக்கு.

பேராசிரியர் ரவீந்திரநாத்தின் விடயத்துக்காக பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்றால், அதையும் விடப் பாரதூரமான கொலைகள், கடத்தல்கள், குற்றச்சாட்டுகளோடு சம்மந்தப்பட்ட ஏனைய அரசியற் தரப்பினர்களும் (முன்னாள் இயக்கத்தினரும்) தப்ப முடியாது என்றுதானே அர்த்தமாகும்.”

மேலும்

எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பணயம் வைத்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் 

“தமிழ் மக்களின் நியாயபூர்வமான தேசிய வாத அரசியல் அபிலாசைகளை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளாத ஒரு தேசிய அரசியல் கட்சிக்கு ஆதரவளிப்பதில் இருந்து தமிழ் மக்களை திசைதிருப்புவதற்கு மிகவும் கடுமையாக பாடுபட வேண்டியிருப்பதும் உள்ளூராட்சி தேர்தல்கள் தமிழ்த் தேசியவாதத்தின் இருப்பை உறுதிசெய்வதற்கு மிகவும் முக்கியமானவை என்று கூறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதும் உண்மையில் தமிழ் தேசியவாத கட்சிகளின் மிகப்பெரிய ஒரு தோல்வியாகும். அவை தங்களது எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களில் பணயம் வைத்திருக்கின்றன.”

மேலும்

மோடி – அநுர குலுக்கிய கரங்கள்:  கை க(ந)ழுவிய கரங்களா…..?!(வெளிச்சம்:052)

“இப்போது இந்த தமிழ்த்தேசிய தரகு அரசியல் மோடிக்கு வெறும் செல்லாக்காசு. சிங்கள தேசத்தின் மூலஸ்தானத்தில் அவர் இடம்பிடித்துவிட்டார். இதற்கு இந்தியா கொடுத்த விலை ஈழத்தமிழர்கள். மற்றும் 13 வது திருத்தத்தையும், அதிகாரப்பரவலாக்கத்தையும் கைகழுவியமை. ஈழத்தமிழர் அரசியல் அநுரவின் கைகளுக்கு நழுவியிருக்கிறது. இது அநுர அரசாங்கத்திற்கு பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி.”

மேலும்

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கொக்குகள் (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-37)

“வடக்குகிழக்கில் உள்ளூராட்சி அதிகார சபைகளின் நிர்வாகத்தை ஒரு தனிப்பட்ட கட்சியிடம் ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்டு வாக்களிக்காமல் அதனை உண்மையான மக்கள் சேவகர்களிடம் (அத்தகையோர் பலகட்சிகளின் சார்பிலும் தெரிவாகியிருப்பர்)ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்டு வட்டார உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும்வகையில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.”

மேலும்

முறைமை வீழ்ச்சி….!   (வெளிச்சம்:051)

உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பு ஆடம்பர வாழ்க்கையை அன்றி மகிழ்ச்சியை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். இலாபத்தை உச்சப்படுத்தல் மூலம் இதை அடையமுடியாது. பொருளாதாரவளர்ச்சியும், மக்களின் திருப்தியும் நீண்ட காலமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கவில்லை. காலனித்துவ கால சுரண்டலும், வள அபகரிப்பும், மலிவான உழைப்பும் நேரடியாக இன்றைய காலநிலைப் பிரச்சினைக்கு காரணமானவை. நீர், மின்சாரம், போக்குவரத்துமுறை, வீட்டுத்தேவை, வர்தகமயப்படுத்தல் போன்ற என்னவெல்லாவற்றையும் நவகாலனித்துவத்தில் முதலாளித்துவம் முதன்மைப் படுத்துகின்றதோ அவை அனைத்தும் பெரும்பாலான மக்களை நிராகரிக்கின்றன.

மேலும்

சுமுகமான உறவுகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்ட மோடியும் திசாநாயக்கவும்

“இந்தியாவுக்கு விரோதமான கொள்கையுடன்  தொடங்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் தலைமையின் கீழான  ஆட்சியில் இந்தியாவுடனான உறவுகள் மற்றைய கட்சிகளின் அண்மைய  ஆட்சிக் காலங்களில் இருந்ததையும் விட மிகவும் சுமுகமானதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்ற ஒரு சுவாரஸ்யமான அரசியல் நிலைவரத்தைக் காண்கிறோம்.”

மேலும்

அநுர – மோடி பற்றிக் கொண்ட கரங்களுக்குப் பின்னால்…

“1980 களின் இறுதியில் இலங்கைத்தீவில் ஆயுதம் தாங்கிய இரண்டு அமைப்புகள் இந்தியாவைக் கடுமையாக எதிர்த்தன. ஒன்று ஜே.வி.பி. மற்றது விடுதலைப்புலிகள். ஜே.வி.பி தன்னை நெகிழ்த்தி, மாற்றியமைத்தது. அதனால் ஆட்சியைக் கைப்பற்றியது. இப்பொழுது அந்த ஆட்சியைத் திறம்பட நிகழ்த்திக் காட்ட முற்படுகிறது.
 
விடுதலைப்புலிகள் மாற்றத்தைப்பற்றிக் கவனத்திற் கொள்ளவில்லை. சூழலின் – காலத்தின் மாற்றத்தைப் பொருட்படுத்துவதில் தவறிழைத்தது.  அதனால் அது களத்தில் இருந்து அகற்றப்பட்டது.”

மேலும்