தமிழ் மக்களின் அதிக ஆதரவைப்பெற்ற தமிழரசுக்கட்சியை “அரங்கம்” விமர்சிக்கலாமா? 75 ஆண்டுகாலப் பாரம்பரியத்தை கொண்ட கட்சி அதனால் பலவீனமடையும் அல்லவா? அதன் புதிய தலைவரை விமர்சிக்கலாமா?
Category: அரசியல்
‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாகவும் முன்னேற்றத்துக்காகவும் உழைத்தது நிறைவே’-திருமதி றூபவதி கேதீஸ்வரன்(மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி)
பணி ஓய்வு பெறுகின்ற கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், அந்த மாவட்டத்தின் முதலாவது பெண் அரச அதிபர். அங்கேயே பிறந்து, வளர்ந்த அவர், அந்த மாவட்டம் மிகவும் சவாலான காலங்களை எதிர்கொண்டபோது அங்கு பணியாற்றியவர். அவருடைய அரச நிர்வாக அனுபவம் குறித்த செவ்வி. செவ்வி கண்டவர் செய்தியாளர் கருணாகரன்.
கருணாவின் தேர்தல் தோல்வி சொல்லும் செய்தி.! கிழக்கு அரசியல்:4 (மௌன உடைவுகள் 74)
கிழக்கு அரசியலில் கிழக்கில் அபிவிருத்தி பேசும் கட்சிகள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளையும் அதன் விளைவுகளையும் இந்தப்பகுதி பேசுகின்றது. குறிப்பாக கடந்த பொதுத்தேர்தலில் விடப்பட்ட தவறுகளை அழகு குணசீலன் அலசுகிறார்.
நூலகர் செல்வராஜாவின் “நினைவுகளே எங்கள் கேடயம்”
எமது நினைவுகளை எமது அடுத்த சந்ததிக்கு கடத்த உரிய ஆவணப்படுத்தல் அவசியம், அவையே அவர்களை முன்னோக்கி நகர்த்த உதவும் என்ற நோக்கில் லண்டனில் வாழும் நூலகர் என். செல்வராஜா அவர்கள், யாழ்ப்பாணத்தில் அவலத்தில் முடிந்த உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகள் குறித்த பதிவுகளை “நினைவுகளே எங்கள் கேடயம்” என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். அதுபற்றிய அறிமுகம் இது.
தோழர் சந்திரகுமாரின் மரணம் ஒரு தனி மனிதப் பேரியக்கத்தின் முடிவு
ஒரு இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளரான தோழர் சந்திரகுமார் அவர்கள் தனது 76 வது வயதில் அண்மையில் காலமானார். தன் வாழ்நாள் முழுக்க ‘செயற்பாட்டு அரசியலில்’ தீராத ஈடுபாடு கொண்டு வாழ்ந்த அவர் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்து, நீண்டகாலமாக கொழும்பில் வாழ்ந்து வந்தார். இன்றைய இளைஞர்கள் அறிவதற்காக அவரைப்பற்றி எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் எழுதும் குறிப்பு
கிழக்கு அரசியல்:3 அபிவிருத்தியும் – உரிமையும்….! (மௌன உடைவுகள்-73)
கிழக்கு மாகாணத்தில் கடந்த தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் “உரிமை அரசியல்- அபிவிருத்தி அரசியல்” போட்டியில் முன்னிலை பெற்றது யார்? இரு தரப்பின் நடவடிக்கைகள் மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ன? ஆராய்கிறார் அழகு குணசீலன்.
சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி!
“சிறிதரனின் ஆதரவாளர்களே இப்பொழுது சலித்துப் போகின்ற அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது.
இது சிறிதரனின் ஆளுமைப் பிரச்சினையாகும்.
இதுவரையிலும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், எந்தப் பொறுப்பும் இல்லாமல் அதிரடிப் பேச்சை மட்டும் வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தவர் சிறிதரன்.“
கனகர் கிராமம் ‘அரங்கம்’ தொடர் நாவல்(அங்கம் – 20)
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 20.
சுமந்திரனின் சுயபரிசோதனை
தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற ஒருவரே தேவை என்பதால் சிறிதரனை கட்சியின் தலைவராக தமிழர்கள் தெரிவு செய்தார்கள் என்பதையும் தன்னால் அவ்வாறான அரசியலைச் செய்யமுடியாது என்பதையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கும் சுமந்திரனை பாராட்டும் பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் அவர்கள், மறுபுறம் ஆயுதப்போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல் கோட்பாடுகளையும் சுலோகங்களையும் பாராளுமன்ற அரசியலுக்கு பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சாத்தியமற்ற தன்மையை புதிய தலைமை உணரவேண்டும் என்கிறார்.
மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்
அரசியல் ரீதியாக உயர் பதவிகளை தன்வசம் வைத்துக்கொள்வதற்காக மாவை சேனாதிராஜா சுயநலத்துடன் தொடர்ந்து செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டும் மூத்த பத்திரிகையாளரான டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள், கட்சி மாநாட்டை ஒத்தி வைத்ததும் அதே நோக்கிலானது என்றும் குற்றம் சாட்டுகிறார். இதற்கு தமிழரசுக்கட்சியினர் இடம் கொடுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
