பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும்

“1930களின் இறுதி ஆண்டுகள் மற்றும் 1940களின் ஆரம்ப ஆண்டுகளின் போது உள்ளுராட்சி அமைச்சராக இருந்த பண்டாரநாயக்காவும் ஏனைய சில சிங்களத் தலைவர்களும் இலங்கையில் மூன்று மாகாணங்கள் கொண்ட தமது பழைய சமஸ்டிக் கோரிக்கை பற்றி தமிழ்த் தலைவர்களுடன் பேசினார்கள். ஆனால் அப்போது யாழப்பாண தலைப்பா கட்டி மேட்டுக்குடியினரின் பென்னம் பெரிய தலைவராக இருந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தார், அது தனது ஐம்பதுக்கு ஐம்பது (50 க்கு 50) கோரிக்கைக்கு எதிரான சதித் திட்டம் என்றார், அத்துடன் சமஸ்டி என்பது ‘இலங்கைக்கு கூடாத ஒன்று என்பதோடு, தமிழர்களுக்கு மிக மோசமான ஒன்று’ என முழக்கங்கள் இட்டு, யாராவது சமஸ்டி பற்றி பேசினால் அது தமிழினத் துரோகம் என்று பட்டம் தெளிக்கும் கட்டத்தில் தமிழர்களை நிறுத்தினார். அவர் அப்போது மட்டுமல்ல, சந்தனப் பொட்டு பொன்னம்பலத்தார் 1970ம் ஆண்டு தேர்தலில் தோற்று மலேசியா போகும் வரை சமஸ்டி கேட்ட செல்வநாயகத்தை திட்டித் தீர்ப்பதையே தமது அரசியலாகக் கொண்டிருந்தார்.”

“முதலில் இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளபடி முறையாகவும் முழுமையாகவும் மாகாண ஆட்சி முறை மக்களாட்சி கொண்டவையாக, காத்திரமான ஆற்றல்களுடன் செயற்படட்டும். தொடரந்து காலம் கனியும் போது இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறை மலரட்டும்.”

மேலும்

கனகர்கிராமம்: கிழக்குகரை வாழ்வியலின் நீள் வெட்டு முகம்..!-பகுதி 3 (மூன்றாவது கண்: XIII)

“செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் கோகிலனாக கிழக்கில் மூடப்பட்டுக்கிடந்த ஒரு பெட்டகத்தை திறந்து காட்டியுள்ளார். அதில் பூட்டப்பட்டிருந்த ஆதாரங்கள் இன்றைய, எதிர்கால சந்ததியினருக்கு தேவையானவை. அவற்றை  நுகரவேண்டியது வாசகர் பொறுப்பு. கிழக்கில் பொதுவாகவும் – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் குறிப்பாகவும், சிறப்பாகவும்   சமூக ஆர்வலர்கள் வாசிக்கவேண்டியதும்,  வீட்டு நூலகங்களில் இடம் ஒதுக்கப்பட வேண்டியதுமான ஒரு  வரலாற்று ஆவணம் கனகர் கிராமம்.”

மேலும்

மத்திய கிழக்கில் போரில் இருந்து விடுபடமுடியாமல் தடமாறும் ட்ரம்ப்

“இந்த கட்டத்திலாவது போரை நிறுத்துவதற்கு ட்ரம்புக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால், எந்தவொரு இராஜதந்திர முயற்சியிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு முன்னதாக  வெறிபிடித்த அடாவடிக்காரன் போன்று ஈரான் மற்றும் லெபனான் மீது குண்டுமாரி பொழிந்து கொண்டிருக்கும் தனது போர்க் கூட்டாளியான இஸ்ரேலியப் பிரதமர் நெதான்யாகுவை அவர்  அடக்கிவைக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.”

மேலும்

மாகாண ஆட்சி முறையின் தேவையை தமிழர்களின் அரசியலே தீர்மானிக்க வேண்டும்​

“இலங்கையின் சிறுபான்மையான தேசிய இனங்களாக உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் சமூக சக்திகளே மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற விடயத்துக்கான அரசியல் செயற்பாடுகளை நோக்கி திரள வேண்டும், முனைப்போடு விடா முயற்சியாக செயற்பட வேண்டும். அத்துடன், மாகாண ஆட்சிகளுக்காக அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும்.”

மேலும்

கொழும்பு மைய அரசியலும் இணக்க அரசியலும்  குற்றமா?

“தனியே நின்று ‘அடைந்தால் மகாதேவி, இல்லையென்றால் மரணதேவி’என வீம்புக்குக் கம்பு சுத்தலாம். அப்படித்தான் தீவிரத் தமிழ்த் தேசியவாத தரப்புகள் கற்பனையில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் முன்வைக்கின்ற ஒரு நாடு இரு தேசம் என்பதற்கும் சமஸ்டிக்கு மேலான தீர்வுக்கும் சாத்தியமென்ன? அதற்கான வழிமுறை என்ன? அதற்கான பிராந்திய – சர்வதேச ஆதரவு அல்லது மதிப்பு என்ன?  என்று இதுவரையில் எவரும் சொன்னதில்லை. இனியும் சொல்லப்போவதில்லை. அல்லது தாம் கருதுகின்ற – சொல்கின்ற அந்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு அவர்கள் அதற்கான வழியில் செயற்படுவதாகவும் இல்லை. இதற்காக அவ்வப்போது புதிய புதிய அமைப்புகளை உருவாக்குவது, அறிக்கைகளை வெளியிடுவது, ஊடகச் சந்திப்புகளை நடத்துவது. ஊடகங்களில் பிரகடனங்களைச் செய்வது, ‘கருத்துருவாக்கம்’ என்ற கற்பனையில் புனைவுக் கட்டுரைகளை எழுதுவதோடு தங்களுடைய மேலான புரட்சிகரப் பணிகளை நிறைவு செய்து கொள்கின்றனர். “

மேலும்

இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்

“மாகாண ஆட்சிகளை ஜனாதிபதியே நேரடியாக வழிகாட்டி ஆளுநரைக் கொண்டு செயற்படுத்துகின்ற போதிலும் மாகாண ஆட்சி முறை மக்களுக்கு பயனற்றவை – அவற்றால் காத்திரமாக செயற்பட முடியாது – அவை வெள்ளை யானைகள் என முன்னிருந்தவர்களைப் போல இப்போதுள்ள ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் நிரூபிக்க முயலுகிறார்களா என்ற கேள்வி இங்கு நியாயமாகவே எழுகிறது. இதுதான் இன்றைய அரசாங்கத்தின் இலக்காக இருந்தால் இது இலங்கையில் ஜனநாயக கட்டமைப்பின் முன்னேற்றத்துக்கு தடையாகவே அமையும் – அதிகாரங்கள் அனைத்தும் குவிந்த மத்திய ஆட்சியின் எதேச்சாதிகாதிகாரம் தொடரும் இலக்கையே வெளிப்படுத்தும். இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளில் முன்னேற்றகரமான வளர்ச்சிக்குத் தடையாகும்.”

மேலும்

இலங்கை மட்டக்களப்பில் கம்பன் விழா -2026

“இந்தியா- போபால் கம்பன் கழகமும்  இலங்கை, மட்டக்களப்புக் ‘கதிரவன் கலைக் கழகமும்’ (தமது 50 ஆவது ஆண்டு பொன் விழாவினை ஒட்டியும்) இணைந்து, 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9,00 மணிக்கு மட்டக்களப்பு, கிரான்குளம், Sea Moon Garden மண்டபத்தில் ‘கம்பன் விழா-2026’ மிகச் சிறப்பாக நடத்துகின்றன.”

மேலும்

கனகர் கிராமம்: கிழக்குகரை வாழ்வியலின் நீள்வெட்டுமுகம்…! (பகுதி 2)(மூன்றாவது கண்:XIII)

இலங்கையின் கிழக்கு மாகாண சமூகப்பின்னணியில் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் எழுதி, “அரங்கம்” பத்திரிகையில் தொடராக வந்த “கனகர் கிராமம்” அரசியல்-சமூக-வரலாற்று நாவலின் நூல் வடிவ வெளியீடு அம்பாரை மாவட்டம் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில், வரும் சனிக்கிழமை (28/03/2026) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்ட அழகு குணசீலனின் விமர்சனத்தொடர் இது. இரண்டாம் பகுதி.

“வெறுமனே புறவாழ்க்கையை வைத்து ஒருவரின் ஒருகட்டத்து அகக்கோலங்களை மதிப்பிட முடியாது. பொத்துவிலில் இருந்து உகந்தை சென்று அங்கிருந்து கால்நடையாக கொடிய விலங்குகள் நிறைந்த ‘யால’ வனத்தினூடே கதிர்காமத்திற்கு யாத்திரைபோன பக்தர்களுடன் வாசகர்களையும் அழைத்துச்சென்று, அம்மக்களின் பண்பாட்டு கோலங்களை சொல்லிய பாங்கினை எப்படி பாராட்டினாலும் நிறைவுபெறாது”.

மேலும்

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்ததுக்கு  கோட்பாட்டு  அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த ஜி. பார்த்தசாரதி 

“எது எவ்வாறிருந்தாலும், இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்துக்கான கோட்பாட்டு அடிப்படையையும் பல்லின சமுதாயமொன்றுக்கான அரசியலமைப்பு அத்திபாரத்தையும் (Constitutional foundation for a multi – ethnic polity) அமைத்த பெருமையில் பெரும்பகுதி பார்த்தசாரதிக்கே உரியது என்று என்பதில் சந்தேகமில்லை என்று நீலன் திருச்செல்வம் எழுதினார்.”

மேலும்

ஆறு தசாப்தகால பத்திரிகைச் சேவையை நிறைவுசெய்யவிருந்த நிலையில் உலகிற்கு விடைகொடுத்த சலீம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் சிறந்த செய்தியாளர்களில் ஒருவரான ஏ. எல். எம். சலீம் அவர்கள் காலமானார். இலங்கையில் இன உறவுகளின் அவசியம் பற்றி அதிகமாகப் பேசப்படும் இந்த நாட்களில் சலீம் அவர்களின் மரணம் ஊடக வட்டாரங்களில் பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகின்றது. அவரது மகத்துவம் குறித்த மூத்த செய்தியாளர் தனபாலசிங்கம் அவர்களின் அஞ்சலிக்குறிப்பு இது. “அரங்கம் பத்திரிகை”யும் அன்னாருக்கு தனது அஞ்சலியை செலுத்துகின்றது.

மேலும்

1 4 5 6 7 8 60