பத்தாண்டுகளாக தலைமைப்பதவிக்கு அரைத்தமாவை (யை )திருப்பி திருப்பி அரைத்தால் அது தமிழரசின் ஜனநாயகம்…….!
உள்வீட்டு பதவிச்சண்டையை பூட்டியகதவுக்குள் எது? எவருக்கு? என்று பங்கு போட்டுக்கொண்டால் அது எங்கள் வீட்டு பழம்பெருமை மிக்க பாரம்பரிய ஜனநாயகம்……..!
பத்தாண்டுகளாக தலைமைப்பதவிக்கு அரைத்தமாவை (யை )திருப்பி திருப்பி அரைத்தால் அது தமிழரசின் ஜனநாயகம்…….!
உள்வீட்டு பதவிச்சண்டையை பூட்டியகதவுக்குள் எது? எவருக்கு? என்று பங்கு போட்டுக்கொண்டால் அது எங்கள் வீட்டு பழம்பெருமை மிக்க பாரம்பரிய ஜனநாயகம்……..!
கிழக்கு மாகாணத்தின் கலை, இலக்கிய, பண்பாடு தனித்துவம் தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல, கிழக்கின் தனித்துவம் பேசும் அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை என்று விமர்சிக்கும் அழகு குணசீலன், இவர்கள் எவரும் இதில் போதிய அக்கறை காட்டவில்லை என்றும் கூறுகிறார். இது விடயத்தில் கிழக்கின் புத்திஜீவிகளும் மௌனம் சாதிப்பதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
‘நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மேம்பாடான சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதாக உறுதியளித்த இலங்கை அரசாங்கம் குறைபாடுகளை அகற்றுவதற்குப் பதிலாக மக்கள் ஒன்றுகூடுவதற்கு இருக்கும் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் சொத்துச்சேதம், களவு, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை உள்ளடக்கியதாகவும் பயங்கரவாதத்தின் வியாக்கியானத்தை விசாலப்படுத்தும் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது’.
தமிழ் மக்களின் அதிக ஆதரவைப்பெற்ற தமிழரசுக்கட்சியை “அரங்கம்” விமர்சிக்கலாமா? 75 ஆண்டுகாலப் பாரம்பரியத்தை கொண்ட கட்சி அதனால் பலவீனமடையும் அல்லவா? அதன் புதிய தலைவரை விமர்சிக்கலாமா?
பணி ஓய்வு பெறுகின்ற கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், அந்த மாவட்டத்தின் முதலாவது பெண் அரச அதிபர். அங்கேயே பிறந்து, வளர்ந்த அவர், அந்த மாவட்டம் மிகவும் சவாலான காலங்களை எதிர்கொண்டபோது அங்கு பணியாற்றியவர். அவருடைய அரச நிர்வாக அனுபவம் குறித்த செவ்வி. செவ்வி கண்டவர் செய்தியாளர் கருணாகரன்.
கிழக்கு அரசியலில் கிழக்கில் அபிவிருத்தி பேசும் கட்சிகள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளையும் அதன் விளைவுகளையும் இந்தப்பகுதி பேசுகின்றது. குறிப்பாக கடந்த பொதுத்தேர்தலில் விடப்பட்ட தவறுகளை அழகு குணசீலன் அலசுகிறார்.
எமது நினைவுகளை எமது அடுத்த சந்ததிக்கு கடத்த உரிய ஆவணப்படுத்தல் அவசியம், அவையே அவர்களை முன்னோக்கி நகர்த்த உதவும் என்ற நோக்கில் லண்டனில் வாழும் நூலகர் என். செல்வராஜா அவர்கள், யாழ்ப்பாணத்தில் அவலத்தில் முடிந்த உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகள் குறித்த பதிவுகளை “நினைவுகளே எங்கள் கேடயம்” என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். அதுபற்றிய அறிமுகம் இது.
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 21.
கிழக்கு மாகாணத்தில் கடந்த தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் “உரிமை அரசியல்- அபிவிருத்தி அரசியல்” போட்டியில் முன்னிலை பெற்றது யார்? இரு தரப்பின் நடவடிக்கைகள் மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ன? ஆராய்கிறார் அழகு குணசீலன்.
“சிறிதரனின் ஆதரவாளர்களே இப்பொழுது சலித்துப் போகின்ற அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது.
இது சிறிதரனின் ஆளுமைப் பிரச்சினையாகும்.
இதுவரையிலும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், எந்தப் பொறுப்பும் இல்லாமல் அதிரடிப் பேச்சை மட்டும் வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தவர் சிறிதரன்.“